Wednesday 27 February 2013

இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள்!! ஒரு சிறப்பு பார்வை ...

இன்றய உலகில் மது பாவனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக சிறுவர்கள் கூட மது பாவனைக்கு  அடிமையாகி  விட்டார்கள்.சோகம், வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் super market க்கு போய் அங்குள்ள அனைத்து ரக குடிவகைகளையும் வீட்டிற்கு கொண்டு வந்து மூச்சு முட்ட குடித்து விட்டு , மிச்சமெல்லாம் அடுத்த நாள் விடியலில் தான்.  

இவர்கள் தமக்கு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய நோய்களை கண்டு கொள்வ தாக தெரியவில்லை. இங்கு நாம் மதுவால் ஏற்பட கூடிய தீங்குகளை பார்க்கலாம்.


மது பிரியர்கள் 

  • சராசரியாக ஒருவர் ஒரு வருடத்திற்கு 152 ounces சாராயம் அருந்துகிறார்
  • அதிகமாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது Wisconsin என்னும் இடத்தில் 7 .4 %
  • Wisconsin என்னும் இடத்தில் சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் 11 .32 %
  • குறைவாக சாராயம் உபயோகிப்போர் உள்ளது West Virginia , Utahஎன்னும் இடங்களில்  2 .8 %
  • சாராயம் அருந்தி விட்டு மற்றவர்களை துஸ்பிரயோகம் செய்பவர்கள் உள்ளது North Carolina வில்  5 .97 %

வருடத்திற்கு ஒரு நபர் அதிகமாக உபயோகிப்பது ( நாடுகள் )
 

  • 526 ounces   Luxembourg  
  • 463 ounces   Ireland             
  • 397 ounces   UK                   
  • 386 ounces   France            
  • 349 ounces   Russia            
  • 291 ounces   USA                  
  • 263 ounces   Canada         
  • 256 ounces   Japan             
  • 0 .0 ounces   Iran                  
  • 0 .0 ounces   Saudi Arabia   
ஈரான், சவூதி அரேபியா வில்  மது பாவனை தடை செய்யபட்டு உள்ளது

அதிக இறப்பை சந்தித்துள்ள நாடுகள் 

  • 10 -14 %   கிழக்கு ஐரோப்பா, ரஷ்ஸியா
  • 5 -10 %    இந்தோனேசியா, வியட்னாம்
  • 5 -10 %    மத்திய, கிழக்கு அமரிக்கா
  • 2 -5 %      வடக்கு அமரிக்கா
  • 2 -5 %      தெற்கு அமரிக்கா
  • 0 -2 %     மத்திய கிழக்கு
  • 0 -2 %     மேற்கு ஐரோப்பா
  • 0 -2 %     வடக்கு ஆபிரிக்கா

பாடசாலைகளில் மது பாவனை 

  • 6 % ஆன மாணவர்கள்  மது பாவனைக்கு அடிமையாக உள்ளார்கள்
  • 25 % ஆன மாணவர்கள் எங்கே இருந்தோம், குடிக்கும் போது என்ன செய்தோம் என்பதை நினைவு படுத்த முடியாது உள்ளார்கள்.
  • 599000 ஆனோர் ஒவ்வொருவருடமும்  போதையில் உள்ள போது காயப் படு கிறார்கள்.
  • 1700 பேர் மரணத்தை தழுவுகிறார்கள்.

ஆபத்துகள்   ( 20 -30 % )

  • Oesophageal cancer
  • Liver Cancer
  • Cirrhosis of the Liver
  • Homicide
  • Epilepsy
  • Motor Vehicle Accident
HippoCampus என்கிற இடம், எங்களுக்கு குடிப்பதை நிறுத்துவதற்கான Self Control ஐ தருகிறது. அதிகமாக மது அருந்துவது Brain Cell உற்பத்தியை HippoCampusஎனும் இடத்தில் குறைக்கிறது.

குடும்பத்தில் அண்ணன், தம்பி இரட்டையர்களாக இருந்தால் , ஒருவர் மதுவிற்கு அடிமையானால் மற்றையவரும் அடிமையாவதற்கான சாத்தியம் அதிகம். இருவரும் Twins ஆக இல்லாத விடத்து இது குறைவாக உள்ளது.

நோய்களில் ஏற்பட கூடிய அதிகரிப்பு

  •  70%    Throat Cancer             
  •  80%    Colon Cancer          
  •  50%    Lung Cancer             
  • 100%    High Blood Pressure

கர்ப்பிணி தாய்மார்கள் மது அருந்துவது ( Ratio )
National : Native American =  1 : 3 

கர்ப்பிணி தாய்மார்கள் இறப்பது ( Ratio )
National : Native American  =  1 : 6 
  

நல்ல செய்தி

  1. 35 %   ஆன இருதய நோயை குறைக்கிறது
  2. 85 %   ஆன குளிரில் இருந்து எம்மை பாதுகாக்கிறது
  3. 25%    ஆன இறப்பை  குறைக்கிறது .


வாஸ்கோடகாமா, 1498 மே மாதம் கள்ளிக்கோட்டை மன்னர் சமோரினை சந்தித்தபோது, போர்ச்சுக்கீசிய மதுச்சந்தையை இந்தியாவுக்குக் கொண்டுவர வாய்ப்பு இல்லையே என்று கவலைப்பட்டார். காரணம், அப்போது இந்தியாவில் குடிப்பழக்கம் மிக, மிக அரிதாகவே இருந்தது. குறிப்பாக, மொகலாய மன்னர்கள் உண்மையான முசல்மான்களாக இருந்து, மதுவை 'ஹராம்’ செய்து இருந்தார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் மன்னர் ஜஹாங்கீர் ஆட்சியில்தான் போர்ச்சுக்கீசிய, பிரெஞ்சு நாட்டு மதுபானச் சந்தைக்கு இந்தியாவின் கதவுகள் அகலத் திறந்தன. மன்னர் ஜஹாங்கீர் விதவிதமான மது பானங்களைச் சுவைப்பதிலும் மது சுவைப்பவர்களை ஊக்குவிப்பதிலும் ஆர்வமாக இருந்தார். ஆட்சியை வழிநடத்தும் ஒரு மன்னரால் அப்போது தொடங்கி சந்தைப்படுத்தப்பட்ட மது கலாசாரம், இன்று தமிழகத்தில் அரசே மதுபானங்களை கூவிக்கூவி விற்கும் நிலைக்குக் கொண்டுவந்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களை நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது. 'குடி உயர கோன் உயரும்’ என்ற அவ்வை வாக்கை தப்பாய் புரிந்துகொண்டால் இப்படித்தான்!

இன்று உலகிலேயே மிக அதிகமாக மது குடிப்பவர்கள் இந்தியர்கள். மதுவால் ஏற்படும் சமூகப் பிரச்னையால் இந்தியா மிகப்பெரிய அழிவை நோக்கிச் செல்கிறது. அணு, மொத்தமாக அழிக்கும் என்றால், மது கொஞ்சம் கொஞ்சமாக. வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்பதுதான் அரசாங்கத்தின் குறைந்தபட்ச இலக்கு. வரும் ஆண்டுகளில் இது அதிகரிக்கும் என்றுஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். அதிகாரிகள் கோடிகளில் டார்கெட் நிர்ணயித்துக் காத்து இருக்கிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் மதுக் கடைகள், மதுக் கேளிக்கை விடுதிகளின் எண்ணிக்கை  சராசரியாக ஆறு முதல் எட்டு சதவிகிதம் வரை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துவருகிறது. 1952-ம் ஆண்டில், மது அருந்தத் தொடங்கும் இந்தியரின் சராசரி வயது 19. இன்று அது 13. பன்னாட்டு மது நிறுவனங்களின் மிகப்பெரிய 'ஹப்’பாக மாறிவிட்டது இந்தியா. மாறாக, மேற்கத்திய நாடுகளில் குடிப்பழக்கம் குறைந்து வருகிறது - பிரபல இன்டர்நேஷனல் மருத்துவ பத்திரிகையான லேண்ட்செட் சமீபத்தில் வெளியிட்ட தகவல் இது!
தமிழகத்திலோ, நிலைமை மிக மிக மிக மோசம்.  ஏழு கோடி மக்களில் சுமார் ஒரு கோடிப் பேர் குடிக்​கிறார்கள். சுமார் 49 லட்சம் பேர் தினமும் குடிக்கும் மது அடிமைகள். இதில் 13 வயது சிறுவர்களும் அடக்கம்.
அதுசரி, அப்புறம் அந்த நண்பன் என்ன ஆனான் என்று சொல்லவே இல்லையே... 'தினைக் கள் உண்ட தெளிதோல் மறவர்’ வழி வந்த அந்த நண்பன், பின்னாளில் டாஸ்மாக் சரக்கின் போதை போதாமல் எங்கோ ஸ்பிரிட் வாங்கி வந்து குடித்து செத்துப்போனான்! 
அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மோகனை ஒருமுறை யதேச்சையாக பார்த்தபோது அவனைப் பற்றிக் கேட்டேன். ''அவங்கம்மாதான் அவனை இங்க கூட்டிட்டு வந்தாங்க. குடிச்சிட்டு சுயநினைவு இல்லாம இருந்தான். இங்க வர்றப்பயும் குடிக்கணுமானு அவங்கம்மாகிட்ட சத்தம் போட்டேன். 'இங்க கூட்டிட்டு வர எனக்கு வேற வழி தெரியலைப்பா... அதான் நானே அரை பாட்டில் வாங்கிக் கொடுத்தேன்...’னு அழுதாங்க.
நாலு மணி நேரம் கழிச்சு எழுந்தவன், சுற்றிலும் பார்த்துட்டு எழுந்து ஓட ஆரம்பிச்சான். தடுத்த நர்ஸைத் தள்ளிவிட்டதில் அவங்களுக்கும் காயம். ஒருவழியா அவனைப் பிடிச்சு, பெட்டுல கட்டிப்போட்டோம். ஆனாலும், அவன் பிழைக்க அஞ்சு சதவிகிதம்தான் வாய்ப்பு இருந்துச்சு. கணையத்தை ஆல்கஹால் அடைச்சு, ஜீரண நீர் வெளியேற வழி இல்லாம அது பந்து மாதிரி வீங்கி, எந்நேரமும் வெடிக்கத் தயாரா இருந்துச்சு. இரைப்பையோட உள்சுவரான 'மியூக்கஸ்’-ல கிழிஞ்சுபோன பனியன் மாதிரி ஏகப்பட்ட ஓட்டைங்க. உள்ளே எந்த உணவும் தங்காது. கல்லீரல் 80 சதவிகிதம் அழுகிப்போயிருந்தாக்கூட அதை வெட்டி எடுத்துட்டா, அது தானாகவே வளரும் தன்மைகொண்டது. ஆனால், கல்லீரல் முழுக்க ஹெபாடிடிஸ், சிரோசிஸ் பரவி இருந்தது. பத்து நாள் இங்க பொழுதுக்கும் கத்திட்டே கெடந்தவன், ஒருநாள் தப்பிச்சு ஓடிட்டான். அப்புறம் ஏதோ ஸ்பிரிட் குடிச்சு செத்துட்டான்னாங்க...'' என்றார்.
இப்படி என் நண்பன் மட்டும் அல்ல... இன்று தமிழகத்தில் குடிநோயால் மட்டுமே தினமும் அநேகம் பேர் இறக்கிறார்கள். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் ராஜீவ்காந்தி மருத்துவ​மனையிலும் கணையம், கல்லீரல் வீங்கி, பார்வை சொருகி, பாதி மனிதனாய் வருபவர்களின் எண்ணிக்​கையும் அதிகரித்து இருக்கிறது. அதுசரி, டாஸ்மாக் ஆரம்பித்தபோது 2,828 கோடியாக இருந்த ஆண்டு வருமானம் கடந்த ஆண்டில் 18,000 கோடியாக அதிகரித்து இருக்கிறது. இதனைச் சாதனையாகச் சொல்லும் அரசு... மருத்துவமனைகளில் செத்து விழும் மனிதர்கள் எண்ணிக்கை உயரும்போதும் அதையும் சாதனையாகச் சொல்லுமா? ஆபத்தை உணராமல் அரசாங்கம் பரப்பும் வியாதியின் கோரம் என்ன தெரியுமா? 

    தெளிவோம்      மது மூலம்!
ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையில் மது தயாரிக்கப்படுகிறது. ரஷ்யாவின் ஓட்கா உருளைக் கிழங்கிலும், சீனாவின் மவுத்தாய் - ஜப்பானின் சாக்கே ஆகியவை அரிசியிலும், ஸ்காட்லாந்தின் ஸ்காட்ச் கோதுமை மற்றும் மக்காச்சோளத்திலும், ஃபிரான்ஸின் ஷாம்பெயின் திராட்சையிலும், கோவாவின் பென்னி முந்திரியில் இருந்தும் தயாராகிறது. இதுதவிர அரபு நாடுகளில் பேரீச்சம் பழத்திலும், இலங்கை, ஃபிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தென்னை, பனையின் பொருட்களில் இருந்தும் மது தயாரிக்கப்படுகிறது. கரும்பு ஆலையில் இருந்து வெளியேறும் கழிவான மொலாசஸில் இருந்து மதுவைத் தயாரிப்பது தமிழ்நாடு மட்டுமே!

மது - ஆசிட் வேறுபாடு என்ன?
மதுவுக்கும் ஆசிட்டுக்கும் வித்தியாசம் பெரிதாக ஒன்றும் இல்லை என்கிறார் இந்திய பொது சுகாதார சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் இளங்கோ. ''மீத்தைல் ஆல்கஹால் என்பது டாய்லெட் கழுவும் ஆசிட், பெயின்ட், வார்னிஷ் போன்ற பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனம்.
ஈத்தைல் ஆல்ஹகால் என்பது மதுபானங்களில் போதைக்​காக கலக்கும் ரசாயனம். இவை இரண்டும் அண்ணன் - தம்பி போலத்தான். இரண்டுக்கும் ஒரே வாசனை, ஒரே சுவை. மீத்தைல் ஆல்கஹாலை குடித்தால், ஐந்து நிமிடங்​களில் பார்வை பறிபோகும். 15 நிமிடங்களில் மூளை செயல் இழக்கும். 30 நிமிடங்களில் உயிர் போகும். இதே வேலை​யைதான் ஈத்தைல் ஆல்கஹாலும் கொஞ்சம், கொஞ்சமாக செய்கிறது. மீத்தைலுக்கு நிமிடங்கள் என்றால் ஈத்தைலுக்கு ஆண்டுகள். அவ்வளவுதான்!'' என்கிறார் அவர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment