Tuesday 1 September 2015

சுக்கு காபி பற்றிய மருத்துவ பார்வை..

தேயிலை, காபி போன்ற பானங்களை அருந்துவது  நம் நாட்டின் பழக்கமல்ல. அவையெல்லாம் மேலை நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையே.  நம் நாட்டின் பெரும் பகுதிகள் வெப்பமிகுந்த பகுதியாக இருப்பதால், இங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காலையில் இஞ்சி, மல்லி, பனைவெல்லம் கலந்த பானமும், மாலையில் சுக்கு, மல்லி, மிளகு கலந்த மூலிகை குடிநீர் பானமும், இரவு வேளைகளில் கடுக்காய் கசாயமும் அருந்தி முதுமையிலும் இளமையாக வாழ்ந்து வந்தனர்.


சுக்கு காபியில் பால் சேர்க்கலாமா?


கிராமப்புறங்களில் சுக்கு காபி குடிப்பது வழக்கம். சுக்கு காபி என்றதும் பலர் சுக்குப் பொடியை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பார்கள். இன்னும் சிலர் தேயிலை, பாலுடன் சேர்த்து அருந்துவார்கள். இது சரியான முறையல்ல. சுக்கு காபி என்றால் அதனுடன் மிளகு, கொத்தமல்லி, ஏலக்காய் சேர்க்க வேண்டும். ஒரு மடங்கு மிளகு என்றால் அதைவிட 2 மடங்கு சுக்கு, 4 மடங்கு கொத்தமல்லி (தனியா), 10, 12 ஏலக்காய் சேர்த்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதில் நம் தேவைக்கேற்றார்போல ஒன்றிரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்து வடிகட்டி அருந்தலாம். இதில் பால் சேர்க்கக்கூடாது. இதுதான் சுக்கு காபி.
தினமும் பகல் வேளை உணவின்போது ஒரு ஸ்பூன் சுக்குப் பொடியுடன் கால் ஸ்பூன் நெய் விட்டு பிசைந்து சிறுவர் முதல் பெரியவர் வரை சாப்பிட்டு வந்தால் வயிற்றுக்கோளாறுகள் வராமல் இருக்கும் என்பதோடு முதுமையை தள்ளிப்போடலாம்.
தேரையர் என்ற சித்தர், தன் பாடலில் சொல்லியிருக்கிறார்... ‘சுக்கு வீட்டில் இருந்தால், சுகம் உடம்பில் இருக்கும்!’

சுக்கு காபி செய்முறை விளக்கம்

சுக்கு,மல்லி காபி (தேவையானவை)   
  •   சுக்கு - சிறு துண்டு
  •   மல்லி - 2ஸ்பூன் 
  •   மிளகு - சிறிதளவு 
  •  வெல்லம் / பனைவெல்லம் அல்லது கருப்பட்டி - தேவையான அளவு
  •   தண்ணிர் - தேவையான அளவு

செய்முறை:
  • முதலில் சுக்கையும், மிளகையும் வெயிலில் நன்கு காயப் போட்டு, பொடித்துக் கொள்ள வேண்டும்,
  • மல்லியை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வருத்துக்   கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு பாத்திரத்தில் நீர் உற்றி சுடானதும் அதில் பொடித்த சுக்கு,வறுத்த மல்லி ஆகியவற்றை போட வேண்டும்.
  • 10 -15 நிமிடம் நன்றாக வாசனை வரும் வரை
  • கொதிக்கவைத்து தேவையான வெல்லம் அல்லது பனை வெல்லம்   சேர்த்து  இறக்கினால் சுவையான சுக்கு,மல்லி காபி தயார்...
  • இதில் பால் சேர்த்தும் அருந்தலாம்

சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை,சுக்கின் மருத்துவபலன்கள் பற்றி சில துளிகள் அறிவோம்..!

இஞ்சி காய்ந்தால்சுக்குகாரம்மணம் நிறைந்த சுக்குஉடம்பில் சூட்டை ஏற்படுத்தும்அதே வேளையில் பசியைத் தூண்டுவதோடு இரைப்பை வாயுத் தொல்லையை போக்கக்கூடியது.

தலைவலிக்கு சுக்கை நீர் விட்டு அரைத்தோஉரசியோ (இழைத்துநெற்றியில் பூசினால்அடுத்த சில நிமிடங்களில் கைமேல் பலன் கிடைக்கும்தண்ணீருக்குப் பதிலாக பால் விட்டு அரைத்தும் பயன்படுத்தலாம்எந்த விதமான தலைவலி வந்தாலும் இந்த சுக்கை நெற்றியில் பற்று (பத்துபோட்டால் அடுத்த சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்வலி இருக்கும் இடங்களில் சுக்கை தேய்த்தால் இதமாக இருக்கும்வலி விலகியதும் எரிச்சலை ஏற்படுத்தும்அப்படியானால் தலைவலி சரியாயிற்று என்று அர்த்தம்உடனே ஒரு துணியால் நெற்றிப் பற்றை துடைத்தோகழுவியோ விடலாம்.

வயிற்றுப் பொருமல்வயிற்று வலிவிலாப்பகுதியில் ஏற்படும் குத்தல்குடைச்சல்புளித்த ஏப்பம்அஜீரணக்கோளாறுமார்பில் எரிச்சல்மூக்கடைப்புஜலதோஷம்காதில் குத்தல் வலிநாக்கு சுவையின்மை மற்றும் மூட்டுக்களில் வலி ஏற்படும் நேரங்களிலும் இந்த சுக்கு கைகொடுக்கும். 100 மில்லி கொதிக்கும் நீரில் 5 கிராம் சுக்குப்பொடியை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி கால் மணி நேரம் மூடி வைத்து எடுத்து தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும்இந்த சுக்கு கஷாயத்தை காலையில் குடித்தது போலவே மாலையிலும் குடிக்க வேண்டும்இப்படி 20 முதல் 40 நாட்கள் வரை செய்து வந்தால் மேலே சொன்ன பிரச்னைகள் எல்லாம் விலகும்சுக்குக் கஷாயத்துடன் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம்பனிக்காலங்களில் கிராம்புமிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம்.

சாப்பாடுதூக்கமின்மைஅதிக உடல் உழைப்பு போன்ற காரணங்களால் சிலருக்கு திடீரென வாய்வுப்பிடிப்பு ஏற்படும்இன்னும் சிலருக்கு நெஞ்சுப்பகுதியை உள்ளுக்குள் அழுத்துவது போன்ற உணர்வுபுளியேப்பம் ஏற்படும்அந்தச் சமயங்களில் அரை ஸ்பூன் சுக்குப் பொடியுடன்அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

வாரம் ஒருநாள் சுக்குப் பொடி சேர்த்த வத்தக்குழம்பு சாப்பிட்டு வந்தால் நோய்கள் இல்லாமல் வாழலாம்முக்கியமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுபோன்று உணவில் சுக்கை சேர்த்து வந்தால் கீல் வாத நோய்கள்மலச்சிக்கல்ஆஸ்துமா போன்றவை வராமல் காத்துக்கொள்ளலாம்.

சுக்கு காபிமருத்துவப் பயன்கள்:

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து,நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும்,வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலிமுற்றிலும் குணமாகும்.
2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும்.
3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தைஇவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர,
கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.
4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால்,வாயுத்தொல்லை நீங்கும்.
5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.
6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து,நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.
7. சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, ‘‘சுக்கு நீர்’’ காய்ச்சிக்குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.
8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து,மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்தியபோதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.
9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி,தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.
10. சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.
11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால்,தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.
12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாகஅரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்புநிலைபெறும்.
13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச்சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள்அழியும்.
14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.
15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்றுதின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம்முறியும்.
16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில்கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.
17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால்,வயிற்றுப்புண் ஆறும்.
18. சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்துகஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டுநாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.
19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத்தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.
20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலிதீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

எனது அனுபவம் !!

மழைக் காலத்தில் சளி, இருமல் பிரச்சினையால் அவதிப்படுவோர் உண்டு. நெஞ்சில் கபம் சேரச் சேர பிரச்சனை தீவிரமாகிறது. அலோபதி மாத்திரைகளால் தாற்காலிக நிவாரணம் கிடைக்கலாம்; ஆனால், இந்த மாத்திரைகள் சளியை உடலிலிருந்து வெளியேற்றாமல் இருப்பதால் பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கி தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதைக் குணப்படுத்த சிறந்த இயற்கை மருத்துவம் இந்த சுக்கு மல்லி காப்பியே... காபி, டீ, கொக்கோ போன்ற பானங்கள் இரைப்பையை பாதித்து சளிச்சவ்வை சீர்குலைத்து சீரணத்தைத் தடுக்கிறது. பல சமயங்களில் இதயத்தைக் கூட ஒழுங்கு தவறி துடிக்கச் செய்கின்றன.  இப்பானங்ளில் உள்ள சர்க்கரை உடலுக்கு சூட்டை அளிக்குமே தவிர, சத்துக்களைத் தருவதில்லை. ஆகவே இது போன்ற இயற்கை மூலிகை பானங்களை வாரத்தில் ஒன்றிரண்டு முறையாவது அருந்துவது உடல் நலத்திற்கு நலம் பயக்கும்
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment