Thursday 28 December 2017

Samsung wins $700m Saudi chemical plant EPC contract in SAUDI ARABIA !!



Saudi Basic Industries Corp. (SABIC) is expected to award an engineering, procurement and construction (EPC) contract for its planned Jubail-based acrylonitrile by 2015.
The three remaining contractors are South Korea’s Daelim Industrial and Samsung Engineering, as well as Spain’s Tecnicas Reunidas.


Finally Korea's Samsung Engineering said it has secured a major contract from Jubail United Petrochemical Company (United), an affiliate of Saudi petrochemical giant Sabic for a $700-million ethylene oxide–ethylene glycol (EO/EG) plant in the kingdom.

The project, which will produce 700,000 MTPA (million tonnes per annum) MEG, will be executed in Jubail Industrial City located in the east of Saudi Arabia, 100 km north of Dammam. The construction work is due to be completed in 2020.

Samsung Engineering is the one of top EG plant builders globally, with the company delivering a total of 16 plants.

One of the world’s leading engineering, procurement, construction and project management (EPC & PM) companies, it has experience in over 40 countries.

Samsung benefits from the track record and experience of delivering 27 projects to Saudi Arabia, 22 to Sabic-related companies including United.

The company provides total project management from planning and financing to construction and commissioning and has built some of the world’s largest and most complex hydrocarbon plants.

Further, during the last 10 years Samsung Engineering built EG plants around the globe such as in countries like US, Malaysia, Thailand and India.

"We are eager to provide the finest plant for Saudi Arabia," said a spokesperson for Samsung Engineering.


“With JUPC’s trust and our proven track record in EO/EG plants and Saudi Arabia we will provide the best services possible and looking forward to work with United with many further years to come,” he added.


Source By : SAMSUNG

Wednesday 27 December 2017

வணக்கம் முஸ்லிம் முகநூல் மீடியாவிற்கு சில விளக்கங்கள் !!


Related imageகடந்த சிலநாட்களுக்கு முன் நடைபெற்ற நோபுள்மரைன் சாகுல்கமீது அவர்களின் இல்லத்திருமண விழாவில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டார்கள்....!
அந்த சமயத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணைத்தலைவர் அப்துல்ரஹ்மான் EX.MP அவர்களும்,திமுக செயல் தலைவர் ஸ்டாலின்அவர்களும்,அவர்களின் மனைவியும் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது....!!!
இந்த சந்திப்பின் போது. ஸ்டாலின் அவர்களின் மனைவி , முஸ்லிம் லீக் முதன்மை தலைவர் அப்துல் ரஹ்மான் ex.mp அவர்களுக்கு வணக்கம் சொல்கிறார்....!!!
அப்துல்ரஹ்மான் ex.mp அவர்களும் மரியாதை நிமித்தமாக பதில் வணக்கம் செலுத்துகிறார்கள்....!!!
தற்போது முகநூல் முஸ்லிம் மீடியா தனது முகநூல் பக்கத்தில் முஸ்லிம் லீக் தலைவர்கள் எல்லாம் ஏதோ இஸ்லாமிய விரோத காரியத்தை செய்ததைப்போல பதிவிட்டு, அவர்களின் முஸ்லிம் லீக் வெறுப்பை தீர்த்துக்கொள்கிறார்களோ.....??? என்று எண்ணுகிற அளவிற்கு அவர்களின் பதிவுகள் நம்மை எண்ணத்தோன்றுகிறது.....!!!?
இவர்கள் இதுபோன்ற பதிவுகளை போடுவதன் மூலம் அற்ப சமூகவலைதள விளம்பரங்களை தேடிக்கொள்ள விரும்புகிறார்களா....??? என்கிற சந்தேகமும் எழுகிறது...!!!

எது....??? எப்படியோ....???
எமது நிலைப்பாடு:::
"வீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அலட்சியம் செய்கின்றனர்.
'எங்கள் செயல்கள் எங்களுக்கு. உங்கள் செயல்கள் உங்களுக்கு. உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்' எனவும் கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 28:55
உங்களுக்கு வாழ்த்துக் கூறப்பட்டால் அதை விட அழகிய முறையிலோ,
அல்லது அதையோ திருப்பிக் கூறுங்கள்! அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 4:86
வேதமுடையோர் உங்கள் மீது ஸலாம் கூறினால் வஅலை(க்)கும் (உங்கள் மீதும்) எனக் கூறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி 6258
விளக்கம்:
முதல் வசனத்தில், "அவர்கள் வீணானதை செவியுறும்போது அதனை அலட்சியம் செய்வார்கள்" என்ற அடிப்படையில் இதனை நாம்(முஸ்லிம் லீக்கர்கள்) பெரிதாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை....!!!
இரண்டாவது வசனத்தில்,
உங்களுக்கு வாழ்த்துக்கூறப்பட்டால் , அதைவிட சிறந்ததையோ, அல்லது அதையோ திருப்பி கூறவேண்டியதின் அடிப்படையில் அவர்களின் வணக்கத்தை நாகரீகம் கருதி, பதிலாக அவர்களுக்கு திருப்பி கூறப்பட்டது.....!!!
மூன்றாவதாக உள்ள ஹதீஸில்,
வேதமுடையவர்கள் உங்களுக்கு ஸலாம் கொடுக்கப்பட்டால், அவர்களின் ஸலாம் -ஐ அப்படியே திருப்பிக்கூறலாம் என்கிற விசயம் தெளிவாகிறது....!!!
மற்றொரு, ஹதீஸில் ,யூதர்களுடைய ஸலாமை போல உங்களுடைய ஸலாமை அமைக்க வேண்டாம் என்கிற பொருள்பட வந்துள்ளது...!
ஏனெனில், அவர்கள் தன் முன்கைகளாலும், தலையை லேசாக சாய்த்தும் ஸலாம் கூறுவார்கள் என்று உள்ளதையும் கருத்தில் கொண்டால், நாம் வணக்கம் சொன்ன நிகழ்வு என்பது அவர்களின் வணக்கத்திற்கு பதில் மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலைக்கு மாறுவோம்.....!!!
நம் அனைவரின் மீதும் ,இறைவனின் "ஸலாம்" நிலவட்டுமாக....!!!
இரு கைகளையும் கூப்பி வணக்கம் கூறுவது மரியாதைக்குரியது இது தமிழர் பண்பாடு அனைத்தையும் அரிந்த நம்மை படைத்த இறைவனுக்கு தெரியாதா நாம் எதை நினைத்து வணக்கம் வைத்தோம் என்று வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்ற வசனம் நாம் தொழுது வணங்குவதைக் குறிக்கிறது. நாம் இறைவனை இரு கைகளையும் சேர்த்து வணங்கமாட்டோம். இதை அதனுடன் சேர்த்து ஒப்பிட வேண்டாம். சில நாட்களாக உங்கள் பக்கத்தில் தனிநபர் விமர்சனம் அதிகமாக இருக்கிறது தனிநபர் விமர்சனம் இருந்தால் உங்கள் பெயருடன் சேர்த்து பதிவிடுங்கள் முகநூல் முஸ்லீம் மீடியா என்ற பெயரை வைத்துக்கொண்டு நீங்கள் பதிவிடுவது அனைத்து முஸ்லீம்களின் என்னம் என்று நினைத்து பதிவிடவேண்டாம்.இது தமிழர்களின் பண்பாடு...நாகரீகமும் கூட ...தேவையில்லாமல் நீங்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம்...உள்ளத்தில் இறைநம்பிக்கை உறுதியாக இருக்கும் வரை ,மற்ற விஷயங்களை பற்றி தேவையில்லாமல் கவலைப்பட தேவையில்லை ...
அனைத்தையும் இறைவன் அறிவான். 


நன்றி : மு.அஜ்மல் கான்.

தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

"959 மகள்களுக்கு தந்தை நான்!!''- சூரத் தொழிலதிபரின் பெருமிதம்...


தொழிலதிபர்கள் என்றாலே மக்களின் கண்ணோட்டம் வேறு மாதிரியாகத்தான் இருக்கும். பணம் பதுக்கும் தொழிலதிபர்கள்,
வரி ஏய்ப்பில் ஈடுபடும் தொழிலதிபர்கள் பற்றி தினமும் செய்தி படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக தொழிலதிபர்கள் பற்றிய நல்ல செய்தி அவ்வப்போது கண்களில் தென்படும். ஒரு சில தொழிலதிபர்கள் உண்மையிலேயே மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். கடந்த 2015ஆண்டு சூரத்தைச் சேர்ந்த வைர ஏற்றுமதி நிறுவனத் தலைவர் சவ்ஜிபாய் தோலாக்கியா தனது ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 1,260 கார்கள் மற்றும் 400 பிளாட்டுகளை வழங்கினார். அண்மையில் அவுரங்கபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஜே முன்னோட்டின் மகள் ஷ்ரேயா தனது திருமணத்தை முன்னிட்டு 90 ஏழைகளுக்கு இலவச வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தார். இந்த வரிசையைச் சேர்ந்த தொழிலதிபர்தான் குஜராத்தைச் சேர்ந்த சவானி குழுமத் தலைவர் மகேஷ் சவானி. சூரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் மகேஷ் சவானி, தொடர்ந்து ஆறாவது ஆண்டாக தந்தை இல்லாத ஏழை இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்து வருகிறார்.


மகேஷ் சவானி இளம் பெண்களுக்கு திருமணம் நடத்தி வைப்பதற்கு ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. இவரிடம் வேலை பார்த்து வந்த தொழிலாளி ஒருவர், தன் மகளின் திருமணத்துக்கு சில நாட்களுக்கு முன் இறந்து போனார். அந்த தொழிலாளியின் மகளுக்கு, தந்தை ஸ்தானத்தில் இருந்து மகேஷ் சவானி திருமணம் நடத்தி வைத்திருக்கிறார். அப்போது, அந்த பெண் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லையாம். அந்தப் பெண்ணின் மகிழ்ச்சி, மகேஷ் சவானியின் மனதில் பெரும் மாறுதலைத் தந்திருக்கிறது. அதற்கு பிறகுதான் தந்தையர் இல்லாத இளம் பெண்களை இனம் கண்டு திருமணம் நடத்தி வைக்கும் பணியில் இறங்கினார் மகேஷ் சவானி.


கடந்த 2016 டிசம்பர் 26-ம் தேதி மகேஷ் சவானியின் மகன் மிதுல் சவானிக்கும் ஜான்கி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மகனது திருமணத்தை முன்னிட்டு 236 இளம் பெண்களுக்கும் திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்தனர். இதில் 5 முஸ்லிம் மணமக்களும் ஒரு கிறிஸ்துவ மணமக்களும் அடங்கும்.


பெயருக்காகவும், பெருமைக்காகவும் சில அரசியல் கட்சிகள் நடத்திவைக்கும் இலவசத் திருமணம் போல அல்ல இவர் நடத்தி வைக்கும் திருமணங்கள்! ஆம்! சவானி குழுமத்தைச் சேர்ந்த மணமக்களுக்கு எந்த மாதிரியாக திருமணம் நடைபெற்றதோ, அதே போலவே - மண அரங்கத்தில் இருந்து மற்ற எந்த விஷயங்களிலும் வேறுபாடு காட்டாமல் - சரிசமமாக அனைவருக்கும் ஒரே விதத்தில் திருமணம் நடைற்றதுதான் இந்த மாஸ் வெட்டிங்கின் ஸ்பெஷல். இஸ்லாமிய மணமக்களுக்கு இஸ்லாமிய முறைப்படியும் கிறிஸ்துவ மணமக்களுக்கு கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. இதற்காக சூரத்தில் உள்ள மைதானத்தில் தனித் தனியாக திருமண அரங்குகள் தயார் செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. மிதுல் - ஜான்கி மாலை மாற்றிக் கொண்ட போது மற்றவர்களும் மாலை மாற்றிக் கொண்டனர். ஒவ்வொரு மணமக்களை சேர்ந்த உறவினர்களும் நண்பர்களும் புதுமண தம்பதியரை மலர் தூவி வாழ்த்தினர்.


குஜராத்தைச் சேர்ந்த மணமக்கள் மட்டுமல்ல ராஜஸ்தான், மகராஷ்டிரா போன்ற மாநிலத்தைச் சேர்ந்த மணமக்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணம் நடத்தி வைப்பதோடு, மணமக்கள் குடும்பம் நடத்த தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், தங்க நகைகள் என ஒவ்வொரு தம்பதியருக்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சீர்வரிசை செய்து வைக்கப்பட்டது.






இதுவரை 959 பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதுமட்டுமின்றி 2008ல் இருந்து 2012 வரை 1,300 பெண்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.



251 பெண்களில் 108 பெண்களுக்கு மோவாலியா குடும்பத்தினர் கன்யாதானம் செய்து வைத்தனர். ஒவ்வொரு பெண்ணின் திருமணத்திற்கும் ரூ. 5 லட்சம் செலவு செய்துள்ளனர். ஜாதி மத பேதமின்றி இந்த திருமணங்கள் நடந்தன. திருமணமானவர்களில் ஒருவர் கிறிஸ்துவர், 5 பேர் முஸ்லிம்கள், ஒருவர் ஊனமடைந்தவர். மற்றவர்கள் 31 வகையான பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களது மதச் சடங்கின்படி திருமணம் செய்து ​ வைக்கப்பட்டது.

திருமணம் குறித்து சவானி குழும இயக்குநர் மகேஷ் சவானி கூறுகையில், '' இது போன்ற திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். இதே அரங்கத்தில்தான் எனது மகன் மிதுல் எனது மருமகன் ஜே ஆகியோருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடித்து வைப்பதோடு எனது பணி முடிந்து விட்டதாகக் கருதவில்லை. அவர்களது எதிர்கால வாழ்க்கைக்காக என்னால் என்ன உதவியெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தும் கொடுக்கிறேன். கடந்த ஐந்து வருடங்களாக இதனை செய்து வருகிறேன். இதுவரை தந்தைகள் இல்லாத 959 இளம் பெண்களுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து திருமணம் செய்து வைத்துக்கொள்கிறேன். அந்த வகையில் 959 மகள்களுக்கு நான் தகப்பன் என்று கூறிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் '' என்கிறார்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : அ. தையுபா  அஜ்மல்.


Tuesday 26 December 2017

Australia in line to take over 2022 World Cup from Qatar !!!


The stadium will have a 40,000 capacity but will reduce to 20,000 after the tournament

Australia is back in line as a strong contender to host the 2022 World Cup after Qatar's diplomatic crisis has left it in jeopardy and likely to pull out of holding the event.

A new report has delved into the suitability for Qatar to host the World Cup, amid the ongoing political tension in the Middle East.

The build-up to World Cup 2022 has been dogged with problems since it was controversially awarded to Qatar ahead of Australia in 2010.

Should Qatar be forced to pull out of hosting the World Cup, Australia could be placed back in the running.

Australia lost out to the Gulf State in the 2022 bid, sparking outrage.

The decision raised concerns over alleged corruption, with former FIFA president Sepp Blatter stepping down in 2015.

A study by management consultants Cornerstone Global evaluated the impact of the current diplomatic situation involving Qatar and its surrounding countries.

Obtained by the BBC, the report claims Qatar 'is under greater pressure regarding its hosting of the tournament'.

'The current political crisis has seen - or at least raised the possibility of - a Qatari opposition movement emerging,' the report said.

'Given the current political situation... it is certainly possible that the tournament will not be held in Qatar.'

The report warned companies of the 'high-risk' infrastructure programme, which is set to total $257billion (£153bn) in costs.

There have also been reports of migrant workers on construction sites being subjected to appalling conditions.

The tournament has subsequently had to be moved to winter because of the temperatures in the summer.

The Qatar in focus: Is the Fifa World Cup 2022 in danger? report advises clients to 'to give them unique insights to the reality of doing business in complex and challenging environments'.

It also adds: 'Western diplomats have privately stated they do not know whether or not the tournament will take place as planned.


'Any cancellation of Qatar hosting the World Cup 2022 will likely be abrupt and will leave contractors involved in a precarious situation that may not be easily resolved.'

The Supreme Committee for Delivery & Legacy dismissed the report as 'transparent as it is laughable.'



What's the report saying?


That among local diplomats in the Middle East, there is not full confidence that Qatar will be able to deliver the World Cup. The report is prepared for infrastructure firms assessing the risks involved in working on preparations for the World Cup.

Why is there a risk the World Cup will be moved?

Diplomats believe the current crisis which has resulted in a blockade of the sovereign state could lead to the development of an opposition movement in the country, with no guarantees of continuity if the governance of the country changes.

How did the crisis develop?

Qatar is a gas-rich nation, sharing a huge oil field with Iran. However, its economic might has long caused fractious relations with some of its Gulf neighbours and things reached crisis point this summer. Five nations – Saudi Arabia, Egypt, the UAE, Bahrain and Yemen accused Qatar of supporting terrorism in June and broke off diplomatic ties. Turkey remains supportive of Qatar, flying out food to beat the blockade, however Qatar's cash supplies are falling and it has also been hit by falling oil prices.



What problems has this caused?

Saudi Arabia, Qatar's only immediate neighbour, has closed its land border to the nation, leading to major logistical problems, involving food and movement of citizens. The Saudis, Egypt and UAE have also closed their airspace to Qatari transportation. Infrastructure firms have been forced to source materials needed to build stadiums and other World Cup-related projects from countries outside of the blockade areas. Previously such materials came through the main port in Dubai, now closed to Qatar and its own shipping facilities are limited until a new port opens soon.

Will the World Cup really be transferred?

A number of controversial issues surround the World Cup, from the corruption alleged to have been involved in Qatar securing it, to the treatment of workers and its movement from summer to winter. However, it seems the biggest threat yet is the diplomatic crisis, both in terms of regional instability or a change in leadership of the tiny nation which could put hosting it under threat. The competition's future in the country depends on how the crisis plays out
As the host nation faces diplomatic crisis in the Middle East
Qatar was controversially chosen to stage the 2022 World Cup by FIFA in 2010
The nation is now involved in a diplomatic crisis, placing Australia back in line
The World Cup infrastructure is due to total $257 billion once completed
Qatar was chosen to host the 2022 World Cup instead of Australia




Host of the 2022 FIFA World Cup !!

“The 2022 FIFA World Cup, which is being held for the first time in the Middle East, is being hosted by Qatar and this will benefit both Qatar and Middle Eastern countries. The matter of Qatar hosting the 2022 FIFA World Cup is not up for negotiation,” Al-Thani said.

Al-Thani’s comments came after Dubai security Lt. Gen. Dhahi Khalfan wrote on his Twitter account last week that the Gulf crisis could end if Doha forfeited hosting the World Cup.



Monday 25 December 2017

இந்தியாவுடன் எந்த வகையிலும் ஒப்பிட இயலாத,அதீத வளர்ச்சி பாதையில் வல்லரசு சீனா!

இறைவனின் பெரிதான தயவால்,உலகில் வளர்ந்த ஒரு பத்து நாடுகளை நேரடியாக பார்க்கும் வாய்ப்பை பெற்றேன்.குறிப்பாக மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி என்னை மலைக்க வைத்தது.வாழ்வில் முதன் முதலாக, நான் பார்த்த வெளிநாடு நாடு ஜெர்மனி.

அந்த தேசத்தை பார்த்த போது, மனதில் அப்படி ஒரு பிரமிப்பு.
நான் பார்த்த வெளிநாடுகளில்,எல்லாவகையிலும் ஜெர்மனியை முதலிடத்தில் வைத்து பார்க்கும் அளவுக்கு,அநேக விடயங்களை அந்த தேசம் எனக்கு கற்று கொடுத்தது.
வெறுமனே தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற விடயங்களை தாண்டி,மக்களின் ஒழுக்கம், எளிமை, அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு ,சக மனிதனுக்கான மரியாதை, பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதம்,அவர்களின் நேர்மை என்று பல விடயங்களைக் கற்றுக் கொண்டேன்.
நடு நிசியில் இரண்டு மணி,மூன்று மணி என்று எந்நேரம் வேண்டுமானாலும் தனியாக பயணித்து, வீடு வந்து சேர்ந்த நாட்கள் ஏராளம் உண்டு. ஆனால் ஒரு நாள் கூட, உள்ளத்தில் எவ்வித பயமும் இருந்தது கிடையாது.
இந்த நடு ராத்திரியில் திருடர்களின் தொல்லை இருக்குமோ, அல்லது வெளிநாட்டவர் மீது இவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி இருக்குமோ,
ஒருவேளை நம்மை தாக்கினாலும் தாக்குவார்களோ என்று ஒருநாள் கூட சிந்தித்து பார்க்கும் அளவுக்கு எந்த சூழலும் அங்கு இல்லை.
ஐரோப்பிய நாடுகளில்,பொது வெளிகளில் சுத்தம்,ஆரோக்கியம் என்றால் அதில் ஜெர்மனியை மிஞ்ச இயலாது. சுவிட்சர்லாந்தையும் பொது வெளி சுத்தத்தில் அடித்துக் கொள்ள முடியாது. அப்படி பார்த்தாலும் சுவிட்சர்லாந்தில் பெரும்பான்மை மக்கள் ஜெர்மானியர்களே!
ஐரோப்பாவில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு பார்த்தால்,தொழில் நுட்பம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, கல்வி, பொருளாதாரம் என்று எல்லாவற்றிலும் ஜெர்மனி தான் முதலிடம் என்றே சொல்லும் அளவுக்கு, அனைத்து விடயங்களிலும் உயர்ந்து நிற்கிறது.
நண்பர்கள் பொதுவாக என்னிடம் கேட்பது உண்டு. நீங்கள் பார்த்த வெளிநாடுகளிலேயே சிறந்த நாடு எது என்று? சந்தேகம் இல்லாமல் கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம் ஜெர்மனி தானென்று
ஒரே ஒரு சிக்கல் எதுவென்றால் மொழி மட்டுமே:) அங்கு பெரும்பான்மை மக்களுக்கு ஆங்கிலம் தெரியாது. நமக்கு அவர்களின் தாய்மொழி தெரியாது:)
மேற்கத்திய நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு, போக்குவரத்து, கல்வி,பொருளாதாரம்,மருத்துவம்,தொழில் வளர்சிகள்,அடிப்படை பாதுகாப்பு போன்ற பல விடயங்களை பற்றி சிலாகித்து பேசும் போது, நண்பர் ஒருவர் சொன்னார், மேற்கத்திய நாடுகளை நான் பார்த்தது இல்லை. ஆனால் பலமுறை சீனாவை பார்த்து விட்டேன். சீனாவின் வளர்ச்சி மிகவும் அபரிவிதமானது என்றார்.
பீஜிங்,ஷாங்காய் போன்ற நகரங்களை எல்லாம் பார்த்தால், மிரண்டு போவீர்கள் என்று சொன்னார். மேற்கத்திய நாடுகளை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு சீனாவின் வளர்ச்சி இருக்கிறது என்று, பயிற்சிக்காக சீனா வந்த, எங்கள் நிறுவனத்தின் மேற்கத்திய நண்பர்களே சிலாகித்து பேசினார்கள் என்று சொன்னார். அவர்களே விரும்பி விரும்பி நகரத்தின் பல பகுதிகளை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள் என்றார்.
நான் சீனாவுக்கு போனதில்லை. அதனால் அப்படியா என்று கேட்டுக்கொண்டேன்.
மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சியை மிஞ்சி, ஒரு நாட்டில் வளர்ச்சி இருக்கும் என்றால் அதை வார்த்தையால் விவரிக்க முடியாத அளவுக்கு, சொர்க்க பூமியாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.
சமீபத்தில் அதே நண்பர், அமெரிக்காவுக்கும் சென்று வந்தார். வந்த பிறகு சொன்னார், அமெரிக்காவை விட சீனா தான் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
காரணம் சீனா தான், புதுசு கண்ணா புதுசு மாதிரி இருக்கிறது. பிரமாண்டத்தில் சீனா, அமெரிக்காவை மிஞ்சி நிற்கிறது என்று சொன்னார். அவர் பார்த்த இடங்கள் நியூயார்க் அல்லது கலிபோர்னியா போன்ற நகரங்களாக இல்லாமல் இருந்ததால், ஒருவேளை சரியான ஒப்பீடாக இல்லாமல் இருக்கலாம் என்று எண்ணிக்கொண்டேன்.
ஆனால் நேற்று வேறொரு நண்பரை, அவரது வீட்டில் சந்தித்த பொழுது, மடிக்கணினியில் சில புகைப்படங்களை காட்டினார். தற்போது, வேலை விடயமாக,அடிக்கடி சீனா செல்ல வேண்டி இருக்கிறது.சீனாவை பாருங்கள் என்று சில புகைப்படங்களை என்னிடம் காட்டினார்.
பார்த்தால் அப்படி ஒரு ஆச்சர்யம்.
மேற்கத்திய நாடுகளின் கட்டமைப்பு வசதிகளில்,
எந்த வித்தியாசத்தையும் பார்க்க இயலாத அளவுக்கு சாலைகள், கட்டடங்கள், ரயில் பயணங்கள், துறை முகங்கள், விமான நிலையங்கள் என்று மிக பிரமாண்டமாய் இருக்கிறது சீனா.
மேற்கத்திய நாடுகளில் பார்த்த அத்தனை வசதிகளையும்,அப்படியே அச்சு பிசகாமல் நிறைவேற்றி இருக்கிறார்கள் சீனர்கள்.
ஒரு தேசத்தின் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் அடிப்படை கட்டுமானங்களை பொறுத்தது.
தரமான சாலைகள், போக்குவரத்து வசதிகள், மக்களுக்கான அடிப்படை குடிநீர், மின்சாரம், மருத்துவ வசதிகள், எல்லோருக்கும் பொதுவான அடிப்படை இலவச கல்வி, எல்லோருக்கும் பொதுவான சட்டமும் ,நியாயமான தண்டனைகளும் அனைத்து விதிகளையும் மக்கள் கடைபிடிக்கும் வகையில் மக்களை தயார்படுத்துவது,விதி மீறல்களுக்கு சரியான தண்டனைகள் வழங்கி மக்களை சரி படுத்துவது, பொது இடங்களில் சுத்தம், திருட்டு வன்முறை போன்ற கொடுஞ்செயல்கள் நிகழாத வகையில் மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வது,ஊழல்,லஞ்சம் போன்ற கேடுகெட்ட சம்பங்கள் கூடுமானவரையில் நடக்காமல் பார்த்துக்கொள்வது, நீதியும் நியாயமும் எல்லோருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் காவல்துறை மற்றும் நீதி துறை செயல்படுவது போன்றவற்றை சொல்லலாம்.
இந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சியை பார்த்தால் பிரமிக்க தக்க வளர்ச்சியாகவே தோன்றுகிறது.
சீனாவின் அதிவேக ரயில்களில் பயணித்த நண்பர்கள் இருவரும் சொல்கிறார்கள்.
இப்படி ஒரு பயணம்,வேறு எங்கும் வாய்ப்பே இல்லை... சீன ரயில்களின் வேகம் மணிக்கு முன்னூறு கிலோமீட்டர்,நானூறு கிலோமீட்டர் என்று மின்னல் வேகத்தில் இருக்கிறது.
பீஜிங் விமான நிலையத்தில் இருந்து, நகரத்தின் மையப்பகுதி முப்பது கிலோமீட்டர்.ஆனால் இந்த முப்பது கிலோமீட்டார் தூரத்தை வெறும் எட்டு நிமிடங்களில் இந்த அதிவேக ரயில்களில் மூலம் நீங்கள் கடந்து விட முடியும்.
பீஜிங்கில் இருந்து ஷாங்காய் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் தூரம். ஆனால் அதிவேக ரயில்கள் மூலம் இந்த தூரத்தை வெறும் நான்கு மணி நேரத்தில் நீங்கள் அடைந்து விட முடியும்.
ஐநூறு கிலோமீட்டர் தூரம் பயணித்து,அன்றாடம் வேலைக்கு சென்று வரும் பெரும்பான்மை மக்கள் சீனாவில் இருக்கிறார்கள். காரணம் அவர்களின் வேலைக்கு செல்லும் பயண நேரம் என்பது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே.
சிந்தித்து பாருங்கள். இந்தியாவில் இப்படியான அதிவேக ரயில்கள் வந்தால், காலையில் கன்னியாகுமரியில் இருந்து கிளம்பி சென்னைக்கு வேலைக்கு வந்து விட்டு, மாலையில் வீடு திரும்பும் அளவுக்கு நிலைமை மாறி விடும்..
கற்பனையாக இருந்தாலும் கூட சிந்தித்து பார்க்கும் போது எத்தனை மகிழ்வாய் இருக்கிறது பாருங்கள்.
இந்த அதிவேக ரயில்கள் அனைத்தும் சீனர்களே வடிவமைத்து அவர்களே தயாரித்தது. வெளிநாடுகளின் உதவி என்பது சற்றும் கிடையாது.
இந்தியாவில் அதிவேக ரயிலின் வேகம் என்பது நூறு கிலோமீட்டர் என்கிறார்கள். ஆனால் சராசரி வேகம் என்பது எண்பது கிலோமீட்டர் தான்.
2020 க்குள் சீனாவின் முக்கிய வழித்தடங்கள் அனைத்தையும், இந்த அதிவேக ரயில்கள் மூலமே சமாளிக்க போவதாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கிட்டதட்ட இருபதாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை, இது போன்ற அதி வேக ரயில்கள் மூலம் இணைக்க போவதாக சொல்லி இருக்கிறார்கள். அவர்களின் அடுத்த பத்தாண்டுகள் திட்டத்தை கேட்டால் நமக்கு தலையே சுற்றி விடும் போல் இருக்கிறது.
சீனாவை போல, தரமான சாலைகள் இந்தியாவில் இருக்கிறதா என்று தேடி பார்த்தாலும் கிடைக்காது.
ஆராய்ச்சி படிப்புகளுக்கென்று, கடந்த சில ஆண்டுகளில் சீனா செலவழித்த தொகையில் பத்தில் ஒரு பங்கை கூட இந்தியா செலவு செய்யவில்லை. அதற்கான திட்டுமிடுதல்கள் இல்லை. 2011 இல் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அவர்கள் செலவிட்ட தொகை நூறு பில்லியன் அமெரிக்க டாலர்கள். ஆனால் நாம் ஒரு பத்து பில்லியன் டாலர்கள், செலவழிப்பதே மிக அதிகம்.
இப்படி கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்காக, அதீத அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் இன்றைக்கு அனைத்து தொழில்களிலும், ஆராய்ச்சிகளிலும், தயாரிப்புகளிலும் சீனர்கள் முன்னணியில் இருக்கிறார்கள்.
குண்டூசி முதல் ஏவுகணை வரை அத்தனையும் சீனர்களின் சொந்த தயாரிப்புகள்.உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும், அத்தனை எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் சீன தயாரிப்புகளே.
நாம் குடிசை தொழிலாக ஊறுகாய் அல்லது பொறி உருண்டை செய்வது வழக்கம். ஆனால் சீனாவில் குடிசை தொழிலாய் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் செய்வதும், செல்போன்கள் செய்வதுமாய் இருக்கிறார்கள்.
அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து ஆடைகள், உணவு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மடிக்கணினி முதற்கொண்டு அனைத்து எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், அழகு பொருட்கள், அனைத்தும் சீனா தயாரிப்புகள் என்பது தான் நிதர்சனம்.
இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் அல்லது இந்திய தயாரிப்புகள் என்னவென்று பார்த்தால் பெரிய கேள்விகுறி?
கொஞ்சம் உணவு பொருட்கள், கொஞ்சம் ஆடைகள் இதை தாண்டி உலக அரங்கில் இந்தியாவின் தயாரிப்புகள் என்னென்ன?
உலகநாடுகள் பலவற்றில், சீன பொருட்களுக்கென்று பல பெரிய பெரிய அங்காடிகளை திறந்திருக்கிறார்கள். இன்று இந்தியாவில் கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் சீன தயாரிப்புகள்.
அது கைபேசியாக இருந்தாலும் சரி, குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள், வீட்டு உபயோக பொருட்கள், பட்டாசு முதற்கொண்டு அனைத்தும் சீன தயாரிப்புகளாய் தான் இன்று இந்தியாவில் வலம் வருகிறது.
இந்தியாவின் அடிப்படை விவசாயத்தை செய்யவோ, அதை ஊக்குவிக்கவோ இந்த தேசமும், ஆட்சியாளர்களும் தாயாராக இல்லை. உணவுக்கும் கூட நாம் இனி அடுத்தவன் கையை ஏந்த வேண்டிய காலம் சீக்கிரமே வரும்.
தொழில்களை,விவசாயத்தை ஊக்குவிக்க ஆட்சியாளர்கள் முயல்வதற்கு பதிலாக, சிறு விவசாயிகள் எல்லாம் விவசாயம் செய்ய முடியவில்லை என்றால், அமைதியாக வேறு வேலைகள் பார்த்து விட்டு போங்கள் என்று சொல்லும், ஒரு ரோபோ பிரதமரை தான் நாம் வைத்திருக்கிறோம்,மிகப்பெரிய பொருளாதார மேதை என்று பெருமை பீத்திக் கொண்டு.
உலக அரங்கில், சீன ராணுவம் மிகவும் வலிமை வாய்ந்த ராணுவம். ராணுவ தளவாடங்கள், அனைத்திலும் உலகில் எந்த நாட்டோடும் போட்டி போட்டு கொண்டு நிற்கிறார்கள். அனைத்தும் சொந்த தயாரிப்புகள்.
விண்வெளி ஆராய்ச்சியா, ராக்கெட் தயாரிப்பா, செயற்கை கோள்களா, ஏவுகணைகளா எதுவாக இருந்தாலும் அவர்களே சொந்தமாக தயாரிக்கிறார்கள்.
அமெரிக்கர்கள், ரஷ்யர்களுக்கு போட்டியாக, இன்னும் பல இடங்களில் அவர்களை முந்திக் கொண்டு நிற்கிறார்கள்.
சமீபத்தில் செய்தி தாள் ஒன்றில் படித்தேன். குறி பார்த்து தாக்கும் அதி வேக ஏவுகணைகள் பலவற்றை சீனர்கள் தயாரித்து இருக்கிறார்கள்.
இதுவரை அமெரிக்கர்கள் வைத்திருந்த அதிவேக ஏவுகணைகளின் வேகத்தை விட,சீனர்களின் தயாரிப்பு பல மடங்கு என்று, அமெரிக்கர்களே கவலைப்பட்டதாய், செய்திகளில் படித்தேன்.
இந்தியாவின் அனைத்து விண்வெளி ஆராய்ச்சி,ஏவுகணை, அணு தொழில் நுட்பம் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்கியதாகவோ, அல்லது கூட்டு முயற்சியாக தான் இன்று வரை இருக்கிறதேயன்றி, சீனாவை போல தன்னிச்சையாக இயங்க கூடியதாக இல்லை.
உலகின் அனைத்து தயாரிப்புகளும் இன்று சீனாவில் தான் தயாராகிறது என்ற அளவில் சீனா இருக்கிறது.
உலக வர்த்தகத்துக்கு, ஆங்கிலம் மிகவும் முக்கியம் என்று உணர்ந்த சீனர்கள் இன்று அதி வேகமாக ஆங்கிலத்தை விரும்பி படிக்கிறார்கள்.
கடந்த ஆண்டுகளில், சீனாவில் அதிக அளவில் விற்ற புத்தங்களின் பட்டியலில், ஆங்கில டிக்சனரி தான் முதலிடம் இருப்பதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ஆங்கிலத்தை தீவிரமாக படித்து வருகிறார்கள்.
இந்திய தாயாரிப்புகள் எதுவும் உலக சந்தையில் இல்லாதிருக்க,அப்படி ஒரு உற்பத்தி வருமானம் வராமல், வெளிநாடுகளின் மென்பொருள் துறையை மட்டுமே நம்பிக் கொண்டும்,பொருட்களின் உற்பத்திக்கு பதிலாக, அந்நிய முதலீடுகளை நேரடியாக இந்தியாவில் வரவைத்துக் கொண்டு,இதோ பார் நாங்கள் வளர்கிறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்றால், கூடிய விரைவில் நம் பொருளாதாரம் சிதைந்து போகும். சீனாவை போல ஒரு வலுவான பொருளாதரத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நாம் பொருட்களை தயாரிக்க வேண்டும்.
உலக சந்தையில் இந்திய பொருட்கள் விலை போக வேண்டும்.
சீனாவில் மின்தட்டுப்பாடு இல்லை. தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் தயாரிக்கிறார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் இயற்கை மற்றும் சூரிய மின்சாரம் மூலம் நாட்டின் மொத்த மின்சார தேவையில் முப்பது சதவிகிதத்தை எட்டிபிடிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள்.
இன்று வரை அறுபது விழுக்காடு அனல் மற்றும் புனல் மின்சாரம் தான். உலக நாடுகள் எல்லாம் இயற்கை மின்சாரம் என்று சிந்திக்கும் போது, இந்தியா மட்டும் அணு மின்சாரம் தான் சிறந்தது என்று இறுமாப்போடு திரிகிறது.இத்தனைக்கும் இந்திய அணு உலைகள் இந்தியாவின் சொந்த தயாரிப்பு இல்லை. அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விலைக்கு வாங்கப்படுகிறது.
சொந்தமாக அணு உலைகளை தயாரித்தாலும்,கூட மாற்று மின்சாரத்தில் அதிக அக்கறை எடுக்கிறார்கள் சீனர்கள்.
நடப்பு ஆண்டு கணக்கின் படி,இந்தியாவில் இன்னும் நாற்பது விழுக்காடு கிராமங்களுக்கு மின்சாரம் போய் சேரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சீனா போன்ற சர்வாதிகார(கிட்டத்தட்ட) நாட்டில் மக்கள் நலன் சார்ந்து, மக்களுக்கு எது நன்மை என்று சிந்தித்து மக்களுக்காக செயல்படுகிறார்கள்.ஆனால் ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொண்டே,மக்கள் விரோத நடவடிக்கைகளில், மக்கள் விரும்பாத செயல்களை, திட்டங்களை மக்களிடம் புகுத்துவது தான் இந்தியாவின் அழகே!
மிகப்பெரிய அளவில் ஒலிம்பிக் போட்டிகளை, சீனாவில் சில ஆண்டகளுக்கு முன்பு நடத்தினார்கள். உலக நாடுகள் பலவும் வியந்து போகும் அளவுக்கு, மிக நேர்த்தியாக நடத்திக் காட்டினார்கள். போட்டி நடத்தியதோடு மட்டுமல்ல, உலக அரங்கில் அதிக பதக்கங்களை வென்றும் காட்டினார்கள் சீனர்கள். ஆனால் ஒரு தங்க பதக்கம் வாங்கவே இந்தியா முக்கு முக்கென்று முக்குகிறது.
இத்தனைக்கும் மக்கள் தொகையில் சீனாவோடு போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறோம். ஆனால் விளையாட்டில் தங்கம் வாங்குவதற்கு பதிலாக, நகை கடையில் காசு கொடுத்து வாங்கினால் தான் உண்டு என்னும் அவல நிலை தான் இன்னும் இந்தியாவில்.
காரணம் இந்தியாவில் எந்த விளையாட்டுகளையும் ஊக்குவிப்பதில்லை, பணம் செலவு செய்வதில்லை, கிரிக்கெட் என்னும் வீணா போன விளையாட்டை தவிர.
கிரிக்கெட் விளையாண்டால் மட்டும் தான், இந்தியாவில் தினம் தோறும் கோடீஸ்வரன், மற்ற விளையாட்டு வீரர்களை எல்லாம் எவரும் கண்டு கொள்ள கூட தயாராக இல்லை. எப்படி விளங்கும் இந்த தேசம்?
காமன்வெல்த் விளையாட்டு என்ற பெயரில் உலக அரங்கில் இந்தியா கேவலப்பட்டு ,அசிங்கப்பட்டு நின்றதை போன்ற சொதப்பல் வேலைகளை, ஒலிம்பிக் விளையாட்டு நடத்தும் போது சீனர்கள் செய்யவில்லை.
வெள்கைக்காரன் கொடுத்த காசையே அவனுக்கு தெரியாம ஆட்டைய போடுற திருட்டு பயலுகளை வச்சுக்கிட்டு இந்தியா எப்படி வளரும்?
காமன்வெல்த் புகழ் கல்மாடி, எந்த சிக்கலும் இன்றி சந்தோசமா சுத்திகிட்டு இருக்கின்றார்.
ராணுவ வீரர்களுக்கு வீடுகள் வாங்கியதில் ஊழல், உடைகள் வாங்கியதில் ஊழல், ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் ஊழல், ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல், சவப்பெட்டி வாங்கியதில் ஊழல், நிலக்கரி வாங்கியதில் ஊழல், அணு உலையில் ஊழல், அலைக்கற்றையில் ஊழல், விளையாட்டு ஊழல், கால்நடை தீவன ஊழல், மருந்து வாங்கியதில் ஊழல் இப்படி ஊழல் இல்லாத எந்த துறையும் இந்தியாவில் இல்லை என்று நாம் ஊழல் குறித்து காலம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கும் அளவுக்கு ஊழல்.
கடந்த வாரம், சீனாவின் முந்தைய ஆட்சியின், போக்குவரத்து அமைச்சர் ஒருவருக்கு, மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள். இத்தனைக்கும் சீனாவின் போக்குவரத்தில் அதிக மாற்றங்கள் கொண்டு வந்த,அதிவேக ரயில்கள் வர காரணமாய் இருந்தவர்.
அவருடைய இருபது ஆண்டு கால அரசியலில், இருபது கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பதாக கண்டறிந்து இருக்கிறார்கள்.இருபது கோடி ஊழலுக்காக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு நிற்கிறார்.அந்த அளவுக்கு கடுமையான சட்டங்களும், தண்டனைகளும்.
இன்னொரு முக்கிய செய்தி என்னவென்றால் குற்றம் நிரூபிக்கப்பட்டதும், அவர் சார்ந்த கட்சியே, அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். நடக்குமா இந்தியாவில்?
இருபது வருடத்திற்கு மேலாக, டான்சி நிலம் மற்றும் அதிக பொருள் சேர்ந்த வழக்கு ஜெயலலிதாவின் பெயரில். ஆனால் இந்த வழக்கு இன்னும் ஒரு முப்பது ஆண்டுகள் போனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.
கருணாநிதி குடும்ப புகழ் அலைக்கற்றை ஊழல், முடிய இன்னும் ஒரு இருபது ஆண்டுகள் ஆகலாம். குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி மாநிலங்களவை உறுப்பினர். இதெல்லாம் விளங்கவா?
சீனா வளர்ச்சியில் தொட முடியாத உயரத்தை தொட்டுக்கொண்டே இருக்கட்டும்.
நாமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான், சீனாவை விட நாங்கள் வளர்ந்து விட்டோம், நாங்க தான் தெற்காசிய பிராந்தியத்தில் வல்லரசு என்று.
முதலில் சீனாவில் இருப்பதை போன்ற ஒரு மாதிரி நகரத்தை,
இந்தியாவில் உருவாக்கி காட்டுங்கள். பிறகு பேசலாம் யார் வல்லரசு என்று.
சீனாவில் குறைகளே இல்லையா? குறைகள் இருக்கின்றன. ஆனால் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டிய, அடிப்படை வசதிகளை எல்லாம் தரமாக செய்து கொடுத்து இருக்கிறார்கள்.
இந்தியாவின் அடிப்படை சாலைகள்,சுத்தமான குடி தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றவை இன்னும் சாதாரண மக்களுக்கு கூட முழுமையாய் போய் சேரவில்லை.
இதை எல்லாம் செய்த பிறகு வல்லரசு ஆகுங்கள், சீனாவோடு போட்டி போடுங்கள். அதுவரை மக்கள் தொகையில் வேண்டுமானால் இந்தியா, சீனாவோடு போட்டி போட்டு கொள்ளட்டும்:)

கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.!

கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரசிய வரலாறு.!கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ் தான். அடர்ந்து வளர்ந்த வெள்ளை தாடி, வெள்ளை பார்டர் வைத்த சிகப்பு நிற வெல்வெட் அங்கி அணிந்த சிரித்த முகம், இவற்றோடு முதுமையைப் பிரதிபலிக்கும் வசீகரமான வரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பற்றிய சுவாரசியமான தகவல்களை பார்க்கலாம்.!

ரோம் சாம்ராஜ்யத்தின் பதாரியா பகுதியில் லைசியா துறைமுகத்தில் பிறந்தவர் நிகோலாஸ். இளம் வயதில் பாலஸ்தீனத்துக்கும் எகிப்துக்கும் பயணம் மேற்கொண்டார். மீண்டும் லைசியா திரும்பிய நிகோலாஸ், கிறிஸ்தவ பிஷப் பதவியை ஏற்றார்.
ரோம் நகர பேரரசன் டயோக்ளீஸ் காலத்தில் கிறிஸ்தவர்கள் வேட்டையாடப்பட்டபோது, பிஷப் நிக்கோலாஸும் சிறையில் தள்ளப்பட்டார். ஆனால், கால மாற்றத்தால் பேரரசர் கான்ஸ்டான்டின் காலத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இறந்த பின்னர் அவரது சடலம் மைரா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது தயாள குணம் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.

மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர். அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது.

டச்சு யாத்திரிகள் மூலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் அவரது புகழ் பரவியது. செயின்ட் நிகோலாஸ் என்பது டச்சு மொழியில் சின்டர்க்ளாஸ் என்று மருவியது. பின்னர் ஆங்கிலம் பேசும் மக்கள் அவரை சான்டா கிளாஸ் என அன்புடன் அழைத்தனர்.

1822ல் கிளமென்ட் மூர் என்பவர் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதினார். அதில் கிறிஸ்துமஸ் தாத்தாவைப் பற்றி வர்ணித்திருந்தார். அது பத்திரிகைகளில் வெளியாக மிகவும் பிரபலமடைந்தது. மூர் எழுதிய ஜிங்கிள் பெல் ஜிங்கிள் பெல் என ஆரம்பிக்கும் தன் கவிதையில் நிக்கொலஸ் -ஐ கதாநாயகனாக வடிவமைத்தமையே நிக்கொலஸின் புகழ் அமெரிக்கா எங்கும் பரவ மூல காரணமாயிற்று.

சாண்டா கிளாஸின் உருவம் ஒரு வேலையாளை மாதிரியாகக் கொண்டு வரையப்பட்டதாம். அந்த் வேலையாளின் அழகிய சிவந்த கன்னங்கள், பழுப்பு நிறத் தாடி, சிறிய வாய், பெருத்த தொப்பை, சிவப்பு நிற அழகிய மேலாடை, பனிக்கால தொப்பி, தோளிலே ஒரு மூட்டை - இவையெல்லாம் ஒன்று திரண்ட உருவம் தான் நாம் பார்த்து மகிழும் சாண்டா கிளாஸ்.

புனிதர் நிகோலாஸ் காலத்தில் பிஷப்புகள் அணிந்திருந்த சிவப்பு - வெள்ளை அங்கியே கிறிஸ்துமஸ் தாத்தாவின் உடையாகிவிட்டது. அப்போது முதல் உலகம் முழுவதும் அன்பின் திருவுருவமாக கிறிஸ்துமஸ் தாத்தா உலா வருகிறார்.

தொகுப்பு  :  அ .தையுபா அஜ்மல்.

Wednesday 20 December 2017

Certified Automation Professionals Certification (Part-1)

Dear Future Certified Automation  Professionals,
I would like to share the CAP Exam notes receive from one of my friend Mr.Nottam Uwaise (Pallapatti ,Tamilnadu) working as Instrument Commissioning Engineer for Luberef Expansion Project. He followed and prepared for the notes during his Examination. We hope this  notes will  be useful notes for your Examination !! 
Please go to the web link as below..


2) CAP exam content, preparation for test, final result
The CAP exam is offered either as a paper-based or computer-based format. The paper-based test is offered only on special occasions (e.g., after CAP review courses offered by ISA or after ISA Automation Week). Electronic testing is offered through test centers worldwide. The CAP exam consists of 175 multiple choice questions covering seven different domains as described in the CAP Body of Knowledge to be answered in four hours. Pacing yourself is the key to clearing the exam. If you are unable to solve a question, you can mark it and revert back to it later. Plan your time so as to answer at least 50 questions an hour and keep the last half hour to ponder any questions you had marked.
Here is a personal analysis on the exam content, which will help you better prepare your study plan.
Nature of questions
a. 85-90% of the questions were from “A Guide to the Automation Body of Knowledge”
b. 5-10% were related to NEC, NFPA, and ISA standards
c. 5% were randomly selected
Difficulty level (1 being least and 10 being most)
a. 30% were in between 1-4
b. 50% were in between 5-8
c. 10% were in between 9-10
Additional notes
a. What are standard documents in a project life cycle (URS, FDS, DDS, and UTPs)? What information does each one of these cover?
b. Practice questions to calculate project life-cycle cost and comparison of difference projects with different life-cycle costs.
ISA does not share any information about scores and marking criteria. At the end of the exam, you will be notified if you have passed or need to retake it.
CAP reference material
There are numerous CAP resources available at ISA’s website (www.isa.org/link/cap_study). Some of the reference material includes:
·        Certified Automation Professional Study Guide, Second Edition: The Study Guide contains a list of the CAP domains and tasks, 75 review questions, and answers complete with justifications. References that were used for each study guide question are also provided.

·        A Guide to the Automation Body of Knowledge, Second Edition: Edited by Vernon L. Trevathan, father of the CAP program, with contributions from more than 35 leading experts. This book defines the most important automation concepts and processes, while also describing the technical skills professionals may require for implementation in today’s industrial environment.

·        CAP Learning System: This tool includes a seven module printed textbook and 500 online sample questions. Online sample questions and answers explained with reasoning, help to carve your study plan and reinforce your knowledge base with a practice test.

·        CAP Exam Review Course (EC00): This is a three-day instructor-led course offered at different locations throughout the U.S. It provides a thorough review to areas included in the CAP Body of Knowledge like field devices, control and simulation, alarm management best practices, safety instrumented systems, maintenance management, workflow structures, and project management. After this review course, ISA offers the CAP test in paper and pencil format without any fee.

·        CAP Online Exam Review Course (EC00E): ISA’s CyberU online instructor-assisted training course utilizes pre-recorded training modules, additional text materials, online evaluations, and e-mail discussions. Students will have access via e-mail to an instructor. This course runs for nine weeks. The course includes a copy of the CAP Learning System.

Sample questions
Sample questions are a must before attempting the actual exam. The sample questions will help you refine your study plan and focus on areas that need to be studied in detail. When your preparation is complete, you can revisit them to ensure your readiness for the exam. References for sample questions:
·        CAP Learning System comes with 500 online sample questions with reasoning for correct answers.
·        InTech publishes one CAP sample question in every issue. They are available online at www.isa.org/link/certification_main.

Getting a CAP Champion
CAP Champions are your personal guides to finding your way to success. These individuals have successfully passed their CAP and will assist you in refining your study plan, selecting study material that best fits your needs and share their own personal experiences. ISA maintains a list of active CAPs, and you can easily locate someone in your area at www.isa.org/link/CAP_people.
CAP products and renewal
Within 30 days of taking and passing your exam, you will receive a packet from ISA containing:
·        CAP certificate signed by the ISA president
·        CAP badge you can stick to your shirt
·        CAP pocket ID
·        CAP sticker for your safety helmet
If for some reason you are unable to pass your test, you can sit for a retest after 30 days with a fee of $170. You can take it twice within a nine-month eligibility period.
CAP certifications are valid for three years. Within four months of your certification expiration, you need to submit an application for renewal. You will be required to earn 135 Professional Development Hours (PDH). One year of relevant experience worth 30 PDHs, so three years of experience will gain you 90 PDHs. Remaining 45 PDHs can be earned using professional trainings, ISA web seminars, and courses.
Being CAP helped me grow more visible among my peers and enhanced my reach to new job opportunities. My professional networking has increased, and I am getting more invitations and views over LinkedIn profile. But the best part throughout the journey was rediscovering my passion in automation. Most of my previous experiences and exposures were limited to process automation, but now I have discovered others domains of automation like batch processing, MES, and SIS design. Looking ahead is fun now!

ABOUT THE AUTHOR
Image may contain: 1 person, sitting and indoor

Mr. Nottam Uwasie is an ISA Certified Automation Professional working at Free Lancer  Automation & Instrument  application engineer.


 Thanks to Mr. Nottam Uwaise.