Friday 21 July 2017

‘குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்’ சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Image result for குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக ராம் நாத் கோவிந் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜூலை 24-ம் தேதி பதவி ஏற்றார். இதனால் புதிய குடியரசுத் தலைவர் என்ன சலுகைகள் எல்லாம் பெறுவார், முன்னால் குடியரசு தலைவர் பிரனாப் முக்கர்ஜி என்ன சலுகைகள் எல்லாம் பெற்றர் என்று இங்குப் பார்ப்போம்.

இங்கு நாம் பட்டியலிடப்போகும் சலுகைகளை எல்லாம் பார்த்து வாயை பிளக்க வேண்டாம். அப்துல் கலாம் அவர்கள் குடியரசு தலைவர் பதவியில் 5 ஆண்டுகள் இருந்து வெளியேறிய பிறகு பல சலுகைகளைப் புதிய குடியரசு தலைவர்கள் பெற்று வருகின்றார்கள். அவற்றை இங்குப் பார்ப்போம்.

கோவிந்த் வியப்பூட்டும் பிளாக் மெர்சிடிஸ் பென்ஸ் S600 (W221) புல்மேன் கார்டு கார் பயன்படுத்த அளிக்கப்பட்டுள்ளது, இதில் புல்லட் ப்ரூப், துப்பாக்கிகள் போன்றவை உள்ளன. இவரது வாகன பட்டியலில் முன்னல் குடியரசு தலைவர் பிரனாப் முக்கர்ஜி பயன்படுத்திய கருப்பு மெர்சிடிஸ்-பென்ஸ் W140-ம் உண்டு.

இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்து ராஷ்டிரபதி பவனில் வசிக்க இருக்கும் வீட்டின் ஒரு வருட மிசாரக் கட்டணம் மட்டும் 6.7 கோடி ரூபாய்.

ராஷ்டிரபதி பவனில் இந்திய குடியரசு தலைவர் தங்க இருக்கும் வீட்டினை முறையாகக் கவனித்திகொள்ள 200 ஊழியர்கள். அது மட்டும் இல்லாமல் 5 செயலக ஊழியர்கள் உள்ளனர்.

தற்போது 3,00,000 ரூபாயாக உள்ள குடியரசு தலைவரின் மாத சம்பளம் விரைவில் 5,00,000 லட்சம் ரூபாயாக மாற்றப்பட இருக்கின்றது.

குடியரசு தலைவராக ஒருவர் பொறுப்பேற்ற உடன் அவரது வாழ்க்கை முறையே மாறிவிடும். இவருக்காகப் பிரத்யேக மருத்துவமனை வசதிகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், குதிரைகள் என ராஜ வாழ்க்கை கிடைக்கும்.

உலக நாடுகளினை ஒப்பிடும் போது இந்திய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந் வசிக்க இருக்கும் வீடு மிகப் பெரியதாகும். ஏன் இவ்வளவு பெரிய வீடு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரப்பிற்குக் கிடையாது.
330 ஏக்கர் நிலத்தில் 2,00,000 சதுர அடியில் 340 அறைகள் கொண்ட ஒற்றைக் கட்டிட வீடு. இதில் நூலகங்கள், உணவகங்கள் எனப் பல தரப்பட்ட வசதிகள் கிடைக்கும்.


ராம் நாத் கோவிந் அவர்கள் ராஷ்டிரபதி பவன் மட்டும் இல்லாமல் விடுமுறை தினங்களில் வசிக்க ஹைதராபாத் மற்றும் சிம்லாவில் ஓய்வு வீடுகள் உள்ளன. அது மட்டும் இல்லாமல் ஐந்து நட்சத்திர விடுதிகளிலும் இலவசமாக அரசின் செலவில் தங்க முடியும்.

இந்திய குடியரசு தலைவரும் அவரது மனைவியும் அரசின் செலவில் இலவசமாக உலகம் முழுவதும் எங்கு வேண்டும் என்றாலும் சென்று வரலாம்.

குடியரசுத் தலைவருக்குத் தான் தங்கி இருக்கும் அரண்மனையினை புதுப்பிக்க மற்றும் பராமரிப்புப் பணிகள் செய்ய 30 கோடி ரூபாய் அளிக்கப்படுகின்றது. இவரைச் சந்திக்க வரும் விருந்தினர்கள், வணிகக் கூட்டங்கள், வீட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குத் தனிப் பட்ஜெட்டும் உண்டு.

குடியரசு தலைவர்களுக்கு இந்தியாவின் மிக உயர்ந்து பாதுகாப்பான VR6/VR7 வகுப்புச் சேவைகள் அளிக்கப்படும். இவரது பாதுகாப்பிற்கு ராணுவத் துப்பாக்கி குண்டுகள், வெடி குண்டுகள் போன்றவற்றால் உயிற் சேதம் ஏதும் ஏற்படாத அளவிற்குப் பாதுகாப்புக் கவசம் அளிக்கப்படும்.

ஓய்வூதிய காலத்தில் தங்க வீடு, இரண்டு இலவச தரைவழி போன் மற்றும் ஒரு மொபைல் போன் வரம்பற்ற இணையதளச் சேவையுடன் வழங்கப்படும். இலவசமாக ரயில் மற்றும் விமானத்தில் பயணம் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் 205 லிட்டர் பெட்ரோல் இலவசம். சொந்தக் கார பயன்படுத்த வாகன ஓட்டுநர்களுக்கு அரசங்கம் சம்பளம் அ
ளிக்கும்.

No comments:

Post a Comment