Saturday 1 April 2017

இன்று முதல்இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிய அமல் படுத்தி இருக்கிறது !!!

Image result for கட்டாயம் தலைக்கவசம்இரு சக்கர வாகனங்களில் செல்கிற இரண்டு பேரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் , அதுவும் ISI தரசான்று உடையவையாக இருக்க வேண்டும் , அதை நிரூபிக்க தலைகவசம் வாங்கிய பில் எப்போதும் கைகளில் வாகன ஓட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்று பல அல்ப்ப தனமான நெருக்கடிகளை நீதின்றம் தீர்ப்பாக சொல்ல அதை தமிழக அரசு இன்று முதல் அமல் படுத்தி இருக்கிறது .
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கை தூண்களான இந்த நீதிமன்றகளின் போக்கு சமீபகாலமாக துர்நாற்றமடிக்கும் சாக்கடை கழிவுகளை போல நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டது . குறிப்பிட்ட வழக்கை விசாரிக்கிற தீர்ப்பு சொல்ல போகிற நீதி பதிகள் சர்வாதிகாரிகளாக மாறிவிட்டார்கள் .ஒரே வழக்கில் 100 சதவீதம் மாறுபட்ட தீர்ப்பை இரு வேறு நீதி பதிகள் சொல்கிற அவலட்சணமும் இந்த பாரதத்தில் தான் அரங்கேறுகிறது .சில நீதிபதிகளுக்கு கூட்டல் கழித்தல்களே தெரியவில்லை .
தெருவுக்கு இரண்டு டாஸ்மார்க் கடைகளை திறக்கும் அரசாங்கத்தை எதிர்த்து போடப்பட்ட அத்தனை வழக்குகளையும் ,இது அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளை சார்ந்தது என்று மனசாட்சி இல்லாமல் தள்ளுபடி செய்த நீதி மன்றம் இப்போது குடிகாரர்களை ஹெல்மெட் போட சொல்லுவது பெரிய வேக்காட்டு தனமானது .
இனிமேல் போக்குவரத்து காவலர்களுக்கு பக்கத்துக்கு ஹெல்மெட் கடைக்கும் பெரிய டீலிங் நடக்கும் , முக்கியமாக காவலர்கள் ராஜ வீட்டு கண்ணுகுட்டிகளாக ஹெல்மெட் போடாமலே வலம் வருவார்கள் . சட்டம் எல்லாம் சாமானியனுக்கு தானே .
விபத்துக்களை தவிர்க்க சாலைகளை ஒழுங்காக போட அரசாங்கத்தை வற்புறுத்தாத நீதிமன்றம் , சிக்னல் இல்லாத சாலைகளில் அதனை வைக்க அரசாங்கத்திற்கு உத்தரவு போட வக்கில்லாத நீதி மன்றம் , ரோடு போடுவதாக சொல்லி பகல் கொள்ளை அடிக்கும் கான்ட்ராக்டர் , ஆளும் கட்சி கவுன்சிலர்களை அடக்க துப்பில்லாத நீதிமன்றம் , பெருகிவரும் அரசு டாஸ்மார்க் களால் 70 சதவீத விபத்துக்கள் பச்சையாக தெரிந்தும் கண்களை பிடரியில் வைத்து கொண்டு நீதி மன்றம் இப்படி சாமானியனை பிழிந்து எடுப்பது சர்வாதிகாரத்தை காட்டுகிறது .
நீதிபதிகள் தங்களின் அடக்குமுறை கண்களை கழுவி விட்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்க்கிறேன் . 700 ரூபாய்க்கு விற்று கொண்டிருந்த ஹெல்மெட்டுக்கள் இன்று 3000 ரூபாய்க்கு விற்கிறது . இவர்களை அடக்க நீதிபதி தன் தீர்ப்பில் பல்லை கூட காட்டாதது வியப்பாக உள்ளது .

ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால் சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18 பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்விடவேண்டும்.
2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்நிற்கும்.
3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் லஞ்சம் கொடுக்காமல் வேலை முடியுமா?
4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்ஒருநாள் கூட ஓடாது.
5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.தடுக்கலாமே?
6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
7. Point to point Lss Express அடடா.கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /மொள்ளமாரித்தனம் !?!ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின் சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர் பலி பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர் பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...
கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...
இப்பொழுது சொல்லுங்கள் ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....
ஹெல்மெட் கட்டாயம் , சீட் பெல்ட் கட்டாயம் , லஞ்சம் கட்டாயம் என்று சொல்லுவதற்கு முன் தரமான சாலைகளும் கட்டாயம் என்று சொல்லி பாருங்கள் நீதி வான்களே ? விபத்துக்குள்ளாகி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு முதலுதவி கொடுக்க தரமான மருத்துவ உபகரணங்கள் , தரமான டாக்டர்கள் இருக்கிறார்களா ? என்று கட்டளை போடுங்கள் நீதி வான்களே ?
சாமானியனிடம் அபராதம் பிடுங்கி , அரசாங்கத்தின் பசியை அடக்க முயற்சித்து , ஹெல்மெட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் வருமானத்தை ஈட்டி கொடுத்தது மட்டுமல்லாமல் , போக்குவரத்து காவல்கள் பாக்கெட்டுகள் நிறைய நல்ல வழிவகை செய்த நீதிமன்றம் ,இனி விபத்துக்களில் தலையை தவிர கை கால்களை இழந்தால் அதை திருப்பி தரும் என்று நம்பலாமா ?
வளரும் இந்தியாவில் ஜனநாயக சக்திகள் சர்வாதிகார சக்திகளாக வளராமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை , நீதி துறையின் வாலை நறுக்க வேண்டும் . மோடி அரசாங்கம் அவசரகால நிலையாக கருதி முதலில் செய்ய வேண்டியது நீதித்துறை சீர்திருத்தம் தான் !!!!

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment