Friday 24 October 2014

மாவுச்சத்து, புரதச்சத்து பற்றிய விழிப்புணர்வு ஆய்வு கட்டுரை!! ஒரு சிறப்பு பார்வை....



'தேனாக இருந்தாலும் தேவைக்குத் தக்கபடிதான் பயன்படுத்தணும்'' என்பது அனுபவ மொழி. மாவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன் இந்த வார்த்தைகளை மனதுக்குள் ஏற்றிக்கொள்வது நலம். ஆம்... ஏராளமான சத்துக்களைக் கொண்ட மாவுப் பொருட்களைப் பயன்படுத்தும்போது அவற்றின் குணங்களுக்குத் தக்கபடி அளவு வைத்துக்கொள்ள வேண்டும். யார் யார் எந்தெந்த வகையான மாவு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பது குறித்து உணவியல் நிபுணர் கேட்டோம்.

''அந்தக் காலத்தில் மக்கள் எல்லா இடங்களுக்கும் பெரும்பாலும் நடந்துதான் போனார்கள். செய்யும் வேலைகளிலும் உடல் உழைப்பு அதிகம் இருந்தது. அதற்குத் தகுந்தாற்போல் அவர்களது உணவுப் பழக்கங்களும் இருந்தன. அன்றாட உணவில் 70 சதவிகிதம் வரை மாவுப் பொருட்களை அவர்கள் பயன்படுத்தினார்கள். தற்போதைய சூழ்நிலையில் நாம் சாப்பிடும் உணவில் 50 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் அளவுக்கு மாவுச் சத்து இருந்தாலே போதும். அதாவது நாள் ஒன்றுக்கு 230 முதல் 250 கிராம் வரையிலான மாவுப் பொருட்களே போதுமானவை; எப்படிப் பார்த்தாலும் உடலுக்கு அதிக சக்தியைக் கொடுப்பதால், மாவுச் சத்து மிக்க பொருட்கள் எல்லோருக்குமே அவசியமானவை. ஆனாலும், தேவையின் அளவு தெரிந்து அவற்றைப் பயன்படுத்துவதே நலம்'' என்றவர் மாவுப் பொருட்களில் இருக்கும் சத்துக்களைப் பற்றி பேசினார்.

தானிய வகைகளைத் தோலுடன் சேர்த்து அரைக்கும்போது, அதில் ஹைடேட்ஸ் கிடைக்கிறது. இது மாவுச் சத்துக்களால் உடலில் சேரும் தேவைக்கு அதிகமான தாது உப்புக்களை வெளியேற்றிவிடும். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள், மாவுப் பொருட்களைக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய மாவுப் பொருட்களை வளரும் குழந்தைகள் சாப்பிடுவதால், நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி கிட்டும்'' எனச் சொன்ன கிருஷ்ணமூர்த்தி, மாவு வகைகளைப் பற்றி வரிசைப்படி விளக்கத் தொடங்கினார்.


மக்காச்சோள மாவு


உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கக் கூடியது. இனிப்புச் சுவையுடன் இருப்பதால், சூப், க்ரீம் மற்றும் சாஸ் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாவில் கஞ்சி வைத்தும் குடிக்கலாம். நார்ச் சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், மங்கனீஸ், துத்தநாகம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பீட்டா கரோட்டின் ஓரளவே இருக்கிறது. கால்சியம், இரும்பு, அமினோ அமிலங்கள் ஆகியவை மிகக் குறைந்த அளவே இருக்கின்றன. மாவுச் சத்தை மாற்றி, சர்க்கரையின் அளவைக் கூட்டக்கூடிய தன்மை இதற்கு இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தவிர்க்கலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். மற்ற எல்லோருக்கும் சாப்பிட ஏற்றது.

தினை மாவு


பொடி தானியம் என்று இதைச் சொல்லுவார்கள். சலிக்காமல் அப்படியே பயன்படுத்துவதன் மூலம் ஓரளவு நார்ச் சத்து கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் போன்றோர் தினை மாவைக் கஞ்சியாகக் குடிக்காமல் ரொட்டி செய்து சாப்பிடலாம். உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நேரடியாகச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதில், கார்போஹைட்ரேட் அதிக அளவு இருக்கிறது. புரதம், பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்துக்கள், கால்சியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், குரோமியம், மெக்னீஷியம், மாங்கனீஸ் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. சிறுநீரக நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம்.

கோதுமை மாவு


இது உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புளித்த ஏப்பம், புளிப்புத் தன்மை பிரச்னை இருந்தால், கோதுமை மாவைக் கூழாகக் காய்ச்சிக் குடிக்கலாம். கோதுமைக் கூழில் வெந்தயத் தூளும் ஒரு சிட்டிகை மஞ்சளும் சேர்த்துச் சாப்பிட்டால், மாதவிடாயின்போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கு கட்டுப்படும். சருமத்தைப் பொலிவாக்கும். வளரும் குழந்தைகளுக்கு வெல்லம் சேர்த்து உருண்டையாகப் பிடித்துக்கொடுப்பதன் மூலம் ஊட்டச் சத்துக் குறைபாடு நீங்கும். தாது உப்புக்கள் இருப்பதால், கிட்னி நோயாளிகள் அதிகம் சாப்பிடக் கூடாது. கார்போஹைட்ரேட், நார்ச் சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், சோடியம், ஃபோலிக் அமிலம், தைமின் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. ரிபோஃப்ளோவின், புரதம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம் ஆகியவை ஓரளவும்... குரோமியம், கால்சியம் மிகக் குறைந்த அளவும் இருக்கின்றன. கோதுமை மாவில் செய்யப்படும் உணவுகள் மெதுவாகத்தான் ஜீரணமாகும் என்பதால், சர்க்கரை நோயாளிகள் எண்ணெய் சேர்க்காமல் சுக்கா ரொட்டியாகச் சுட்டுச் சாப்பிடலாம். சாப்பிட்டதும் நன்றாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உளுந்து மாவு


இந்த மாவு இடுப்பு எலும்பை உறுதியாக்கும். மாதவிடாய்ப் பிரச்னையைச் சரி செய்யும். ரத்தசோகையைத் தடுக்கும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் ஆசிட், கோலின் மற்றும் நார்ச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. கால்சியம், இரும்பு, தைமின், ரிபோஃப்ளோவின், மெக்னீஷியம், பொட்டாசியம், தாமிரம், குரோமியம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. பீட்டா கரோட்டின் குறைந்த அளவே இருக்கிறது. வளரும் குழந்தைகள், எடையை அதிகரிக்க நினைப்பவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோருக்கு மிகவும் நல்லது. சிறுநீரக நோயாளிகள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெயை உறிஞ்சும் தன்மை இருப்பதால், ரத்த அழுத்த நோயாளிகள் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிடலாம்.  


கம்பு மாவு


முளைக்கட்டிய கம்பை வறுத்துப் பொடிக்கும்போது, வாசனையும் ருசியும் அதிகரிப்பதோடு எளிதில் ஜீரணமும் ஆகும். எனவே, மலச்சிக்கல் பிரச்னை வராது. கஞ்சி, அடை மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். மால்டோஸ், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், மங்கனீஸ், துத்தநாகம், தாமிரம், நார்ச் சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. புரதம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின் ஆகியவை மிதமான அளவில் இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின், குரோமியம் குறைந்த அளவே இருக்கின்றன. ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் வெல்லம் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடலில் சத்துக்கள் கிரகிக்கப்படும். வெல்லப்பாகு காய்ச்சி அதனுடன் கம்பு மாவைக் கலந்து உருண்டை செய்து வளரும் பிள்ளைகளுக்குக் கொடுத்தால், நல்ல சக்தி கிடைக்கும். வயோதிகர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்ற அனைவருக்கும் ஏற்றது.

கடலை மாவு


இந்த மாவு ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டும். எளிதில் ஜீரணமாகும். சருமத்தைப் பொலிவாக்கும் தன்மையும் இதற்கு உண்டு. புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீஷியம், சோடியம், தாமிரம், துத்தநாகம், நார்ச் சத்து ஆகியவை இதில் அதிகமாக உள்ளன. இரும்பும் குரோமியமும் ஓரளவு இருக்கின்றன. எண்ணெய்ச் சத்து, கால்சியம், பீட்டா கரோட்டின், தைமின், ரிபோஃப்ளோவின் ஆகியவை குறைந்த அளவில் இருக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் ஓரளவு எடுத்துக்கொள்ளலாம். சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் மிதமான அளவே எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தசோகை, மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் அடை செய்து சாப்பிடலாம். எல்லோருக்கும் ஏற்றது.



மைதா மாவு


கோதுமைத் தவிடு மற்றும் முளை ஆகியவை பிரிக்கப்பட்டு மாவாக்கப்படுவதுதான் வெள்ளை நிறமுள்ள மைதா. நார்ச் சத்து இல்லாததால் மலத்தை கெட்டிப்படுத்தும். மைதாவில் செய்யும் பரோட்டா, சமோசா மற்றும் பேக்கரி வகை உணவுகள், இளம் வயதினரின் ஃபேவரிட். இதனுடன் காய்கறிகளையும், திரவ உணவுகளையும் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. அதிக அளவு கார்போஹைட்ரேட் இருப்பதால், உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுக்கும். புரதம் ஓரளவு இருக்கிறது. கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், தைமின், ரிபோஃப்ளோவின், பொட்டாசியம், மெக்னீஷியம், தாமிரம் ஆகியவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. வயோதிகர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் இந்த மாவுடன் ரவை, கோதுமை மாவு போன்றவற்றைச் சேர்த்து உண்ணுவது நல்லது. ஆனால், குறைந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

வெள்ளைச் சோள மாவு


இந்த மாவில் கஞ்சி, ரொட்டி போன்றவற்றைச் செய்து சாப்பிடலாம். இது உடலில் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும். எல்லோருக்கும் ஏற்றது. உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும். கார்போஹைட்ரேட், ஃபோலிக் அமிலம், தைமின், ரிபோஃப்ளோவின், நியாசின், வைட்டமின் பி 6, மெக்னீஷியம் மற்றும் நார்ச் சத்து அதிகமாக இருக்கின்றன. புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை ஓரளவே இருக்கின்றன. கால்சியம், பீட்டா கரோட்டின் ஆகியவை குறைந்த அளவே இருக்கின்றன. எல்லோருக்கும் ஏற்ற இந்த வெள்ளைச் சோள மாவு விலையும் குறைவானது. ஆனால், ஜீரணிக்கும் சக்தி குறைவாக இருப்பவர்கள், இந்த மாவைத் தவிர்ப்பது நல்லது.  

அரிசி மாவு


பச்சரிசி மாவு, புழுங்கல் அரிசி மாவு, சிவப்பு அரிசி மாவு எனப் பல்வேறு வகையான அரிசி மாவு வகைகள் இருந்தாலும், நடைமுறையில், பச்சரிசி மாவின் பயன்பாடுகளே அதிகம். இது எளிதில் ஜீரணமாகும். எடை குறைந்தவர்கள் வெல்லம் கலந்த கொழுக்கட்டை, புட்டு போன்றவை செய்து சாப்பிட்டால் எடை கூடும். உடலுக்கு அதிக சக்தியையும் கொடுக்கும். சர்க்கரை நோயாளிகள் மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்களுக்கு அரிசி மாவு உணவு மிகவும் நல்லது.  இதில் மாவுச் சத்து அதிக அளவு இருக்கிறது. ஓரளவு பாஸ்பரஸும்  புரதம், கால்சியம், இரும்பு, நார்ச் சத்து ஆகியவை குறைந்த அளவும் இருக்கின்றன. சிவப்பு அரிசி மாவில் தைமின், ரிபோஃப்ளோவின் போன்ற பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் மற்றும் இரும்புச் சத்துக்கள் இருக்கின்றன. கைக்குத்தல் அரிசியில் கோலின், பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இருக்கின்றன. எளிதில் ஜீரணிக்கக் கூடியது.
கேழ்வரகு மாவு


இது வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்கிறது. எளிதில் ஜீரணிக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு. மலச்சிக்கலைப் போக்கும். கேழ்வரகுடன் பொட்டுக்கடலை, வேர்க்கடலை போன்றவற்றைச் சேர்த்து அரைத்துக் கஞ்சி செய்து,  குழந்தைகளுக்கு ஆறு மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் துணை உணவாகக் கொடுக்கலாம். உடலுக்கு அதிக சக்தியைக் கொடுக்கும்.  கார்போஹைட்ரேட், கால்சியம் ஆகியவை அதிகமாக இருக்கின்றன. பொட்டாசியம், தைமின், ரிபோஃப்ளோவின், ஃபோலிக் அமிலம், மங்கனீஸ், தாமிரம், மெக்னீஷியம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன. புரதம், இரும்பு, நியாசின் ஆகியவை மிகக் குறைந்த அளவில் இருக்கின்றன. சிறுநீரகப் பிரச்னை இருப்பவர்கள் ஓரளவுக்கே எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், வளரும் குழந்தைகள் ஆகியோர் வாரத்துக்கு மூன்று நாட்கள் எடுத்துக்கொள்வது நல்லது.


இந்த மாவுச் சத்து உடலுக்குள் போய் எப்படி சக்தியாக மாற்றமடைகிறது என்பதை பார்ப்போம்.

அனைத்து மாவுச்சத்துக்களும் அடிப்படையில் சர்க்கரையே. நூற்றுக்கணக்கான சர்க்கரை மூலகங்கள் பிணைந்து மாவுச்சத்தாக உருவெடுத்திருக்கிறது. இந்த மாவுச்சத்து திரும்பவும் சர்க்கரையாக மாறினால்தான் மனிதனுக்கு உபயோகமாகும். இந்த மாற்றம் மனிதனுடைய இரைப்பையிலும் சிறுகுடலிலும் ஏற்படுகிறது. இவ்வாறு மாவுச்சத்து சர்க்கரையாக மாறியபின் அந்த சர்க்கரை இரத்தத்தினால் உறிஞ்சப்பட்டு உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செல்கிறது.


சாப்பிட்டவுடன் இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவது இதனால்தான். வெறும் சர்க்கரையைச் சாப்பிட்டால்தான் இரத்தத்தில் சர்க்கரை கூடும், இட்லி, தோசை, சாதம் முதலானவை சாப்பிட்டால் அவ்வாறு சர்க்கரை கூடாது என்று இன்றும் பல சர்க்கரை நோயாளிகள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு என்று அவர்கள் உணரவேண்டும்.

சர்க்கரை சக்தியாக மாறுவது எப்படி?

(இந்தத் தலைப்பை Ctrl + click செய்தால் இதைப் பற்றிய விரிவான ஆங்கிலக் கட்டுரைக்கு செல்லலாம்.) 

மாவுச்சத்து இரைப்பையை அடைந்தவுடன் பல என்சைம்களினால் ஜீரணமாகத் தொடங்குகிறது. இந்த ஜீரணம் சிறுகுடலிலும் தொடர்கிறது. இதன் காரணமாக மாவுச்சத்து குளுகோஸ் ஆக மாறி, இரத்தத்தினால் உறிஞ்சப்படுகிறது. சாப்பிட்டவுடன் இந்த சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிக அளவில் இருக்கும். அத்தனை சர்க்கரையும் உடலுக்கு உடனடியாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே அதிக அளவில் இருக்கும் சர்க்கரையை, உடல் கல்லீரலில் சேமித்து வைத்துக்கொள்ளுகிறது. பிறகு இரத்தத்தில் குளுகோஸ் குறையும்போது கல்லீரலில் இருந்து சர்க்கரை இரத்தத்திற்கு வருகிறது. கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட சர்க்கரை முழுவதும் குறைந்து போனால் அப்போது பசி ஏற்படுகிறது. இது "உடலில் சர்க்கரை குறைந்து விட்டது, நீ உணவு சாப்பிடவேண்டும்" என்று இயற்கை விடுக்கும் எச்சரிக்கையாகும். இது இயற்கை மனிதனுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம்.

இந்த மாதிரி குளுகோஸ் கல்லீரலுக்குள் போவதற்கும் திரும்ப வெளியில் வருவதற்கும் இன்சுலின் என்னும் ஹார்மோன் தேவைப்படுகிறது. சிலருக்கு இந்த இன்சுலின் போதிய அளவு சுரக்காவிட்டால் இந்த வேலை நடை பெறாது. அப்போது சாப்பிட்டவுடன் இரத்தத்தில் அதிகமாக சேரும் குளுகோஸுக்கு தேவை இல்லாததினால், இந்த அதிகப்படியான குளுகோஸை உடல் வெளியேற்றி விடும். ஏனென்றால் அந்த அதிக அளவு குளுகோஸ் இரத்தத்தில் இருந்தால் பல அவயவங்களுக்கு கெடுதல் விளைவிக்கும். குறிப்பாக கண்கள் பாதிப்படையும். தேவைக்கு அதிகமாக எது இருந்தாலும் உடல் அதை கழிவுப்பொருள் என்றே எடுத்துக்கொள்ளும்.


இந்த அதிக குளுகோஸை வெளியேற்றும் பொறுப்பு சிறுநீரகங்களின் மேல் சுமத்தப்படுகிறது. உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் எதுவானாலும் அவைகளை வெளியேற்றுவது சிறுநீரகங்கள்தான். தன்னுடைய வழக்கமான பொறுப்புகளுடன் இந்த சர்க்கரையை வெளியேற்றும் பொறுப்பும் கூடினால் சிறுநீரகங்கள் என்ன செய்யும்? ஸ்ட்ரைக் செய்யும். டாக்டர்கள் சர்வ சாதாரணமாக "கிட்னி பெயிலியர்" என்று சொல்லி விடுவார்கள். சரியான சமயத்தில் இதைக் கண்டுபிடித்து வைத்தியம் செய்தால் தப்பிக்கலாம். நோய் முற்றிய பிறகு வைத்தியம் செய்தால் குணம் காண்பது சற்று கடினம். இதுதான் நீரிழிவு நோய் என்று கூறப்படுகிறது.


இரத்தத்தில் சேரும் குளுகோஸ் எப்படி சக்தியாக மாறுகிறது என்று பார்ப்போம்.  

நாம் சாப்பிடும் உணவானது நமது உணவுக் குழாயில் குளுகோஸாக மாறி இரத்தத்தில் கலக்கிறது என்று முந்தைய பதிவுகளில் பார்த்தோம். இந்த குளுகோஸ் இரத்தத்தின் மூலமாக நமது உடம்பின் ஒவ்வொரு திசுக்களுக்கும் சென்று அடைகிறது. (மனித உடலில் சுமார் 10 லட்சம் கோடி திசுக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்).

ஒவ்வொரு திசுவும் ஒரு ரசாயனத் தொழிற்சாலை போல செயல்படுகிறது. இரத்தத்தின் மூலம் இவைகளுக்கு மனிதனின் எரிபொருளான குளுகோஸ் மற்றும் பிராணவாயு சென்று அடைகின்றன. இரத்தத்திற்கு பிராணவாயு நுரையீரலிலிருந்து கிடைக்கிறது என்ற ரகசியம் உங்களுக்கு முன்பே தெரியும்.

நாம் நம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விறகு எரிதலைப் பார்த்திருக்கிறோம். அதிலுள்ள ரசாயன மாற்றத்தைப் பற்றி எத்தனை பேர் சிந்தித்திருப்போம? விறகில் உள்ளது கரிமம் அதாவது கார்பன். அது எரிகின்றபோது ஆகாயத்தில் உள்ள பிராணவாயுவுடன் சேர்ந்து கரியமலவாயுவாக மாறுகிறது.  கூடவே உஷ்ணமும் வெளி வருகிறது. இந்த உஷ்ணத்திற்காகத்தான் நாம் விறகை எரிக்கிறோம்.

ஒரு உண்மையைப் பாருங்கள். விறகு வெட்ட வெளியில் கிடக்கிறது. வெட்ட வெளியில் தேவையான பிராணவாயுவும் இருக்கிறது. ஆனால் விறகு எரிவதில்லையே? ஏன்? விறகு எரிய ஆரம்பிக்க முதலில் ஒரு தூண்டுதல் வேண்டும். ஒரு சிறிய நெருப்பினால் அந்த விறகில் தீ மூட்ட வேண்டும். பிறகு அந்த விறகு தானாக எரியத் துவங்கும்.

நம் உடலிலும் ஏறக்குறைய 24 மணி நேரமும்  இந்த மாதிரி ஒரு எரிதல் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் நாம் அதை உணர்வதில்லை. ஏனெனில் இந்த எரிதல் அமைதியாகவும் ஆர்ப்பாட்டமில்லாமலும் நடக்கிறது.

நாம் சாப்பிட்ட உணவு குளுகோஸாக மாறி நம் உடம்பிலுள்ள அனைத்து திசுக்களுக்கும் இரத்த ஓட்டத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது என்று பார்த்தோம். இந்த குளுகோஸ் திசுக்களை அடைந்ததும் சில என்சைம்கள் இந்தக் குளுகோஸை இரண்டு துண்டாக்குகின்றன. பிறகு இந்த இரண்டு துண்டங்களும் வேறு என்சைம்களினால் தாக்கப்பட்டு பிராணவாயுவுடன் சேர்க்கின்றன. இவ்வாறு சேரும்போது சக்தியும், உஷ்ணமும், கரியமலவாயுவும் உண்டாகின்றன.

விவரமாகத் தெரிந்து கொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைப் பார்க்கவும். தலை சுற்ற ஆரம்பிக்கும்போது நிறுத்திவிடவும்.





இவ்வாடலின் எந்தப் பகுதிக்குத் தேவையோ அங்கு இரத்தத்தின் மூலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. சக்தி தேவையில்லாத சமயத்தில், அதாவது தூங்கும்போது பெரும்பாலான திசுக்கள் ஓய்வெடுத்துக்கொள்ளும். தூங்கும்போது தேவைப்படும் குறைந்த அளவு சக்தியே உற்பத்தியாகும்.

று உண்டாக்கப்பட்ட சக்தி ஒரு வேதியல் மூலகத்தில் இருக்கும். இந்த சக்தி உ
இந்த ஒழுங்குகள் எல்லாம் நம்முடைய எண்ணம் இல்லாமல் தானாகவே நடக்கின்றன. இந்த வேலைகள் நின்றுபோனால் நம் உடலை எரியூட்டவேண்டி வரும்.

இப்படி உற்பத்தியாகும் சக்திதான் நாம் வேலை செய்யும்போது பயன்படுத்தப்படுகின்றது.

மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு மிக அவசியமானது புரதச்சத்து. இவைகளைப்பற்றி என் விளக்கத்திற்கு முன்பாக, ஆங்கிலத்தில் வந்துள்ள ஒரு கட்டுரையை படித்தால் நலமாக இருக்கும்.

http://authoritynutrition.com/how-much-protein-per-day/
https://www.youtube.com/watch?v=yw1xehi3KSU


மாவுச்சத்துக்கு அடுத்தபடியாக மனிதனுக்கு வேண்டியது புரதச்சத்தாகும். அடுத்தபடியாக என்று வரிசைக் கிரமத்திற்காக சொன்னேனே தவிர, முக்கியத்துவத்தில் புரதம்தான் முதலாவதாக இருக்கின்றது.

புரதம் என்பது மாவுச்சத்து கூட நைட்ரஜன் என்ற தனிமமும் சேர்ந்த ஒரு கூட்டுப் பொருளாகும். புரிந்து கொள்ள எளிமைக்காக இப்படி சொன்னேனே தவிர புரதம் என்பது ஒரு தனித்தன்மை கொண்ட அங்ககப் பொருளாகும்.

ஆகாயத்திலுள்ள காற்றில் ஏறக்குறைய 80 சதம் நைட்ரஜன் வாயுதான். ஏன் இதை நாம் அப்படியே நம் உடல் தேவைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கேட்கலாம். நல்ல கேள்விதான். ஆனால் இயற்கையின் மர்மங்களை யார் அறிவார்?

புரதம் என்பது 26 வகையான அமினோஅமிலங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் 10 அமினோ அமிலங்கள் அவசியமானவை என்று வகைப் படுத்தியுள்ளார்கள். காரணம், இவைகளை மனித உடம்பில் தயாரிக்க முடியாது. மற்றவைகளை சமாளித்துக் கொள்ளலாம்.

மனித உடம்பில் உள்ள அனைத்து திசுக்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. தவிர அனைத்து ஹார்மோன்களும், என்சைம்களும் வைட்டமின்களும் புரதத்தையே ஆதாரமாகக் கொண்டவை. இன்னொரு முக்கியமான விஷயம். பலர் அறிந்திருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ளாத ஒரு சமாச்சாரம் என்னவென்றால், நம் உடம்பில் உள்ள பெரும்பாலான திசுக்களின் ஆயுட்காலம் சராசரியாக15 நாட்கள்தான். அதன் பிறகு அந்த திசுக்களை அழித்து விட்டு அவைகளின் இடத்தில் புது திசுக்களை நம் உடம்பு உண்டுபண்ணிக்கொள்கிறது.

இந்த ரிப்பேர் வேலை நம் ஆயுட்காலம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. எலும்புகளும் மூளையும் இதற்கு விதிவிலக்கு. எலும்பு திசுக்களின் ஆயுட்காலம் 25-30 வருடங்கள். மூளை திசுக்கள் எப்போதும் அழிவதில்லை. (அவ்வப்போது மூளையும் தன்னைப் புதிப்பித்துக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? நான் எப்போது உன்னிடம் கடன் வாங்கினேன் என்று கூசாமல் சொல்லலாம்).

இந்த திசுக்களை புதிப்பிக்கும் வேலைக்கு புரதம் கண்டிப்பாகத் தேவை. புரதம் பற்றாக்குறை இருந்தால் இந்த வேலை நடக்காது. அப்போது மனிதனின் அவயவங்கள் தங்கள் வேலைகளைச் செய்வது நின்று போய்விடும். அப்புறம் என்ன நடக்கும் என்பது நீங்கள் அறிந்ததுதான்.

உங்கள் மனதில் தோன்றும் ஒரு கேள்விக்கு இங்கேயே பதில் கூறி விடுகிறேன். பழைய திசுக்களை அழிக்கும்போது அதில் இருக்கும் புரதத்தை வைத்து ஏன் மறு சுழற்சி முறையில் புது திசுக்களை உண்டு பண்ணக்கூடாது? நல்ல கேள்விதான். ஆனால் சாதாரண மனிதர்களால் அப்படி மறுசுழற்சி செய்ய முடியாது. பழங்கால சித்தர்கள் இந்த வித்தையைக் கற்றிருக்கலாம். அதனால்தான் அவர்கள் காற்றையே உட்கொண்டு ஜீவித்திருந்தார்கள் என்று புத்தகங்களில் படிக்கிறோம்.



பழைய திசுக்களை அழிக்கும்போது புரதச்சத்து பெரும்பாலும் அழிக்கப்பட்டு, அதிலுள்ள நைட்ரஜன் தனிமம் யூரியாவாக மாறுகின்றது. இந்த யூரியாதான் சிறுநீரகங்கள் மூலமாகப் பிரிக்கப்பட்டு சிறுநீராக மாறி வெளியேற்றப்படுகின்றது. இவ்வாறு யூரியா வெளியேற்றப்பட-வில்லையானால் இரத்தத்தில் யூரியா அதிகம் சேர்ந்து பல வியாதிகளைத் தோற்றுவிக்கும்.

நமக்கு புரதம் பல வகைகளில் கிடைக்கிறது. நாம் உணவில் பயன்படுத்தும் பருப்பு வகைகள்தாம் முக்கியமாக நமக்கு புரதத்தைத் தருகின்றன. அரிசி. கோதுமை போன்ற தானியங்களிலும் புரதம் இருந்தாலும் அவை மிகக் குறைவாக இருப்பதால் நம் உடலின் தேவைக்குப் போதாது. ஆகவேதான் புரதம் அதிகமுள்ள பருப்பு வகைகளை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

பருப்புகளை மட்டும் நம்பியிருக்கும் சாகபட்சிணிக்காரர்களுக்கு ஒரு சங்கடம் இருக்கிறது. நமக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட பருப்பு வகைகள் இல்லை. ஆகையால் பல வகையான பருப்புகளை நம் உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இக்குறையை ஓரளவு சரிக்கட்டலாம். ஆனாலும் அந்த முறை முழுமையாக நம் புரதத் தேவையை ஈடு கட்டாது.

மனிதனுக்கு வேண்டிய அனைத்து அமினோ அமிலங்களும் கொண்ட புரதம் மாமிச உணவில்தான் இருக்கிறது. பால், முட்டை, மீன், கோழி, ஆடு, மாடு, இன்ன பிற. நான் சாக பட்சிணி என்று சொல்லிக்கொள்ளும் பெரும்பாலான மனிதர்கள் பாலை மாமிச உணவு என்று கருதுவதில்லை. அதனால்தான் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.

இன்னும் சிலர் முட்டையை வெஜிடபிள் கணக்கில் சேர்த்துக்கொள்கிறார்கள். ஏனென்றால் வெஜிடபிள் முட்டை என்று இப்பொழுது குஞ்சு பொரிக்காத முட்டைகள் அதிகம் உற்பத்தியாகின்றன. மங்களூரிலும் வங்காளத்திலும் பிராமணர்கள் கூட மீன் சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த விவகாரம் அவரவர்கள் நம்பிக்கை சம்பந்தப்பட்டது.

ஆனால் மனிதன் தான் சாப்பிடும் உணவில் போதுமான புரதச்சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆக்கம் & தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment