Tuesday 11 June 2013

இலங்கைத் தமிழர்களுக்கு கமல்ஹாசன் ஆற்ற வேண்டிய கடமை!! ஒரு சமூக பார்வை..

உலக அரங்கில் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்த பல தமிழர்களில் ஏன் இந்தியர்களில் ஒருவரான நமது கமல்ஹாசன் ஆற்ற வேண்டிய  சேவை  பற்றிய பதிவு... பணிகள் 

டெல்லிக்கு ராஜாவானாலும் பாட்டிக்கு பிள்ளைதான் என்று நமது ஊரில் ஒரு பழைய மொழி உண்டு. அது போல் என்னதான் உலக கலைஞர்கள் போற்றும் வகையில் இருந்தாலும் பாவம் தமிழக அரசியல் புரியாமல் வளர்ந்து விட்டார், விஸ்வரூபம் திரைப்படத்தின் பிரச்சினைகளை நாம் எளிதில் மறந்து விட முடியாது இது ஒரு சினிமாக்காரனுக்கு  வந்த பிரச்சனை அல்ல சமுதாயத்தின் ஜனநாயகத்திற்கு ஏற்ப்பட்ட அவலம், உலகம் சுற்றும் ஒரு கலைஞனுக்கு சொந்த வீட்டில் மரியாதை இல்லை,  என்ன 

ஒரு முறை குட்டி பத்மினி என்று ஒரு நடிகை இருந்தார் அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது அப்போது அந்த விருதை அவர் மேடையில் சென்று ஜனாதிபதி கையால் பெற்ற போது அவர் குட்டி பத்மினியிடம் நீங்கள் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்று வினவி உள்ளார் அதற்க்கு நான் தமிழகத்தை சேர்ந்தவர் எனது இவர் கூறிய கணமே கமலஹசனின் மாநிலம் தானே என்று அந்த ஜனாதிபதி கேட்டார், இன்றும் கூட விழுந்தால் அருவியை விழ வேண்டும் என்பதற்கு ஏற்ப விஸ்வரூபம் பட பிரச்சனை மூலமாக மத்திய அரசின் தணிக்கை குழுவே புதிய சட்ட திருத்தம் கொண்டு வருவது பற்றி ஆலோசித்து வருகிறது.

 நாளை இது போன்று எந்த திரைப்படத்தயும் மத்திய அரசு தணிக்கை சான்றிதழ் கொடுத்த பின்பு யாரும் தடை செய்ய முடியாது என்பதுதான் இந்த சட்ட திருத்தம்,  இப்படி சட்டத்தையே மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்த கமல் ஹாலிவூட் புகழுக்காக ஏங்குவது ஏன் என்றுதான் புரியவில்லை.ஒரு விதத்தில் பார்த்தால் அது தவறும் இல்லை ஏன் என்றால் பல  தொடுவதுதான் ஒரு கலைஞனின் வேலையாக இருக்க முடியும், இன்று நீங்கள் தீவிரவாதத்தை கையில் எடுத்திருக்கிறீர்கள் அதாவது தீவிர்வவத்ம் பற்றி ஏதோ சொல்ல விரும்புகிறீர்கள் தவறில்லை.ஆனால் உழைத்து சம்பதிட்ட பணத்தில் 95 கோடியை செலவு செய்து அமெரிக்க ஆப்கானிஸ்தான் படங்களை தயாரிக்கும் நீங்கள் யார் வாயால் புகழப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள் 

இலங்கை பிரச்சனையில் கமல்ஹாசன்  

நமது தொப்புள் கோடி உறவுகள் இலங்கையில் தவித்து கொண்டு இருக்கிறார்கள் அங்கு காணாத ஒரு அநியாயம் உலகில் எங்கும் இல்லை அதைப்பற்றி உங்கள் திரைப்படங்களில் நீங்கள் வாய் கூட திறக்காதது திகைக்க வைக்கிறது, இலங்கை பிரச்சனையை சொன்னால் உங்கள் உலக பயணம் செல்லுபடி ஆகாமல் போகல என்று கூட நீங்கள் யோசித்திருக்கலாம் தீவிர வாதத்திற்கு சவுக்கடி கொடுக்கும் திரைப்படத்திற்கு அமெரிக்க அரசே நிதி உதவி செய்கிறது எனும் செய்தியை கேள்வி பட்டிருக்கிறோம். 

அப்படி நீங்கள் உங்கள் சொந்த செலவில் தமிழர்களின் அவல நிலையை உலகிற்கு எடுத்து உரைத்திருந்தால் அமெரிக்க போன்ற நாடுகளின் ஆதரவு நமக்கு கிடைக்க ஒரு சிறு பொறியாக நீங்கள் பயன் பட்டிருக்க்கலாமே சேனல் 4 தொலைக்காட்சி காட்டிய உண்மை நிகழ்வுகளோடு ஐ நா வரை உங்கள் பயணமும் கை கோர்திருக்குமே ஐ நா வும் உன்னை அழைக்கும் என்ற தசாவதார பாடல் வரிகளுக்கேட்ப்ப உண்மையில் உல க நாயகன் என்று உங்களை நிரூபிக்கும் கட்டமும் வந்திருக்குமே, கருப்பர்கள் முதல் ஹிரோஷிமா வரை தங்களுக்கு நேர்ந்த அவலங்களை உலக சினிமாவாக பாதிக்கப்பட்டவர்களால் காண்பிக்க பட்டுள்ள  போது நீங்களும் நமது பிரச்னையை எடுத்து சென்றிருக்கலாம்.


உங்களுக்கு  வேண்டுகோள்!!

இந்தியாவில் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் உள்ள மக்களுக்கு ஈழ தமிழர்களின் பிரச்சினை பற்றிய விபரங்கள் இன்னும் சரியான முறையில் சென்றடையவில்லை ஆகவே உங்கள் திரைப்படத்தின் ஊடாக வெளி வந்தால் பலகோடி இந்திய மக்களுக்கு தெரிய சந்தர்ப்பம் உள்ளது .  இன்னமும்  உங்களுக்கு அவகாசம் உள்ளது. ஈழம் பற்றி என்னுடைய கதை உள்ளது.
ஒரு சில தகவல்களை கூறுகிறேன்.உங்களுக்கு  பிடித்தால்  என்னை தொடர்பு கொள்ளவும்.

படத்தில் உங்களுக்கு  மூன்று  ரோல்கள்!!
1, திலீபன்- இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக முதலில்  குரல் கொடுத்த திலீபன் (20 நிமிடம்), 
2, இந்திய கடற்படை அதிகாரியாக -தமிழ் நாடு மீனவர்களை காக்கும் பிகார் மாநிலத்தை கொண்ட இந்திய        கடற்படை அதிகாரி (30 நிமிடம்).
3,இலங்கையில் நடந்த இனப் படுகொலையில் பங்குள்ள போர்க் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்பட  போராடும்  அதிகாரி .


சார் உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் காரணம் இலங்கை தமிழர்களின் உண்மைசன்பவ்களை வெளிக்கொண்டுவருவதே உங்கள் படைப்ஆகட்டும்.

சமீபத்தில் ஊழல் நிறைந்து சைனா எண்டு அமெரிக்க விடுத்த ஒரு அறிக்கைக்கு பதில் அளித்த சீனா  ஜாக்கி சான்  அமெரிக்கா போன்ற ஊழல் நாட்டை பார்க்க முடியாது என்று பதில் அளித்துள்ளார் இத்தனைக்கும் பல ஹாலிவூட் படங்களில் சக்கி சான் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதை ஒரு ஆர்யாவிடமோ அமீர்கானிடமோ கூறிக்கொண்டிருக்க முடியாது ஏன் என்றால் அவர்கள் உலக நாயகன் கிடையாது. சர்வதேச அரங்கில் கால் பதித்த ஒரு தேசியவாதகலைஞநிடம்தான் கூற முடியும், அஸ்கர் மேடையில் தமிழுக்கு பெருமை சேர்த்த ரகுமான், இலங்கை பிரச்சனையை ஒரு குழந்தையை மையமாக வைத்து எம் கண்களை நிரம்பச்செய்த மணிரத்னம் இவர்கலோடு வாழும் மண்ணில் பிறந்த ஒரு மகா கலைஞனாக இருக்கும் நீங்கள் உங்களுக்கு இந்த பொறுப்பும் இருப்பதை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment