Tuesday 1 July 2014

வீடுகட்ட வங்கியில் என்.ஆர். ஐ -க்கள் வீட்டுக்கடன் (NRI Home loan) வாங்குவது எப்படி? ஒரு சமூக பார்வை..

நண்பர்களே, 
நான்  கடந்த விடுமுறையில் இந்திய சென்ற போது  என் நண்பனின்  வீட்டுக்கடன்  பெறுவதற்காக HDFC பேங்க் வில் சென்று வங்கிக் கடன் வாங்கியுள்ளோம். அதன் அனுபவத்தையும் 
அதற்கு தேவைப்படும் ஆவணங்களையும் உங்களுடன் பகிர்ந்து
கொள்ள விரும்புகிறேன். நான் முதலில் வங்கியின் (NRI Home loan) உதவி மேலாளரை அனுகினேன், அவர் கீழ்கண்ட ஆவணங்களுடன் வர சொன்னார். ஒரே நாளில் கடன் கிடைத்து விடும் என்றார். நானும் கீழ்கண்ட ஆவணங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடனும் வருத்தத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன்.



 
 உங்களை பற்றிய தகவல்கள். KYC ( Know your Customer)

1. Ration card, Voter Id, Passport, Driving Licence, Pan Card. இதில் எதாவது இரண்டு அல்லது மூன்று ஆவணங்கள் கண்டிப்பாக வேண்டும்.

2. Work Permit Copy (உங்களின் வேலை அனுமதி அட்டை) , Nature of work & Contract of work (அதாவது நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் & எத்தனை வருட ஒப்பந்தத்தில் வேலை செய்கிறீர்கள் என்பதையும் உங்கள் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்).

3. Salary slip or pay slip for 1 year.(உங்களின் சம்பள ரசீது ஒரு வருடத்திற்கானதை தர வேண்டும்)

4. Bank Statement for 1 year (  நீங்கள் வேலைப் பார்க்கும் நாட்டில் உள்ள உங்கள் வங்கி கணக்கின் ஒரு வருடத்திற்கான வங்கி பரிவர்த்தனை விபரம்)

5. Salary certificate with attestation of High commission of India ( உங்கள் கம்பெனியின் லெட்டர் பெடில் உங்கள் சம்பளத்தை குறிப்பிட்டு அதில் இந்திய தூதரகத்தின் முத்திரை வாங்க வேண்டும்).

6. Income Tax Details ( நீங்கள் வேலை பார்க்கும் நாட்டில் ஒரு வருடத்திற்கான உங்களின் வருமான வரி ரசீது) 

7. Passport copy xerox the pages stamp by Immigration ( குடி நுழைவுத்துறையால் முத்திரை குத்தப்பட்ட அனைத்து பக்கங்களும்)


Documents (ஆவணங்கள்)

8. Power Of Attorney(POA) attestation by High commission of India (நீங்கள் வெளி நாட்டில் இருப்பதால் உங்கள் இடத்திற்கான அதிகாரம் (மற்றொருவருக்கு) வழங்குதல், இதற்கான விண்ணப்பத்தை உங்கள் வங்கியின் அதிகாரியிடமிருந்து பெற்று நீங்கள் இருக்கும் நாட்டின் இந்திய தூதரகத்தில் முத்திரை வாங்க வேண்டும்).

9. Registration of Power Of Attorney(POA) at District Register office and Sub-Register office.( நீங்கள் அனுப்பிய POA சான்றிதழை உங்கள் மாவட்ட பதிவாளர் அலுவத்திலும் பின்பு வட்டார துணை பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்துக்கொள்ள வேண்டும். நீங்கள் பதிவு செய்ய செல்லும்போது வெளி நாட்டிலிருந்து POA அனுப்பிய தபாலின் உரையையும் கொண்டு செல்ல வேண்டும்.


10. Individual patta of plot ( உங்கள் இடத்தின் தனிப் பட்டா, சிலருடைய இடம் கூட்டுப்பட்டாவில் இருக்கும்) எனக்கு தனிப்பட்டா வாங்க இரண்டு மாத காலம் பிடித்தது. அந்த அளவிற்கு நம்ம அதிகாரிகள் வேகமாக(?) வேலையை முடிச்சி தாராங்க. உங்களுக்கு தெரிஞ்ச ஆள் இருந்தால் வேகமா முடியும் இல்லைனா, ஆமையை விட மெதுவாக தான் நடக்கும்.

11. Non Agriculture Certificate of land (இந்த இடம் விளை நிலம் அல்ல, மனைப்பகுதி தான் என்பதை உங்கள் வட்டார தாசில்தாரிடம் இருந்து பெற வேண்டும், இந்த சான்றிதழ் பெறுவதற்கு தாசில்தார் உங்கள் இடத்தை நேரில் பார்வையிடுவார், அதற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆகும், ஒருவேளை நீங்கள் அவருக்கு கையூட்டு கொடுத்தால், வேலை வேகமாக முடியும்)

12. இந்த இடத்திற்கான மூலப்பத்திரம் 

13. Estimation certificate from your Engineer ( வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும் என்பதை  அரசு பதிவு பெற்ற கட்டிட பொறியாளரிடமிருந்து)

14. Plan approval and Lay out from Panchayat office, or Municipality or Corporation(உங்கள் பகுதி பேரூராட்சியாகவோ அல்லது நகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ இருந்தால் அவர்களிடம் உங்கள் வீட்டு வரைபடம் மற்றும் வழியமைப்பு ஆகியவற்றில் அனுமதி பெற வேண்டும். இதற்கும் நேரில் பார்த்து தான் அனுமதி அளிப்பார்கள். குறைந்தது 15 நாட்களாவது ஆகும்)

15. Valuation Certificate from an Approved Engineer ( அரசு பதிவு பெற்ற பொறியாளரிடமிருந்து இடத்திற்கான மதிப்பீட்டு சான்றிதழ் பெற வேண்டும். இவர் எவ்வளவு கடன் தரலாம் என சொல்கிறாரோ அதிலிருந்து 80 சதவீதம் தான் நமக்கு கடன் தருவார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எந்த பொறியாளரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்)

16. Encumbrance certificate for 32 years (32 வருத்திற்கான வில்லங்க சான்றிதழ்)

17. Land tax receipt (வீட்டு வரி ரசீது)

18. Legal opinion certificate from a Lawyer( வழக்கறிஞரிடமிருந்து தடையில்லா சான்று பெற வேண்டும், எந்த வழக்கறிஞரிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை வங்கி அதிகாரி தெரிவித்துவிடுவார்).



இவை அனைத்தையும் உங்கள் இடத்தின் பத்திரத்துடன் வங்கி அதிகாரியிடம் சமர்ப்பித்தால் கடனுக்கான படிவத்தை பூர்த்திசெய்து ஓரிரு நாளில் கடன் கொடுத்து விடுவார்கள்.

இந்த அனைத்தும் வாங்குவதற்கு கிட்டதட்ட 3 மாதங்கள் ஆயிற்று. கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தாசில்தார் அலுவலகத்தில் அனைவரும் நம்மை அலைய விடுவாங்க பாருங்க, அதற்கு கடனே வாங்க வேண்டாம்னு ஆகிடும். அந்த அளவுக்கு கடுப்பேத்துவாங்க. இவ்வளவுக்கும் இவனுங்களுக்கு கையூட்டு கொடுத்தே இவ்வளவு நாள் ஆகுதுன்னா பாருங்க. 



உங்களுக்கு சொந்தக்காரர்கள் இந்த அலுவலகங்களில் இருந்தால் இன்னும் வேகமாக முடியுமென்பதில் சந்தேகமில்லை. 

 மேற் குறிப்பிட்ட  ஆவணங்கள் அனைத்தும் இருந்தால் இடை தரகர்கள் மூலம் 10 நாட்களுக்குள் பெற்றுவிடலாம்.

குறிப்பு :உங்களிடம் கடனை  அடைக்க தகுதி இருந்தால்  மட்டுமே!! 

ஆக்கம்  மற்றும் தொகுப்பு : மு .அஜ்மல் கான். 

No comments:

Post a Comment