Wednesday 15 January 2014

மாட்டுப் பொங்கல் பண்டிகை!! ஒரு சிறப்பு பார்வை...


மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் அதாவது  இன்று தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை ஆகும்.


இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை  வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர். அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். மஞ்சவிரட்டு 



கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள்.


திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள்.


தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும்.


 இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.



மஞ்சவிரட்டு ஜல்லிகட்டு அல்லது ஏறுதழுவுதல் அழைக்கப்படுகிற இந்த தமிழரின் வீர அல்லது வீம்பு விளையாட்டுகு வாந்தது சோதனை

சிறுவனாக இருந்தபோதெல்லாம் நான் மாடுபிடி விளையாட்டு நடைபெறும் திடலுக்கு சென்று அங்கு மாடு பிடிக்கிறேனோ இல்லையோ நான் மாட்டை தொடுவது பிறகு காலபோக்கில் மாடுபிடி தயராகியது என்பது பழம் கதை. ஆனால் இன்று இந்த உச்சநிதிமன்ற நீரழிவு அல்லது இதய நோயாளிகள் அல்லது சாம்பார் சாதம் சாப்பிடுபவர்கள் இவர்கள் எல்லாம் கூடி கருப்பு துணியை போத்திக்கொண்டு நம்மள படுத்துற பாடுயிருக்குதே எப்பா சாமி தாங்கள.



கம்புகட்டி பின்ன மருத்துவர் பிறகு அவசரகால ஊர்தி பின்னாடியே நர்சு கம்பவுண்டர் வட்டாச்சியார் தீய்யணைப்பு துறை இதெல்லாம் போதாதுன்னு காவல்துறை இவங்கஅடிக்கிற கொட்டமே தாங்கள இதுல இவிங்க சும்மா வருவாங்களா எதவாது கொடுக்கனும் இல்லன்னா சாமி மலையெறாது.

குண்டுபோட்டு கொல்லுவானுங்க ஆனா மனிதஉயிர்களை விலங்கினங்களை சித்ரவதை செய்யக்குடாது என்று சொல்லி ஆடு,மாடை அறுப்பானுங்க ஏன்னா என்விட்டை சுத்தப்படுத்தி அடுத்தவிட்டுலா குப்பை கொட்டுவது சுத்தம் என்ற வகையறாதனே



இப்படியா நாம் பாங்கேற்பாளராக இருந்த நம்முடைய பண்பாட்டு விழுமியங்கள் இப்போது பார்வையாளராக மாறும் (பார்பணிய பண்பாடாக) காலம் இந்த பார்பணிய நீதிமன்றங்கள் நம் பண்பாட்டை சுத்தமாக துடைக்குமும் முற்ச்சி தொடங்கி அரங்கேறுகிறது..


பாங்கேற்ற இப்படியிருந்த நம்ம பண்பாடு இப்ப நாரப்போகுது நாம் வெயில் பிரதேசத்து மனிதர்கள் நமது மொழி நாம் பயண்டுத்துவது என்பது வாயினை அகலமாக திறந்த உச்சரிப்போம் ஆனால் ஆங்கிலம் அல்லது வடமொழியினை நாம் "ஸ்"க்ஷ"ஷ்" போன்று பயன்படுத்துவதில்லை...


ஆனால் இந்த சாம்பார் சட்டிகள் மரநாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டு ஜல்லிக்கட்டை நிறுத்தவேண்டும் என்கின்றனர் இவாலயெல்லாம் என்ன பன்றது சொல்லுங்க நாம் உணவுஎன்பது தை மாதத்திற்கு பிறகு நாம் திருவிழாக்கல் கேளிக்கைகள் என்று கொண்டாடுகிறோம் ஆறுவடை செய்து உழைப்பு முடித்து நாம் கோவில் திருவிழாக்கள் மற்றும் வீட்டில் நடக்கும் கால்யாணம்,காதுகுத்து இதுபோன்ற மற்ற மற்ற விசேசங்கள் செய்ய ஆயத்தமாவோம்....


இவ்வாறு தொடர்கையில் நமது தினவு போன்றவைகள் கூடுகிறது இதற்காக உறுவானதுதான் ஜல்லிகட்டு அதில் சிலர் மரணிக்கிறார்கள்தான் ஆனால் ஒட்டுமொத்த சமுகமும் அழிவதில்லை
இவைகளில் பெரும்பாளும் உள்ளுர் அதிகாரங்கள்தான் செயல்படும் இவைகளை நீக்கும் அல்லது குலைக்கும் பொருட்டு அரசு அரசின் அடிநாதமாக செயல்படும் பார்பணிய பண்பை கொண்ட சட்டமானது உள்ளுர் அதிகாரத்தையும் சிறு தெய்வ வழிபாட்டினை ஒருமுகமாக கொண்டுவரவும் கோயில்களில் கிடவெட்டகூடாது என்பன போன்ற பல புதிய ஏற்பாடுகளை நம்மை அறியமலே தினிக்கிறது நாமும் பலியாகிறோம்


ஆகாவே நாம் நம்முடைய பங்கேற்கும் பண்பாட்டிணை கண்டுனர்வது காப்பது போராடுவது என்பன செய்யவேண்டியிருக்கிறது.
நாம் பார்க்கும் பண்பாட்டிற்கு மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம் இந்த உளவியலானது நம்மை நடிகரை கொண்டாடசொல்கிறது . அனிதி நடக்கும்போது வாய்முடி மொனியாகிறோம். குறுக்குவழியில் காரியம் சாதிக்க முயல்கிறோம். கடின உழைப்பை மறந்த நாம் உடலில் பல்வேறு உபாதைகளை பெற்றவராகிறோம். மருத்துவ செலவினங்களுக்காக செர்பவர்களாகி பதுக்கல்காரர்களாக மறு அவலத்தில் அமிழ்கிறோம் இயற்கையை புரிந்துகொள்ளமல் சீரழித்து சுரையாடுகிறோம் வாழ்வின் உண்னதத்தை மறுத்து நுகர்வில் விழ்ந்து விழ்ந்து...... 

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment