Tuesday 30 January 2018

அலாவுதீன்கில்ஜியின் உண்மை வரலாறு என்ன..? ஒரு சரித்திர பார்வை..

Image may contain: 3 peopleமுன்னுரை:-

சமீபத்தில் வெளிவந்த பத்மாவதி என்ற திரைப்படம், பல சர்ச்சைகளை சுமந்து வந்திருப்பதை அறிவோம். இப்படத்தில் வரலாற்றை தவறாக சித்தரித்துள்ளதாக வட இந்தியா முழுவதும் போராட்டங்கள் வெடித்து ஓய்ந்த பின்னரே வெளியானது இத்திரைப்படத்திற்கு கூடுதல் விளம்பரங்களை செலவில்லாமல் தேடித்தந்தது.
மேலும், அப்படத்தில் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தைச்சேர்ந்த தனிநபரை இழிவுபடுத்தியதாகவும் கூக்குரல்கள் எழுந்தன. குரல் எழுப்பியவர்கள் குறிப்பிட்டதோ ரஜபுத்திர ராணியான பத்மாவதியை. ஆனால், திரைப்பட குழுவினர் திட்டமிட்டு தாக்கியதோ இசுலாமிய சுல்தானான அலாவுதீன் கில்ஜியை தான்.



Image may contain: 1 person
யார் இந்த "அலாவுதீன் கில்ஜி ? இவரது உண்மை  வரலாறு என்ன என்பதை  அனைவரும் அறிந்து கொள்வதற்காகவே இக்கட்டுரை.



உண்மை வரலாறு......

கில்ஜி என்பது ஒரு பாரசீக மொழி வார்த்தையாகும். இது ஒரு வம்சத்தை குறிக்கிறது. டெல்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம். இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன்கில்ஜி என்பவர் ஆவார்.இவரின் மருமகன் தான் இன்று சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள "அலாவுதீன் கில்ஜி".
இவர்கள் இன்றைய துருக்கி நாட்டைச் பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவர். 1290 முதல் 1320 வரை தெற்கு ஆசியா முழுவதும் பரவியிருந்த ஓர் மிகப்பெரிய அரசு தான் கில்ஜி வம்ச அரசு.
ஆட்சி :

அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில், மிகப்பெரிய திருப்புமுனையாக இந்தியாவின் மீதான மங்கோலியர்களின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.

அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரும் வலிமையுடன் இருந்த, மங்கோலியர்களின் கொடூர தாக்குதல்களிலிருந்து தனது அரசை காத்துக்கொள்ள வடமேற்கு எல்லைப்பகுதி நெடுகிலும் கோட்டை கொத்தளங்கள் அமைத்து, காவலுக்கு பெரும் படைகளை நிறுத்தினார்.

மங்கோலியர்களுக்கு எதிராக,
1298ல் ’சலந்தரில்’ நடந்த போரிலும்,
1299ல் கில்லியில் நடந்த போரிலும்,
1305ல் அம்ரோகாவில் நடந்த போரிலும்,
1306ல் இராவி ஆற்றாங்கரையில் நடந்த போரிலும் அலாவுதீன் கில்ஜி வெற்றி பெற்றார்.
தனது இருபது ஆண்டு கால ஆட்சியில் பல போர்க்களங்களில் வெற்றி வாகைசூடி, தனது டெல்லி அரசை படிப்படியாக விரிவாக்கினார். 1305ல் மங்கோலியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தார். மங்கோலியர்களை ஆப்கானிஸ்தானை விட்டு விரட்டி அடித்து ஆப்கானிஸ்தானை டெல்லி அரசுடன் இணைத்துக் கொண்டார்.

இம்முயற்சி நடைபெறாமல் இருந்திருந்தால், ஒருங்கிணைந்த இந்திய தேசம் இன்று வரை கூட மங்கோலியர்களின் காலணியாதிக்க நாடாக இருந்திருக்கக்கூடும்.

மேலும், இன்றைய இந்திய தேசம் சிதறுண்டு சிறுசிறு ராஜ்ஜியங்களாகவும், சமஸ்தானங்களாகவும் இருந்ததைக்கண்டு, அனைத்தையும் இணைக்க பாடுபட்டார். அவரது இவ்விருப்பத்திற்கு மறுப்பும், எதிர்ப்பும் தெரிவித்த அரசர்களை போர் மூலம் வெற்றி கொண்டார்.
இப்படியாக "ஆப்கானிஸ்தான்முதல்மதுரை" வரை தனது ஆட்சிப்பகுதியை விரிவுபடுத்தினார். கில்ஜியின் பெயரை கேட்டாலே, மற்ற அரசர்கள் அஞ்சி நடுங்கும் மாபெரும் சுல்தானாக வலம் வந்தார்.
அதாவது உலக வரைபடத்தில், கில்ஜி ஆட்சியின் எல்லைகளான ஹெராத் நகருக்கும் மதுரைக்கும் ஒரு நேர்கோடு வரைந்தாலே அது 4300 கிலோமீட்டர்தொலைவை விஞ்சும்.


பொருளாதாரத்தில் சீர்திருத்தம்:

சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளராக திகழ்ந்தார். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வளுவான, நிலையான படையாணிகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார். சந்தைப் பொருட்களுக்கு சரியாக கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனை கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ்சந்தைகளில் விளைபொருட்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார்.

கூடுதல் விலையில் விளைபொருட்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருட்கள் வாங்கினர். தேவைக்கு அதிகமான விளைபொருட்கள் அரசு கிட்டங்கிகளில் (Ware House) சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சி காலத்தில் விளைபொருட்கள் பற்றாக்குறை சமாளிக்கப்பட்டது.

உளவுத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை :


அலாவுதீன் கில்ஜி மிகச் சிறந்த உளவுப்படையை வைத்திருந்தார். எனவே தனக்கு எதிரான கலகங்களையும், சதித் திட்டங்களையும் முளையிலேயே கிள்ளி எறிந்தார். அரசுக்கு எதிராக செயல்படும் கலகக்காரர்களின் சொத்துகளையும், மதகுருமார்களின் சொத்துகளும் அரசால் கைப்பற்றப்பட்டது. அரச துரோகிகளுக்கு கடும் தண்டனை வழங்கினார். எனவே பிரபுக்களும், நெருங்கிய உறவினர்களும், மதகுருமார்கள் எவரும் கில்ஜிக்கு எதிராக சதித்திட்டம் அல்லது கிளர்ச்சி செய்ய முன் வரவில்லை.

தனது நாட்டில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் #லஞ்சம் பெறுவதை தடுத்து நிறுத்தினார். விவசாயத் தொழில் செய்யும் மக்களிடமிருந்து கூடுதல் நிலவரி வசூலிப்பதை தடுத்தார்.


தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சர்ச்சைகள் :


அலாவுதீன் கில்ஜி கி.பி.1250 ஆம் ஆண்டு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்ற ஊரில் பிறந்தார். அலாவுதீன் கில்ஜி முறையாக சில திருமணங்களை செய்து கொண்டவர். அவருடைய முதல் மனைவி, அவருடைய மாமா ஜலாலுதீன் கில்ஜியின் மகளாவார். இவருக்கு நான்கு மகன்கள்.
1. ஷிஹாபுதீன் உமர், 2.குதுபுதீன் முபாரக், 3. கிஸ்ர் கான், 4. ஷாதி கான். ஆகியோரே அவர்கள்.

உண்மை வரலாற்றை புரட்டி பார்த்தோமேயானால், அலாவுதீன் கில்ஜி பெண்களுக்காக அல்லது மாற்றாரின் மனைவியரை கவர்வதற்காகப் படை திரட்டினார் என்றோ, போர் புரிந்தார் என்றோ அல்லது அந்தப்புர அழகிகளை வைத்திருந்தாா் என்றோ எவ்வித வரலாற்று குறிப்புகளும் இல்லை. மாறாக, பல்வேறு வரலாற்று திரிப்புகள் மட்டுமே உள்ளது.


பத்மாவதி (எ) சித்தூர் பத்மினி...

அலாவுதீன் கில்ஜி வென்ற பல நாடுகளுள் ஒன்று, சித்தூர் எனப்படும் சித்தோர்கார். இதற்கு மேவார் எனும் பெயரே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் அரசராக ராவல் ரத்தன்சென் என்பவர் இருந்தார். இவரது மனைவிகளுள் ஒருவர் பத்மாவதி என்னும் பத்மினி. அந்நாட்டின் பட்டத்து ராணியாக இவரே இருந்தார். இவர், கந்தர்வேசன் என்ற குறுநில மன்னர் ஒருவரின் மகளாவார். இவர்கள் ரஜபுத்திர வம்சத்தினர் ஆவர். மேவார் தேசம், ரஜபுத்திர கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபு வழி பழக்க வழக்கங்களை பின்பற்றும் நாடாக விளங்கிற்று.

இந்நிலையில் அலாவுதீன் கில்ஜி, ஜனவரி 1303ல் மேவார் நாட்டின் மீது படையெடுத்தார். இரண்டு மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்தது. ஒரு கட்டத்தில் முற்றிய போர், மேவார் கோட்டையை முற்றுகையிடுவதற்கு வழிவகுத்தது. கோட்டையை திறந்துகொண்டு வெளியே வந்த படைகள், கில்ஜி படையுடன் போரிட்டது. மிகக் கடுமையாக நடைபெற்ற போரில், மேவார் நாட்டு அரசர் ராவல் ரத்தன்சென் மற்றும் தளபதிகள் அனைவரும் வீர மரணம் அடைந்தனர்.

இதனை அறிந்த பட்டத்து ராணி பத்மினி உட்பட மற்ற ராணிகளும் அன்றைய ரஜபுத்திர (சத்திரிய) குல வழக்கப்படி உடன்கட்டை ஏறுதல்( தீக்குளிப்பு) எனப்படும் புனித தற்கொலைசெய்துகொண்டனர்
என்பதுதான் உண்மையான வரலாறு.
இதைவிடுத்து அலாவுதீன் கில்ஜி பத்மாவதி மீது காதல் கொண்டதால் மேவார் மீது படையெடுத்தார் என்பது முற்றிலும் தவறாகும்.
இதேபோல, ராணி பத்மாவதி அவர்களும் அலாவுதீன் கில்ஜி மீது, காதல் கொண்டதாகவும், அவருடன் சமரச உடன்படிக்கை செய்துகொள்ள முன்வந்தார் என கூறப்படும் கூற்றுகளும் கட்டுக்கதைகளைத்தவிர வேறில்லை. பற்பல வரலாற்று திரிப்புகளில் இதுவும் ஒன்று..! அப்படி நம்புவது ராணி பத்மாவதி அவர்களின் ஒழுக்கத்தை சந்தேகிப்பது போலாகிவிடும்.

அலாவுதீன் கில்ஜியின்இறப்பு


அலாவுதீன் கில்ஜி 1316ல் இறந்தார். அவரது மரணத்தை பேரிழப்பாக கருதிய கில்ஜியின் நம்பிக்கைக்குரிய தலைமைப் படைத்தலைவர் மாலிக் கபூர், டெல்லி குதுப்மினார் வளாகத்தின் பின்புறத்தில், சுல்தான் அலாவுதீன் கில்ஜி உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஒரு நினைவு மண்டபத்தை கட்டியெழுப்பினார். மேலும், அலாவுதீன் கில்ஜியின் நினைவாக ஒரு இசுலாமிய கல்வி நிறுவனத்தையும் (மத்ரஸா) நிறுவினார்.

அலாவுதீன் கில்ஜியின் இறப்புக்குப்பின், அவருக்கு அடங்கியிருந்த நாடுகள், குறிப்பாக தென்னிந்திய நாடுகள், தங்களை தாங்களே சுதந்திர நாடுகளாக பிரகடனம் செய்யலாயின. இதில், விஜயநகர பேரரசும் அடங்கும்.

முடிவுரை

அலாவுதீன் கில்ஜி மேவார் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக, மங்கோலியர்கள் ,ரந்தம்பூர் (ராஜஸ்தான்), குஜராத் ஆகியவற்றின் மீதும்,
மேவாருக்கு பின், மாளவம், மந்து , தாரா, சந்தோரி, மார்வார், ஜலோர், தேவகிரி, வாரங்கல், துவார சமுத்திரம், போசள நாடு, மதுரை, விஜயநகரப் பேரரசு மற்றும் பாமினி நாடு ஆகியவற்றின் மீதும் போர் தொடுத்துள்ளார்.

ஒருவேளை, கில்ஜி பெண்கள் மீது மோகம் கொண்டு படைதிரட்டி போர் புரியக்கூடியவராகவே இருந்தாரேயானால், ஒவ்வொரு போரிலும் அவரின் எண்ணத்தை நிறைவேற்றியிருப்பார்.

ஆனால், மேற்கூறியவற்றில் ராணி பத்மாவதியைத்தவிர வேறு எந்த நாட்டின் அரசியை கவர்வதற்கும் போர் தொடுத்ததாக வரலாறு கூறவில்லை. இவ்விசயத்தில், வரலாற்று திரிப்பாளர்களும் கவனக்குறைவாக இருந்துள்ளனர் எனலாம்.

ஏனெனில், வரலாற்று திரிப்பாளர்களின் நோக்கம் "இசுலாமியர்களுக்கு எதிராக ரஜபுத்திரர்களை தூண்டிவிடுவதாக" இருந்திருக்க வேண்டும் என மட்டுமே பொருள் கொள்ள முடிகிறது. அலாவுதீன் கில்ஜியின் மீதும் இசுலாமியர்கள் மீதும் களங்கத்தை ஏற்படுத்த எண்ணியவர்கள் இறுதியில் தங்கள் முதுகில் தாங்களே குத்திக்கொண்டதை போல, ராணி பத்மாவதியின் புகழுக்குதான் களங்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இறுதியில் "கெடுவான் கேடு நினைப்பான்" என்ற சொல்லாடலுக்கு ஏற்பவே வரலாற்று திரிப்பாளர்களின் முடிவும் அமைந்துவிட்டது என்பதே மறுக்கமுடியாத உண்மை.

கில்ஜியின் தந்திரம் . திறன், நிர்வாகம் இவற்றில் அறிவு இல்லை என்றால் அன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய நிலப்பரப்பில் தனது ஆட்சியை நீடிக்க முடியாது. அந்த அந்த நிலப்பரப்பில் பல மொழியும் பல கலாசாரத்தையும் கொண்ட மக்களிடம் தன் அதிகாரத்தை செலுத்த அந்த பகுதி மக்களிடம் நன்மதிப்பை பெற்ற பிரதிநிதிகளை கொன்டே நிர்வாகித்தார். அன்றைய நிலையில் அவர் அறிந்த மொழி ஆப் ககன் மொழியும் அரபியும் தான் - இந்திய நூறுக்கணக்கான மொழி தெரியாது - ஆனால் அதை பேசும் போது கண், முக பாவனையை வைத்தே அதில் உள்ள உண்மை பொருள் அறியும் ஆற்றல் இருந்ததால் ஏமாற்றும் மொழிபெயர்ப எளர் இல்லை. இதனால் தான் காது வழி செய்தியாக கண்டதை கூறி சென்றனர் நிர்வாக ஆவணம் தவிர வேறு ஆவணம் இல்லாமல் கற்பனையும் கனவுகளையும் காதையாக்கி பின் உண்மை போல சித்தரிக்கின்றனர் - நான்கு வர்னத்தார் முறையில் ஒரு கடைசிவர்ண சூத்திர மன்னன் மேல் சூடும் பாமாலை இப்படி தான் இருக்க முடியும்'

ஆதாரம்- Alaudeen Khilji the Saviour of Hinduism., Encyclopedia Britannica., Wikipedia., etc.,

தொகுப்பு: மு .அஜ்மல் கான்.

நீல நிலா சந்திர கிரகணம் பற்றிய தவகல்!!


 2018 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இம்மாதம் 31ஆம் திகதி நிகழும் என சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் எதிர்பார்ப்பு வௌியிட்டுள்ளன.

சுமார் 150 ஆண்டுகளுக்குப்  பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இதுவாகும். இந்த சந்திர கிரகணம் நீல நிலா (Blue Moon) என அழைக்கப்படுகிறது.

ஜனவரி 31 ஆம் திகதி நள்ளிரவில் இந்த முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசுபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேசியா, நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் மாலை வேளையில் முழு நிறைவாகத் தெரியும் என தெரிவித்துள்ளது.

சந்திர கிரகணம் நாளை மாலை 5.20க்கு துவங்குகிறது. ஆனால், முழு கிரகணம் சூரிய அஸ்தமனத்துக்கு பிறகு மாலை 6.25க்கு துவங்கி 7.25 வரை நீடிக்கும். இந்த மாதத்தில் தோன்றும் 2வது பெளர்ணமி இது. இது ‘புளூ மூன்’ ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.

Supermoon: பெருமுழு நிலவு - பௌர்ணமியன்று நிலா பூமிக்கு வெகு அருகில் வருவது பெருமுழு நிலவு எனப்படும். இம்முறை அது மேலும் பெரிதாகக் காணப்படும்.


முழுச் சந்திர கிரகணம்: - சூரியன், நிலா, பூமி மூன்றும் ஒரே கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.


Blue moon: - ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி ஆகியவை அந்த மூன்று நிகழ்வுகள்.


- 32 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமியைக் காண முடியும்.அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் இந்த சந்திர கிரகணம் ஆரம்பம் முதல் முடிவு வரை தெரியும். மற்ற வட மற்றும் மத்திய அமெரிக்காவில் சந்திரன் மறையும் நேரம் குறுக்கிடும்.

மொத்தமாக இந்த முழு சந்திர கிரகணம் 77 நிமிடங்கள் நிகழும் என space.com தெரிவித்துள்ளது.

முழு கிரகணம் பிடிக்கும் நேரத்தில் சந்திரனின் கீழ் விளிம்பு பிரகாசமாகத் தெரியும். மேல் விளிம்பு இருளாக இருக்கும்.

இந்த முழு சந்திர கிரகணத்தை விட்டால் அடுத்த முழு சந்திர கிரகணம் டிசம்பர் 31, 2028 இல் நிகழும். பிறகு ஜனவரி 31, 2037 இல் நிகழும். இந்த இரண்டுமே முழுமுற்றான சந்திர கிரகணங்களாகும்.


சந்திர கிரகணம் பற்றி மேலும் அறிய ..



Sunday 28 January 2018

கருவறைக்குள் சிசு செய்யும் குறும்புகள் !! ஒரு அபூர்வ பார்வை

Related imageகுழந்தைகள் என்றாலே அழகு தான், அவர்களது சிரிப்பும், அழுகை, முக பாவனைகள், கொட்டாவி விடுவது, உறங்கும் நிலை என அனைத்தும் அழகு தான்.

ஆனால், கருவறைக்குள் இவற்றில் என்னென்ன செயல்களை எல்லாம் சிசு செய்யும் என உங்களுக்கு தெரியுமா?


நாம் கூறிய இவற்றில் பெரும்பாலானவற்றை சிசு கருவறைக்குள்ளேயே செய்ய ஆரம்பித்துவிடும். இனிப்பு ஃப்ளுயிட்களை ரசித்து விழுங்குதல், அம்மாவின் குரலை கேட்டு அசைதல் என கருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள் நிறைய இருக்கின்றன. 
அவற்றை பற்றி இனிக் காணலாம்…


*அழுகை*

கருவில் இருக்கும் சிசுவை அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் ஆய்வு செய்த போது. வியக்க வைக்கும் வகையில். சிசு கருவறையில் அழுவது கண்டறியப்பட்டது.

*பிணைப்பு*
இரட்டையர்களுக்கு மத்தியில் இருக்கும் பிணைப்பு கருவறையிலேயே துவங்கிவிடுகிறது.
மேலும், இரட்டையர்கள் கடைசி பத்து வாரங்களின் போது அம்மா பேசுவதை ஆக்டிவாக கேட்டுக் கொண்டிருப்பார்களாம்.

*விக்கல்*

முதல் மூன்று மாதத்தின் போதே சிசுவிற்கு விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடுமாம். இதை கர்ப்பிணிகள் உணர முடியாது. நன்கு கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தால் சிறய அளவிலான நகர்தல் ஏற்படுவதை உணர முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

*புன்னகை*

26வது வாரத்தில் இருந்து குழந்தை ரியாக்ட் செய்ய ஆரம்பிக்கிறது. இந்த காலக்கட்டத்தில் தான் கருவறையில் இருக்கும் சிசு முதன் முதலில் சிரிக்க ஆரம்பிக்கும்.

*கொட்டாவி*

குழந்தைகள் கொட்டாவி விட்டாலே செம அழகாக இருக்கும். கருவில் இருக்கும் சிசுவும் கொட்டாவி விடுமாம்.

*சிறுநீர்*


முதல் மூன்று மாதங்கள் முடியும் போது சிசுவின் உடலில் சிறுநீர் உற்பத்தி ஆரம்பிக்கும்.

கருவறையிலேயே சிசு சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும்.

*கண்கள் திறப்பது*


28வது வாரத்தின் போது குழந்தை முதன் முதலில் கண்களை திறக்கும். கர்ப்பிணி பெண்களின் வயிர் மிகுந்த வெளிச்சத்தில் வெளிப்படும் போது கருவறையில் இருக்கும் சிசு கண்களை திறக்குமாம். ஆனால், மிக சிறிய நேர அளவில் தான் கண்களை திறந்திருக்குமாம் சிசு.

*ருசி*
கர்ப்பிணி பெண் எந்த உணவை உண்டாலும், அந்த ருசியை அம்னியோடிக் அமிலத்தின் மூலமாக சிசு ருசியை அறியுமாம். இது குறித்து நிபுணர்கள் கூறுகையில்,”15வது வாரத்தில் இருந்து சிசு இனிப்பை ரசித்து ருசிக்க ஆரம்பிக்கிறது. இதனால் நிறைய இனிப்பு ஃப்ளுயிட்களை விழுங்குகிறது” என கூறுகின்றனர்.


தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

Saturday 27 January 2018

மெனோபாஸ் ( மாதவிடாய் நிற்றல் ) பற்றிய சமூக அறிவியல் பார்வை !!!


Image result for menopause ageமெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும்.   ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய பருவ உடல் மாற்றம்.பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்),  திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள்  ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல், மன வாதைகளுக்கு உள்படுகின்றார்கள்.  
வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹோமோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன. ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.
எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயபட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது.  இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறுவதே இக்கட்டுரை.

பெண்களின் மெனோபாஸ் நாட்கள் ..
நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது.... ஏன் மாதவிடாய் நிற்கிறது... அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.
மெனோபாஸ் என்றால் என்ன? 
நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!
மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?
மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?
சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.
என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?
ஓவரியில்  (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ,  இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.
ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?
  
1. அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):
Image result for மெனோபாஸ்ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்... நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்... இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!
பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.
2. இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):
இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.
3. அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்):
அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும். 
4. வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு)  உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.
மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!...)
பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!
மெனோபாஸ் –  மாதவிடாய் மறையும் காலம்
Image result for menopause ageபெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ் (விமீஸீஷீஜீணீusமீ) எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது. 
மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.
சுமார் 30 சதவிகித பெண்களுக்கு பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.
மெனோபாஸ் தரும் தொல்லைகள்
• திடீரென சூடாக உணர்வது
• திடீரென இரவில் வியர்ப்பது
• யோனி உலர்ந்து காணப்படுவது
• தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)
• சருமம் உலர்ந்து காணப்படுவது
• பின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது
• இரத்த நாளங்கள் குறுகி விடுவது.
இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.
உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.
பெண்மணிகளின் இயல்பு பாலுணர்வு சம்மந்தப்பட்ட ஹார்மோன்கள்  உடல் இயக்கத்துக்கும், குழந்தைகள் பெறுவதற்கும் தேவை. ளிஸ்ணீக்ஷீவீமீs (சினைப்பை) இந்த இரண்டு ஹார்மோன்களையும் உற்பத்தி செய்கிறது. 
விமீஸீஷீ-றிணீusமீ ஏற்படும் சராசரி வயது 52. சாதாரணமாக 45 வயதிலிருந்த 55 வயதுக்குள் ஏற்படுகிறது. இதற்கு முன்பாகவே மாதவிடாய் நின்றுவிடலாம். ஒரு பெண்ணிற்கு 40 வயதுக்கு முன்பே மாதவிடாய் நின்றுவிட்டால் காரணங்கள். கதிரியக்கம் (ஸிணீபீவீணீtவீஷீஸீ), புற்றுநோய் மருந்துகளின் பக்கவிளைவுகளால், புகைபிடித்தல், சினைப்பைக்கு (ளிஸ்ணீக்ஷீவீமீs) ரத்தஒட்டம் சில அறுவை சிகிச்சைகளால் குறைந்துவிடுவது போன்றவை.
ஒவரிகளும், கருப்பப்பையும் அறுவை சிகிச்சையால் நீக்கப்பட்டிருந்தாலும் மாதவிடாய் நின்றுவிடும். இதற்கு ஷிuக்ஷீரீவீநீணீறீ விமீஸீஷீஜீணீusமீ என்பார்கள்.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்கபோகும் அறிகுறிகள்
பெண் ஹார்மோன்கள் உற்பத்தி குறைய, குறைய மாதவிடாய் சுழற்சி ஏறுமாறாகும். இந்த மாற்றங்கள், கடைசி மாதவிலக்கு வருவதற்கு 3-5 வருடங்களுக்கு முன்பிருந்தே, தோன்ற ஆரம்பிக்கும். இந்த காலகட்டத்தில் பல அறிகுறிகள் தோன்றும். இந்த மாறுதல்கள் பெண்ணிற்கு பெண் வித்யாசப்படும்.
Image result for menopause ageபல பெண்களுக்கு எந்த மாற்றமும் தோன்றுவதில்லை. சில பெண்களுக்கு குறைவான மாற்றங்கள் ஏற்படுகின்றன. ஏனைய பெண்களுக்கு இந்த மாற்றங்கள் தீவிரமாக இருக்கும். இதனால் விமீஸீஷீஜீணீusமீ ஐப் பற்றிய அறியாமையால் பெண்களுக்கு பயமும் பீதியும் உண்டாகி பலதொல்லைகளை சந்திக்க நேரிடும். எனவே, இதைப்பற்றி அறிந்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இந்த இயற்கையின் நியதியுடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள்.
அறிகுறிகள்
மெனோ-பாஸ் (விணிழிளி-றிகிஹிஷிணி) நெருங்க நெருங்க உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரே ரீதியாக இல்லாமல் மாறுபடும். வழக்கத்தைவிட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ உதிரபோக்கு உண்டாகலாம்.
• இரண்டு மாதவிலக்கின் நடுவில் உள்ள நாட்கள் குறையலாம், அல்லது கூடலாம்.
• இல்லாவிட்டால் வழக்கமான முறையான மாதவிடாய் சுழற்சி தொடர்ந்து, திடீரென்று எவ்வித அறிகுறியுமின்றி நின்று விடலாம்.
• வழக்கத்துக்கு மாறாக அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் உங்கள் டாக்டரை நாடவும்.
உடல்ரீதியான மாற்றங்கள்
1. பிஷீt திறீணீsலீமீs எனப்படும் வேதனையான சூடு உணர்வுகள் உடம்பில் உண்டாகி, முகம் சிவந்து, முகத்தில் கழுத்தில் உடலில் வேர்வை ஏற்படும். படபடப்பு, தலை சுற்றல் இல்லை… மயக்கமே ஏற்படலாம். இந்த பிஷீt திறீணீsலீமீs சில நிமிடங்களில் மறையலாம், இல்லை மணிக்கணக்கில் இருந்து தொல்லை தரலாம். ஒன்றிரண்டு வருடங்கள் இல்லை 5 வருடங்கள் கூட இந்த பிஷீt திறீணீsலீமீs தொடரலாம். இதற்கு நிவாரணம் – பிஷீt திறீணீsலீமீs தாக்கும்போது ‘ஜில்’ என்று குளிர்ந்த பழரசங்கள் அல்லது தண்ணீரை பருகவும். இரவில் எப்போதும் கிடைக்குமாறு, படுக்கை அருகில் பழரசங்கள்/தண்ணீர் இவற்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

2. இரவில் வியர்த்தல்

இரவில் அதிக வியர்வை ஏற்பட்டு உங்கள் தூக்கம் தடைப்படும்.
நடுஇரவில் நீங்கள் எழுந்து உடைகளை மாற்றவோ இல்லை ‘ஷவரில்’ குளிக்கவோ நேரிடும். இதனால் உங்கள் தூக்கமும் உங்கள் துணைவரின் தூக்கமும் கெடும். தளர்வான பருத்தி ஆடைகளை உபயோகியுங்கள்.
3. யோனி உலர்தல்
யோனியின் ‘சுவர்கள்’ தங்கள் மென்மையையும், ‘எலாஸ்டிக்’ (ணிறீணீstவீநீ) தன்மையையும் இழந்துவிடும். நமைச்சல், சொறி ஏற்பட்டு, யோனியில் தொற்றுநோய் உண்டாகலாம். சாதாரணமாக உடல் உறவின்போது, யோனியை ஈரமாக வைக்க சுரக்கும் திரவம், இந்த விமீஸீஷீஜீணீusமீ சமயத்தில், சரிவர சுரக்காது. இதனால் யோனி காய்ந்துவிடும் உடல்உறவு மகிழ்ச்சியை விட அதிக வேதனையை உண்டாக்கும். எனவே, உடலுறவை தவிர்க்கவும்.
4. இதர உடல் பாதிப்புகள்
தலைவலி, உடல்வலி, களைப்பு, வயிற்று தொல்லைகள், மார்பகம் மென்மையடைதல், தூக்கமின்மை, எடைகூடுதல் இவையெல்லாம் உண்டாகும். தோல்கள் சுருக்கமடைந்து ‘கோடுகள்’ (கீக்ஷீவீஸீளீறீமீs) உண்டாகும். தலை முடி அதன் பளபளப்பை இழக்கும். முகத்தில் உள்ள முடிகள் முரடாகி அதிகரிக்க கூடும். தலைமுடி உதிர்ந்து குறைந்து விடலாம். ஆஸ்டியோ – போரேசிஸ் (ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs) என்ற எலும்பு நோய் தோன்றலாம்.
மனோரீதியான பாதிப்புகள்
• உடல் தொல்லைகளால் எரிச்சலும் களைப்பும் ஏற்படும். அடிக்கடி எரிந்து விழுவீர்கள்.
• மறதி, அடிக்கடி மனநிலை (விஷீஷீபீ) மாறுவது, ஒரு விஷயத்தில் ஈடுபாடு (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtவீஷீஸீ) இல்லாமல் போவது, இனந்தெரியாத பலஉணர்வுகள் காரணமில்லாமல் அழுகை இவையெல்லாம் ஏற்படும்.
• உங்கள் ‘டென்ஷனால்’ சிறிய பிரச்சனைகள் பூதாகாரமாக பெரிதாக தெரியும். ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீனும் உண்டாகலாம்.

இதர சிக்கல்கள்

1. இதய சம்மந்த நோய்கள்
நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நின்றிடும்போது சுரப்பது குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.
2. ஆஸ்டியோ போரோசிஸ்
இந்த எலும்பு மண்டல நோய் அதிகவயதினால் ஏற்படுவதைவிட விமீஸீஷீ-றிணீusமீ ஆல் அதிகம் ஏற்படுகிறது. இதற்கும் ணிstக்ஷீஷீரீமீஸீ தான் காரணம். இந்த ஹார்மோன் ‘கால்சியம்’ உடலில் படிவதற்கு உதவுகிறது. ணிstக்ஷீஷீரீமீஸீ குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ளிstமீஷீ-றிஷீக்ஷீஷீsவீs நோய்க்கு உள்ளாகுகிறார்கள்.
3. நரம்பு சம்மந்த மறதிநோய் (கிலிஞீபிணிவிணிஸி’ஷி ஞிவீsமீணீsமீ) 
இது நரம்புத்தளர்ச்சி நோய். இது தொடர்பான ஞாபகசக்தி குறைந்து முழு மறதியை உண்டாக்கிவிடும். இதனால் மனச்சோர்வும் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) வரும்.
அலோபதிக் மருந்துகள்
மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும்போது ஏற்படும் தொல்லைகளில் முக்கிய காரணம் ணிstக்ஷீஷீரீமீஸீ மற்றும் றிக்ஷீஷீரீமீstமீக்ஷீஷீஸீமீ ஹார்மோன்களின் குறைபாடு. எனவே, இந்த ஹார்மோன்களை வாய் வழியாக ஊசிபோட்டோ, உடலுக்கு செலுத்தப்படுவது முதன்மையான சிகிச்சை. இது பிஷீக்ஷீனீஷீஸீமீ ஸிமீஜீறீணீநீமீனீமீஸீt ஜிலீக்ஷீமீக்ஷீணீஜீஹ் (பிஸிஜி) எனப்படுகிறது.
இதன் பயன்கள்
• பிஷீt திறீணீsலீமீs, இரவு வியர்த்தல் முதலிய தொல்லைகளை தடுக்கிறது.
• சருமம், தலைமுடி பாதிப்புகளை சரிசெய்கிறது.
• இதய, இரத்தக்குழாய் நோய்களிலிருந்து நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
• யோனியின் சுவர்களை மென்மையாக்கி, ஈரப்பசை குறையாமல் பாதுகாக்கிறது. பிஸிஜி யின் சில பக்க விளைவுகள்.
• இந்த ஹார்மோன் சிகிச்சையால், விமீஸீஷீஜீணீusமீக்கு பிறகு ரத்தப்போக்கு ஏற்படலாம். ரத்தப்போக்கு நிற்க வேண்டும்போது மறுபடியும் உதிரப்போக்கு தொடர்வது வேதனையை உண்டாக்கும்.
• மார்பு மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படலாம்.
• கல்லீரல், மண்ணீரல் (லிவீஸ்மீக்ஷீ, நிணீறீறீ தீறீணீபீபீமீக்ஷீ) நோய்கள் உண்டாகலாம்.
• அதிக இரத்த அழுத்தம் உள்ள பெண்கள் குடும்பத்தில் புற்றுநோய்கள் நேர்ந்திருந்தால், இந்த ஹார்மோன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டாம்.
ஆயுர்வேதம்
ஆயுர்வேதம் பாதுகாப்பான பயனளிக்கும் சிகிச்சை முறைகளால் விமீஸீஷீஜீணீusமீ தொல்லைகளை போக்கவல்லது உடல்ரீதியாகவும் மனோரீதியாகவும் ஏற்படும் மாறுதல்களை பாதிப்புகளை ஆயுர்வேத மருந்துகளால் முற்றிலும் சரி செய்ய முடியும். 
ஆயுர்வேதம் ஒரு தொன்மையான, விஞ்ஞான ரீதியான மருத்துவ முறை, இயற்கையின் வரப்பிரசாதங்களான மூலிகைகளையும், இயற்கையான தாதுப்பொருட்களையும் உபயோகிப்பதால் பக்க விளைவுகள் இல்லை.
வியாதியிலிருந்து குணப்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மூன்று தோஷங்கள் – வாதம், பித்தம், கபம். இவைகள் சரிசமமாக உடலில் இயங்கினால் ஆரோக்கியமும், இவை மாறுபட்டால் நோய்கள் உண்டாகும் என்பது ஆயுர்வேத சித்தாந்தம்.
ஆயுர்வேதத்தின் படி, விமீஸீஷீஜீணீusமீ ஏற்படுவது. வாத, பித்த தோஷங்களின் மாறுபட்டால் தான் ஏற்படுகிறது.
நிரந்தரமாக நிற்கும் மாதவிடாய் கோளாறுகளுக்கு ஆயுர்வேத சிகிச்சை மூலிகைகள் ‘றிலீஹ்tஷீமீstக்ஷீஷீரீமீஸீ’ என்ற பொருள் உள்ள சிறந்த மூலிகைகள்.
இவை ணிstக்ஷீஷீரீமீஸீ ஹார்மோன்கள் போன்றவையே. ஆனால் ணிstக்ஷீஷீரீமீஸீ சிகிச்சையால் ஏற்படும் பக்க விளைவுகள் இல்லாதவை. 
இதனால் பெண்கள் இந்த காலகட்டத்தில் எந்த வித தொல்லைகளும் இன்றி ஆயுர்வேத மருந்துகளால் பயனடையலாம்.
மருத்துவம் 
பாதிப்பு அதிகமாக உடைய பெண்கள் அதிமதுரம் வேரை சுத்தம் செய்து பொடியாக்கி வைத்துக் கொண்டு தினசரி இரு வேளை (காலை, இரவு) ஒரு ஸ்பூன் அளவு சூடான பாலில் கலந்து பருகி வரலாம். அதிமதுரம் ( லிமினிஹிளிஸிமிசிணி – நிலிசீசிசீஸிவிமிஞீகி நிலிகிஙிஸிகி) வேரில் பெண் இன ஹார்மோன் ‘இஸ்ட்ரோஜென்’ போன்ற பொருள்கள் காணப்படுவதால் அது இறுதியாக மாதவிடாய் நிற்கும் சமயம் ஏற்படக் கூடிய திடீர் ஹார்மோன் குறைபாடை சீர் செய்கின்றது.
நிரந்தர மாதவிடாய் நிற்கும் போது கவனிக்க வேண்டியவை..
• சரிசம விகித உணவை உட்கொள்ளவும், பச்சை காய்கறிகள், கீரை, அவரைக்காய், உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
Image result for மெனோபாஸ்• கால்சியம் செறிந்த தயிர், ஆடை இல்லாத பால், பால் பொருட்கள், பீட்ரூட், கேரட், முட்டை கோஸ் போன்ற உணவுகள் ளிstமீக்ஷீஷீ – ஜீஷீக்ஷீஷீsவீs வராமல் பாதுகாக்கும்.
• மசாலா, வறுத்த பொருட்கள், வெங்காயம், பூண்டு, மிளகாய், தக்காளி, வினிகர் போன்ற உடலை சூடாக்கும் உணவுகளை தவிர்க்கவும்.
• உடற்பயிற்சி, தியானம், யோகா இவை உதவும் குறைந்த பட்சம் தினசரி நடக்கவும்.
• உடற்பயிற்சி யோகாசனங்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.
• விமீஸீஷீஜீணீusமீ தவிர்க்க முடியாத இயற்கையின் நியதி. நல்ல மருத்துவம், உணவு வகைகள் இவற்றால் நீங்கள் இந்த கால கட்டத்தில் ஏற்படும் தொல்லைகளிலிருந்து விடுபடலாம்.

மெனோபாஸ்
நாற்பத்தைந்திலிருந்து ஐம்பது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுபோவதைத்தான் மெனோபாஸ் என்கிறோம். பூப்பெய்தல், பிரசவம் போல ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்ல வேண்டிய காலகட்டம் இது. ஹார்மோன் மாற்றங்களால் அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். நாற்பத்தைந்து வயதில் மெனோபாஸிற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது மனவலிமை மட்டுமே.

மெனோபாஸின் அறிகுறிகள்:

ஒவ்வொரு மாதமும் சரியாகத் தொடர்ந்து கொண்டிருந்த மாதவிடாய் சுழற்சியில் ஏற்படக்கூடிய மாறுதல்கள்தான் மெனோபாஸ் ஆரம்பமாகியிருக்கிறது என்பதன் முதல் அறிகுறி. மாதவிடாயின்போது அதீத உதிரப்போக்கு, மாதவிடாய் திடீரென்று நின்று போதல், அப்நார்மல் பிளீடிங், இரண்டு மாதத்துக்கு ஒருமுறை பிளீடிங், தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு மேல் பிளீடிங் இவை மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள்.
உடல் முழுவதும் உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஒருவித சூடு ஒரு நிமிடம் ஃபிளாஷ் மாதிரி பரவிவிட்டுப் போகும். இதற்கு hot f* ushes என்று பெயர். பெரும்பாலான பெண்களுக்குத் திடீரென ஏற்படும் hot f* ushes பப்ளிக்கில் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
பிறப்பு உறுப்பும் அதைச் சுற்றியுள்ள இழைகள் மெலிதாகவும், உலரவும் தொடங்கிவிடும்.
ஹார்மோன் மாற்றங்களால் மெனோபாஸில் இருக்கும் பெண்கள், ஒரே மனநிலையில் இருக்க மாட்டார்கள். அவர்களுடைய மூட் ஒரு நாளிலேயே பலமுறை மாறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி கோபப்படுவது, எரிச்சல்படுவது, சோர்வு, மன உளைச்சல், டிப்ரஷன் போன்றவை மெனோபாஸ் பெண்களுக்கு ஏற்படக்கூடியவை. உடல் அளவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.
செக்ஸில் ஆர்வம் குறையும். உடலில் எனர்ஜி குறைவதால் பொதுவாக எதிலேயும் ஆர்வம் குறைவாகத்தான் இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு வைத்துக்கொள்ளும் பெண்களுக்கு வலிமிக்க உடலுறவாக அமையும்.
எலும்புகள் மெலியத் தொடங்கிவிடும், இதனால் நாற்பது வயதைத் தாண்டிய பெண்கள் எளிதில் ஆன்டியோ பொரோஸிஸ் நோயினால் தாக்கப்படுவார்கள். எலும்புகள் வீக்காகத் தொடங்கும். இந்த அறிகுறிகள் குண்டாக இருக்கும் பெண்களுக்கு இன்னும் அதிகமாகத் தெரியும்.
இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான அறிகுறிகள் இருதய நோய் பரம்பரை உள்ளவர்களுக்குத் தெரியத் தொடங்கும். சரி. இந்த மாற்றங்களுக்குக் காரணம்? ஈஸ்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் பெண்களின் உடலில் செய்யும் முக்கிய வேலைகளைப் பார்க்கலாம். பெண்களின் உடலில் அவர்களுடைய மார்பகங்கள், பெல்விக் எலும்பு வளர்ச்சி, பிறப்பு உறுப்பு, கர்ப்பப்பை செயல்பாடுகள் ஆகியவற்றைச் செயல்படுத்துவது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். கால்ஷியத்தை உறியச் செய்து எலும்புகளை பலப்படுத்துவதும் இந்த ஹார்மோன்தான். மேலும் நல்ல கொலஸ்ட்ராலான HD* _ஐ. அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ராலான * D* _ஐ.. குறைத்து பெண்களுக்கு இருதய நோய் வராமல் பாதுகாக்கவும் செய்கிறது. அதனால் மெனோபாஸ் வரை பெண்களுக்கு இருதய நோய் தாக்கும் 

வாய்ப்பு மிகக் குறைவு.
மெனோபாஸின்போது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் செயல்பாடுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக டிப்ரஷன், எலும்பு மெலிதல், இருதயநோய் ஆகியவை பெண்களை எளிதில் தாக்கக் கூடிய நிலை ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. மெனோபாஸ் அறிகுறிகள் அனைத்தும் ஈஸ்ட்ரோஜன் குறையும்போது அறியப்படுகிறது. ஹார்மோன் ரீப்பிளேஸ்மெண்ட் தெரபி (HRT) என்ற சிகிச்சையின் மூலமே ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை ஈடுகட்ட முடியும். ஆனால், இந்த சிகிச்சைக்கு பக்கவிளைவுகள் உண்டு. இதைப்பற்றி சிகிச்சைக்கு முன்பு மகப்பேறு மருத்துவரிடம் கலந்து ஆலோசிப்பது நல்லது.
மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கும் லேடீஸ் கவனித்துக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள்…
*  ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லவேண்டிய ஸ்டேஜ் என்பதால், இதன் அசௌகரியங்களைத் தாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும்.
*  45 வயதைக் கடந்த பெண்கள் டி.என்.சி செய்து கொள்வது நல்லது. அந்த உதிரப் போக்கின் மற்றும் பல காரணங்களைத் தெரிந்து கொள்ள இது உதவும். இதன் மூலம் பிளீடிங்கும் ஓரளவுக்குக் குறையலாம்.
*  மருத்துவரை அணுகி வைட்டமின் சப்ளிமெண்டுகள் எடுத்துக் கொள்ளவேண்டும். Omega 3 fathya* ids உள்ள மீன் வகைகள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
*  ஸ்ட்ரெஸ்ஸை முற்றிலுமாகத் தவிருங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் நலன் கருதி எதைப் பற்றியும் கவலைப்படக் கூடாது! குறிப்பாக குடும்பப் பிரச்னைகள்.
*  குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களைப் புரிந்துகொண்டு பொறுமையாக நடந்து கொண்டு உதவி பண்ணணும். வீட்டு வேலைகளை இளைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கலாம். உடலை அதிகம் வருத்திக் கொள்ளக் கூடாது.
*  உணவினை எரிக்கும் சக்தியான Basa*  Metabo* ic Rate  சற்றே குறைந்து விடுவதால் உணவில் கட்டுப்பாடு அவசியம். காலை வேளையில் சின்ன மீல்ஸாகவும் இரவு நேரங்களில் டிஃபன் ஐயிட்டங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்.
*  ஞாபகத் தன்மை குறையத் தொடங்கும். ஒரு நாளைக்கு ஐந்துமுறை பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
*  பிறப்பு உறுப்புகளில் ஏற்பட்டிருக்கும் உலர்ந்த தன்மையைச் சரிசெய்ய மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம்களை மட்டும் பயன்படுத்தலாம்.
*  உடல் மற்றும் முகச் சருமம் உலர்ந்துவிடுவதால் மாய்சுரைஸர், கிளென்ஸர், டோனர் அப்பை செய்து கொள்ளலாம்.
*  எலும்புகளுக்கு வலுவூட்ட ஏரோபிக் உடற்பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.
*  மெனோபாஸ் என்பது பெண்களின் உடல்நிலையைச் சுட்டிகாட்டும் ஒரு ரிமைண்டர் என்று சொல்லலாம். இந்த ஸ்டேஜைக் கடந்த பெண்கள், தங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்றே அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தொடர்ந்து ஒரு வருடம் மாதவிடாய் சுழற்சி நின்றால் மட்டுமே மெனோபாஸ், மூன்று அல்லது ஆறு மாதங்கள் பீரியட்ஸ் நின்றால், மெனோபாஸாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 40 வயதைக் கடந்த பெண்கள் அனைவரும் முடிந்த வரை முழுமையான மெடிக்கல் செக் அப் எடுத்துக் கொள்வது நல்லது!

மெனோபாஸ் ஏற்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தில் இருப்பவர்களும் அவர்களின் கணவன்மாரும் நிலைமையைப் புரிந்து கொண்டு பொறுமையாக நடந்து அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்தால் அவர்கள் சந்தோசமாக நீண்ட நாட்கள் வாழமுடியும்.
தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.