Friday 1 September 2017

உ .பி யில் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை !!ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 290 பேர் இறந்ததாக தகவல்..

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.
அதனைப் பற்றிய எந்த தயக்கமும் இன்றி சுதந்திர தினக் கொண்டாட்டத்தினை “வளர்ச்சி” மந்திரத்தினை ஓதி நிகழ்த்தியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி அரசு.
5 நாளில் 60 குழந்தைகள் இறப்பு குழந்தைகளின் மரணம் மூளைச் சிதைவினால் நிகழ்ந்ததென்றும், ஊட்டச்சத்து குறைவினால் நிகழ்ந்ததென்றும், விபத்தென்றும் பல்வேறு பொய்களை சொல்லி, நெஞ்சு நிமிர்த்தி சுதந்திர தின உரையை நிகழ்த்தி முடித்திருக்கிறார்கள் மோடி, யோகி மற்றும் பாஜகவினர்.
தனியார் நிறுவனத்திடம் ஆக்சிஜன் சப்ளை பெற்று வந்த கோரக்பூர் அரசு மருத்துவமனையில், பணம் கட்டாத காரணத்தினால் ஆக்சிஜன் வழங்குவதை நிறுத்தியிருக்கிறது அந்த தனியார் நிறுவனம். இதனால் 63 குழந்தைகள் பலியாக்கப்பட்டிருக்கின்றன.
இங்கு இந்த மாதம் மட்டும் 290 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் 213 குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவிலும் 77 குழந்தைகள் மூளைக்காய்சல் சிகிச்சை பிரிவிலும் இறந்தன. கடந்த ஜனவரி முதல் இங்கு 1,250 குழந்தைகள் இறந்துள்ளன. பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஆளான குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இங்கு கொண்டு வரப்படுகின்றன. முன்னதாகவே கொண்டுவரப்பட்டால் பல குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

இது என் நண்பன் ஒரு விற்பனை பிரதிநிதியின் பதிவு!!
என்னால இன்னைக்கு வேற எந்த பதிவ பற்றியும் சிந்திக்க முடியல. ஒன்னு ரெண்டு இல்ல மொத்தம் 63 குழந்தைங்க செத்து போய் இருக்காங்க. முதலில் ஆக்சிஜன் சப்ளை செய்யும் கம்பெனிக்கு 64 லட்சம் பணம் பட்டுவாடா செய்யவில்லை. அதனால் அந்த ஆக்சிஜன் சப்ளை செய்யும் நிறுவனம் சப்ளையை நிறுத்தி விட்டது என்கிறார்கள்.
ஆனால் இப்பொழுது மூளை பாதிப்பால் 63 குழந்தைகள் இறந்துவிட்டதாக செய்திகள் கசிகிறது. நிற்க.
நான் 10ஆண்டுகள். Industrial and Medical rep ஆகவும் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்தவன், செய்கிறவன் என்கிற முறையில் சொல்கிறேன்.
1. முதலில் ஆக்சிஜன் சப்ளை என்பது இரண்டு முறைகளில் செய்வோம். ஒன்று 6m3 or 10m3 அளவுள்ள சிலிண்டர்களில். மற்றது பெரிய 1000 gallons அளவுகளுக்கு மேலுள்ள stationary tanker களில்.
2. இதனை பெரிய மருத்துவமனைக்கு நிச்சயமாக டேன்கர்களில் தான் சப்ளை செய்வோம். அந்த கேஸ் liquified நிலையில் இருக்கும். அதை வாயுவாக்க தேவையான evaporator பொருத்தி இருப்பதால் அதை பாதுகாக்க கேஸின் அளவை monitor சேய்யும் கருவியும் அதில் பொருத்தப்பட்டே இருக்கும். ஆக oxygen இருப்பை அது automatic ஆகவே தெரியப்படுத்தும்.
3. என்ன தான் payment delay ஆனாலும் மருத்துவமனை போன்ற முக்கியமான இடங்களுக்கு சப்ளை நிறுத்தப்படாது. இது ஒவ்வொரு medical and industrial gas நிறுவனங்களின் policy ஆகும்.
4. ஆக்சிஜன் தான் industrial & medical gas வகைகளிலேயே மிகவும் விலை குறைவான ஒன்றாகும். இதற்கு காற்றுதான் மூலப் பொருள். 6m3 அளவுள்ள oxygen cylinder அரபு நாடுகளிலேயே இந்திய மதிப்புக்கு 180 ரூபாய் தான். எனில் இந்தியாவில் இதன் மதிப்பும் இதே அளவோ அல்லது சற்று அதிகமாகவோ இருக்கும். அதனால் 64 லட்சங்கள் oxygen supply க்கு பாக்கி என்பது நம்பும் படியாக இல்லை.
5.காலையில் 30 குழந்தைகள் ஆக்சிஜன் சப்ளையால் இறந்து விட்டனர் என்று கூறி விட்டு, மாலை முதல் 63 குழந்தைகள் மூலை பாதிப்பால் இறந்துவிட்டனர் என்று சொல்வது something fishy.
6. அதைவிட தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 2 கோடி compensation to family of baby victims என்பது நரநரவென உறுத்துகிறது.
7. 64 லட்சம் இல்லாத அரசிடம் 63*2 கோடி 126 கோடிகள் எப்படி உடனடியாக?
8. அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான மூளை பாதிப்பு, அதுவும் அனைவருமே குழந்தைகள், எப்படி இது சாத்தியம்..? It may never happened anywhere in the world!
9. ஏதேனும் பன்னாட்டு மருந்து கம்பெனியின் சோதனை முயற்சியா? அதற்காக அந்த பிஞ்சுகள் பலியாக்கப்பட்டு ஆளுக்கு 2 கோடிகள் தூக்கி பிச்சையாக வீசப்படுகிறதா?
10. இந்த சம்பவத்தையும், இதற்கு காரணமான அம்மாநில அரசையும் உச்சநீதி மன்றம் தானாக முன்வந்து கமிசன் அமைத்து விசாரிக்குமா..?
இன்று உ.பி..! நாளை  தமிழ் நாடா ?
சமூகம் சிந்திக்க வேண்டிய அவசர காலமிது!
அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்த்தால், பணமில்லாத ஏழைகளின் நிலை என்னவாகும் என்பதை இந்த படுகொலை சம்பவம் நமக்கு முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது.
மூச்சுக்கு முன்னூறு வரி போடும் இந்த அரசாங்கம், ஏழை மக்களுக்கு நல்ல மருத்துவத்தினை அளிக்க மறுக்கிறது. அப்படியென்றால் யாருக்கானது இந்த வளர்ச்சி முழக்கங்கள். யாருக்கானது உங்கள் டிஜிட்டல் இந்தியா?
மாடுகளுக்கு ஆம்புலன்ஸ், ஆதார் என்று மாடுகளைப் பற்றியே பேசிக் கொண்டு, அதைப் பயன்படுத்தி மதவெறியை வளர்க்கும் அரசு, பிஞ்சுக் குழந்தைகளை எந்த பராமரிப்புமின்றி பலி கொடுத்திருக்கிறது.
உத்திரப் பிரதேசத்தின் அரசு மருத்துவமனைகளில் ஏழைகளின் மரணம் என்பது சர்வசாதாரண ஒன்றாக விவாதங்களே இன்றி தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. கல்வியையும், சுகாதாரத்தையு முறையாக வழங்குவதே ஒரு அரசின் முதல் கடமை.
அதனை சரியாக செய்யாமல், மதத்துவேசத்தில் காலத்தினை கழித்துக் கொண்டிருக்கும் உத்திரப்பிரதேசத்தின் பாஜக-யோகி ஆதித்யநாத் அரசு இந்த படுகொலை சம்பவத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
அரசு மருத்துவமனைகளின் முழுமையான பொறுப்பினை அரசு ஏற்று, அவற்றுக்கு முழு அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து மக்களுக்கும் சாதி, மத, வர்க்க வேறுபாடின்றி சமமான மருத்துவ வசதி கிடைக்குமாறு செய்ய வேண்டும். இதற்கு அரசு மருத்துவமனைகளின் பிரிவுகள் தனியாருக்கு தாரை வார்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.
உலக வர்த்தகக் கழகத்தில் (WTO) அரசு மருத்துவமனைகளை தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்க அடிமை சாசனம் எழுதிக் கொண்டிருக்கிறது இந்திய அரசு. இது நிறுத்தப்பட வேண்டும். 

No comments:

Post a Comment