Friday 28 December 2018

நாம் வீடு கட்டச் சில விதிமுறைகள் மற்றும்ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?

வீடு கட்ட நிலம் வாங்கியாகிவிட்டது. அதில் நம்முடைய விருப்பத்துக்குத் தகுந்தாற்போல் வீடு கட்டலாம்தான். ஆனால், அதற்குச் சில விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. எத்தனை மாடி கட்ட வேண்டும், எவ்வளவு இடம் விட்டுக் கட்ட வேண்டும், என்பன போன்ற விதிமுறைகள் உள்ளன.   

நம்மிடம் உள்ள நிலம் முழுவதிலும் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். அதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற்போல மாறுபடும். அதாவது மாநகராட்சிப் பகுதிகள் என்றால் ஒருவிதம், நகராட்சி என்றால் ஒருவிதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன. மனையில் வீட்டின் பின்பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. உதாரணத்துக்கு மனையின் நீளம் 50 அடி அல்லது அதற்கும் குறைவாகவோ இருந்தால், பின்பக்கம் 5 அடி விட வேண்டும். 50 - 100 அடி என்றால் 10 அடியும், 100-150 அடி என்றால் 15 அடியும் விட வேண்டும்.

அதேமாதிரி வீட்டுக்கு இரு புறங்களிலும் 5 அடி விட வேண்டும். எதற்காக இப்படி இடம் விடச் சொல்கிறார்கள் என்று உங்களுக்குக் கேள்வி எழலாம். வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம், செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் இப்படி இடம் விடச் சொல்கிறார்கள். மொத்தப் பரப்பில் 50 சதவீதம் மட்டுமே கட்டிடம் கட்ட வேண்டும் என்று விதிமுறைகள் சொல்கின்றன. 2,400 (60 x 40) சதுர அடி மனையில் 1,350 (45 x 30) சதுர அடி பரப்பளவில் வீடு கட்டலாம் என்கின்றன உள்ளாட்சி விதிமுறைகள். மேற்கூறிய இந்தக் கணக்கு தரைத் தளத்தில் கட்டப்படும் கட்டிடத்துக்கு மட்டுமே பொருந்தும்.

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப்.எஸ்.ஐ. (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின்படிதான் மாடியில் கட்டிடத்தை எழுப்ப வேண்டும். நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகளா என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப் பணி முடிந்துவிடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். அதுதான் முக்கியம்.

அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரத்தைப் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டிக் கையொப்பம் பெற வேண்டும். பின்னர், அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழை நீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள். மழை நீர் பிளானும் இருந்தால்தான் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமானப் பணிகளைத் தொடங்க வேண்டும். அதற்கு முன்பாகத் தொடங்கக் கூடாது. பிளானில் எப்படி உள்ளதோ அதுபோலவே வீடு கட்டுவது நல்லது. பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படலாம்.



‘நிலம் ஆறு கிரவுண்ட். மறைமலை நகருக்கு அருகில் ஒப்பந்ததாரர் தேவை’ என்னும் விளம்பரத்தைப் பிரபல நாளிதழ்களிலும் உள்ளூர் இலவச இதழ்களிலும் கண்டிருக்கலாம். இதன் முழுமையான பொருளை விளங்கிக்கொள்ள இயலவில்லை எனினும் விசாரித்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்றரை அல்லது இரண்டு கிரவுண்ட் வைத்திருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைக்க ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு ஓரிரண்டு தளங்கள் கிடைக்கும். ஆனால், பெரும் பரப்பு கொண்ட மனையை விற்பவர்கள் லாபத்திலும் பங்கு பெற முடியும்.

உதாரண சம்பவம்

இதுபோன்று, கூட்டாக இணைந்து செயல்படுகிற தன்மையில் கட்டாயம் ஏதாவது சிக்கல் வரும். இதை உறுதிப்படுத்துவதுபோல் மூன்று மாதத்துக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் செய்தியொன்று வெளியானது. மிகப் பிரபல, பெரிய ஒப்பந்ததாரர் ஒருவர் நில உரிமையாளர் ஒருவருடன் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்னவென்றால், ஒப்பந்ததாரர் பிரபலமானவர் என்பதாலேயே, பல வாடிக்கையாளர்கள் தாமாக வந்து சேர்ந்து முன்பணம் தந்திருக்கிறார்கள். ஆனால், நில உரிமையாளர் ஒப்பந்ததாரர் மீது வழக்கு தொடர்ந்ததாகச் செய்தி தெரிவித்தது. காரணம், ஒப்பந்ததாரர் கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அசலாகக் கட்டுகிற தளங்களுக்கும் நிறைய வேறுபாடு இருந்ததே.

நாலைந்து தளங்கள் எழுப்புவதற்கு ஒப்பந்தம் போட்டவர்களுக்கே தொந்தரவு ஏற்படுகிறது. கையொப்பமிட்ட புரிந்துணர்வின்படி, கட்டும் தளங்களில் ஒன்றோ இரண்டோ நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கத் தாமதமாகிறது.

தேர்ந்தெடுக்கச் சில வழிகள்

இத்தகைய நிலைமையில் ஒப்பந்ததாரரை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு நடைமுறைக்கு ஏற்பச் சில வழிகள் உள்ளன:

குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரைச் செவி வழிச் செய்தியாகவோவிளம்பரம் மூலமோ அறிந்து இருப்பீர்கள். அவர் கட்டி முடித்த தளங்களைச் சென்று பார்வையிடுங்கள். ஓரிரண்டு ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட தளவரிசைகளைப் பார்க்கலாம்.

பொதுவாக எல்லா ஒப்பந்ததாரர்களும் தனி வலைத்தளம் வைத்திருப்பார்கள். அதில் நிறைய விவரம் கிடைக்கும். அவர் மூலம் கட்டிடம் கிடைத்துப் பயனடைந்தவர்களிடம் பணிவாகப் பேசினால் தகவல் கிடைக்கும்.

வீடு கட்டும் முறையே மாறிவிட்டது. ஏனென்றால், 30 ஆண்டுக்கு முன், தனி வீடுதான். சாதாரண ஒப்பந்ததாரர் கட்டினால் போதும். இப்போது அப்படியல்ல. மண்ணின் தரம், தண்ணீர், சுற்றுப்புறம் போன்ற பல சோதனைகளைச் செய்ய, முறையான பொறியாளர்கள் அவசியம். மேலும், சுனாமி, வர்தா போன்ற அசம்பாவிதங்களைத் தாங்கிக் கொள்கிற அளவுக்குத் தளங்கள் அமையுமா என்பதையும் சோதிக்க வேண்டும். (2000-க்கு முன் இவை அறிந்திராதவை).

சில தடங்கல்கள் எதிர்பாராத வகையில் வரும். அரசு மாற்றத்தால் நிலவுகிற தாமதம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இத்துடன் தற்போதைய தலைவிரித்தாடும் பிரச்சினை – மணல் பற்றாக்குறை. இவற்றையெல்லாம் சந்தித்துச் சமாளிக்கிற அளவுக்கு ஒப்பந்ததாரருக்கு மன உறுதியும் பண பலமும் இருத்தல் அவசியம்.

ஒப்பந்ததாரரிடம் மனையைக் கொடுப்பது, கிட்டத்தட்ட சேலையை முள்ளிலிருந்து எடுப்பது போலத்தான். கட்டிடம் உறுதியாகவும் இருக்க வேண்டும். தொகையும் பட்ஜெட்டுக்கு மேல் போகக் கூடாது.

Ansar crack the test at a young age and go on to become Indian Administrative Service (IAS) officers.

The UPSC civil service exam is considered one of the toughest exams in the country. Lakhs of people take the exam and only a few hundred make the cut in the end. The civil services examination conducted by the Union Public Service Commission (UPSC) is one of the most challenging competitive tests in the country, and cracking it is not an easy task. Many candidates spend years preparing to clear it. However, there are also those who crack the test at a young age and go on to become the Indian Administrative Service (IAS) officers.
Only a proper combination of hard work, guidance and tenacity can help UPSC aspirants crack the IAS exam.
Many candidates, despite having all the comforts and coaching that money can buy, fail to clear the IAS exam. But some determined and zealously diligent candidates achieve success despite all odds stacked against them one such inspiring people is IAS Topper Ansar Ahmad Shaikh, who cleared the UPSC 2015 in his very first attempt.
He secured AIR 361 and he was just 21; beating Roman Saini who was 22 when he became an IAS officer.

Youngest IAS Officer

  • Ansar is the son of Yonus Shaikh Ahmad, an autorickshaw driver from Jalna’s Shedgaon village in the Marathwada region of Maharashtra.
  • His mother worked in fields.
  • His younger brother, Anees dropped out of school in standard VII. Anees worked in a garage to support the family and help his brother prepare for the IAS exam.
If you want to know how to become the youngest IAS officer of India, click here.

IAS Preparation

  • Ansar worked 12 hours a day for three years to achieve his IAS dream.
  • His success is especially commendable counting the fact that education wasn’t a priority in his family.
  • In his own words Ansar describes his domestic situation, “Education has never been a watchword in my family. My father, a rickshaw driver, has three wives. My mother is the second wife. My younger brother dropped out of school and my two sisters were married off at an early age. When I told them that I had cleared the UPSC and in all likelihood will be an IAS officer, they were stunned shocked.”
  • Even though Ansar’s large family struggled to make ends meet, he remained a bright student throughout.
  • He had secured 91% in his X board exams (SSC Board).
  • He has a degree in political science from Fergusson College, Pune.
  • Ansar had attended a private IAS coaching class for his UPSC civil services preparation.
  • His family had to bear great expenses in this regard but were more than delighted when they got the result they all had awaited.
  • He thanked Rahul Pandve, his 30-year-old teacher for giving him guidance and support. (Pandve had also cleared the UPSC civil services exam that year with AIR 200).
UPSC Topper Ansar has said, “I was marginalized by three different categories. I am from a backward undeveloped region, I hail from a poor economic background and I belong to a minority community. I will tackle all these issues as an administrator since I have witnessed these issues at close quarters.”
Ansar Ahmed Shaikh IAS said on his success “There is no alternative to hard work. During my struggle, my friends helped me a lot mentally and financially and even my coaching academy waived a portion of fees due to my poor financial condition”.
Hard work, family and friends – played their part in leading Ansar to his dream job.
But more than anything, it is the attitude that sets him apart from others – the attitude to never back down and be steadfast in trying to achieve your dream.
Ansar Shaikh Facts
Rank: 361
CSE: 2015
Age when cleared the exam: 21
Ansar Shaikh IAS posting: West Bengal cadre
Ansar Shaikh IAS date of birth: June 1, 1995
Medium of Mains and Interview: Marathi
Native place: Jalna, Maharashtra
Optional Subject: Political Science

Ansar Shaikh Preparation Strategy

  • In the first six months of preparation, Shaikh concentrated on his optional subject preparation which was political science. It helped that it was also his graduation subject. For more on political science optional, click on the linked article.
  • In the second six months, he focussed on the general studies papers. Stay updated with current affairs with our daily current affairs segment.
  • In the next three months, he completed his revision and also the remaining portions of the IAS mains papers.
  • In the next 9 months, Shaikh did his prelims exam preparation. After the prelims exam, he studied for his mains in the next 100 days. Finally, he prepared for his UPSC personality test in the last 40 days.
  • Shaikh normally studied for 10 – 12 hours per day. For the mains exam, the hard worker that he is, Shaikh put in 14 – 15 hours on a daily basis.
You may also like to read another IAS success story, which is equally inspiring, that of Govind Jaiswal, the son of a rickshaw-puller who secured rank 46 in his first attempt.


Sunday 16 December 2018

ஐபிசி 497. செக்சன் செல்லாது!! அப்படின்னா...



இந்த வருடத்தில் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதில் ஒன்று ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சுதந்திரத்தை பறித்த 377சட்டப்பிரிவு. இன்னொன்று தற்போது ரத்து செய்யப்பட்ட கள்ள உறவு தண்டணை சட்டப்பிரிவு 497. ஆனால் இந்த இரண்டு உச்சநீதிமன்ற உத்தரவுகளையும் பெரும்பாலானோர் முழுவதுமாகப் புரிந்து கொள்ளவில்லை.

தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு.

தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது கிரிமினல் குற்றம் இல்லை, கள்ளக்காதல் தவறு கிடையாது திருமணத்தை தாண்டி இருவர் உறவில் ஈடுபடுவது தவறில்லை,

பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும், சமுதாய பாரம்பரியம் எல்லாம் பிறகுதான். பெண்ணுக்கு பாலியல் உறவை தேர்வு செய்ய உரிமை உள்ளது. சமுதாயம் நினைப்பதைதான் பெண்கள் செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. திருமணத்திற்கு மீறிய பாலியல் உறவு குற்றம் கிடையாது. ஆணுக்கு சமமாக பெண்ணை நடத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக பாகுபாடு காட்ட கூடாது. பெண்ணின் எஜமானர் கணவர் அல்ல என்று தீர்ப்பு வாசித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.




கள்ள உறவு குற்றமில்லை என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நாம் சாதாரணமாகவும் நகைச்சுவையாகவும் எடுத்துக் கொள்கிறோம். இதன் பின்னணியை யோசியுங்கள். நாடு முழுவதும் அதிகமான பாலியல் வழக்குகள் பா.ஜ.க.வினர் மீதும், நித்யானந்தா போன்ற பல்வேறு சாமியார்கள் மீதும் உள்ளன. இந்தத் தீர்ப்பைக் காரணம் காட்டி அனைவரும் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. தீர்ப்பு எதற்காக வழங்கப்பட்டது என்பது அதன்பிறகு தெரியும்..


ஐபிசி 497. அப்படின்னா


மாற்றான் மனைவியுடன் ஒருவன் உறவு கொண்டால் அவனுக்கு மட்டுமே ஐந்தாண்டு சிறை.. பெண்ணை தண்டிக்க முடியாது..இதுதான் ஐபிசி 497 செக்சன் சொன்னது..



''இருவர் சேர்ந்து செய்யும் தவறில் ஆணை மட்டும் தண்டிப்பது சரியில்லை.. பெண்ணையும் தண்டிக்கவேண்டும். அல்லது இருபாலரையும் தண்டிக்கக்கூடாது'' என்று நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வந்தோம்.


இப்போது தகாத உறவு கிரிமினல் குற்றம் அல்ல என்று சொல்லி 497 பிரிவையே செல்லாது என உச்சநீதிமன்றம் அறிவித்துவிட்டது.

உடனே நம்ம ஆட்கள் கள்ளக்காதல் கிரிமினல் குற்றமல்ல.. எவன் பொண்டாட்டிகூட யார் வேண்டுமானாலும் போய் படுத்துக்கலாம், யாரும் ஒன்னும் கேக்கமுடியாது என்ற ரீதியில் பொங்கி வருகிறார்கள்..அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை.!


_*திருமண பந்தத்திற்கு வெளியேயான உறவு கிரிமினல் குற்றமல்ல என்று சொன்ன அதே நீதிமன்றம்தான், இந்த மாதிரி, படுக்கையை மாத்தி போடுறது தெரிஞ்சா அதை வெச்சே கணவனோ, மனைவியோ டைவர்ஸ் கேக்கலாம்னு தெளிவா சொல்லியிருக்கு..*_


என்னமோ இந்த தீர்ப்பாலஇனிமே கள்ளக்காதல் வெள்ளமா பெருக்கெடுத்து ஓடும்ற மாதிரி சமூக அக்கறை காட்டி  சீன் போட ஆரம்பிச்சிட்டாங்க.. 

பொங்கறவங்க வீட்ல, ''இது மாதிரி கள்ளக்காதல் நடக்கும்னு பயமா இருக்கா''?ன்னு கேட்டுப்பாருங்க..அடிச்செருப்பால‘ எங்க குடும்பம் ஒன்னும் அப்படிப்பட்ட மட்டமான குடும்பம் இல்லேன்னு சீறிக்கிட்டு பதில் வரும்.. அதையேத்தான் நாங்களும் சொல்லவர்றோம்.. எல்லார் குடும்பமும் கௌரவமான குடும்பம்தான்.


பொண்டாட்டி, புருஷன், அப்பன், அம்மா, புள்ள, பொண்ணு, அக்கா, தங்கச்சின்னு குடும்பத்துல இருக்கிற எல்லா உறவும் தப்பு செய்யவே மாட்டாங்கன்ற நம்பிக்கையிலதான் எல்லாருமே வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்காங்க.

ஊர்ல எல்லா கடைகளிலும் பல பொருட்களோடு பாய்சனையும் விக்கறாங்க..அதுக்காக எல்லாருமே பாய்சன் வாங்கி குடிச்சிகிட்டு செத்துக்கிட்டு இருக்காங்க? போய்ச் சேரணும்ன்னு விரும்பறவங்கதான் வாங்கி குடிக்கப்போறாங்க..

தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Saturday 15 December 2018

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே ?? கூட்டுக்குடும்பமா? கவனம் தேவை !

அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே!
கணவனும் மனைவியும் அவர்களது பிள்ளைகளும் மட்டுமே வாழும் குடும்பத்தில் அந்நிய ஆடவர்களுக்கு பெரும்பாலும் வேலையிருக்காது. ஆனால் நம் நாட்டில் அதிகமான மக்கள் பெரும்பாலும் கூட்டுக் குடும்பமாக வாழ்கின்றனர். அது போன்ற குடும்பங்களில் பெண்களும், ஆண்களும் பேண வேண்டிய ஒழுங்குகளை நிறைய உள்ளன. குறிப்பாக அண்ணன் தம்பி திருமணம் ஆன பிறகும் இணைந்து வாழும் குடும்பங்களில் உள்ள நிலையை நாம் கண்டிப்பாக இஸ்லாமிய பார்வையில் சிந்தித்து நம்மிடையே உள்ள தவறுகளை களையவேண்டும்.
ஏனெனில், அண்ணன் மனைவியான அண்ணியிடம் தம்பியும், அல்லது தம்பியின் மனைவியிடம் அண்ணனும் கேலி கிண்டல் பேசுவது, அதிலும் குறிப்பாக இரட்டை அர்த்தத்தில் ஆபாசமான வார்த்தைகளில் பேசுவது என்பது தொடர்கதையான ஒன்றாகி விட்டது. நமது சமூகத்தில் இது ஒப்புக் கொள்ளப் பட்ட நடவடிக்கையாகி விட்டது. எந்த ஓர் ஆன்மீகவாதியும், அறிஞரும், மார்க்கமும், மதமும் இதைத் தப்பாகக் காண்பது கிடையாது.
மார்க்கம் பேசுபவர்கள் மத்தியிலும் கூட மரண உறவுகள் தாய்-மகன் உறவாகத்தான் கொண்டாடப்படும் அவலம்...
இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே தனது எக்ஸ்ரே பார்வை மூலம் இதை ஒரு கடுமையான, சமுதாயக் கட்டமைப்பை அரித்துத் தள்ளும் புற்று நோய் என படம் பிடித்துக் காட்டுகின்றது. இதற்குக் காரணம் இந்த மார்க்கம் எல்லாம் வல்ல அல்லாஹ்வால் அருளப்பட்ட மார்க்கமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ், மனித மனங்களில் சஞ்சரிக்கின்ற சஞ்சலங்களை, எண்ண ஓட்டங்களை நன்கு அறிந்தவன். அதனால் தான் இதை மாபெரும் தீமை என்று அல்லாஹ் தன் தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலம் அறிவிக்கச் செய்கின்றான்.
முதல் தடுப்பு வேலியை அமைக்கிறது இஸ்லாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கின்றேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: புகாரி 5232
அண்ணியும் அபாயமும்
தமிழ்நாட்டில் ஒரு சுலோகம் கூட சுற்றி வருகின்றது. தம்பி பெண்டாட்டி தன் பெண்டாட்டி, அண்ணன் பெண்டாட்டி அரை பெண்டாட்டி என்பது தான் அந்தச் சுலோகம். இது சர்வ சாதாரணமாக தமிழக மக்களிடம் சுற்றி வருகின்றது. இங்குள்ள கலாச்சாரம் எந்த அளவுக்குப் போயிருக்கின்றது என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக் காட்டாகும்.

பெற்ற தாய், தந்தையர் கூட இதைப் பெரிதாக மட்டுமல்ல! ஒரு பொருட்டாகக் கூடக் கருதுவது கிடையாது. சின்னஞ் சிறுசுகள் ஏதோ கிண்டல் பேசுகின்றார்கள் என்ற ரீதியில் இதைக் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மற்ற உறவுகளை விட கணவனின் உறவினர்கள் தான் மரணத்திற்குச் சமம் என்று பிரகடனப் படுத்துகின்றார்கள்.
ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போது, ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான். தொடர்பு கொள்கின்றான். ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது. சகோதரன் என்ற உறவுமுறை இங்கு ஒரு கேடயமாக வந்து நிற்கின்றது. இது முதல் காரணம்! அடுத்து, அந்நியப் பெண் எனும் போது அந்தப் பெண்ணுடன் தனித்திருப்பது மிக மிக சாத்தியக் குறைவு! அதற்காக ஒருவன் பெரும் திட்டம் தீட்டியாக வேண்டும். ஆனால் இங்கோ வீடு ஒரே வீடு என்பதால் தனிமை என்பது மலிவாகக் கிடைக்கின்றது. இதற்காக எந்தத் திட்டமும் தீட்ட வேண்டியதில்லை. இத்தகைய சூழல் விபச்சாரம் என்ற விபத்தை நோக்கி மிக விரைவாக இட்டுச் செல்கின்றது.
இதனால் சகோதரர்கள் இருவரில் ஒருவன் கொலைகாரனாக மாறி மற்றவனைக் கொலை செய்து விடுகின்றான். இந்தக் கோர விபத்தின் கதாநாயகியான அந்தப் பெண்ணும் கொலை செய்யப் படுகின்றாள். இதுபோன்ற செய்திகளை அன்றாடம் நாம் பத்திரிகைகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். ஓர் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும் நாட்டில் இது போன்ற ஒரு கொடுமை நிகழுமானால் இத்தகையோர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும். இப்படிப்பட்ட மோசமான விளைவுகளெல்லாம் அண்ணியுடன் தனித்திருப்பதால் ஏற்படுகின்றது. இதையெல்லாம் உள்ளடக்கித் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கணவனின் உறவினர்களை மரணத்துக்கு நிகரானவர்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்கள்.
கண்மூடித்தனமான கலாச்சாரப் பற்று
இந்தப் பேராபத்து நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் பெண்ணின் ஆடையலங்காரம்! தனது கணவனின் சகோதரனேயானாலும் இஸ்லாம் பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கின்ற அந்த உடை அமைப்புடன் தான் அவன் முன் காட்சியளிக்க வேண்டும் என்ற சட்டம் பேணப்படுவதில்லை. அதிலும் இந்தக் காலத்தில் அணிகின்ற கண்ணாடி போன்ற உடைகள் உடல் உறுப்புக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் தனிமையில் சந்திப்பது, கிண்டலடித்துப் பேசுவது போன்றவை தவறான எண்ணத்திற்கு வழி வகுத்து விடுகின்றன. இவை முற்றிலும் தடுக்கப்பட்ட காரியங்கள் என்று இன்னும் இந்தச் சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்படவில்லை.
இவை தடுக்கப்பட்ட செயல்கள் என்று புரிய வைக்கப்படும் இடங்களில், “கூட்டு வாழ்க்கையில் இதுவெல்லாம் நடைமுறை சாத்தியமா?’ என்று கேட்கின்றனர். அதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வளவு கடுமையாக எச்சரிக்கை செய்யும் இந்த மார்க்க விஷயத்தை சாத்தியமற்றது என்று குற்றம் சாட்டுகின்றனர். நம் நாட்டில் பின்பற்றப்படும் இந்தக் கலாச்சாரம் நம்மை அப்படிப் பேச வைக்கின்றது.
இன்னும் சொல்லப் போனால் கூட்டு வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்று பாராட்டப் படுகின்றது. இதற்குத் தாய், தந்தையர் முழு காரணமாக அமைகின்றனர். நான் உயிருடன் இருக்கும் போது என் மக்கள் யாரும் தனிக்குடித்தனம் போகக் கூடாது என்று தாய், தந்தையர் சொல்லும் போது, பிள்ளைகள் அதை எதிர்த்துத் தனிக்குடித்தனம் செல்லப் பயப்படுகின்றனர். ஆனால் மேலே நாம் சொன்ன பிரச்சனைகள் அனைத்திற்கும் கூட்டுக் குடித்தனமாக வாழ்வது தான் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. எனவே தாய், தந்தையர் இந்த வறட்டுக் கவுரவத்தைக் கைவிட்டு, தனிக்குடித்தனமாக வாழ்வதற்கு இவர்களே துணை நிற்க வேண்டும். இது ஒழுக்க ரீதியிலான ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி வகுக்கும்.
கூட்டு வாழ்க்கைத் திட்டத்தை உடனடியாக உடைத்தெறிந்து விட முடியாது என்பது உண்மை தான். அதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளையை, இது சாத்தியமா? என்று கேட்டு விமர்சிப்பது முறையாகுமா? என்று சிந்திக்க வேண்டும். முதல் கட்டமாக கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு விட்டு அதன் பிறகு அதை நடைமுறைப் படுத்துவதற்குக் களமிறங்குவது தான் ஒரு முஃமினின் ஈமானியப் பண்பாகும்.
وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللّٰهُ وَرَسُوْلُهٗۤ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ ؕ وَمَنْ يَّعْصِ اللّٰهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا‏
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக் கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)
அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான் என்று அல்லாஹ் 65:2 வசனத்தில் குறிப்பிடுகின்றான். இதன்படி நாம் இந்தப் பாதையில் முயற்சி செய்யும் போது நிச்சயமாக அதற்குத் தக்க சூழலை அல்லாஹ் நமக்கு உருவாக்கித் தருவான். நமக்கு மிக மிகத் தேவை இறையச்சம் தான். இறையச்சம் இருப்பின் இத்தகைய வாழ்வமைப்பை நாம் எளிதில் உருவாக்கிக் காட்டலாம்.
இரு சக்கர வாகனத்தில் இணைந்திருத்தல்
கொழுந்தன் – அண்ணி உறவில் காணப்படும் மிக வேதனைக்குரிய விஷயங்களில், மிக பகிரங்கமாக நடக்கும் செயல்களில் ஒன்று தான், சகோதரன் மனைவியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்வது! இப்படி இரு சக்கர வாகனத்தில் இணைந்து செல்கையில் ஒருவரின் மேனி இன்னொருவரின் மேனியில் ஒட்டாமல் உரசாமல் வண்டியை ஓட்ட இயலுமா? அதிலும் குறிப்பாக பிரேக் போடும் போதும் மேடு பள்ளங்களிலும் இந்த உரசல்கள் நிகழாமல் இருக்குமா? இது மார்க்கத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா? இதில் இன்னும் வேதனை என்னவெனில் கணவனே இதற்குப் பச்சைக்கொடி காட்டி வழியனுப்பி வைப்பது தான்.
கணவனே இவ்வாறு இரு சக்கர வாகனத்தில் அனுப்பி வைத்து விட்டு, பின்னொரு காலத்தில் வண்டியில் கொண்டு சென்றவருக்கும் இவரது மனைவிக்கும் விவகாரம் ஏற்படும் போது இருவரையும் கொலை செய்வார், அல்லது குறைந்தபட்சம் தனது மனைவியை விவாகரத்து செய்வார். இது நபி (ஸல்) அவர்கள் சொல்வது போன்ற மரணத்துக்குச் சமமான ஒரு நிலையாகும். கணவன் மனைவி இருவருக்குமிடையில் வாழ்க்கைப் பந்தம் செத்துப் போய் விடுகின்றது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஓர் இறை விசுவாசி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளையை முழுமையாக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பின்பற்ற வேண்டும். ஏதோ அல்லாஹ் தொழச் சொல்கின்றானா? தொழுகின்றோம். ஆனால் இதுபோன்று காலம் காலமாகப் பின்பற்றி வரும் கலாச்சாரத்தை விடச் சொன்னால், இந்தக் கட்டளையெல்லாம் எங்களுக்கு சாத்தியப்பட்டு வராது என்று ஒதுங்குபவர்கள் இறை நம்பிக்கையாளர் அல்லர்.
வேதத்தில் ஒரு பகுதியை ஏற்று மறு பகுதியை மறுக்கின்றீர்களா? என்று அல்லாஹ் யூதர்களைக் கண்டிக்கும் விதமாக தனது திருமறையில் (2:85) வசனத்தில் கூறுகின்றான். எனவே அது போன்ற நிலை நம்மிடம் ஏற்பட்டுவிடக் கூடாது.
மச்சான் மைத்துனி கிண்டல்கள்
இங்கு நாம் இன்னொரு தீமையையும் குறிப்பிட வேண்டும். மனைவி எப்படி கணவனின் உறவினர்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டுமோ அதே போல் தான் கணவனும் மனைவியின் அக்கா தங்கைகளிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒரு பெண் தனது சகோதரியின் கணவரிடம், மச்சான் என்று கிண்டல் செய்வது, அதுபோல் அவரும் மைத்துனி, கொழுந்தியாள் என்று கிண்டல் செய்வது போன்ற செயல்கள் சமூகத்தில் தீமையாகக் காணப்படவில்லை. கணவன் சம்பந்தப்பட்ட உறவினர் மூலம் ஒரு மனைவிக்கு ஏற்படும் விளைவுகள் அத்தனையும் நூற்றுக்கு நூறு மச்சான் மைத்துனி விவகாரத்தில் ஏற்படவே செய்யும். எனவே கணவன் மைத்துனி விஷயத்திலும், மைத்துனி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும். இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கைûயும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். சில இடங்களில் சகலைக்கும் சகலைக்கும் மத்தியில் பிரச்சனை ஏற்பட்டு கொலையில் முடிந்த வரலாறும் உண்டு. எனவே தான் மனிதர்களின் மனநிலைகளை அறிந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்.
وَقُل لِّلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا ۖ وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَىٰ جُيُوبِهِنَّ ۖ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ أَوْ آبَائِهِنَّ أَوْ آبَاءِ بُعُولَتِهِنَّ أَوْ أَبْنَائِهِنَّ أَوْ أَبْنَاءِ بُعُولَتِهِنَّ أَوْ إِخْوَانِهِنَّ أَوْ بَنِي إِخْوَانِهِنَّ أَوْ بَنِي أَخَوَاتِهِنَّ أَوْ نِسَائِهِنَّ أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُهُنَّ أَوِ التَّابِعِينَ غَيْرِ أُولِي الْإِرْبَةِ مِنَ الرِّجَالِ أَوِ الطِّفْلِ الَّذِينَ لَمْ يَظْهَرُوا عَلَىٰ عَوْرَاتِ النِّسَاءِ ۖ وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِن زِينَتِهِنَّ ۚ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 24:31)
இந்த வசனத்தில் கூறப்படும் உறவினர்கள் தவிர மற்றவர்களிடம் ஒரு பெண் புர்கா சட்டத்தை அனுசரித்து நடக்க வேண்டும். அல்லாஹ் சொல்கின்ற இந்த உறவுமுறைக்கு அப்பாற்பட்டவர்களிடம் ஓர் ஆண் மிக மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அண்ணி, மைத்துனி போன்றவர்கள் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறும் அனுமதிக்கு அப்பாற்பட்டவர்களே! எனவே மற்ற அந்நியப் பெண்களிடம் காட்டும் பேணுதலை விட இந்த உறவுகளிடம் அதிக பேணுதலைக் காட்ட வேண்டும். ஏனெனில் இந்தத் தொடர்பை நபி (ஸல்) அவர்கள் மரணத்திற்குச் சமம் என்று சொல்கின்றார்கள். எனவே இந்தப் பெண்கள் அந்நியப் பெண்கள் என்ற வட்டத்தையும் தாண்டியர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆடைகளில் அலட்சியம்
இன்றைய காலத்துப் பெண்கள் உள்மேனி வெளியே தெரிகின்ற அளவுக்கு மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த ஆடைகளை அணிந்து கொண்டு, அந்நிய ஆண்களிடம் குறிப்பாக கணவனின் உறவினர்களிடம் காட்சி தருவது நிச்சயமாக அவர்களை நரகத்திற்கே கொண்டு சென்று விடும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 3971
இந்தக் கட்டளையையும் பெண்கள் கவனத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையை சுவனத்திற்குரிய வாழ்க்கையாக அமைத்துக் கொண்டு நற்பயனைப் பெறுவோமாக !!!

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : மு.அஜ்மல் கான்.

Wednesday 12 December 2018

பிஜேபி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதை 5 மாநில தேர்தல் முடிவுகள் காட்டுகிறது

5 மாநில தேர்தல் முடிவுகள் பிஜேபி மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது , நரேந்திர மோடி செல்வாக்கை இழந்துள்ளார். பெரும் தோல்வி, படுதோல்வி...
Image result for 5 மாநில தேர்தல் முடிவுகள்இப்படி ஒரு வரி விமர்சனம் எல்லாம் நான் எப்போதுமே செய்தது இல்லை. political science and statistics இதற்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதே சரி என்று எண்ணுபவன் நான். வெற்றி தோல்வியை ஆய்வு செய்வதில் தான் வெற்றி எத்தகையது? தோல்வி எதனால்? உண்மையில் யார் பலசாலி ? நம்பிக்கை இழந்திருக்கிறார்கள் என்பது உண்மையா? என்ற அனைத்துக் கேள்விக்கும் சரியான தெளிவான விடை நமக்குக் கிடைக்கும். எனவே மீம்ஸ் , கேலிகள் தாண்டி உண்மையைத் தேடுவது எப்போதுமே நல்ல விஷயம். குறைந்த பட்சம் மாணவர்களுக்கு , இளையவர்களுக்கு அந்தக் குணம் வேண்டும்.
எனவே இந்த 5 மாநில தேர்தல் எத்தகையது என்பதைத் தெளிவாக அதேநேரம் கொஞ்சம் எளிமையாகப் பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------
மிசோரம் : (40 தொகுதிகள்- ஆட்சி அமைக்க 21தேவை)
வெற்றி பெற்றிருப்பது Mizo National Front 26 தொகுதிகள் வெற்றி. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் 5 தொகுதிகள் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி ஆகும் தகுதியை இழந்து நிற்கிறது. பிஜேபி 1 தொகுதியில் வெற்றி பெற்று தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது , இதர கட்சிகள் 8 .
தமிழகத்தில் அதிமுக திமுக போல காங்கிரஸ் , Mizo National Front இரண்டு கட்சியும் ஒவ்வொரு 10 ஆண்டுக்கும் மாறி ஆட்சியை கைபற்றி வரும் மாநிலம். மொத்தம் 40 தொகுதிகள் - ஆனால் வாக்காளர்கள் 768,181 மட்டுமே. (தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் 5 அளவே உள்ள மாநிலம்.). Aizawl நகரத்தில் மட்டும் நீங்கள் தேர்தல் வேலை செய்தால் போதும் அதில் மட்டும் 11 தொகுதிகள் இருக்கிறது - Lunglei , Champhai இந்த மூன்று நகரங்களில் ஒழுங்கா தேர்தல் வேலை பார்த்தால் போதும் வெற்றி.
காங்கிரஸ் 30 .2 % வாக்குகள் , MNF 37 .6 % வாக்குகள் , இதர கட்சிகள் தனி வேப்பாளர்கள் என்று 27% வாக்குகளைப் பிரிக்க , பிஜேபி 8% வாக்குகளைப் பெற்றுள்ளது. (இதுவரை பிஜேபி 2% வாக்குகள் கூட கிடையாது இந்த மாநிலத்தில்.Tuichawng , tuipui இரண்டு காங்கிரஸ் தொகுதியிலும் 48% , 35% என்ற அளவில் பிஜேபி வாக்குகளை வாங்கி வளர்ந்துள்ளது. Hachhek ,Lawngtlai , Palak, Serlui ,Siaha ,Thorang , Tuivawl போன்ற தொகுதிகளில் 15% க்கும் மேல் வளர்ச்சியை காட்டியுள்ளது பிஜேபி. இந்த மாநிலத்தில் வெற்றியைத் தோல்வியை தாண்டி இது தான் மிக முக்கியம். ஏன் ?
மேலே நான் கூறியவை எல்லாம் தாண்டி ஒரு உண்மை உண்டு. இது எல்லாமே எண்கள்... இந்த எண்கள் தீர்மானிக்கும் வலு யாரிடம் இருக்கிறது அங்கே? என்று நீங்கள் கேட்டால் அது Presbyterian Church மற்றும் அதன் இணை கிருஷ்டவ அமைப்புகளிடம் தான் உள்ளது. மிசோரம் தேர்தலை முடிவு செய்வது ஏறக்குறைய Presbyterian Church முக்கிய பங்களிக்கும். இந்தியாவின் 87% கிருஸ்தவர்கள் வாழும் மாநிலம் மிசோரம். இங்கே புத்த மதத்தைச் சார்ந்தவர்கள் 9% அளவிற்கும் இந்துக்கள் 2.75% அளவிற்கும் இருக்கிறார்கள். இஸ்லாம் 1.3%. தமிழகம் போல் வெறும் 2சதவீதம் வாக்குவங்கி கூட இல்லாத பிஜேபி - கிருஸ்தவ சர்ச்சுகள் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் தேர்தலில் 8% வாக்கு வங்கியை உயர்த்தியுள்ளது பெரிய விஷயம்.
இது எப்படி பிஜேபிக்கு எதிராகத் தீர்ப்பு, தோல்வி , நம்பிக்கை இழப்பு???? இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான தீர்ப்பு மட்டுமே. அப்படிக் கூறுவது தான் சரி. பிஜேபி என்ற கட்சியை பொறுத்தவரை நல்ல தீர்ப்பு தான் இது. 1.கட்சி முதல் முறையாக MLA சீட் , அத்துடன் 8% வாக்குகள். 2.காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான நபர் வெற்றி.
-------------------------------------------------------------------
அடுத்து ராஜஸ்தான் (199தொகுதிகள் - ஆட்சி அமைக்க 100தேவை) :
பிஜேபி தனித்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காங்கிரஸ் கூட்டணியில் சரத்பவார் (nationalist congress party ) , அஜித் சிங் (Rashtriya Lok Dal ), சரத் யாதவ் (Loktantrik Janata Dal ) என்று நின்று தேர்தலை சந்தித்தன. பிஜேபி : 73 தொகுதிகள் வெற்றி . காங்கிரஸ் : 99 தொகுதிகள் வெற்றி + கூட்டணி கட்சியான Rashtriya Lok Dal : 1 இடத்தில் வெற்றி.
அப்போ இது பிஜேபிக்கு தோல்வி தானே??? மக்கள் நம்பிக்கையை ஆட்சி செய்த பிஜேபி இழந்துள்ளது தானே????
சீட்டு எண்ணிக்கையில் தோல்வி என்றாலும் இது பின்னால் இருக்கும் விவரங்கள் கொஞ்சம் தெளிவாகத் தேடினால் உண்மை அறியலாம். தற்போது பிஜேபி வாங்கிய வாக்கு சதவீதம் 38 .8 % , காங்கிரஸ் வாங்கிய வாக்கு சதவீதம் 39 .3 %. இரண்டுக்கும் வெற்றி வித்தியாசம் வெறும் ௦.5 % வாக்குகள் மட்டுமே. ஆனால் 2013 ல் பிஜேபி ஆட்சியைப் பிடித்த போது 45.17% வாக்குகள் பெற்றது - எதிர்த்து நின்ற காங்கிரஸ் 33.07% ஆக இரண்டுக்கு வெற்றி வித்தியாசம் ஏறக்குறைய 12 % . எனவே 2013ல் வெற்றி பெற்ற கட்சி கூடுதல் 12% அளவிற்கு வாக்குகள் பெற , இந்தத் தேர்தலில் அது வெறும் ௦.5 % கூடுதல் வாக்கு என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மிக மிகச் சின்ன வித்தியாசத்தில் வெற்றி. ஆக பிஜேபிக்கு பெரும் பின்னடைவு என்று கூறுவது அவசியமற்றது. ஏறக்குறையத் தனித்து நின்று இதை பிஜேபி செய்திருப்பது முக்கியம்.
ஆனால் பிஜேபி 26 தொகுதிகள் குறைவாக வாங்கியுள்ளது? அதில் இரண்டு காரணம் முக்கியம்.
01. Rashtriya Loktantrik Party இந்தக் கட்சி உருவாக்கி வேகமாகப் பிரச்சாரத்தில் இறங்கினார் Hanuman Beniwal அவர்கள். இவர் முன்னாள் பிஜேபி தலைவர் - ஊழல் குற்றச்சாட்டால் வெளியேற்றப்பட்டவர். இவர் பிரசாரம் செய்த இடங்களில் 5 , 6 லட்சம் மக்கள் கூடினர். மிகப் பிரமிப்பை ஏற்படுத்தினார்- ஒரு பக்கம் இவர் காங்கிரஸ் உதவியுடன் இந்த அளவிற்கு பணத்தை செலவு செய்து வேலை செய்கிறார் என்று செய்திகள் வர. விஷயம் இது தான் இவர் பிஜேபி வலுவான தொகுதிகளில் தனது வேப்பாளர்களை நிறுத்தினார் Hanuman Beniwal- ஜாட் சமஊகத்தின் வாக்குகளை ஏறக்குறையப் பல இடங்களில் பிரித்தார். இவர் மொத்தமாகப் பிரித்த வாக்குகள் 8,56,038 .
பிஜேபி ௦.5 % அளவிற்கு வாக்குகளைக் குறைவாக பெற்றது என்றால் சுமார் 1 லட்சம் வாக்கு வித்தியாசம். ஆனால் Hanuman Beniwal பிரித்த வாக்குகள் மட்டும் 8 லட்சம். பிஜேபி பிரித்தாளும் சூழ்ச்சி செய்வதாகக் கூறும் காங்கிரஸ் - காங்கிரஸ் தான் இந்து வாக்குகளை ஜாதி வைத்துப் பிரித்து வெற்றியைப் பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். இதே யுக்தியைத் தான் சென்ற குஜராத்திலும் அப்படியே வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தி பிஜேபி வெற்றியைக் கடினமாக்கியது காங்கிரஸ். (தலித் பிரதிநிதியாக ஜிக்னேஷ் மேவானி , படேல் சமூகத்தின் வாக்கைப் பிரிக்க ஹர்திக் படேல் , OBC வாக்குகளைப் பிரிக்க அல்பேஷ் தாகூர் என்று திடீர் புரட்சியாளர்களை உருவாக்கி வாக்குகளைப் பிரித்து காட்டியது காங்கிரஸ்.)
02.பிஜேபி மீது இஸ்லாமியர் , கிருஷ்தவர்கள் வெறுப்பை வர வைப்பதற்கு என்றுமே வேலை செய்யும் காங்கிரஸ் கம்யுனிஸ்ட் கூட்டணி , கடந்த 10வருடமாக பிஜேபி பட்டியலின மக்களுக்கும் தலித் மக்களுக்கும் எதிரானது என்ற தோற்றத்தை உருவாக்க வரிந்து கட்டி வேலை செய்கிறது. செய்தித் தாள்களில் வெட்ட வெளிச்சமாக பிஜேபி ஆளும் இடங்களில் தலித் தாக்குதல் என்றால் சப்தம் அதிகம் வரும் அளவுக்கு வேலைத் தீவிரமாக செய்கிறார்கள். இதை உணர்த்தியுள்ளது ராஜஸ்தான்.
சுமார் 34 SC தொகுதிகளில் 32தொகுதிகளை வென்ற பிஜேபி இந்த முறை 3ல் ஒரு பகுதி இடத்தை மட்டுமே பெற்றது. 25 ST தொகுதிகளிலும் இதே நிலை தான். மொத்தமாக 22இடங்கள் மட்டுமே பெற்றுள்ளது. இது பிஜேபி வருத்தப்படவேண்டிய விஷயம் என்பது கண்கூடு. இதில் எச்சரிக்கை அவசியம். செய்தி நிறுவனங்களைப் போலியான செய்திகளைப் பரப்பும் நபர்களை ஒடுக்கவில்லை என்றால் இது விசமாக மாறும்.
------------------------------------------------------------------------------
அடுத்து தெலுங்கானா(119தொகுதிகள் - ஆட்சி அமைக்க 60தேவை) :
மாநிலம் உருவாகக் காரணமான TRS தெலுங்கானா ராஷ்டிரிய சமதி கட்சி தான் ஆட்சிக்கு வரும் என்று பலருக்கும் தெரியும். இங்கே காங்கிரஸ் கூட்டணி , தெலுங்கானா ராஷ்டிரிய சமதி இரண்டுக்கும் தான் போட்டி என்றாலும் பெரிய போட்டியாக இருக்கப் போவது இல்லை. எனவே இங்கே சந்திரசேகர ராவ் சம போட்டி யாருமே இல்லை என்பது நிதர்சனம்.
தெலுங்கானா ராஷ்டிரிய சமதி : 88 இடங்கள். காங்கிரஸ் : 19 இடங்கள். காங்கிரஸ் கூட்டணியாக தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 தொகுதிகள். அடுத்து மதம் வைத்து அரசியல் செய்யவோ தேர்தலைச் சந்திக்கவோ கூடாது என்று இருந்தாலும் அதைத் தான் பிரதானமாகக் கொண்ட All India Majlis-E-Ittehadul Muslimeen கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இங்கே பிஜேபி தனித்து நின்று 1 இடத்தில் வெற்றி. ஆனால்
தெலுங்கானா ராஷ்டிரிய சமதி வாக்கு சதவீதம் 46.9 % , காங்கிரஸ் 28.4 % வாக்குகள். வெற்றி வாக்கு வித்தியாசம் சுமார் 18 .5 %. மிகப் பெரிய வித்தியாசம். பிஜேபி வாங்கியுள்ள வாக்கு சதவீதம் 7%(1450456 ). வாக்கு சதவீத அடிப்படையில் பார்க்கும் போது பிஜேபி இங்கே மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்துள்ளது என்பது தான் நிதர்சனமான உண்மையே தவிர இங்கே பிஜேபி பின்னடைவு என்று கூறுவது ஏற்புடையது அல்ல. சரியான வளர்ச்சியில் இருக்கிறது என்று கூறினால் தகும் தவிரப் பின்னடைவு என்பது எல்லாம் சுத்த முட்டாள்தனமாகக் கருத்து.
இந்த மாநிலத்தில் வெற்றி பெற்றுள்ள கட்சியும் காங்கிரசுக்கு அதன் கூட்டணிக்கு எதிராக நின்று தான் வெற்றியைப் பெற்றுள்ளன. தவிர இங்கே பிஜேபி அல்ல பிரதான எதிர்க் கட்சி. எனவே இங்கேயும் காங்கிரஸ் கூட்டணி தோல்வி என்று கூறவேண்டுமே அன்றி பிஜேபி தோல்வி என்று எழுதுவது செய்தியாளர்கள் தந்திரமே அன்றி வேறு இல்லை.
--------------------------------------------------------------------------
அடுத்து சட்டீஷ்கர்(90தொகுதிகள் - ஆட்சி அமைக்க 46தேவை) :
இதில் நிச்சயம் பிஜேபி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வெளிப்படையாக மக்களிடம் நம்பிக்கையை இழந்துள்ளது என்று தெளிவாக தெரிகிறது. இந்த உண்மையை பிஜேபி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆளும் கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பது ஒரு சாதாரண விஷயம் தான். ஆனால் அது 10% அளவிற்கு வித்தியாசம் என்றால் நிச்சயம் கட்சி நன்மதிப்பு கெட்டுள்ளது என்று பொருள்.
பிஜேபி 33% வாக்குகளைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 43% வாக்குகளைப் பெற்றுள்ளது. அத்துடன் கூட்டணி என்பதால் காங்கிரஸ் 68இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது இங்கே. இது ஏற்றுக்கொள்ள வேண்டிய வெற்றி. இங்கே காங்கிரஸ் நன்கு வேலை செய்துள்ளது. பிஜேபி அனைத்து வகையிலும் தோல்வியை சந்தித்துள்ளது. பிஜேபி வாங்கிய இடங்கள் 15மட்டுமே. கட்சி பணியிலும் , தேர்தல் பணியிலும் , ஆட்சியிலும் என்று அனைத்து விதமாகவும் கட்சி பலவினமாகியுள்ளது பிஜேபிக்கு இங்கே.
---------------------------------------------------------------------------
அடுத்து மத்திய பிரதேஷ் (230தொகுதிகள் - ஆட்சி அமைக்க 116தேவை):
பிஜேபி 109 இடங்களிலும் , காங்கிரஸ் 114 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் வாக்கு சதவீத அடிப்படையில் பிஜேபி 41 % , காங்கிரஸ் 40 .8 % என்று வாங்கியுள்ளன. இங்கே அனைவரும் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால் 15 ஆண்டுகளாக தொடந்து ஆட்சியில் இருக்கும் கட்சியை அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறினாலும் வாக்கு சதவீதம் கூறுவது படி பார்த்தார் எந்த பாதிப்பும் இல்லாமல் தான் பிஜேபி இருக்கிறது அங்கே என்பது தெரிகிறது. ஆம் 2003 ல் பிஜேபி ஆட்சியைப் பிடித்த போது 42.50% வாக்குகளை வைத்திருந்தது. 15வருடங்கள் ஓடியுள்ளது இன்றும் ஏறக்குறை 41.0 % அது தொடர்கிறது. எனவே பிஜேபி இன்றும் அங்கே வழுவான கட்சியாக தான் நிற்கிறது. பின்னடைவு என்பது எல்லாம் சுத்த பிதற்றல்.
இங்கே தமிழகத்தில் RK Nagar இடைத்தேர்தலில் 13கட்சிகள் கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்த திமுக முக்கிய எதிர்க்கட்சி வாங்கிய வாக்கு 12% கூட கிடையாது. திமுக வாக்கு எங்கே சென்றது???? ஆனால் பிஜேபி வாக்கு வங்கி என்பது அப்படியானது அல்ல. அது முன்வைக்கும் இந்துத்துவா சித்தாந்தம் வழுவாக வேருன்றி நிற்கிறது என்பது தான நிதர்சனமான உண்மை. இதனால் தான் ராகுல் ஆரம்பித்து அனைவரும் கோவில் கோவிலாக ஏறி இறங்கினர்.
அடுத்து குவாலியர் மேயராக இருந்த SAMEEKSHA GUPTA பிஜேபியில் இருந்து விலகித் தனித்து போட்டியிட்டு GWALIOR SOUTH தொகுதியில் தோல்வியை தழுவினார். இதில் விஷேசம் என்னவென்றால் இங்கே காங்கிரஸ் வெற்றி என்பது அல்ல காங்கிரஸ் 121வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. SAMEEKSHA GUPTA பிரித்த வாக்குகள் 30745. இதே போல் DHEERAJ PATERIA என்ற நபர் பிஜேபி கட்சியில் இருந்து விலகித் தனித்து JABALPUR NORTH தொகுதியில் போட்டியிட்டார். இங்கே காங்கிரஸ் வெற்றி. பிஜேபி தோல்வி. இரண்டு கட்சிக்கும் வாக்கு வித்தியாசம் 570வாக்குகள். DHEERAJ PATERIA தனித்து பிரித்தக் வாக்குகள் 29479. இப்படி மாநிலம் முழுவதும் பிஜேபி கட்சி நபர்களை ஒரு பட்டியல் போட்டு வாங்கி அவர்களைத் தனித்து நிறுத்துவது மூலம் வாக்குகளைப் பிரித்து வெற்றியை உறுதிசெய்துள்ளது காங்கிரஸ்.
ஆனால் உத்தமர்கள் வாழும் காங்கிரஸ் என்று கம்யுனிஸ்ட் திமுக சொல்லும். அதுவும் அரசியல். வாக்கு வங்கி தந்திர அரசியல் தான் தவிர அரசுக்கு எதிராக மக்கள் மன நிலையைக் கட்டுவதாக இல்லை என்பது இதன் மூலம் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு தந்திரம் செய்தும் இன்றும் மத்திய பிரதேஷ் பிஜேபி கோட்டையாக தான் உள்ளது என்பது தான் நிதர்சன உண்மை.
-------------------------------------------------------------------------
இறுதியாக : இப்போ மனசாட்சியை தொட்டு கூறுங்கள் பிஜேபி படுதோல்வி என்று ????
ஆக 5 மாநில தேர்தல் உணர்த்தும் உண்மை என்னவென்றால். சட்டீஸ்கர் மாநிலம் தவிர்த்து மிசோரம் , தெலுங்கானா இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் வீழ்ச்சி , அந்த மாநிலங்களில் பிஜேபி 8% அளவிற்கு வளர்ந்துள்ளது. ராஜஸ்தான் , மத்தியபிரதேஷ் இரண்டிலும் பிஜேபி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்றும் பிஜேபி தான் பிரதான விருப்பமான கட்சியாக உள்ளது - சாதிய பிரிவினைகள் மூலம் குஜராத் பார்முலாவை கொண்டு இந்துக்கள் வாக்குகளைச் சிதறடிக்கும் வேலையை வெளிப்படையாகச் செய்து காங்கிரஸ் மிகச் சொற்ப வித்தியாசத்தில் கூட்டணி கட்சிகளுடன் போராடி சின்ன வித்தியாச அளவிலான வெற்றியைப் பெற்றுள்ளது. இது நாகரீகமான வெற்றி கூட கிடையாது.
இந்த நிலை அப்படியே தொடரும் என்றால் பிஜேபி தன் வாக்கு வங்கியை இந்த அளவிற்குத் தக்கவைத்தாலே 280-290 தொகுதிகளை நாடாளுமன்ற தேர்தலில் பெற்று மீண்டும் ஆட்சிக்கு வர முடியும் தவிர தோல்விக்கு வாய்ப்பே இல்லை. 370 என்ற அந்த எண்ணிக்கையில் தொகுதிகள் குறையும் தவிர பிஜேபி இன்றும் தனி பெரும் கட்சியாக நிற்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை. காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தை உருவாக்கினால் இது மிக மிக எளிது.
இஸ்லாமிய வேப்பாளர் நிறுத்து பிஜேபி இந்து மதவாத கட்சி. ஆனால் மனித நேயமக்கள் கட்சி , முஸ்லிம் லீக் எல்லாம் மதசார்பிணமி கட்சி... மிசோரம் போன்ற மாநிலங்களில் சர்ச்சுகள் அதன் மதவாத தலைவர்கள் அரசியல் முடிவுகளை நிர்ணயம் செய்யலாம் அது சமத்துவம் ஆனால் பிஜேபி இந்துக்களுக்கு குரல் கொடுத்தால் இந்துத்துவ தீவிரவாதம் ???? ஜாட் , படேல் , தலித் என்று இந்துக்களின் வாக்குகளை ஜாதி கொண்டு எப்படிப் பிரிக்கலாம் என்று அலையும் காங்கிரஸ் நல்லவர்கள் !
உண்மையில் கொஞ்சம் கூடக் கொள்கை என்பதோ குறைந்தபட்ச நியாயமோ இல்லாத வெற்றி பெறவேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் எப்படியாவது பதவிக்கு வரவேண்டும் என்று துடிக்கும் சரத்பவார் , திமுக ஸ்டாலின் , தெலுங்கு தேசம் என்று அப்பட்டமாக காங்கிரஸ் கட்சி சேர்த்து கொண்டு அரசியலைச் சந்திக்கலாம். ஆனால் மக்கள் முன் கேள்விகள் எழும் அப்போது அவமானம் நிச்சயம்.
நரேந்திர மோடி - எதிரில் அவரை எதிர்த்து நிற்கும் பிரதமர் வேப்பாளர் யார் !!! இப்படி மட்டும் கேள்வி விவாதம் எழுந்தால் தேர்தல் முடிவு குழந்தை கூட சொல்லும்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday 11 December 2018

RBI யின் அவசரகால கையிருப்பை 10,00,000 கோடியை அரசு வரும் தேர்தலுக்காக !!!

Image result for modi news
உர்ஜித் பட்டேலை யார் நரேந்திர மோடி ஏன் நியமனம் செய்தார்?

ரகு ராம் ராஜன் ஏன் விலகினார் ?


ஏனென்றால் நரேந்திர மோடியும் அவரது அரசும் NPA (வாராக்கடன்) நிறுவனங்களுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். மேலும் ' demonetization' (பணமதிப்பிழப்பை) திட்டமிட்டு கொண்டிருந்தார்கள்.

ஏன் துணை RBI கவர்னர் வைரல் ஆச்சாரியா பிரிவு 7 RBI ACT ஐ குறிப்பிட்டு அரசை எச்சரிக்கை செய்கிறார் ?

யுத்தம், மற்றும் மிகஅவசர காலங்களுக்கு RBI சேமித்து வைத்திருக்கும் 10,00,000+ கோடியை வரும் தேர்தலுக்காக, அரசு RBIயிடம் இருந்து ஆட்டைய போட பார்க்கிறது.

அரசுக்கு ஏன் இந்த பணம் எல்லாம் வேண்டும்?
Demonetizationல் இருந்து இந்த கையாலாகாத அரசு, முட்டாள்தனமாக எதிர்பார்த்த 4,00,000 கோடி லாபம் வரவில்லையென்பதால், வங்கிகள் பணமிருப்பு எல்லாம் மாயமாகி விட்டன.

ஏன் நிறுவனங்கள் வாராக்கடனில் மாட்டுகின்றன ?
ஏனெனில் அவர்களின் தொழில் தவறான பொருளாதார கொள்கைகளால் தோல்வியடைகின்றன.

ஆனால் நரேந்திர மோடியின் கீழ் பொருளாதாரம் மிக சரியாக இருக்கிறது என்று சொல்வதை பற்றி ?
அது உண்மையாக இருந்திருந்தால் RBIயின் Reserve பணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் கதை, நரேந்திர மோடி மூலம் சொல்லப்படும் போலி கதைகளில் ஒன்று.

RBI யின் அவசரகால கையிருப்பை அரசு ஆட்டைய போட எத்தனிப்பது எதனால்?

பல பெரு நிறுவனங்களின் வாராக்கடன் தான், குறிப்பாக IL & FS ன் (அதிகாரப்பூர்வமாக) 90,000 கோடி வாராக்கடன் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியம். நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி. மற்றும் எந்த இயக்குனரும் கைது செய்யப்படாததே, இதற்கு முக்கிய காரணம் மோடி அரசின் முட்டாள்த்தனமான பொருளாதார முன்னெடுப்பு தான் என்பது தெள்ளதெளிவு .

ஆனால் கடந்த நிதிஆண்டின் லாபமான 58,000 கோடியை ஏற்கனவே RBI கொடுத்தபிறகும் ஏன் கையிருப்பை சூறையாட பார்க்கிறது?
ஏனெனில், பெரும் முதலாளிகள் இழந்த பணம் அவர்களின் வியாபார தோல்விகள் பொருளாதாரத்தில் விழுந்த ஓட்டைகளை நிரப்ப போதுமான அளவு இல்லை.

அரசு அதிக பணம் அச்சிடுவது சாதாரண மக்களுக்கு என்ன விளைவுகளை ?
பணவீக்கத்தை அதிகப்படுத்தும். விலையேற்றம் கடுமையாக இருக்கும்.

ஏன் இந்திய ஒன்றிய அரசுக்கு ஏன் இவ்வளவு பணதேவை மற்றும் மேலும் மேலும் ஏன் அச்சிட வேண்டும்?
GST தோல்வியாகி விட்டது. ஒரு மாதத்திற்கு 1,30,000 கோடி எதிர்பார்த்த வரவில் இருந்து, 90,000 டு 1,00,000 கோடி வரை மட்டுமே வருகிறது. 30,000 அளவிற்கு GST Refundற்கு போய் விடுகிறது. இதை கணக்கிட தெரியாத அளவிற்கு அதிமேதாவிகளாக இந்த அரசு இருந்திருக்கிறது.

GST வசூல் ஏன் குறைந்தது ?
பொருளாதார வீழ்ச்சி ஒரு காரணம். மற்றும் நமது முதலாளிகள் IMF ஆல் மிகவும் கடினமான முறையான வரிவசூல் என்று சொல்லப்பட்ட GST யை ஏமாற்றும் புத்திசாலிகளாக உள்ளனர்.

வணிகம் ஏன் விழுந்தது?

2 மாதத்திற்கு ஒரு பொருளாதாரத்தின் 83 % இரத்ததத்தை உறிஞ்சிவிட்டு, அந்த இரத்தத்தை மீண்டும் பம்ப் செய்ய 6 மாதங்கள் எடுத்துகொண்டால், எதுவும் நடக்காத மாதிரி அந்த மனிதன் ஓடவேண்டும் என எதிர்பார்க்க முடியாது. Demonetization இப்படி ஒரு முட்டாள்தனமாக இருந்தது. இது பொருளாதாரம் மற்றும் இந்தியாவின் GDP யில் 2% ஓட்டை விழுந்தது. கிட்டத்தட்ட 3,00,000 கோடி ரூபாய் இழந்து விட்டோம். மேலும் இழப்புகள் தொடரும். ஆனால் அமிதாப் பச்சன், ரஜினி காந்த், கமலஹாசன், RJ பாலாஜி மற்றும் அக்ஷய் குமார் போன்ற பொருளாதார வல்லுநர்களால் அதிபுத்திசாலிதனமான நடவடிக்கை என்று சான்றளிக்கப்பட்டு , ஐஸ்வர்யா ராய் மற்றும் பரேஷ் ராவல் போன்ற மேதைகளால் வழிமொழியப்பட்டது.

உடனடி ஆபத்து என்றால் என்ன?
டெலிகாம் துறை மற்றும் அதன் ஒன்றிணைப்பாளர்கள் இப்போது மூன்று குழுமங்கள் தான் , ஏர்டெல், வோடபோன் IDEA லிமிடெட் மற்றும் ஜியோ. மூன்றும் படு பயங்கர வராக்கடன் அதாவது கிட்டத்தட்ட 8,00,000 கோடி அளவிற்கு சாத்தியம் என்று SBIயின் அக அறிக்கை கடும் எச்சரிக்கை செய்திருக்கிறது.

UPA-2-ஐ விட NDA-2 காட்டும் GDP வலிமையாக தானே உள்ளது ?
முன்னாள் CEA, மோடியின் செல்லம், அரவிந்த் சுப்பிரமணியன் இது குறித்து ஏற்கனவே பேசிய , நிதி ஆயோக் எப்படி மாற்றி மாற்றி, NDA-2வை அதிகப்படுத்தியது, எப்படி சாத்தியமானது என்ற தகவல், விளக்கம் தரும். ஒரு கோட்டுக்கு பக்கத்தில் பெரிய கொடு போட்டாச்சு அவ்வளவுதான்.

இந்த குழப்பத்திற்கெல்லாம் யார் பொறுப்பு?

நிச்சயமாக பண்டிட் ஜவஹர் லால் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் தான் பொறுப்பு.

கடந்த 56 மாதங்களில் அதாவது இந்த நான்கே முக்கால் ஆண்டில் இவர்கள் எதையும் செய்ய நரேந்திர மோடியை அனுமதிக்கவில்லை.

சர்தார் படேல் முதல் PMமாக அவர் மறைந்த 1950 வரை இருந்திருந்தால், இதில் எதுவும் நடக்க வாய்ப்பு இருந்திருக்காது.
1952 ல் தானே முதல் தேர்தல் நடந்தது என்று வரலாற்றை நேர்மையாக சொன்னால் அவனை தேசத்துரோகி என்று குற்றம் சாட்டு.

யார் பதவி விலக வேண்டும்?
அது ஒரு முட்டாள்தனமான கேள்வி!!! நிச்சயமாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைமை மற்றும் தலைவர் பதவிகளில் இருந்து பதவி விலக வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் மோடிக்கு 10,00,000+ (பத்து லட்சம்) கோடி கையிருப்பை தூக்கி கொடுத்து அவர் விருப்பியதை செய்ய அனுமதிக்க வேண்டும்.

2019 ல் யாருக்கு ஓட்டு போட வேண்டும்?

நிச்சயமாக நரேந்திர மோடி, ஏனெனில் அவர் விஷ்ணுவின்11வது_அவதாரம். இவர் இந்துக்களின் ஒரே இரட்சகர்.

இவர் தான் முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க கூடிய பூமி பந்தில் இருக்கும் ஒரே நபர். பசு மாட்டை பாதுகாக்க முடியும்.
இவர் தான் ஏழை, விளிம்புநிலை மக்கள், ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் மீது அக்கறை உள்ள ஒரே ஜீவன். இவர்தான் ராமர் மந்திர் கட்ட முடியும்.


இவர் மட்டும்தான் பூமியில் உள்ள ஒரே நபர், மனைவி, குடும்பம் மற்றும் அவரது 90 வயது தாயை தவிக்க விட்டுவிட்டு வெறும் 10 ஏக்கர் சொத்தில், 5 அடுக்கு பாதுகாப்பில் இருக்க முடியும். அப்போது கூட தனது 90 வயது தாயை பணமதிப்பிழப்பின் போது 4000 ரூபாய்க்காக,
ஒரு பெரிய கேமரா_குழுவுடன் சேர்ந்து வங்கி வாசலில் நிற்க வைக்க முடியும். ஏனெனில் அவர் மட்டும் தான் உலக பயணம், வெளிநாடு வாழ் இந்தியர் மற்றும் மற்றவருடன் பெரிய மீட்டிங்குகள், மற்றும் ராக்-ஸ்டார் வகை நிகழ்ச்சிகள் செய்து இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும். ஏனென்றால் அவர் ஒவ்வொரு மாதமும் வானொலியில் மனதோடு ஒரு பேச்சு என்று பேசுபவர்.

இவர் தான் 126 ராணுவ விமானங்களுக்கு பதிலாக 36 ஜெட் விமானங்களை அதே விலைக்கு வாங்கி கொடுக்க முடியும். ஏன் அதே விலை என்றால், (36 >126) 36 தான் பெரிசு என்று சொல்லி அதையும் குறைவான விலைக்கு வாங்கினோம் என்பது மட்டுமில்லாமல் தனது நண்பரான அணில் அம்பானிக்கு 30,000 கோடியும் கொடுத்து பணத்தை சேமிக்க முடிந்தது என்று உங்களை சமாதானப்படுத்த முடியும்.

ஏனெனில், MA ' ஒட்டுமொத்த அரசியல் அறிவியல் ' மற்றும் ஒரு காணாமல் போன BA வுடன், இவரை விட அதிக தகுதி கொண்ட வேறு எந்த முட்டாளும் இந்த நாட்டை ஆள இன்னும் பிறந்து வரவில்லை.


தொகுப்பு  : மு.அஜ்மல் கான்..

Thursday 6 December 2018

இந்த பூஜா மாணவிக்கு ஏற்பட்ட நிலை உங்களில் யாருக்கும் ஏற்படக்கூடாது!



Image may contain: 1 personதிருப்பூரைச் சேர்ந்த மாணவி பூஜா, பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். நவம்பர் ஒன்றாம் தேதி பூஜாவுக்கு காய்ச்சல் ஏற்பட, காய்ச்சலை வியாதி என்று தவறாக புரிந்து வைத்திருந்த அவரது பெற்றோர் வீட்டுக்கு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பூஜாவை அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டு, 'ஒரு நாளைக்கு இரு வேளை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என அறிவுறுத்தி மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. மறுநாள் காய்ச்சல் அதிகரிக்க, சின்னம்மை வந்தது போல பூஜாவின் உடல் முழுக்க தடிப்புகள் ஏற்பட்டுள்ளன. மறுநாளே, ராமநாதபுரத்திலுள்ள மற்றொரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேரம் போகப் போக, பூஜாவின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு உடலின் அடிப்படை இயக்கத்தை உணராத டாக்டர்களும் பூஜாவின் பெற்றோரும் மிரண்டுபோனார்கள். பூஜாவின் சருமம் கொஞ்சம் கொஞ்சமாக உரிந்து உதிர ஆரம்பித்தது. தீக்குளித்த உடம்பு போல சருமம் கருகி, சற்றும் அடையாளம் காணமுடியாத வகையில் பூஜாவின் தோற்றம் மாறியது. மகளின் இந்த நிலைமையைக் கண்டு ஒருபக்கம் அதிர்ச்சியும் மறுபக்கம் குழப்பமும் கொண்ட பூஜாவின் பெற்றோர் உடனடியாக கோவையில் உள்ள மற்றொரு பெரிய மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
உடல் முழுக்க காயங்களுடன் வந்தடைந்த பூஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு புதிதாக ஒரு மருந்தை உட்கொள்ளுவதால் வரக்கூடிய ஒருவகை கொடூரமான ஒவ்வாமை நோய் வந்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த செய்தி சமீபத்தில் நான் விகடனில் பார்த்தது.
ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்
உடல் முழுக்க காயங்களுடன் வந்தடைந்த பூஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு 'ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம்' (Stevens–Johnson syndrome) எனும் அரியவகை நோய் வந்திருப்பதாக தெரிவித்தனர். புதிதாக ஒரு மருந்தை உட்கொள்ளுவதாலும், பிற நோய்த்தொற்றுகளாலும் வரக்கூடிய ஒருவகை கொடூரமான ஒவ்வாமை நோய்தான் இந்த ஸ்டீவென்ஸ்-ஜான்சன்ஸ் சின்ட்ரோம். 'கண்கள், சருமம், உறுப்புகளைப் பாதித்து, உடல் முழுக்க ரணத்தை ஏற்படுத்தும் இந்த அரியவகை நோயை உடனடியாக சரிசெய்வது முக்கியமாகும். இல்லையெனில் உயிருக்கே ஆபத்து ஏற்படும்' என்பது மருத்துவர்கள் கூறும் அறிவுரை.
பூஜாவுக்கு உதவுங்கள்...
பூஜாவின் உயிரைக் காப்பாற்ற தொடர்ந்த மருத்துவக் கண்காணிப்பில் அவரை வைத்திருப்பது அவசியமாகும். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பூஜாவின் பெற்றோர் தங்கள் சக்திக்கும் மீறி இதுவரை 2.5 லட்ச ரூபாயை மருத்துவத்துக்காக செலவழித்துள்ளனர். தற்போது பூஜாவை முழுமையாகக் குணப்படுத்த மேற்சிகிச்சைக்கு 5 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. நிதி திரட்டும் இணைய சேவையான Edudharma பூஜாவுக்காக மருத்துவ நிதி உதவி வேண்டுகிறது. https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy எனும் தளம் வாயிலாக நம்மால் ஆன பண உதவியைச் செய்வதன்மூலம் பூஜாவின் உயிரைக் காப்பாற்ற முடியும். 'பூஜாவின் நிலைமையைப் பொறுத்தவரை, நேரம் பொன்னானது. நேரம் போகப் போக அவரின் நிலைமை மோசமடையக் கூடும் என்பதால், அவருக்கு உடனடியாக தகுந்த சிகிச்சையை வழங்குவது கட்டாயமாகும். இதை மனதில்கொண்டு நல்ல உள்ளம் படைத்த அனைவரும் முடிந்தவரை நன்கொடை செய்து பூஜாவின் உயிரைக் காப்பாற்ற வேண்டுகிறோம். பூஜா இக்கொடும் நோயிலிருந்து மீள பிரார்த்திப்போம்" - Edudharma.
நிதி அளிக்க இங்கே செல்லவும்https://www.edudharma.com/campaigns/pooja-medical-allergy.



யாரையும் குறைகூறுவதற்காக நான் இந்த பதிவை பகிரவில்லை. 
ஏனென்றால் இந்த பிரச்சினைக்கான அடிப்படை காரணம் நமது அறியாமை தான். இந்த மாணவிக்கு ஏற்பட்ட நிலை உங்களில் யாருக்கும் ஏற்படக்கூடாது என்று தான் இந்த பதிவை பகிர்கிறேன். காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டதே இத்தகைய அவல நிலைக்கு காரணம். உண்மையில் நம் உடல்தான் நமது சிறந்த மருத்துவர் என்கிற உண்மையை புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
சரி காய்ச்சல் ஒரு நோயா?
காய்ச்சல் ஒரு நோயல்ல, நமக்கு எதிரானதும் அல்ல. மாறாக நோய்க்கிருமிகளை ஒழிப்பதற்காகவும் உடம்பில் தேங்கிய கழிவுகளை வெளியேற்றவும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் செயல்முறைதான் காய்ச்சல்.
உடம்பில் ஏன் கழிவுகள் தேங்குகின்றது?
உடலின் தினசரி பராமரிப்பு வேலை தடைப்படும்போது கழிவுகள் தேங்கும். இத்தகைய கழிவின் தேக்கத்தை உடல் வேறு ரூபத்தில் வெளியேற்ற முயற்சிக்கும்போது உபத்திரவங்கள் ஏற்படுகின்றது. அந்த உபத்திரவங்களைத்தான் நாம் வியாதி என்று அழைக்கிறோம்.
டீ காப்பி போன்றவற்றை அருந்தும் பழக்கம் இருந்தால் உடலின் தினசரி பராமரிப்பு வேலை தடைப்படும்,
தொடதற்க்கெல்லாம் மருந்துக்களை உட்கொண்டாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
பிடிக்காத உணவை உண்டாலும், பிடித்தமான உணவுகளை ஏதேனும் காரணத்திற்காக உண்ணாமல் இருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
இரவு தாமதமாக தூங்கினாலும் (9 மணிக்கு மேல்), தூங்கும் இடத்தில் சுத்தமான காற்றோட்டம் (ஒருமுறை சுவாசித்த காற்ற மறுபடியும் சுவாசிக்காத சூழல்) இல்லாதிருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
ரசாயன கொசு விரட்டிகள் உள்ள அறையிலோ, ஜன்னல் இல்லாத அல்லது ஜன்னல் பூட்டப்பட்ட அறையில் தூங்கினாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
உடல் கேட்கும் ஓய்வை கொடுக்காமல் இருந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
மனதிற்கு பிடித்தவற்றை தவிர்த்துவிட்டு பிடிக்காத விஷயங்களில் ஈடுபட்டு வந்தாலும் உடலின் பராமரிப்பு வேலை தடைப்படும்,
இந்த https://youtu.be/2KBDw_QGwNY முகவரியில் “ஏன் குளிர்காலத்தில் நமது உடலில் பலவித உபத்திரவங்கள் ஏற்படுகின்றது என்று தெரிந்துகொள்ளுங்கள்!” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
தினசரி நமது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற நமது அறியாமை காரணமாக போதிய ஒத்துழைப்புகொடுக்காமல் இருக்கும்போது கழிவின் தேக்கம் ஏற்படும். அவ்வாறு தேங்கும் கழிவுகளின் வெளியேற்றத்தை வியாதி என கருதி அதை தடுக்க மருந்துக்களை உட்கொள்கிறோம். அத்தகைய சூழலில் இந்த கழிவுகள் தேங்கி இருக்கும் இடத்திலேயே நமது உடலால் கட்டியாக்கப்படும். பிறகு நமது உடலின் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும்போது காய்ச்சல் என்கிற செயல்முறையின் மூலம் வெப்பத்தை அதிகப்படுத்தி அந்தக் கட்டிகளை மற்றும் நமது உடலில் தேங்கிய இதர கழிவுகளையும் கரைத்துவிடும்.
இந்த கட்டியை தான் இன்றைய மருத்துவ உலகம் புற்று (கேன்சர்) என்று பெயர்சூட்டி நம்மை அச்சுறுத்துகிறது. நமக்கு கற்பிக்கப்பட்டது போல கேன்சர் என்பதும் நோயல்ல கழிவின் தேக்கம்தான். கேன்சர் கட்டிகளை கூட புற்று என்று குறிப்பிடாமல் புற்றுநோய் என்று குறிப்பிடுவதால் அதனை நாம் நோய் என்று தவறாக புரிந்துகொள்கிறோம். இதுவும் ஒரு மருத்துவ அரசியல் தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். (இதுபற்றி இந்த https://youtu.be/h7fzziFAGU0 முகவரியில் “கேன்சர் என்பது நோயா? கட்டியா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)
இப்போது புரிகிறதா ஏன் இன்றைய வியாபார மருத்துவ உலகம் உடலில் ஏற்படும் சாதாரண காய்ச்சலிற்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா,... என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதுப்புது பெயர் வைத்து தொடர்ச்சியாக நம்மை அச்சுறுத்தி வருகிறார்கள் என்று?
உடலில் வலி ஏற்பட காரணம்
காய்ச்சலை ஏற்படுத்த போதுமான சக்தி இல்லாதபோது நமது உடலின் எஞ்சிய சக்தியை கொண்டு கழிவுகளை வெளியேற்ற முயற்சிக்கும்போது அந்த இடத்தில் வலி ஏற்படும். சிலநேரம் நமது எதிர்ப்பு சக்தி போதுமான அளவில் இல்லையென்றால் நமது உடலின் இயக்க சக்தியும் ஜீரண சக்தியும் தேவைப்படும். அப்போதுதான் பசியின்மை மற்றும் தலைவலி ஏற்படும். தலைவலி ஏற்பட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாமல் ஓய்வு எடுப்போம். அதற்குத்தான் தலைவலி ஏற்படுகிறது. பசிக்கவில்லை என்றால் நாம் உணவை உண்ணாமல் இருப்போம். அப்போதுதான் அந்த ஜீரண சக்தியையும் உடலின் பராமரிப்பிற்கு எடுத்துக்கொள்ளும்.
இதைப் புரிந்துகொள்ளாமல் தலைவலி ஏற்பட்டதும் டீ / காப்பி போன்றவற்றை அருந்துகிறோம் அல்லது மாத்திரையின் உதவியை நாடுகிறோம். இவற்றை எடுத்துக்கொள்வதால் நமது பராமரிப்பு சக்தி இயக்கசக்தியாக மாறிவிடுகின்றது. இவ்வாறு செய்வதால் உடலின் பராமரிப்பு வேலையும் தடைபடுகிறது. இவ்வாறு நமது உடலின் கழிவு வெளியேற்றத்துக்கு நாமே தடையாக இருந்துவிட்டு வியாதிகள் பெருகிவிட்டது என கூறுகிறோம்.
யாரெல்லாம் தலைவலி வந்தால் மருந்துகளின்றி ஓய்வு எடுக்கிறார்களோ அவர்களுக்கு ஒருபோதும் கேன்சர் கட்டிகள் ஏற்படுகிறதில்லை. யாரெல்லாம் காய்ச்சலுக்கு மருந்துகளின்றி மற்றும் பசிக்கவில்லை என உணவின்றி ஓய்வு மட்டுமே எடுக்கிறார்களோ அவர்களுக்கு டெங்கு, மலேரியா, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா, எபோலா, Coma (விபத்துக்களால் ஏற்படும் Coma அல்ல), Cancer, Blood Cancer போன்ற உபத்திரவங்கள் ஏற்படுவதில்லை.
மேலும் காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனை அதிகப்படுத்தி அதிக Antibodyக்களையும், வெள்ளையணுக்களையும் உருவாக்குகிறது.
பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். எனவே நமது உடலே தேவைகேற்ப உடலின் வெப்ப நிலையை சிறிது அதிகப்படுத்தி இந்த கிருமிகள் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இதனால்தான் தடுப்பூசி ரூபத்தில் கிருமிகளை உடலில் செலுத்தியதும் உடலில் காய்ச்சல் ஏற்படுகிறது. (இதுபற்றி இந்த https://youtu.be/iR3Q-TrkXyw முகவரியில் “தடுப்பூசி அவசியம்தானா?” என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.)

மனதுக்கும் உடலுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது
நாம் எப்பொழுது நிம்மதியாக வாழ்கிறோமோ அப்பொழுது நமது உடல் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வதில் எந்தவித தடையும் ஏற்படுவதில்லை. நாம் எப்பொழுது நிம்மதி இல்லாமல் வாழ்கிறோமோ அப்போது உடல் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறது. கவலை, மனவருத்தம், பயம், கோபம், விரக்தி போன்ற எண்ணங்கள் நமது உடலின் பராமரிப்பு சக்தியை தீர்த்துவிடுகிறது. எனவே நிம்மதியாக வாழ்வதற்காக நேரங்களை ஒதுக்குவோம். பலர் பணத்திற்காக புகழுக்காக, பதவிக்காக, கெளரவத்திற்க்காக தங்கள் நிம்மதியை இழக்கிறார்கள். ஆனால் நிம்மதிக்காக பணம், புகழ், அந்தஸ்து என்று எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஆரோக்கியம், நிம்மதி இதைவிடப் பெரிதல்லவா?
அன்பான பேச்சுக்களை கேட்கும்போதும்,
பிடித்தமான உணவுகளை உண்ணும்போதும்,
பிடித்தமான இசை மற்றும் பாடல்களை கேட்கும்போதும்,
பிடித்தமான நகைச்சுவை மற்றும் திரைப்படங்களை பார்க்கும்போதும்,
பிடித்தமான இடங்களுக்கு சுற்றுலா செல்லும்போதும்,
பிடித்தமானவர்களிடம் நேரத்தை செலவிடும்போதும்,
பிடித்தமான பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும்,
நல்லதை பார்க்கும்போது, கேட்கும்போதும், சிந்திக்கும்போதும்,
அடுத்தவர்களுக்கு உதவும்போதும், நேர்மையாக வாழும்போதும், சுயநலமில்லாத வாழ்க்கை வாழும்போதும்,
... நமது மனது சந்தோஷப்படுகிறது. அவ்வாறு மகிழ்ச்சியாக இருந்தால் நமது உடலின் பராமரிப்பு வேலையும் தடையில்லாமல் நடைபெறும் மேலும் நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
பணமே பிரதானம் என எண்ணுபவர்கள் தங்கள் தினசரி வாழ்க்கை முறையில் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பதில்லை. அவர்கள் ஆரோக்கியத்தை விலை கொடுத்து வாங்க முடியும் எனக் கருதுகின்றனர். உண்மையில் நோய் பற்றிய பயத்தையும், கிருமிகளைப் பற்றிய பயத்தையும், செயற்கையாக உருவாக்கிய நோய்களான நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், தைராய்டு... போன்றவற்றை மட்டுமே பெற முடியும். பணத்தால் ஆரோக்கியத்தை வாங்க முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நீங்கள் ஆரோக்கியமாக வாழ விரும்பினால் இன்று முதல் உங்களுக்கு பிடித்தமான உணவுகளை மட்டும் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நடக்கும் என்கிற உண்மையை உணர்ந்த காரணத்தால் தான் நல்ல விஷயங்களை அதிகம் பகிர்கிறேன். எனவே நல்லதே கேளுங்கள் நல்லதே நினையுங்கள் நல்லதே பேசுங்கள் நல்லதே செய்யுங்கள் நல்லதே நடக்கும். அதற்கு எனது வாழ்கையே சாட்சி.
காய்ச்சலை வியாதி என தவறாகப் புரிந்துகொண்டதே இத்தகைய அவல நிலைக்கு காரணம். உண்மையில் நம் உடல்தான் நமது சிறந்த மருத்துவர் என்கிற உண்மையை புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஆரோக்கியம் இலவசமே!
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்..
தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

The Bearys are the predominant Muslim community of coastal Karnataka !!!

THE BEARYS
The Beary is a small Muslim community concentrated mostly in ancient Tulu Nadu, which includes coastal districts of Dakshina Kannada & Udupi in Karnataka State. It is an ethnic society having its own unique traditions and distinct cultural identity. Bearys have an important cultural tradition similar to that of Navayaths of Konkan Coast and Moplahs of Malabar. The Main Identity of Bearys Is a suffix 'BEARY' for Men and 'Beardy' for Women with names as recorded in the Couchman Survey Records of 1891 and they have a closer Cultural amity to the tradition of Tulunadu. Bearys incorporate not only the Tulu culture, but also the diverse traditions of Moplahs of Malabar. The Bearys are Muslims in faith and belongs to the SHAFI school of Islamic Jurisprudence.
The Bearys are the earliest Muslim Community in Tulunadu and one among The earliest Muslim population of India with a clear history of more than 1200 years. Tulu folk song 'PADDANAS' and many other records explain their incorporated relation to Tulunadu & its Culture.

ETYMOLOGY
The Word 'BEARY' is said to be derived from the Tulu word 'BEARA', which means trade or business. Since early times a majority of these people were involved in business activities. the local Tuluvas called them as BEARYS. According to the CENSUS of 1891, the UNDIVIDED DAKSHINA KANNADA had 90,345Beary Businessmen that was about; 97 per cent of total businessmen. Hence, they were rightlyy referred to as BEAERYS or businessmen
GEOGRAPHIC EXTENTION
The Bearys are the progeny of the early Arab Traders and the local native inhabitants of undivided Dakshina kannada District including Mangalore, Udupi & Kasargod Districts.
The Bearys being a trader community settled in the banks of the rivers and coastal belt attached to the backwaters, mainly from ULLALA to MULKY in Mangalore Coast and KASARAGOD to MANJESHWAR in Kasargod Coast covering an extent of 15 Kilometers in each river mouth, which was navigable by boats, were the early location of Bearys. Islam appeared in these coasts as early as 7th century A.D.
Gradualy, they got scattered as far as the neighbouring Districts of Kodagu, Chikmagalure, Hassan. & Shimoga. Since 1950 Bearys are spread not only across India, but also in Gulf Countries, America, Australia & Other Countries. They are also settled in Mega cities like Bangalore, Mumbai, Goa & Mysore. At present The Beary Population is above 15 lakhs spread all over the world.


ORIGIN & HISTORY
The origin of the Beary Community has not been documented well. Scholars like D. Sushila Upadhyaya Prof. B.M. Ichlangod have attempted to trace the origin. It is revealed that the contacts of Arab traders with Tulunadu created a progeny and community in Tulunadu. With advent of Islam, The Arabs involved in propagation of their faith along with promoting trading interest. During early centuries there existed a feudal society in tulunadu and casteism was rampant Tulunadu. The Arabs attracted the local inhabitants to Islam by their generousity, honesty & disciplined in lifestyle. It was a common fact that similar Arab contacts created new communities in Malabar, Konkan, Koramandal coast in different names, such as Moplas, Navayaths & Labbais.

This Theory of Arab social interchange with Southern Coast leading to the emergence of new communities is supported by prominent Scholars like Tarachand. Thomas Arnold, Saletore & Many Historians.Those who converted to Islam belonged to the low castes & local faiths but they retained their good relations with the local people. The MANNERS COLLECTIONS (Padthanas) 1886 refers to two groups of Bearys Viz., Jathi Neethi Bearys & Jathi Setty Bearys. Jathi Neethi Bearys were highly honoured by the local people. They followed Islamic faith & discipline. But, other group, Just pronounced the KALIMAH ( Oath of Islam) and adhered to the community without islamic practices. Their names also resembld the local names such as Andu, Seku, Bappa, Sadu, Saidu etc.

MISSIONARY PROPAGATION
The propagation of Islam in Malabar and Tulunadu is attributed to the DINAR MISSIONARY. It is said that on Ceylonese pilgrim Sheikh Sikauddin visited Kodungallur (Cranganore), the capital of King Cheruman and narrated the story of the splitting of the moon at Makkah. The king had already dreamt this event and when he realized this as a miracle of the Prophet, he aspired to meet the Prophet at Makkah. His name was Abdulrehman Samiri and his wife was called Rehabia. He died on his way back and entrusted the task of Propagation to his associates Malik Bin Deenar and his family. The Deenar set out to work in the Malabar coast. KERALOLPATTY an early literary work in Malayalam and Logans Malabar Manual Vol 1 refer to 10 mosques established by these missionaries including the three mosquest in Tulunadu, Kasaragod (Kanyarode), Mangalore (Manjalur) & Barkur (Bakkarur). They appointed Qadhi (Khazi) to each of these centres. They were Ibrahim, Musa and Mahmood, sons of Malik bin Habib. Logan says this account of introduction of Islam into Malabar and Tulunadu is reliable. Among these mosques and Muslim centres, the one in Barkur vanished later on due to lack of patronage. Thereafter may SUFI saints like Baba Fakhruddin, Sayyad Shareef ul Madani and Many others visisted and propagated Islam in these localities. This community in Malabar is known as MOPLAHS and they adopted the local tongue Malayalam as their language. Owing to this extraordinary influence of Moplah propagation Bearys were also known as Moplahs in Tulunadu. Thought they were distinguished as Bearys with suffix as “BEARY” were referred as Moplah Caste untill recently in all revenue records. In later part of 20th Century, scholars like Prop.B.M. Ichlangodu called for independent identity for the Bearys.


BEARY ARE NOT MOPLAHS
The historians   and writers referred to the Bearys as Moplahs or Mapillas because of Moplah influence and wrongly recorded caste reference. Prof. B. Ichlangodu Strongly pleaded with evidences that Bearys were not Moplans in his thesis ‘Muslims of Tulunadu (MS)’.
  • The Bearys are proud of using suffix ‘Beary’. It was a common tradition of Tulunadu referring to their independent social status such as SHETTY, HEGDE, ALVA, KAMATH ETC. Moplahs are reluctant to use suffixes. In Malabar records it is rarely found.

  • The Beary dialect is also wrongly referred as Moplah. Dr. Sushila Upadhyaya in her Ph.D. thesis ‘Mapilla Malayalam’ referred to as number of exclusive features in this dialect. :

  • This dialect has TULU grammar which is difference from Malayalam.
  • It has a large number of Tulu words, more than 50%. In Moplah Malayalam Tulu words are rarely found.
  • There are Malayalam words in use. But many of the popularly used words are not in this dialect. Use of Sankrit words are hardly found.
  • Arabic and Persian words are commonly used.
  • The pronunciation and tone of the dialect are entirely different.
These features show that Beary dialect is difference from Malayalam.
3) The Beary dialect has no script. A few records are found showing that Beary used a script known as BATTEBARAHA. The script is identified as Batteluthu, an early Tulu script. There are many changes in usage of letters and form. This was not found in Malayalam. It is said that modern Malayalam script was evolved out of this script.
4) Bearys were in service of feudal families known as Jain Beedus and Guthus. There were more than 200 Jain Beedus and also a good number of Guthus in Thulunadu. Bearys are familiar to Tulu dialect also. This was an advantage for them to be employed by them. No Moplahs were found in their service. Some writers however wrongly referred to them as Moplahs.
5) The best example of feudal trading associations were Jain VARTHAKA SANGHAS. They had a numerical feature having 16 or 8 members. The Beary feudal set up known as PADINARAGA was similar to that. The Hanjamanas (Anjuman) were also influenced by them. Most of the cultural activities were influenced by Jains. The Moplahs have no such Jain & Local influence.
6) The name of early Bearys had a great influence of local Tuluvas, For example BAPPA, Sadhuri, Sayiri, Kayiri, Ummathu, Bipamma, Kunhumma etc. Moplahs do not have such names.
7) The ISLAM system prevailed in the early Beary Socialy resembles BARI (Bali) system of the Bunts. It was matrimonial in nature. This is not found amount the Moplahs.
8) There was a type of feudal reflection among the early Bearys. Some people were treated as low categories. Thalaillathavaru, which means people of low status. VASSAS, who were professional Butchers and Circumcision Specialists and Baduvas, who are similar to that of slaves belonged to this group. They were not allowed to participate in functions like OPPANAS, THALAS etc.did not have any rich system the Moplahs.
These and many much distinct characters show that Bearys are differrent from Moplahs. Being the largest community among the Muslims of Tulunadu, their cultural contribution has also been remarkable.

The available sources refer to the Arab Muslims contact with the Malabar coast and Tulunadu to 7th Century A.D. Henry Miers Eliot, H.G. Rowilson support this view. Strurrock in his Malabar Dt. Manual says that Arab businessmen settled in Malabar and Tulunadu coast during 7th century.

Mangalore is one of the most important centre of Bearys. It was known as Kudla by Tuluvas. But, Bearys referred to it as Mykala. It was said that the name was derived from the Missionaries of NATHA Panth Centres. It is said that Goddess Maya Devi settled in Kadri & it became a famour centre of worship. Hence Mayakala became Mykala. Prof. Ichlangodu does not subscribe this view. He refers to the propagation of Nathapantha, by Mangaladevi, who came from Kerala along with her disciples and settled at Mangalore. Her influence was well established in Tulunadu. A temple was built at Jeppu and it became a famous centre of worship. This place even today is known as MANGALADEVI. The Malayalis call Mangalore as Mangalapura, which means town of Mangala. The Beary version of Mangala is Mykala. This view is generally accepted. The term Mangalore is also said to be MANGALA-URU, which means the land of Mangala.

The Bearys flourished by their proxinity to Jains. In 16th century the local Jain families like Chautas, Bangas & Ajilas encouraged their trade and services. They made their Mark as the most trusted servants. References are found on services rendered by Bearys Rani Abbakka of Ullala. They also served as freedom fighters and became soldiers of Rani Abbakka against Portuguese. They also participated in the freedom struggle against the British. During the rule of Hyder Ali and Tippu Sultan many Beary leaders served as prominent officials. SADHURI Beary’s march against the British army is a memorable event. After the fall of Tippu Sultan Bearys were honoured by the British too. A few of the leaders were honoured as BAHADURS and KHAN BAHADURS. With the fall of British power and disappearance of feudal leaders the Beary power also diminished. Lack of leadership and prominence made the Bearys to lose their social status. Now a new era of Beary awakening has begun and a new leadership and literary and culture at spears is leading the Community towards prosperity.


My View..
Most the people wearing costly watches  Minimium amount of 10,000INR to 10,00,000 INR. Now adays Mandalore beary muslims long time staying in SAudi Arabia dealing a business,Shop, Manpower supply in eastern Region, They are  one of the good quality people in the world,, Behaviour,  Humanity and faith to god,