Wednesday 20 March 2013

சுயவேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் இலவச பயிற்சி நிலைய முகவரிகள்!!!

பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களுக்கு பயிற்சி.



 புதுதில்லி இந்தியஅரசு கைவினைப் பொருட்கள் வளர்ச்சி  ஆணையகமும், பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியும் இணைந்து டெக்ஸ்டைல் துறையில் கைவினை கலைஞர்களின் திறமையை மேம்படுத்தவும் நவீன இயந்திர தொழில் நுட்பத்தினை அறிமுகப்படுத்தும் நோக்கமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினை கலைஞர்களுக்கு குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சி வகுப்புக்கள் முறையே ஒரு மாதம் மற்றும் நான்கு மாத கால பயிற்சி அளித்து வருகின்றது. இந்த பயற்சியில் டெய்லரிங், எம்ராய்டரி, கம்பியூட்டர் கொண்டு ஆடைகள் வடிவமைக்கும் முறை(CAD) , பிரிண்டிங் என்று பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது கலைஞர்களுக்கு கூலி இழப்பு தொகையாக மாதம் ரூ2000/=  அளிக்கப்படுகிறது. மேலும் கைவினை கலைஞர்களுக்கான அடையாள அட்டை, மருத்துவக் காப்பீடு , மற்றும் பயிற்சிக்கான சான்றிதழும் பயிற்சியின் முடிவில் வழங்கப்படுகிறது.

இப்பயிற்சியானது கடந்த 29-01-2009 முதல் தொடர்ந்து  ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக நடத்தபடுகிறது.

தொடர்பிற்கு
துறைத் தலைவர்,
டெக்ஸ்டைல் டிபார்ட்மெண்ட்
பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி
பீளமேடு
கோவை.641 004.
அலைபேசி எண்: 98654 34528

இப்பதிவை படிக்கும் அன்பான வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள். பிறர்க்கு இச்செய்தியை தெரிவியுங்கள் / பகிர்ந்து கொள்ளுங்கள். குறிப்பாக சுயுதவி குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்.


மசாலாப் பொடிகள் தயாரிப்பு - ஒருநாள் பயிற்சி



மிக வேகமான நகர வாழ்கையில் முன்பு போன்று மசாலா பொருட்களை வறுத்து அரைத்த காலம் முடிந்துவிட்டது. இன்று எல்லாவற்றிற்கும் பொடி என்ற நிலைமை பொதுவாக எல்லா தென்னிந்திய சமயலைறகளிலும் காணமுடிகிறது. ஒரு சில நிறுவனங்களின் தயாரிப்புகள் தரமாக இருந்தாலும் பல தயாரிப்புக்கள் அவ்வாறு இருப்பதில்லை. பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான மசாலா மூலப்பொருட்களை வாங்கி அதனை பொடிகளாக மதிப்பைக் கூட்டி நமது உபயோகத்திற்கும், வியாபார ரீதியிலும் விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். சாம்பார் பொடி, ரசப் பொடி, கரம் மசாலாப் பொடி, எள்ளுப் பொடி, தேங்காய்ப் பொடி, கறிவேப்பிலைப் பொடி, சிக்கன் மசாலா, சில்லி சிக்கன் மசாலா, மீன் மசாலா, போன்ற பல பொடிகளை தயாரிக்கவும் பின் அதனை தரம் காண அக்மாரக் கிரேடிங் கற்றுத் தரப்படும். வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு பயன் தரும். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


வீடுகளில் போன்சாய் வளர்ப்பு - - ஒருநாள் பயிற்சி.



இந்திய பொருளாதார வளர்ச்சியில் பல புதிய பொழுதுபோக்குகள் நடுத்தர, மேல்நடுத்தர மக்களிடம் தற்சமயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று போன்சாய் வளர்ப்பு. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இவை மிக பிரபலம். இந்தியாவில் வீடுகளில் பூஜை அறை போன்று  ஜப்பான் வீடுகளில்  டோகோனோமா” (Tokonoma) என்றழைக்கப்படும் வழிபடும் இடங்களில் போன்சாய் மரங்கள் வளர்க்கப்பட்டு அவர்களது இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த அளவிற்கு அங்கு போன்சாய் பிரபலம் பெறுகிறது.

இக்கலைக்குத் தேவையான   தாவர வகை, தேவையான மண்வகை, ஊட்டசத்து, நோய், பல்வேறு வகையான வளர்ப்பு முறைகள் (Different styles of bonsai ) போன்றவைகளை தெரிந்து கொண்டால் சிறப்பாக நாமே போன்சாய் மரங்களை வளர்க்கலாம். இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


காய், கனிகளுக்கு மதிப்புக் கூட்டுதல்- ஒருநாள் பயிற்சி.



வேளாண்மை பொருட்கள் குறிப்பாக காய்கள், கனிகள் மிக விரைவாக கெட்டுவிடும். ஆனால் அதனை மதிப்புக்கூட்டி சந்தையில் விற்பனை செய்யும் போது நல்ல விலை கிடைப்பதுடன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அதிக நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்க முடியும். பருவங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் காய், கனிகளை ஜீஸ், ஜமாம், ஜெல்லி, சாஸ், கெட்சப் மற்றும் ஊறுகாய் என மதிப்பைக் கூட்டி வீட்டு உபயோகத்திற்கு எடுத்துக் கொண்டு எஞ்சியதை விற்பனை செய்து வருவாய் ஈட்ட இயலும். வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றது.  இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். 
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

அழகு தோட்டம் அமைத்தல்- ஒருநாள் பயிற்சி.



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
P. 44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506

 


காளான் வளர்ப்பு - ஒரு நாள் பயிற்சி.



தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506


காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை மற்றும் வணிகம்


உலக மயம், தாராளமயம், தனியார் மயம்  என்ற திசையில் உலக வணிகம் பயணிக்க ஆரம்பித்தவுடன் காப்புரிமை (Patent ), அறிவுசார்ந்த சொத்துரிமை (Intellectual Property Rights IPR ), பொருட்களுக்கான பூகோள பதிவுரிமை (Geographical Indications of Goods - GI) என பல உரிமைகளை தற்சமயம் பெற்றால்தான் வேளாண்மை வணிகம் செய்யமுடியும் என்ற நிலை வந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் உரிமை கோரவில்லை என்றால் ஏதோ ஒரு நாட்டில் இதற்கு உரிமை கோரி பெற்றுவிடுகின்றனர் (உ.தா. மஞ்சள், பாசுமதி அரிசி, உரிமை மீட்டு எடுக்கப்பட்ட வேம்பு ). இதில் தனிநபர் இழப்புடன் நாட்டிற்கும் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக விவசாயத்தில் நமது பரம்பரை ஞானம், இடத்திற்கேற்ற பதிவுரிமை, மதிப்பூட்டும் தொழில்நுட்பம், கருவிகள் போன்றவற்றிற்கு காப்புரிமை உண்டு. ஆனால் வழிகாட்டுதல் இன்மை, அதிக பொருட்செலவு போன்ற காரணங்களால் பொதுவாக நாம் வேளாண்மை சார்ந்த உரிமைகளை பெறுவதில்லை.

இது பற்றிய வழிகாட்டுதலுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் ஒரு துறையை ஏப்ரல் 2010 இல் உருவாக்கி கீழ்கண்ட சேவைகள் தருகின்றனர். தொடர்பு கொண்டு பயன் பெறுவோம்.

காப்புரிமை பெற்றுத்தருதல் (Patent )

அறிவுசார் சொத்துரிமை ஆலோசனை வழங்குதல் (IPR)

பூகோள பதிவுரிமை பெற்றுத் தருதல் (GI)

ஏற்றுமதியாளர்களுக்கான பயிற்சி அளித்தல்

வேளாண் வணிகம் சார்ந்த ஆலோசனை வழங்குதல்

வேளாண் பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு சார்ந்த ஆராய்ச்சி மற்றும் அறிவுரை வழங்குதல்

தொடர்புக்கு:-

பேராசிரியர் மற்றும் தலைவர்,
வணிகம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம்,
கோயமுத்தூர் – 641 003
தொலைபேசி : 0422- 6611360

மேலும் இது பற்றி அறிந்துள்ள கொள்ள :-

http://indiapatents.blogspot.com


மாடித்தோட்டம் - ஒருநாள் பயிற்சி.

பொருளாதார சீர்திருத்தங்கள்?? சட்டங்கள், காலநிலையில் வேறுபாடு, இயற்கை சீற்றம், கொள்ளையடிக்கும் இடைத் தரகர்கள், சில்லறை வணிகத்தில் கூட நுழைந்து லாபம் தேடும் பன்னாட்டு, இந்நாட்டு கம்பெனிகள், உரத் தட்டுப்பாடு என பல்வேறு காரணங்களால் சிறு ,குறு விவசாயம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியது. விளைவு சென்ற மாதம் வெங்காயம் ரூ.100/ =, முருங்கைக் காய்  ரூ.200/= என வாங்கினோம். வருங்காலத்தில் இது ஒரு தொடர் கதையாக மாறலாம். இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது நகர மக்களே!! பாதிப்பை ஓரளவு குறைப்பதற்கு நகரங்களில் மாடித்தோட்டம் ஒரு மாற்றாக அமையும் இதற்கான ஒருநாள் பயிற்சியை நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம் வழங்குகிறார்கள். பங்கேற்று பயன் பெறுவீர்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

தொலைபேசி 044 - 2626 3484; 044 - 4217 0506


மண்புழு உரம் தயாரிப்பு – ஒரு நாள் பயிற்சி.


ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்கள். அது போன்று இந்த மண்புழு உரம் தயாரிப்பு என்பது மக்கக்கூடிய சுற்றுச் சுழல் மாசுபாட்டை உண்டாக்கும் நம் வீட்டுக் கழிவுகளை நம் இடத்திலேயே மண்புழுக்களின் உதவியால் சத்துள்ள உரமாக மாற்றுவது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட உரத்தை  நமது செடிகளுக்கே இட்டு இயற்கை காய்கறிகளை நாம் உற்பத்தி செய்யலாம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள்மாணவர்கள்முதியோர்சுய உதவி குழுக்கள்மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். மிகப் பெரிய அளவிலும் வங்கிக் கடன் உதவியுடன் மேற் கொள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.
தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506


காளான் வளர்ப்பு - ஒருநாள் பயிற்சி

காளான் வளர்ப்பு வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506

வீட்டுத் தோட்டம் அமைக்க ஒருநாள் பயிற்சி.

உலகின் பல நாடுகளிலும் “வீட்டுத் தோட்டம்” பல்வேறு காரணங்களுக்காக பிரபலமாகி வருகிறது. மிக சிறத்த இந்த பொழுதுபோக்கை (Hobby) முனைப்புடன் செய்தால் உடல் ஆரோக்கியமடைவதுடன் தொழிலாக மாற்றி வருவாயையும் ஈட்டமுடியும். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். முதியோர், வீட்டிலிருப்போர், மாணவர்கள், தாவரங்களை விரும்பி வளர்ப்போர், இளவயதினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சுய உதவிகுழுவினருக்கும் இது வாய்ப்பாக அமையும்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :
பேராசிரியர் மற்றம் தலைவர்,
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்,
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040.

கிராம புறங்களில் மழை காலங்களில் இயற்கையாக காளான் தோன்றும் அவற்றை சேகரித்து உண்பார்கள். ஆனால் இன்று அவற்றை வருடம் முழுவதும் மிக சிறிய இடத்தில் மற்ற காய்கறிகளைப் போல் வளர்க்க முடியும். உணவிற்கான காளான்கள் மட்டுமின்றி மருத்துவ குணமுடைய காளான்களும் உண்டு. விலை மற்றும் தேவையின் அடிப்படையில் மிகுதியாக நகர்புறங்களில் சந்தை வாய்ப்பு உள்ளது. விரைவாக கெட்டுவிடும் என்பதால் வளர்ப்பிடம் நகர்புறத்தின் அருகில் இருப்பது நலம். அதற்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் நடத்துகிறார்கள். ஓய்வு நேரம் மட்டுமே போதும் என்பதால் வீட்டிலிருக்கும் பெண்கள், மாணவர்கள், முதியோர், சுய உதவி குழுக்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் இப்பயிற்சியை மேற்கோள்ளலாம்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி :

பேராசிரியர் மற்றம் தலைவர்
நகர்ப்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை 600 040

தொலைபேசி 044-2626 3484, 044 - 4217 0506



அழகு தோட்டம் அமைக்க ஒரு நாள் பயிற்சி.

நகரங்களில் நிலபகுதியை தாவரங்களுடன் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு எழிலூட்டி இயற்கையை மனிதனின் இரசனைகேற்ப உருவாக்கி கொஞ்சம் சுற்றுச்சுழலை காப்பாற்றும் கலை (Landscape Gardening.). இன்று மிக பிரபலமாகி வரும் கலை. மிக எளிதாகவும் பொருளீட்ட உதவுகிறது. இதற்கான ஒருநாள் பயிற்சியை சென்னையில் நடத்துகிறார்கள்.


தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி.

பேராசிரியர் மற்றும் தலைவர்
நகர்புறத் தோட்டகலை வளர்ச்சி மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்
44, 6 வது அவென்யூ அண்ணா நகர்,
சென்னை - 600 040

தொலைபேசி : 044 - 2626 3484,  044 - 42170506


இதில் சில ஆச்சரியங்களையும் அனுபவித்திருக்கிறேன். இந்து நாளிதழில் “ஸாமியா” என்ற பெரிதாக வளர்ந்த செடி ரூ1000/= என்று படித்தேன்.
நாட்டில் இவ்வளவு விலை கொடுத்து வாங்க ஆட்கள் இருக்கிறார்களா என்ற எண்ணம். சென்ற வருடம் கேரளா சென்றிருந்த போது அதனையும் முறியடித்தது மிக சிறிய “அக்லோனிமா” என்ற செடி. ரூ.5000/= என்ற விலையுடன் விற்பனைக்கு இருந்தது.

இந்தியாவில் தான் இருக்கிறோமா ? என்று எண்ணினேன். உங்களுக்கும் என் எண்ணம் போன்று தோன்றிருக்கும். எனவே இந்த எழிலூட்டும் கலை ஆச்சரியங்கள் நிறைந்த துறை.

மரச்சாகுபடி மற்றும் தரிசு நில மேம்பாடு - ஒரு நாள் விழிப்புணர்வு இலவசக் கருத்தரங்கம்

பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் ) பயோடெக்னாலஜி துறை

மற்றும்

சேசாயி காகித ஆலை ஈரோடு

இனைந்து நடுத்தும் ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் . மரசாகுபடியின் முக்கியத்துவம், பண்ணைக் காடுகள் , தரிசுநிலத்தில் சவுக்கு சாகுபடி வெற்றிக் கதை, மரச் சாகுபடிக்கு வங்கிக் கடன்கள் போன்ற முக்கிய தலைப்புக்களில் வல்லுனர்கள் பேசவுள்ளனர். விவசாய பெருங்குடிமக்கள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மிக உபயோகமாக இருக்கும்.

தலைப்பு : மர சாகுபடி மற்றும் தரிசுநில மேம்பாடு
இடம் : டெக்ஸ்டைல் செமினார் ஹால், பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி (சத்தியமங்கலம் )
நாள் :
நேரம் : காலை 9.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
அனுமதி : இலவசம்.

முன்பதிவிற்கு :

முனைவர். N.S. வசந்தி
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 94437 74447, 97506 21289

முனைவர். G.S. முருகேசன்
உதவிப் பேராசிரியர்
பயோடெக்னாலஜி துறை
பண்ணாரி அம்மன் தொழில் நுட்ப கல்லூரி
சத்தியமங்கலம்.- 638 401
தொலைபேசி :04295-221289 Extn 580
அலைபேசி : 97151 18120

திரு. சண்முகம்
தலைவர் (சுற்றுச் சுழல் )
சேசாயி காகித ஆலை
ஈரோடு
அலைபேசி : 94433 40236

ஓர் வேண்டுகோள் : உங்களுக்கு தெரிந்தவர்களுடன் இச் செய்தியை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் 


பயிற்சி நிலைய நிர்வாகக் கட்டிடம் 
கோவை - மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள பெரியநாயக்கன்பாளயத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் புதுப்புதூர் பயிற்சி நிலையம் உள்ளது. Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் என்ற பெயரில் 2.5 ஏக்கர் நிலத்தில் மரக் கூட்டங்களுக்கிடையே அமைதியான சுழலில் இங்கு இயங்கி வருகிறது.

தொடங்கப்பட்ட ஆண்டு : 1991
இதுவரை பயிற்சி பெற்றவர்கள் : 11,721
தொழில் புரிவோர் : 6678

திரு. K. மோகன் (இயக்குனர்)

உழவர் பயிற்சி நிலையம்

தையல் பயிற்சி பெறும் பெண்கள்

இந்த பயிற்சி நிலையத்தில் பயின்ற இளைஞர்கள் இரவு பள்ளி நடத்தி கடந்த 10 வருடங்களாக ஏழைக் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டில் உதவி வருகிறார்கள். உழவர் பயிற்சி நிலையமும் அமைந்துள்ளது. தேர்வில் தோற்றவர்கள், படிக்க வசதியின்றி மேல் படிப்பிற்கு செல்லாதவர்கள், பயிற்சியின்றி குறைந்த கூலிக்கு வேலை செல்வோர் என்று நாம் சந்திக்கக் கூடிய இள வயதினர் இந்த காலக் கட்டதில் சரியான வழிகாட்டுதல் இன்றி விரக்தியில் இருப்பார்கள். இது சரியான தருணம் என்று எண்ணுகிறேன் இவர்களை கண்டுபிடியுங்கள், உதவிடுங்கள், ஊக்கபடுத்துங்கள்.

திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020

தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185



கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் - (1) 

கிராம வாழ்வாதாரம் சுத்தமான நிலம், நீர் காற்று. உலகமயம், தாராளமயம், லாபம் மட்டும் என்ற மாய பொருளாதார கோட்பாட்டில் அடிப்படை வாழ்வாதாரங்களை பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டு நிறுவனங்களும் போட்டிபோட்டு அழிப்பதோடு பெரிய மலைகளையே கூட விழுங்குகின்றனர். விளைவு கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கி வருகிறார்கள், பழங்குடியினர் நகரத்திற்கு வருவதை தவிர்த்து கடவுளாக வணங்கும் மலைக்கும் மண்ணுக்கும் போராடி உயிரை இழக்கிறார்கள். இது போன்ற நிறுவனங்களிடம் சமூக பொறுப்புக்களை காண முடியாது.


ஆனால் அத்தி பூத்தாற் போன்று சில நிறுவனங்கள் உண்மையிலேயே கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் கனரா வங்கியின் சேவை பாராட்டுதலுக்குரியது.

இலவசமாக கிராம வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை கனராவங்கிநூற்றாண்டு கிராம வளர்ச்சி டிரஸ்ட் மூலம் 26 இடங்களில் நாடு முழுவதும், தமிழகத்தில் 5 இடங்களிலும் நடத்துகின்றனர். தையல்பயிற்சி முதல் புகைப்பட கலை, கம்யூட்டர் என நிறைய பயிற்சிகள் உண்டு.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்.
தங்குமிடம், உணவு, பயிற்சி இலவசம்
வங்கிக்கடன், அரசு மானியதிற்கு உதவுதல்
வியாபாரம் / விற்பனைக்கு வழிகாட்டுதல்.
பயிற்சிக்குப் பிறகு 2 - 3 ஆண்டுகளுக்கு தொடர்பு மற்றம் ஆலோசனை

வயது வரம்பு : 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : குறைந்தபட்ச கல்வித் தகுதி 8 ம் வகுப்பு
முன்னுரிமை : அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
தாழ்த்தபட்டவர்கள்,/ பழங்குடியினர் / மிகவும் பிற்பட்ட / பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை இளைஞர்கள்/பெண்கள் பயிற்சியில் சேர முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை : வெள்ளைத்தாளில் பெயர், முகவரி, கல்வித்தகுதி,இனம், தேவையான பயிற்சி போன்றவற்றை எழுதி கல்வி இருப்பிடச் சான்றிதழ் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.


==============================
திரு. K. மோகன் (இயக்குனர்)
Dr. அம்பேத்கார் சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
புதுப்புதூர்
பெரியநாயக்கன்பாளயம் (வழி)
கோவை 641 020
தொலைபேசி எண் : 0422-2692080 .
அலைபேசி எண் : 98651 02185
===============================
திரு.R. கல்யாணகிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி வளாகம்
அசோகபுரம்
ஈரோடு.- 638 004
தொலைபேசி எண் : 0424- 2290338
அலைபேசி எண் : 98404 95745

==============================
திரு.B.M. கிருஷ்ணன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
8/10, USSS அனிமேசன் சென்டர்
சேரிங் கிராஸ்
உதகமண்டலம்.- 643 001
தொலைபேசி எண் : 0423-2446559
அலைபேசி எண் : 94442 59125
===========================
திரு. கௌரிசங்கர் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
83A, ஜான் பால் காம்பெளக்ஸ்
DMSSS பில்டிங்
நேருஜி நகர்
திண்டுக்கல் -624 001
தொலைபேசி எண் : ---
அலைபேசி எண் : 94441 89677
===========================
திரு. தர்மசீலன் (இயக்குனர்)
கனரா வங்கி கிராம சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிலையம்
15, பூமாலை வணிக வளாகம் ,
உழவர் சந்தை எதிர்புறம்
தேனி -
தொலைபேசி எண் :
அலைபேசி எண் ; 94420 21363


வலைப்பதிவர்களுக்கும் இப்பதிவைப் படிக்கும் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள் :
இச்செய்தினை உங்கள் வலைப்பூவில் இடுங்கள் அல்லது படிக்க வசதியின்றி இருக்கும் ஆர்வமிக்கவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் குறிப்பாக கிராமங்களில் இருக்கும் தன்னார்வ தொண்டு நிறவனங்கள் மற்றும் சுயஉதவி குழுக்கள்.

தன்னிறைவான கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு...



இதுபோன்று நல்ல வாய்ப்புக்கள், வசதிகள் நிச்சயம் உங்கள் பகுதியில் இருக்கும். நீங்கள் அறிந்திருந்தால் பதிவிடுங்கள் (எனக்கும் தெரிவியுங்கள்). ஆரோக்கியமான தன்னிறைவு கிராமங்களை உருவாக்குவோம்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



2 comments:

  1. our village is kariapatti, here we does not have any self employment course, I try to start a new development for our village pls help me

    ReplyDelete
  2. our village is kariapatti, here we does not have any self employment course, I try to start a new development for our village pls help me

    ReplyDelete