Wednesday 7 May 2014

மனித வாழ்வையே பாழடிக்கும் மதுவால் என்ன ஏற்படுகிறது?

Man drunk with red wine - stock photoமது குடியை கெடுப்பது மட்டுமின்றி, உடலில் உள்ள அனைத்து அவயங்களையும் செயலிழக்கச் செய்கிறது. செயல்படும் மனிதரை செயல்பட இயலாத மனிதனாக மாற்றுகிறது.

வேதியியல் முறைப்படி எத்தில் ஆல்கஹால் எனப்படும் மது, எத்தனையோ குடும்பங்களை நாசப்படுத்தியுள்ளது. படிக்கும் மாணவர் முதல் 60 வயதுக்கு மேல் உள்ள முதியோரும் மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர். மதுப்பழக்கம் - மதுவால் கல்லீரல் பாதிப்பு மற்றும் கல்லீரல் செயலிழப்பு கட்டாயம் ஏற்படும். குறைந்தளவில் மட்டுமின்றி குறைவான நாட்கள் மது குடித்தாலும் கல்லீரல் பாதிக்கப்படலாம். கல்லீரலில் உள்ள ஒவ்வொரு செல்லும் மதுவால் பாதிக்கப்படுகிறது. இறுதியில் கல்லீரல் செயலிழந்து மஞ்சள் காமாலை, வயிற்று நீர், ரத்தவாந்தி, கால்வீக்கம், பசியின்மை முடிவில் மரணமும் ஏற்படலாம். இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றே வழி. மாற்று அறுவை சிகிச்சை செய்தபின்னும் குடித்தாலும் மரணம் ஏற்படும். குறைந்தளவு மது அருந்துதல் இருதயத்தை காக்கும் என்று பேசப்பட்டாலும், மது அருந்துதல் நேரடியாகவே தசைநார்களையும் பாதிக்கலாம். இது மோட்டார் பம்பில் காயில் எரிந்து போவதற்கு சமமாகும். காயில் எரிந்து போன நிலையில், மின்சாரம் இருந்தாலும், மோட்டார் எப்படி ஓடும்? எனவே மதுவால் ஏற்படும் இருதய நோயை தடுக்க வேண்டும். மதுவால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்பு மிகவும் மோசமானதாகும். எந்த நிலையிலும் இந்த நரம்பு பாதிப்பு சரியாகாது. சிறுமூளை, பெருமூளை மற்றும் முகுளம் பாதிப்பு ஏற்படும். இதனால் நோயாளிகளுக்கு கைநடுக்கம், கால்நடுக்கம், உடல் தளர்ச்சி, ஞாபக சக்தி குறைவு ஏற்படும். படபடப்பு, எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுஅருந்துவோருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்படவும், மூளையில் சின்னச் சின்ன அடிபட்டாலும் மூளையில் ரத்தம் உறைதல் ஏற்படும். மதுஅருந்துவோரை நடைப்பிணமாக மாற்றுவது நரம்பு மண்டல பாதிப்பே. தானியங்கி நரம்பு மண்டல பாதிப்பு ஆண்தன்மையை குறைக்கிறது. பெரும்பாலான ஆண்களை மலடர்களாக மாற்றுகிறது. ஆண்மைக் குறைவால் பாதிக்கப்பட்ட கணவர்கள், மனைவியை சந்தேகப்பட ஆரம்பிக்கின்றனர். இந்த சந்தேகம் அவர்களை அடிக்கடி தூண்டி, அவர்களின் வாழ்க்கையையே பாழாக்குகிறது. மதுப்பழக்கத்தால் செயலிழக்கும் மற்றொரு முக்கிய உறுப்பு கணையம். இதனால் சர்க்கரை நோயும், கணையப் புற்றுநோயும் ஏற்படுகிறது. கணையத்தில் கிருமிகளும் ஏற்படலாம். வயிற்றுப் புண், வயிற்று எரிச்சல் ஏற்பட்டு, ரத்தவாந்தி ஏற்படுவதற்கு மது காரணமாகிறது. மதுவால் சிறுநீர் பாதிப்பு, டி.பி.,வியாதி, சளிதொந்தரவுகளும் ஏற்படும். முக்கியமாக கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் இரைப்பை புற்றுநோயும் ஏற்படலாம்.

மது அருந்தினால் உடலில் என்ன ஏற்படுகிறது என்று பார்ப்போம்...

மதுவால் உடனடியாக இறப்பு ஏற்படாவிட்டாலும் படிப்படியாக என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று பார்ப்போம்.
மதுவின் பொதுவான் மூலக்கூறு எதில் ஆல்கஹால். பொதுவாக மதுவகைகளில் எவ்வளவு எதில் ஆல்கஹால்(Ethyl Alcohol) உள்ளது என்று கீழே பார்க்கவும்.
1.ரம் --- 50-60%
2.விஸ்கி,பிராந்தி,ஜின் --40-45%
3.ஷெர்ரி,போர்ட் --20%
4.ஒயின் --10-15%
5.பீர் --4-8% பொதுவாக...
6.சாராயம் --40-50%

மது அருந்தியவுடன் ஏற்படும் விளைவுகளில் முதலானது
கிளர்ச்சி (excitement) நிலை: முதலில் மது அருந்தியவுடன் ஏற்படுவது கிளர்ச்சி. தயக்கங்களிலிருந்து மெதுவாக விடுதலையும்,  சுதந்திரமான மனப்பான்மையும் ஏற்படும்.

ஆல்கஹால் அணுக்கள் மிக சிறியதாக இருப்பதால் நொதிகளின் உதவியுடன் செரித்து பின் இரத்தத்தில் கலக்க வேண்டியதில்லை. இவை நேரடியாக சவ்வூடுபரவல் மூலம் இரத்ததில் வெகுவிரைவில் கலக்கும். அதனால்தான் உடனடி போதை ஏற்படுகிறது.

மிகுந்த தன்னம்பிக்கையும், சுய கட்டுப்பாட்டை இழத்தலும் மெதுவாக ஏற்படும். இந்த நேரத்தில்தான் ரகசியங்களையும் மக்கள் உளர ஆரம்பிப்பார்கள். நல்ல மரியாதையும் பண்புகளும்  மறக்க ஆரம்பிக்கும். ஆடை ஒழுங்காக உள்ளதா என்று கவனம் இருக்காது.

இரத்தத்தில் 20 மிகி ஆல்கஹால் இருக்கும் போதே கூர்மையாக பார்க்கும் திறன் குறையும்.
இரத்தத்தில் 30மில்லிகிராம் ஆல்கஹால் இருக்கும்போது
1.தசை கட்டுப்பாடு இழக்கும்.
2.தொடு உணர்வுகள் குறையும்.
3.சிந்தனை,புரிந்துணர்வு,மதிப்பிடும் தன்மை ஆகியவை பாதிக்கப்படும்.  
இரத்தத்தில் 50 மில்லிகிராமுக்கு மேல் போனால்
1. வாய் வார்த்தைகள் குளறுதல்,
2.நடையில் தள்ளாட்டம்,
3.அதிக மயக்கம்,
4.ஞாபக மறதி
5. அதிக குழப்பம்
ஆகியவை ஏற்படும்.
பார்வைத்திறன் குறைவதால் பொருட்களை அதிக வெளிச்சத்தில்தான் பார்க்க முடியும். குறைந்த வெளிச்சத்திலுள்ள பொருட்கள் தெரியாது.
கால நேர, தூர  மதிப்பீடுகள் குறையும். அதனால் சாலையில் வரும் வாகனங்களின் வேகம், எவ்வளவு தூரத்தில் வருகிறது என்று சரியாக கணிக்கமுடியாது. இதனால்தான் மது அருந்தி வாகனம் ஒட்டுவதால் விபத்துகள் நிறைய ஏற்படுகின்றன. மது அருந்தி சாலையில் நடப்போருக்கும் வாகனங்கள் வரும் தூரம் வேகம் ஆகியவை தெரியாது.

இவை எல்லாம் கூடச் குடிச்சால் தானே வரும். அளவோடு பாவித்தால் பிரச்சினை இல்லைத்தானே” என அவர் கேட்டார்.
உண்மை தான் ஆனால் ,மாரடைப்பு , நீரிழிவு ஆகியவற்றைத் தடுப்பதற்கான வாய்ப்புக் குறைந்த அளவு (ஆல்கஹால் 3மில்லிகிராம் ) மதுவை 20 தினசரி உபயோகித்தால் மட்டுமே கிட்டும் என்றே ஆய்வு கூறுகிறது.

என் கருத்து :
தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்...

அன்றாடம் வேலை செய்வோர் குடிப்பதால், அவர்களின் வேலையின் தரம் குறைகிறது. முக்கியமாக ஓட்டுனர்கள் குடித்துவிட்டு ஓட்டுவதால் சிலசமயங்களில் விபத்து நிகழ்ந்து பலஉயிர்கள் இழப்புக்கு காரணமாகிவிடுகிறது. எனவே மதுவானது எந்த நிலையிலும், எந்த அளவிலும், எந்த வயதிலும், உடலுக்கு தீமை செய்யக்கூடியதே. 20 சதவீத கல்லூரி மாணவர்கள் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், உடல் பருமன் வருவதற்கு மதுவும் காரணமாகிவிடுகிறது. பெண்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானால் அதைவிட்டு வெளியே வருவது பாதிக்கப்பட்ட ஆண்களைவிட கடினமானதாகும். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் அது வயிற்றில் உள்ள குழந்தையை நிச்சயம் பாதிக்கும். மதுவால் ஏற்படும் விளைவுகள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட பாரம்பரிய அணுவை (ஜீன்கள்) பொருத்தே அமைகிறது. 

மது என்பது பழக்கப்பட்டு மனிதனை அடிமைப்படுத்தும் பொருள். சிறிது சிறிதாக தினசரி உபயோகிக்கும் போது அதற்குப் பழக்கப்பட்டு அடிமையாகி படிப்படியாக உபயோகிக்கும் மதுவின் அளவை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். மதுவின் அளவு கூடினால் மேற்படி நன்மைகள் கிட்டாது. அத்துடன் மதுவின் தீயவிளைவுகள் அனைத்தும் வந்து சேரும் என்பதை மறந்துவிடக்கூடாது.

மது அருந்துவது என்பது செங்குத்தான வழுக்குப்பாறையில் வெறுங் கையால் பிடித்து ஏறுவதற்கு நிகரானது. சற்று கைப்பிடி தவறினாலும் அதல பாதாளத்தில் விழுந்து மரணத்தை அடைவது நிச்சயம். அத்தகைய சாகசத்தை விரும்புபவர்கள் மாத்திரம் மது அருந்தி மாரடைப்பு வராமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடலாம் என விளக்கினேன்.

http://www.youtube.com/watch?v=0gMNg-3xo2I

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment