Friday 2 January 2015

வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பற்றிய சிறப்பு தவகல்கள்...

1.  வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) யார்?
வெளிநாடு  வாழ் இந்தியர்கள் என்றால் இந்தியாவிற்க வெளியில் வாழும் இந்திய குடிமக்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் என்ற பொருள். 

2. இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியர்கள் யார்?
அயல்நாட்டு  பரிவர்த்தன மேலாண்மை சட்டம், 1999 (FEMA) வின் படி இந்தியாவில் வசிக்காதவர்கள் எல்லா நம் பிரிவு 2 (ஏ) வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆவார்கள். ஒரு மனிதனின் குடியுரிமை இனிமேற்கொண்டு குடியிருப்பு தகுதியை வைத்து தீர்மானித்தும் நிர்பந்தம் இல்லை என்ற முக்கியமான திருத்தத்தை  கொடுத்து ( FERA 1973 பின்பாக)

3. இந்திய வம்சாவளியினர் யார்? (PIO)
இந்திய  வம்சாவளியினர் என்றால் பாகிஸ்தான் அல்லது பங்களாதேஷ் நாட்டை தவிர பிற நாட்டில் வாழும் குடிமக்கள் ஆவர் இருப்பினும்
அ.  அவர் எந்த நேரத்திலும் கடவுச்சீட்டு வைத்திருக்க வேண்டும்.
ஆ. இந்திய அரசியலமைப்பின் படி அல்லது குடியுரிமை சட்டம், 1995 யின் படி அவர் அல்லது அவனது பெற்றோரில் யாரேனும் ஒருவர் அல்லது அவனது பெற்றோரின் தாய் அல்லது தந்தை இந்திய குடிமக்களாக இருந்திருக்க வேண்டும்.
இ.  இந்திய குடியினரின் கணவன் அல்லது மனைவியாக அவர்கள் இருக்க வேண்டும் அல்லது (அ) அல்லது (ஆ) வில் குறிப்பிட்டபடி இருக்க வேண்டும்.
      இந்திய  வம்சாவளியினர் இந்திய காப்புறுதி மூலம் பெறும் முதலீடுகளைப் போலவே இந்தியாவிற்கு வெளியில் வாழும் இந்தியர்களின் முதலீடுகளும் நடத்தப்படும். இரண்டுக்கும் ஒரே அங்கீகாரம் மற்றும் விலக்குகளும் தேவை. 

4.கடல்கடந்த கூட்டுக்குழு (OCB) என்றால் என்ன?
கடல் கடந்த கூட்டுக்குழு என்றால் குறைந்த இந்தியர்களால், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படும் ஒரு சங்கம், கூட்டு வணிகம், சமூகம் மற்றும் பிற கூட்டுக்குழு அமைப்பாகும். மேலும் OCB களால் அறுபது  சதவிகிதத்திற்கு மேல் பயனள்ள வட்டி விகிதம் கொண்ட கடல்கடந்த அறக்கட்டளையையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நடத்தப்படுவது ஆனால் திரும்பப் பெறமுடியாது.
      வணிக  கழக முதலீட்டுத் திட்டம்  W.E.F  நவம்பர் 29,2001 லிருந்து OCB க்கள் விலக்கப்பட்டுள்ளனர் W.E.F செப்டம்பர் 16, 2003 இன் படி வகுப்பு முதலீட்டாளர்கள் என்ற முறையில் OCB இனர் தள்ளி வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மேற்குறிப்பிட்ட தேதிகளுக்கு முன் காப்புறுதி செய்தவர்கள் அதனை அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதன்படி OCB இனர் சேமிப்பு கணக்கு ஒன்றை தொடங்கலாம் ஆனால் அது தற்போது உள்ள முதலீட்டை கணக்காக பொருள் தன்மை அற்றதாக ஆக்குவதற்காக மட்டுமே!

5. ஒரு NRI/PIO எங்கு சேமிப்பிடக்கணக்கை தொடங்க வேண்டும்?
ஒரு NRI/PIO சேமிப்பிட கணக்கை NSDL இல் உள்ள ஏதேனும் ஒரு சேமிப்பு ஒறுப்பினருடன் (DP) தொடங்கலாம். கணக்கை துவங்குவதற்கு DP யிடம் இருந்து பெறப்பட்ட படிவத்தில் NRI/PIO எந்த வகை தங்களுக்கு தேவை NRI  யை குடியிருப்பிளர் என்று ஒப்பீடு  செய்யவும் உள் வகை (தாய்நாட்டுக்கு திரும்புபவர் அல்லது தாய் நாட்டுக்கு திரும்பாதவார் என்பதை குறிப்பிட வேண்டும்.

6.  ஒரு NRI சேமிப்பிட கணக்கை தொடங்குவதற்கு இந்திய ரிசர்வு வங்கியின் (RBI) அனுமதியை பெற வேண்டுமா?
சேமிப்பிட கணக்கை தொடங்குவதற்கு RBI யின் அனுமதி தேவையில்லை இருப்பினும் சேமிப்பிட கணக்கில் வரும் வரவு செலவுகளுக்கு பொது அல்லது சிறப்பு அனுமதி நியமனம் செய்யப்பட்ட தகுதியுடைய வணிகரிடமிருந்து சூழ்நிலை காரணமாக எதிர்பார்க்கப்படுகிறது.
7.  பல்வேறு திட்டங்களின் மூலம் முதலீடு செய்ய விரும்பும் NRI/PIO எல்லா காப்புறுதிகளையும் ஒரே சேமிப்பிட கணக்கில் வைத்துக்கொள்ள இயலுமா?
முடியாது. வேளிநாட்டு நேரடி முதலீட்டுத் திட்டம் (FDI) “வணிக இணைப்பு கழக முதலீட்டுத் திட்டம் (PIS) மற்றும் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முடியாத “முதலீட்டுத் திட்டம்” ஆகிய திட்டங்களின் மூலம் முதலீடு செய்யும் முன்னிட்டு வாங்கப்பட்ட காப்புறுதிகள் தனித்தனியாக சேமிப்பிட கணக்கில் கொள்ள வேண்டும். PIS மூலம் முதலீடு செய்வது தயாகத்திற்கு திருப்பி அனுப்புதல் தாயகத்திற்கு திருப்பி அனுப்பமுடியாத முதலீடுகளை அல்லது அடிப்படையாக கொண்டு இருக்கும். FDI மூலம் முதலீடு தாயகத்திற்கு திருப்பி அனுப்புவதை அடிப்படையாக கொண்டு இருக்கும். 
 
8. ஒரு NRIஐ காப்புநிதிகளை பொருள் தன்மையற்றது ஆகவே அல்லது பொருள் தன்மை உடையதாக  ஆக்கவோ RBI யின் அனுமதியை பெற வேண்டுமா?
சிறப்பு அனுதி எதுவும் தேவையில்லை. சேமிப்பிட கணக்கில் காப்புநிதிகளை கொள்வது என்பதே மாறுதலுக்குட்பட்டது என்பதை குறிக்கிறது. ஆகவே அதற்கு அனுமதி தேவையில்லை இருப்பினும் NR தாயகம் திறப்பு அனுப்புதல் NR தாயகம் திருப்பி அனுப்ப முடியாத தகுதிகளை ஏற்கனவே பெற்ற கைப்பட எழுதி காப்புநிதி களை மட்டுமே அதற்கு தொடர்பான சேமிப்பு கணக்கில் பொருள்தன்மையற்றதாக ஆக்க முடியும்.

முடியாது !! ஒரு NRI தனித்தனி சேமிப்பிட கணக்கை தாயகம் திரும்பி அனுப்புதல் மற்றும் தாயகம் திரும்பி அனுப்ப முடியாத காப்புநிதிகளுக்கு தொடங்க வேண்டும்.

10.  இந்தியாவில் வாழும் ஒருவர் இந்தியாவை விட்டு வேறிடவாழ்வுடையவராக மாறும் தருணத்தில் அவன்/அவள் தங்களுடைய காப்புநிதிகளான குடியிருப் பாளரிலிருந்து புறங்குடியிருப்பாளராக தம் தகுதிகளை மாற்ற வேண்டுமா?
 FEMA பிரிவு 6 (5) இன்படி,NRI தான் இந்தியாவில் வாழ்ந்த போது கொண்ட காப்புநிதிகளை புறங் குடியிருப்பாளராக ஆன பின்பும் அவன்/அவள் தொடர்ந்து வைத்துக் கொள்ளலாம் ஆனால் தாயகத்திற்கு திருப்பி அனுப்ப முடியாத அடிப்படையின் கீழ் காப்புநிதிகளை வைத்துக் கொள்ளலாம்.

11.  NRI ஒருவர் இந்திய குடியிருப்பாளராக ஆகும் தருணத்தில் அவன்/ அவள் தன்னுடைய காப்புநிதிகளை புறங்குடியிருப்பாளரிலிருந்து இந்திய குடியிருப்பாளராக மாற்ற வேண்டுமா?
ஆம். வணிக இணைப்பு கழக முதலீட்டு திட்டத்தின் மூலம் காப்புறுதிச் சொத்துக்களை முதலீடு செய்த முதலீட்டாளர் அதற்கு காரணமாயிருந்த தகுதியுடைய நியமனம் செய்யப்பட்ட  வணிகர் கிளைக்கும், சேமிப்பிட கணக்கை தான் சேர்ந்து தொடங்கிய சேமிப்பு ஒறுப்பினருக்கும்  (DP) தெரிவிக்க வேண்டியது அவன் /அவள் அவர்களின் கடமையாகும். அதன் தொடர்ச்சியாக புதிய சேமிப்பிட கணக்கை குடியிருப்பாளர் நிலையிலிருந்து தொடங்க வேண்டும். NRI சேமிப்பிட கணக்கிலிருந்து குடியிருப்பாளர் கணக்கிற்கு காப்புநிதிகளை மாற்றிவிட்டு NRI சேமிப்பிட கணக்கை மூடி விட வேண்டும்.

12.  அயல்நாடு வாழ் இந்தியர் (NRI) பங்குகளிலும், கடனீட்டுப்பத்திரங்களிலும், பரஸ்பர நிதிகளிலும் முதலீடு செய்ய முடியுமா?
அயல்நாடு வாழ் இந்தியர்கள், பங்குகளிலும், இந்திய கம்பெனிகளின் பத்திரங்களிலும், பரஸ்பர நிதி அலதுகளிலும் நேரடியாக முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர் வணிகக் கழக முதலீடுகளான, பங்குகள், இந்தியக் கம்பெனிகளின் கடனீட்டுப் பத்திரங்களில் பங்குச் சந்தை வாயிலாக முதலீடு, போன்றவற்றிலும் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த வசதிகள் தாயகத்திற்கு திரும்பியவர்களுக்கும் திரும்பாதவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

13.  பொதுமக்களுக்காக வெளியிடப்படும் காப்புறுதிச் சொத்துக்களை அயல்நாடு வாழ் இந்தியர் வாங்க முடியுமா?  அதற்கு எத்தகைய அனுமதி/அங்கீகாரம் தேவை?
ஆம், அயல்நாடுவாழ் இந்தியர்களுக்கு பங்குகளை விற்கும் கம்பெனிகள், இந்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடமிருந்து சிறப்பு அனுமதி பெறவேண்டும். அதனால், அயல்நாடு வாழ் இந்தியர் தனிப்பட்ட முறையில் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை.

14. அயல்நாடு வாழ் இந்தியர்கள் தங்குளுடைய பங்குகளுக்கும் காப்புறுதிச் சொத்துக்களுக்கும் கிடைக்க வேண்டிய ஊக்கத்தொகை மற்றும் கிடைக்க வேண்டிய பலன்கள் ஆகியவற்றிற்காக அனுமதி பெறவேண்டுமா?
 இல்லை.

15.  வணிக இணைப்புக் முதலீட்டுத் திட்டம் என்றால் என்ன?
இந்தத்திட்டத்தின் கீழ், இந்தியப் பங்குச் சந்தைகள் மூலம், இந்தியக் கம்பெனிகளின் பங்குகள், கடனிட்டுப் பத்திரங்கள் உள்நாட்டுப் பரஸ்பர நிதி அலகுகள் ஆகியவற்றில் முதலீடு செய்ய அனுதிக்கப்பட்டுள்ளனர்.
தாயகம்  திரும்பிய மற்றும் திரும்பாத  அயல்நாடு வாழ் இந்தியர்கள் இருவருமே முதலீடு செய்யமுடியும். உள்நோக்கி பணம் அனுப்பும் முறையின் (Inward remittance) மூலமோ அயல்நாடு வாழ் இந்தியரின் என்.ஆர் இ./ எப்.சி.என்.ஆர் கணக்குகளில் பற்று வைப்பதன் மூலமோ அவர்கள் பணம் செலுத்தலாம்.  அதே முறையில் தாயகம் திரும்பாதவர்களும் பணம் செலுத்தலாம்.
பங்குவிற்பனைக்கு, செலுத்த வேண்டிய வரிகளை அவர்கள் செலுத்த வேண்டும்.

16.  வணிக இணைப்புக் கழகத்தில் விண்ணப்பிக்கும் முறை என்ன?
இந்தியாவிலிருக்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் தகுதிவாய்ந்த கிளையில், உரிய விண்ணப்பப் படிவத்தை நிரப்பிக் கொடுக்க வேண்டும். இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து சிறப்பு அனுமதி பெற வேண்டியதில்லை.

17.  தகுதி வாய்ந்த கிளை என்பது என்ன?
வணிக இணைப்புக் கழகத் திட்டத்தின் கீழ் அயல்நாடு வாழ் இந்தியார்களுக்கு சில கிளைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளித்துள்ளது. பொரிய வங்கிகளின் பிரதானக் கிளைகள்தான் அவை. ரிசர்வ் வங்கியிலிருந்து அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு விற்பனையாளர் கிளையின் மூலம் அயல்நாடு வாழ் இந்தியர் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

18.  ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடம் அயல்நாடு வாழ் இந்தியர் விண்ணப்பிக்கலாமா?
இல்லை. அயல்நாடுவாழ் இந்தியர் ஒரே ஒரு கிளையில் தான் விண்ணப்பிக்க முடியும். அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் தகுதிவாய்ந்த கிளையின் மூலமே தனது பரிவர்த்தனைகளைச் செய்துகொள்ள முடியும்.

19.  வணிக இணைப்பக் கழகத் திட்டத்தின்கீழ், தாயகம் திரும்பிய அல்லது திரும்பாத அயல்நாடு வாழ் இந்தியர் என்ற முறையில், இந்திய பங்குச் சந்தைகளின் மூலம், பங்குகளை மாற்றத்தக்க கடனீட்டுப் பத்திரங்களை வாங்கவோ விற்கவோ முடியுமா?
அயல்நாடு வாழ் இந்தியர் வணிக இணைப்பக் கழகத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தைகளின் மூலம் இந்திய கம்பெனிகளின் பங்குகளை, மாற்றத்தக்க கடனீட்டுப்பத்திரங்களை வாங்கவோ விற்கவோ முடியும்.
அது தொடர்பான விதிமுறைகள் கீழ் கொடுக்கப்படுகின்றன.
1. வணிக இணைப்புக் கழகத் திட்டத்தின் கீழ் பங்குச் சந்தைகளில் பங்குகள், பங்குச் சந்தைகளில் தான் விற்பப்பட முடியும். இந்தியாவில் வாழ்கின்றவர்களுக்கு அல்லது வாழாதவர்களுக்கோ இருந்தாலோ இந்திய ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும்.
2. இத்தகைய வர்த்தகங்கள், பங்குச் சந்தைகளின் பதிவு செய்யப்ட்ட தரகர்களின் மூலமே நடக்க வேண்டும்.
3. அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர் கிளையின் மூலம், வெளிநாடு வாழ் இந்தியர் தனது அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்து கொள்ளலாம்.
4. விலைக்கு வாங்கப் பங்குகளை அயல்நாடு வாழ் இந்தியர் பெற்றுக் கொள்கிறார் விற்ற பங்குகளை கொடுத்து விடுகிறார்.
5. இத்திட்டத்தின் கீழ், ஒரு கம்பெனியில் அயல்நாடு வாழ் இந்தியர் விலைக்கு வாங்கும் பங்குகளின் உச்சவரம்புகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி, செபி  அல்லது அதை போன்று அதிகாரம் படைத்த நிறுவனங்கள் வகுத்துள்ள விதிகளுக்கு அயல்நாடு வாழ் இந்தியர் கட்டுப்பட வேண்டும். பங்கு விற்பனைக்குரிய வரிகள் செலுத்தப்பட வேண்டும்.
ஒரு அயல்நாடு வாழ் இந்தியரோ அல்லது பி.ஐ.ஓ.வோ இந்தியக் கம்பெனிகளின் மூலதனத்தில்  5 சதவிகிதப் பங்குகளை மட்டுமே வாங்கமுடியும்.  எந்தவொரு கம்பெனியிலும் வெளிநாடுவாழ் இந்தியர் வாங்கும் எல்லா பங்ககளும், அந்தக் கம்பெனி மூலதனத்தில் 10 சதவிகிதத்தை தாண்டக்கூடாது.  (இந்த வரம்பு, கம்பெனியின் பொது நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றுவதன்மூலம் 24மூ வரை உயர்த்தப்பட முடியும்).

20. புறச் சந்தை வணிகத்தின் மூலம்,(இந்திய ரிசர்வ் வங்கியின் வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு நடக்கும் பரி வர்த்தனைகள்) அயல்நாடு வாழ் இந்தியர்ளால் பரிமாற்றம் செய்யப்படும் காப்புறுதி ஆவணங்களுக்கு எத்தகைய அனுமதியைப் பெற வேண்டும்?
புற வணிகப் பரிமாற்றங்களுக்கு பெறப்படவேண்டிய அனுமதி அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

21. பங்குகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் சேமிப்பிடப் பங்கேற்பாளருக்கு அளிக்கப்படும் குறிப்பாணைகளைச் செயல்படுத்த ரிசர்வ் வங்கியிடமிருந்து அனுமதி பெற வேண்டுமா?
வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்டத்தின்கீழ், தனிப்பட்ட அயல்நாடு வாழ் இந்தியர், ஒரு கம்பெனியின் 5 சதவிகிதப் பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது.  அதைக் கண்காணிக்க வேண்டியது அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளரின் பொறுப்பாகும்.  வணிக இணைப்புக் கழக முதலீட்டுத் திட்டத்தின் கீழ், வாங்கப்பட்ட பங்குகளை, பங்குச் சந்தையின்மூலம்தான் விற்கமுடியும்.  கேள்வி எண். 19-ல் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்களைக் காண்க.  வணிக இணைப்புக் கழக முதலீட்டு திட்டத்தின்கீழ், வாங்கப்படும் அல்லது விற்கப்படும் பங்குகளுக்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவையில்லை.

22. நியமனதாரராகவும், நியமிக்கவும் வெளிநாடுவாழ் இந்தியரால் முடியுமா?  நியமனதாரர் இந்தியாவில் வசிப்பவராக இருக்கலாமா?
 ஆம்.

23. கணக்குத் தொடங்கும்போது எந்தவகையான வங்கிக் கணக்கைக் கொடுக்க வேண்டும்
கீழ்வரும் வங்கிக் கணக்குகளைக் கொடுக்கலாம்.
தாயகம்  திரும்பியவர்களுக்கு - என்.ஆர்.ஐ. (பங்கு/ வட்டி திரும்பியபின்)
தாயகம்  திரும்பியவர்களுக்கு - என்.ஆர்.இ.
மேலே கூறப்பட்டவைகள், பங்குத் தொகைளையும், வட்டியையும் நேரடியாக வரவு வைப்பதற்காக சேமிப்பிடப் பங்கேற்பாளரின் சேமிப்பிடக் கணக்குகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
வணிக இணைப்பு  முதலீட்டுத் திட்டத்தின்கீழ்  தாயகம் திரும்பியவர்/ திரும்பாதவர் என்ற முறையில் முதலீடுகளுக்குப் பெறப்படும் பங்குத்தொகைகளை /வட்டியைப் பெறும் தகுதி, என்.ஆர்.இ. (வணிக இணைப்பு முதலீட்டுத் திட்டம்) மேலும் என்.ஆர்.ஐ. (வணிக இணைப்பு முதலீட்டுத் திட்டம்) போன்ற கணக்குகளுக்கு இல்லை.

மேலும்  விபரங்கள் பெற:
இந்திய ரிசர்வ் வங்கியின் 2004, ஜீலை 01 நாளிட்ட 2004 - 05ஃ4 என்ற எண்ணுள்ள தலையாய சுற்றறிக்கையை வெளிநாடு வாழ் இந்தியர் வாசிக்கலாம்.
· இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை எண்.20 நாள்: 2, மே - 2000.
· இந்திய ரிசர்வ் வங்கியின் www.rbi.in என்ற இணையதளத்தில், தலைப்பு 3 - காப்புறுதிச் சொத்துக்கள், பங்குகள் மற்றும் கம்பெனி இட்டுவைப்புகள் ஆகியவற்றில் முதலீடு என்ற பகுதியில் வெளியாகியிருக்கும் கேள்வி - பதில்கள் பகுதி.
· ஏ.பி. நேரடி சேவைச் சுற்றறிக்கை எண்.16  நாள்: 4,  அக்டோபர்- 2004.

மறுதலிப்பு:
இந்தக்  கேள்வி பதில்கள், ‘பெமா’ விதிமுறைகளைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் தேசிய காப்புறுதிச் சொத்து சேமிப்பிடம் லிமிடெட் தயாரித்தவைகளாகும்.  இதைத் தயாரிக்கும்போது அதிகபட்ட கவனத்தை என்.எஸ்.டி.எல். கொண்டிருந்தது.  இந்தத் தகவல்களின் அடிப்படையில் ஏற்படும் இழப்பகள் சேதாரங்கள் ஆகியவற்றிற்கும் தகவல்களின் துல்லியத் தன்மைக்கும் என்.எஸ்.டி.எல். பொறுப்பேற்காதது.  இந்திய ரிசர்வ் வங்கியின் வழிவகைப்பாடுகளையும் அதில் ஏற்படும் மாற்றங்களையும் வாசகர்கள் ஆழ்ந்து படித்து அறிந்து கொள்ளவும்..

தொகுப்பு : மு.அஜ்மல் கான் 

No comments:

Post a Comment