Friday 19 January 2018

இந்திய அரசின் ஹஜ் மானிய மோசடி..!!! ஒரு சிறப்பு பார்வை..

ஹஜ் மானியம் என்பதே சுத்த மோசடி ஹஜ் பயணம் செல்வோருக்கு மத்திய அரசு ஒரு பைசா கூட மானியமாக வழங்குவதில்லை. மாறாக ஒவ்வொரு ஹஜ் பயணியிடமிருந்தும் பல்லாயிரம் ரூபாய்களை மத்திய அரசு சுரண்டி கொள்ளையடிக்கின்றது என்பதே உண்மையாகும்.
சவூதி அரசாங்கம் இந்திய முஸ்லிம்களில் எத்தனை பேருக்கு விசா வழங்க ஒப்பந்தம் செய்துள்ளதோ, அதில் எழுபது சதவிகிதம் பேரை ஹஜ் கமிட்டி மூலம் மத்திய அரசு அனுப்பி வைக்கிறது. மீதி முப்பது சதவிகிதம் பயணிகள் அரசின் அங்கீகாரம் பெற்ற தனியார் சுற்றுலா நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படுகிறது. ஹஜ் கமிட்டி மூலம் பயணம் செய்பவர்கள் இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா, சவூதி அரசுக்குச் சொந்தமான சவூதி ஏர்லைன்ஸ் ஆகிய இரு விமானங்களில் மட்டும் தான் பயணிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். ஹஜ் நேரத்தில் விமானக் கட்டணத்தை 25 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சமாக உயர்த்துவார்கள். இந்தக் காலகட்டத்தில் மற்ற விமானங்களில் 20 ஆயிரமே கட்டணமாக இருக்கும். ஆனால் ஹஜ் கமிட்டி மூலம் தேர்வானவர்கள் அந்த விமானங்களில் பயணிக்க அனுமதி இல்லை. அதாவது விமானக் கட்டணம் 25 ஆயிரத்தை ஒரு லட்சமாக உயர்த்துவதால் நம்மிடம் வாங்கிய தொகையில் மீதமிருந்த 25 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஹஜ் பயணிக்காகவும் ஏர் இந்தியாவுக்கு (அதாவது தனக்குத்தானே) அரசு ஐம்பதாயிரம் ரூபாய்களை மானியம் என்ற பெயரில் வழங்கும். ஹாஜிகளுக்கு வழங்காது. மானியம் என்பது ஹஜ் பயணிகளுக்கு அல்ல. இந்திய அரசின் விமான நிறுவனத்துக்குத்தான். அதைத்தான் ஹஜ் மானியத்துக்கு இந்திய அரசு கோடிக்கணக்கில் செலவிடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களையும், முஸ்லிமல்லாத மக்களையும் ஒரே நேரத்தில் மூடர்களாக்கி வருகிறார்கள். 



முஸ்லிம்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்குவதால் பல ஹிந்து சகோதரர்கள் கோபப்படுகிறார்கள்... ஆனால் உண்மை இதோ,

ஹஜ் மானிய கணக்கு:-

1) ஹஜ் மானியமாக அரசு ஆண்டுக்கு ₹ 691 கோடி கொடுக்கிறது.
2) இந்திய நாட்டின் அரசு ஹஜ் கோட்டா - 1,36,000 சீட்டுகள்.
ஆகவே, ₹ 691 கோடி ÷ 1,36,000 ஹாஜி = ₹ 50,808.
ஆக ஒரு ஹாஜிக்கு ₹ 50,000 மானியமாக வழங்கப்படுகிறது.

ஹஜ் செலவுக் கணக்கு:-
1) ஒரு ஹாஜியிடமிருந்து ₹ 1,80,000/- கட்டணம் வசூலிக்கபடுகிறது.
2) அதில், ஹாஜியின் கை செலவுக்காக ₹ 34,000/- தை (சவூதி ரியாலாக மற்றி கையில் கொடுக்கபடுகிறது.)
₹ 1.80 lac - ₹ 34,000 = ₹ 1,46,000/-
ஆகவே, அசலில் ₹ 1,46,000 தை கட்டனமாக கொள்ளளாம்.
3) பம்பாய் - ஜித்தா போய் வர விமான டிக்கட், 2 மாதத்திற்கு முன் பதிந்தால் அதன் விலை ₹ 25,000 திற்க்கும் குறைவு, எனினும் 25 ஆயிரம் என்றே வைத்துக்கொள்வோம்.
4) அனால் உணவு, டேக்ஸி, பஸ் கட்டனம், இதர செலவுகள் ஹாஜிகளின் பொறுப்பு.
செலவுகளை ₹ 1.46 லட்சதில் கழித்து பார்போம்...
விமான டிக்கட் - 25,000
மக்காவில் தங்குதல் (ஹோட்டல்) - 50,000 (25 நாள்)
மதினாவில் தங்குதல் (ஹோட்டல்) - 20,000 (15 நாள்)
மற்ற செலவுகள் - 25,000
மொத்த செலவு தொகை - ₹ 1,20,000/-
பெறும் குழப்பம் ஏற்படுகிறதல்லவா...!-

ஆகவே, கட்டணம் 1,46,000 - செலவு 1,20,000 = மீதம் ₹26,000/-

உண்மை என்னவெனில்.... 
ஒரு ஹாஜி தனது சொந்த பணத்தில் இருந்து ₹ 26,000 ஐ மறைமுகமாக அரசுக்கு செலுத்துகிறார்.

ஆகவே, ஒரு ஹாஜி தான் ஹஜ்ஜுக்கு செல்ல, தானே அனைத்து செலவுகளுக்கும் பணம் செலுத்தியது போக, மேலும் ₹26,000 அதிகமாக அரசால் வசூலிக்கபடுகிறது.இதனிடயில் மானிய தொகை 50 ஆயிரதை மறந்து விட வேண்டாம்.நமது பெயரை சொல்லி 50,000 + நம்மிடமிருந்து மேலும் 26,000 = ₹ 76,000/-
ஆக ஒவ்ஒரு ஹாஜியிடமிருந்தும், ₹ 76,000 அரசுக்கு கிடைக்கிறது.
₹ 76,000 × 1.36 லட்சம் ஹாஜிகள் = *10,33,60,00,000/- ரூபாய்
தலைசுற்றுகிறதல்லவா!!ஆக, ஆண்டுக்கு ஆயிரத்தி முப்பத்தி மூன்று கோடியே அறுபது லட்சம் ரூபாய்...! இந்த பணம் எங்கு செல்கிறது & என்ன ஆகிறது என்ற கணக்கு தெரியவில்லை
.



ஏர் இந்தியா தனியார் மயமாக்கல் , அதில் ஒரு பகுதிதான் இந்த மானியம் நிறுத்தம் , மற்றபடி இதில் ஒன்றும் புதிது இல்லை ,எல்லாரும் நினைப்பதை போலெ அரசு ஒன்றும் மானியம் கொடுப்பது இல்லை , இந்த ஹஜ் என்பது முன்பே நேரம் குறித்து அதற்க்கான பயணம் செயல் படுத்த படும் , அதில் விமான டிக்கெட் செலவு தள்ளுபடி ( concession ) கிடைக்கும் , அதை தான் மானியம் , மானியம் என்று கூறுகிறாரகள் , உதாரணமாக தற்போது muscat முதல் சென்னை வரை வரும் போக டிக்கெட் செலவு 10000 முதல்ட்டு 15000 வரை மட்டுமே . ஆனால் மற்ற நேரங்களில் 30000 முதல் 40000 வரை இருக்கும் , அதனால் விமான நிறுவனங்கள் மானியம் கொடுப்பதாக அர்த்தம் கிடையாது , இந்த மானியம் ஏர் இந்தியா விமானத்தில் போகிறவருக்கு மட்டும்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் , முன்னமே அரசு டிக்கெட் ஐ புக் செய்வதால் அரசுக்கு லாபம்தான் , இது பற்றி அடிக்கடி விமான பயணம் மேற்கொள்ளுபவர்களிடம் உண்மை நிலையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

ஹஜ் மானியம் ரத்து என்பதை ஒரு இஸ்லாமியராக மனதார வரவேற்கின்றேன் , இத்தனை காலமும் மானியம் என்ற பெயரில் ஆட்சியாளர்களே தங்களது மனம் போன போக்கில் ஏர் இந்தியாவுக்கு அள்ளி வழங்கி கொண்டு இருந்தார்கள் ஆக, நாம் தான் கோவப்பட வேண்டும். மற்ற சாகோதரர்கள் அல்ல....!!!

நம்மிடருந்தே பணத்தை பறித்து கொண்டு... மேலும் முஸ்லிம்களை, மானியம் என்ற பெயரில் கேவலப்படுத்தி வருகிறது இந்திய அரசு....

நீதிமன்ற உத்திரவை ஏற்று ஹஜ் மானியம் நிறுத்தப்படுவது இஸ்லாமியர்களுக்கு மனதார சந்தோசமே இதுபோல் அனைத்து மானியங்களையும் விவசாயம், உணவு, நுகர்பொருள் etc நிறுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும், மனிதன் வாழ்க்கைக்கு தேவையான வசதிகளை நிறைவேற்ற உச்ச நீதிமன்றம் பிறப்பித்த எத்தனையோ ஆணைகளை அரசு செயல்படுத்த வில்லை. இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இறைவனை  அஞ்சுகொள்ளுங்கள் !!

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : மு. அஜ்மல் கான்.

No comments:

Post a Comment