Friday 30 November 2012

உலக எய்ட்ஸ் நாள் பற்றிய விழிப்புணர்வு பார்வை....



எ‌ச்ஐ‌வி ‌எ‌ன்ற ‌கிரு‌மியேஎய்ட்ஸ் நோய்க்குக் காரணமாகும். இ‌ந்த ‌‌கிரு‌மி ஒருவ‌ரிட‌ம் இரு‌ந்து ம‌ற்றவரு‌க்கு பரவு‌ம் ‌கிரு‌மியாகு‌ம். 

எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மி நமது உட‌‌லு‌க்கு‌ள் வ‌ந்தது‌ம், அது தனது இன‌ப்பெரு‌க்க‌த்தை செ‌ய்து உட‌ல் முழுவதையு‌ம் ஆ‌க்ர‌மி‌த்து‌க் கொ‌ள்‌கிறது.

பி‌ன்ன‌ர் இரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை சிறிது சிறிதாக அழித்து விடுகின்றன. இ‌ந்த ‌நிலையை‌த்தா‌ன் எய்ட்ஸ் நோ‌ய் எ‌ன்‌கிறா‌ர்க‌ள்.

பொதுவாக எ‌ச்ஐ‌வி ‌கிரு‌மி மனித உடலில் உள்ள எல்லா திரவங்களிலும் படிந்திருக்கிறது என்றாலும் கூட, இரத்தம், விந்து, பெண்ணுருப்புகளில் உருவாகும் திரவம், தாய்ப்பால் ஆகியவற்றின் வாயிலாகத்தான் பரவுகின்றது. 

எ‌ச்ஐ‌வி பின்வரும் நான்கு வழிகளில் ஒருவரைத் தொற்றிக் கொள்கிறது.

1. பாதுகாப்பற்ற உடலுறவு

எ‌ச்ஐ‌வி பா‌தி‌த்தவருட‌ன்ஆணுறையைப் பயன்படுத்தாமல் மேற்கொள்ளும் புணர்ச்சி, ஆசன வாய்ப்புணர்ச்சி, வாய்வழிப் புணர்ச்சி ஆகியவற்றின் மூலம்ம‌ற்றவரு‌க்கஎ‌ச்ஐ‌வி தொற்றிக் கொள்கிறது. எனவே எந்தப் பாதுகாப்பற்ற உடலுறவும் எ‌ச்ஐ‌வி தொற்றைப் பரப்புகிறது.

2. சுத்திகரிக்கப்படாத ஊசியைப் பயன்படுத்துதல்

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலோ சுத்தம் செய்யாத ஊசியை ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதன் மூலம் எ‌ச்ஐ‌வி பரவுகிறது. இதே போல் அறுவை சிகிச்சையிலும் சுத்திகரிக்கப்படாத ஆயுதங்களைப் பயன்படுத்துவதனாலும், எ‌ச்ஐ‌வி பரவுகிறது.

3. பாதுகாப்பற்ற இரத்த பரிமாற்றம்

எ‌ச்ஐ‌வி உள்ள இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் மூலம் எளிதாக பரவுகிறது.

4. பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுதல்

கர்ப்பகாலம், பேறு காலம், தாய்ப்பால் புகட்டும் காலம் ஆகிய காலங்களில் தாய் மூலம் குழந்தைக்கு எ‌ச்ஐ‌வி பரவுகிறது.

ஆனா‌ல் இத‌ற்கு த‌ற்போது மரு‌ந்துக‌ள் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு, எ‌ய்‌ட்‌ஸ் நோய‌் தா‌க்‌கிய தா‌ய்‌க்கு ‌பிற‌க்கு‌ம் குழ‌ந்தை எ‌ய்‌ட்‌ஸ் நோ‌ய் பா‌தி‌ப்‌பி‌ல்லாம‌ல் இரு‌க்க வ‌ழி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அத‌ற்கு க‌ர்‌ப்ப‌ம் உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட நா‌ள் முதலே ‌சி‌கி‌ச்சை எடு‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.உலகம் முழுவதும் 3 கோடியே 34 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 2 லட்சத்து 75 ஆயிரம் பேர் (15 வயதுக்குட்பட்ட 80,000 குழந்தைகள் உட்பட) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எச்.ஐ.வி உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள்.

தென் மாநிலங்களில் எச்.ஐ.வி., தொற்று குறைந்து வருகிறது என்ற சமீபத்திய உலக சுகாதார நிறுவன அறிக்கை, நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்துள்ளது. விழிப்புணர்வு ஒன்றே எச்.ஐ.வி., பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று உலகம் முழுவதும் அறிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதற்காக எடுத்த முயற்சிகள் பலன் தரத் தொடங்கியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. உலகம் முழுவதுமே, எச்.ஐ.வி., பரவும் வேகத்தில் குறைவு காணப்படுகிறது. ஏறத்தாழ 17 சதவீதம் குறைந்துள்ளது. பிரசவத்தின் போது எடுக்கப்படும் பரிசோதனையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 54 சதவீதம் குறைந்திருக்கிறது. அதே சமயம், இந்தியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் 39 சதவீதம் பேர் பெண்கள். ஆசியாவில் எச்.ஐ.வி., உள்ளவர்களில் பாதிப்பேர் இந்தியாவில் உள்ளனர். ஆகவே இந்தியாவில் எச்.ஐ.வி., தடுப்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

இந்த ஆண்டு உருவாக்கப்பட்ட "எய்ட்ஸ் வேக்ஸ்' எனும் தடுப்பு மருந்தும் எச்.ஐ.வி., பரவுவதை 31 சதவீதம் கட்டுப்படுத்துகிறது. இது அடுத்து 100 சதவீதம் எச்.ஐ.வி.,யை தடுக்கும் மருந்து உருவாக அடிப்படையாக அமையலாம். எச்.ஐ.வி., மனித உடலுக்குள் பல்கிப் பெருகும் பல்வேறு கட்டங்களில் ஏதாவது ஒரு கட்டத்தில் அதை செயல்படவிடாமல் தடுப்பதற்கான மருந்து தயாரிக்கும் முயற்சியில் மருத்துவ விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகின்றனர். அது வெற்றி பெறும் வரை, உலகின் மிகப்பெரும் அச்சுறுத்தலாக எச்.ஐ.வி., தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

பல்கிப் பெருகும் எச்.ஐ.வி.,: எச்.ஐ.வி., தொற்றிய பின்னர், அது மனித உடலுக்குள் எப்படி பல்கிப் பெருகுகிறது என்பதை வரைபடம் விளக்குகிறது.

1. மனித உடலுக்குள் புகுந்த எச்.ஐ.வி., வைரஸ், செல்களின் மேற்புறத்தில் "சி.டி.-4' எனும் ஒட்டிக் கொள்ளும் பகுதியை அடைகிறது. அங்கு செல்களின் "சி.சி.ஆர்.5' எனும் கயிறு போன்ற பகுதி எச்.ஐ.வி., வைரசையும் நம் உடல் செல்லையும் பிணைக்கிறது.


2. செல்லின் மேற்புறத்தில் ஒட்டிக் கொண்ட எச்.ஐ.வி., வைரசின் ஒரு பகுதி கரைந்து, செல்லுடன் அப்படியே கலக்கத் தொடங்குகிறது. எச்.ஐ.வி., வைரசுக்குள் உள்ள, அது பல்கிப் பெருகத் தேவையான மரபணுப் பொருட்களான ஆர்.என்.ஏ., மற்றும் என்சைம்கள் செல்லுக்குள் கலக்கின்றன.

3. ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தாற்போல், மனித செல்லுக்குள், அதை விட சிறிய எச்.ஐ.வி., புகுந்து அந்த செல்லை வைரஸ்கள் பல்கிப் பெருக வசதியான மையமாக மாற்றுகிறது. செல்லுக்குள் புகுந்த ஓர் இழையிலான ஆர்.என்.ஏ., இரு இழைகளுடைய டி.என்.ஏ.,வாக மாறுகிறது.


4. இந்த டி.என்.ஏ., ஏற்கனவே உடல் செல்லில் உள்ள உண்மையான டி.என்.ஏ.,வை "ஆள்மாறாட்டம்' செய்யும் பணியில் ஈடுபடுகிறது. மனித செல்லின் டி.என்.ஏ.,வில் ஒட்டிக் கொள்ளும் எச்.ஐ.வி., வைரஸ் டி.என்.ஏ., கடைசியில் மனித உடல் செல்லின் டி.என்.ஏ.,வை எச்.ஐ.வி., டி.என்.ஏ.,வாக மாற்றி விடுகிறது.

5. இந்த டி.என்.ஏ.,விலிருந்து மீண்டும் எச.ஐ.வி.,க்கான ஆர்.என்.ஏ., உருவாகிறது. இதனுடன் புதிய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகத் தேவையான பொருட்கள் ஒன்று சேர்கின்றன.

6. செல்லின் சுவரின் அருகே எச்.ஐ.வி., வைரஸ் புதிதாக உருவாகிறது. அது முழுப்பரிமாணம் பெற்ற இன்னொரு வைரசாக உருவாகிறது. செல்லிலிருந்து பிரிந்து புதிய வைரசாக இன்னொரு செல்லை தாக்கப் புறப்படுகிறது. ஒரு செல் முற்றிலுமாக அழியும் வரை அங்கிருந்து நிறைய எச்.ஐ.வி., வைரஸ்கள் உருவாகின்றன.


உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

1988-2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு "உலக எய்ட்ஸ் பிரச்சாரம்" (The World AIDS Campaign) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


உலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2010
Posted Image

தொகுப்பு மு.அஜ்மல் கான்.


No comments:

Post a Comment