Tuesday 23 October 2012

"தமிழகசூரிய சக்தி கொள்கை"-ஒரு சிறப்பு பார்வை ...


 முன்னுரை :மின்சார உற்பத்தியை பெருக்க, நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட, தமிழகசூரிய சக்தி கொள்கையை, மின் துறை முதலீட்டாளர்கள் வரவேற்று உள்ளனர். அதே நேரத்தில், அமலாக்க தேதிகள் உட்பட, பல கொள்கை முடிவுகள் தெளிவில்லாமல் உள்ளன. இவற்றை தெளிவுபடுத்த, தமிழக மின் வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இணைந்து, முதலீட்டாளர் களுக்காக ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

கொள்கையின் நல்ல அம்சங்கள்...

* இந்தியாவிலேயே முதல் முறையாக நிகர கணக்கீடு (நெட் மீட்டரிங்) முறை அறிமுகப் படுத்தப் பட்டு உள்ளது. இதன் மூலம், வீடுகளில் நிறுவப்படும் ‹ரிய சக்தி மின் தகடுகளில் இருந்து உற்பத்தி யாகும் மின்சாரத்தில், சொந்த தேவை போக, மீதம் உள்ளதை மின் வாரியத்திற்கு விற்றுவிடலாம். 

* வீடுகளில் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையும் அறிவிக்கப் பட்டு உள்ளது.

* உயரழுத்த மின்சாரத்தை பெறும் நுகர்வோர் மற்றும் சில வகையான வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது

இது, இரு கட்டங்களாக செயல்படுத்தப் படும். ட

* வரும், 2020க்குள், மாநில மின்வாரியங்கள் வாங்கும் மின்சாரத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரம், குறைந்தபட்சம், 3 சதவீதம் இருக்க வேண்டும் என, தேசிய மின் கட்டண கொள்கை கூறுகிறது

தமிழகத்தில், சில மாதங்களில், 40 சதவீதம் மின்சாரம், காற்றாலைகளில் இருந்து தான் உற்பத்தியாகிறது. இதனால், தேசிய கொள்கை கட்டுப்பாடுகளை எளிதில் கடந்துவிடலாம். இதன் மூலம், தமிழகத்தில் சூரிய சக்தி மின்சாரம் பின்தங்கிவிடும் என, கருதி, 6 சதவீதம் கட்டுப்பாடு, சாதுர்யமாக சேர்க்கப் பட்டு உள்ளது.

* இந்த கட்டுப்பாடு,சூரிய சக்தி மின் நிலையம் அமைப்பவர்களுக்கு, ஆயத்த நிலை சந்தையை உருவாக்கி, பெரும் ஊக்கத்தை தரும்.
* தமிழகத்தில், 24 மாவட்டங்களில், தலா, 50 மெகாவாட் திறன் உள்ளசூரிய சக்தி மின்சார பூங்காக்கள் அமைக்கப் படும். இது தவிர, பெரிய அளவிலான மின் பூங்காக்களும் அமைக்கப் படும். இதன் மூலம், சூரிய மின் திட்டங்கள் அமைப்பதற்கான மூலதன செலவும், பராமரிப்பு செலவும் குறைவதற்கான வாய்ப்பு உள்ளது.

* தொகுப்புடன் இணைந்த உற்பத்தியாளர்கள், 240 வோல்ட் அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்ப வசதி செய்யப் பட்டு உள்ளது; இது, வீடுகளில் நிறுவப்படும் திட்டங்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

* அதே போல், 100 கிலோவாட்டிற்கு மேல் உற்பத்தி செய்பவர்களும், 11 கே.வி., அழுத்தத்திலேயே தொகுப்புக்கு மின்சாரம் அனுப்பலாம். பெரும்பாலான கிராமப்புறங்களில், 11 கே.வி., வசதி தான் உள்ளது. இந்த கொள்கை முடிவு, திட்டங்களை பரவலாக செயல்படுத்த வழிவகை செய்கிறது.

* இதுவே, குஜராத்தில், 66 கே.வி., ஆந்திராவில், 33 கே.வி., என, நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. அவற்றை ஒப்பிடுகையில், தமிழகத்தின் கொள்கை முற்போக்காகவே உள்ளது.

கொள்கையின் குழப்பமான அம்சங்கள்....
* கொள்கை எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது, குறிப்பிடப் படவில்லை.* அதே போல், கொள்கையின் ஆளுமை எந்த ஆண்டு வரை இருக்கும் என்பதும் குறிப்பிடப் படவில்லை. இதனால், அரசியல் மாற்றங்கள் ஏற்படும் போது, கொள்கையில் நிலையின்மை ஏற்பட வாய்ப்பு உள்ளது. முதலீட்டாளர்களுக்கு இதில் சந்தேகம் ஏற்பட்டால், முதலீடு செய்ய முன்வர தயங்குவர். குஜராத், ஆந்திரா மாநிலங்களின் ‹ரிய சக்தி கொள்கையில் இது தெளிவாக குறிப்பிடப் பட்டு உள்ளது.*சூரிய மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், என்ன விலையில் மின்சாரத்தை வாங்கும் என்பது குறிப்பிடப் படவில்லை. இது கொள்கையில் இல்லாமல், மின்சார ஒழுங்குமுறை ஆணயம் முடிவு செய்யும் ஒன்றாக இருந்தால், முதலீட்டாளர்கள் தயங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

* நிகர கணக்கீட்டு முறை, வீடுகள் மற்றும் அலுவலக கட்டடங்களில்சூரிய மின் உற்பத்தி வசதி களை நிறுவுபவர்களுக்கு தான் பெரும்பாலும் பயன்படும் என்பதால், அது குறித்த மொத்த விதிக ளும் வெளிப்படையாக அறிவிக்கப் பட வேண்டும். தற்போது, இது எப்படி செயல்படும் என்பது தெளிவாக இல்லை.

* உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையில், உற்பத்தியாகும் அனைத்து, "யூனிட்'டுகளுக்கும் ஊக்க தொகை உண்டா அல்லது தேவைக்கு மிகுதியான,"யூனிட்'டுகளுக்கு மட்டும் தான் ஊக்கத் தொகை யா என்பது தெளிவாக இல்லை

* இத்தகைய உற்பத்தியாளர்களுக்கு, மூலதன மானியம் கிடைக்குமா என்பதும் குறிப்பிடப் படவில்லை. "யூனிட்'வாரியான ஊக்கத்தொகை இருந்தாலும், இத்தகைய வசதியை நிறுவுவதற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதால், மூலதன ஊக்கத்தொகை இருந்தால் தான், தனிநபர்கள் இதை செயல்படுத்த முன்வருவர்.

* கட்டாய சூரிய சக்தி மின்சார பயன்பாடு, எந்த தேதியில் இருந்து அமலாக்கப்படும் என்பது குறிப் பிடப் படவில்லை.

தெளிவுபடுத்த கூட்டம் தேவை:


சூரிய சக்திக்கான புதிய கொள்கை, ஒரு முன்னோடியான கொள்கை என்பதில் சந்தேகம் இல்லை. இதில், மூன்று ஆண்டுகளில், உற்பத்தியை 3,000 மெகாவாட் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
ஒரு மெகாவாட், சுமார் பத்து கோடி என்ற முறையில், 3,000 ஆயிரம் மெகாவாட்டிற்கு, சுமார், 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். சூரிய சக்தி உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை தொடங்குவதற்கு மற்றும் வீடுகளில் சூரிய சக்தி மேற்கூரை அமைப்புக்கு, சுமார், 20 ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும்.

* தமிழக அரசு அமைத்திருக்கும், அதிகாரமளிக்கப் பட்ட குழுவில், தொழில்நுட்ப மற்றும் பொருளாதார நிபுணர்கள் இடம்பெறவில்லை. இந்த தொழிலில் அனுபவம் உள்ள, தொழில் முனைவோர்களும் பங்கு பெற வேண்டும். அப்போதுதான், இந்த கொள்கையை செயல்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்களை முறைப்படுத்தி, வெற்றி காண முடியும்.

* சில வகையாவ நுகர்வோருக்கு, ஆறு சதவீதம், சூரிய சக்தி மின்சாரம் வாங்குவது கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆனால், அதற்கான விலை நிர்ணயம் எதையும் தெளிவாக குறி பிடப் படவில்லை.

* விடுகளில் உற்பத்தியாகும், சூரிய சக்தி மின்சாரத்தை மின் தொகுப்புக்கு வழங்கும்போது, 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து, கிடைக்க வேண்டிய மொத்த தொகை எவ்வளவு என்பதை தெளிவுப் படுத்தவில்லை.

* முந்தைய மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும்போது, "டெடா' மூலம் கட்டணம் வசூலிக்கப் பட்டது. அதே போல், தற்போது, கட்டணம் எவ்வளவு என்பதை, தெளிவுப்படுத்த வேண்டும்.* சோலார் பூங்கா அமைக்கும் போது, அமைப்பவர்களுக்கான முன் அனுபவம், என்ன என்பதையும் தெளிவுப்படுத்த வேண்டும்.

டி.பி.குமரேசன், செஞ்சுரி கன்சல்டிங் குரூப்பின், துணை தலைவர். இந்த நிறுவனம் புதுப்பிக்கத்க்க எரிசக்தி மின் திட்டங்களை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.

ஐந்து சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்'
சூரிய சக்தி மூலம், 3,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும், தமிழக அரசின், புதிய கொள்கை வரவேற்கத்தக்கது. இந்த திட்டத்தை முன்னரே செயல்படுத்தி இருந்தால், மின் பற்றாக்குறை நெருக்கடி நிலை ஏற்பட்டு இருக்காது.
உயர் அழுத்த மின்சாரம் பயன்படுத்துவோர், 6 சதவீத சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று, கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இது, ஒரு நீண்ட கால கொள்கை. இது போன்ற திட்டம், வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.
அதே நேரத்தில், குறைந்த அழுத்த மின்சாரத்தைபயன்படுத்தும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சூரிய சக்தியை உற்பத்தி செய்வதில் அதிக முதலீடு செய்வது கடினம்.

சூரிய சக்தி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஏற்படும் அதிக செலவை குறைப்பதற்கான எவ்வித திட்டத்தையும், அரசு அறிவிக்கவில்லை. இதை சரி செய்ய, விற்பனை வரியை தளர்த்தி, வாங்குபவர்களுக்கு மானியம் வழங்கி இருக்கலாம்.சாதாரணமாக, வீடுகளில், 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த, 2.50 லட்சம் ரூபாய் செலவாகும். 

இதில், 75 ஆயிரம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக அளிக்கிறது; இதற்கு விற்பனை வரி தனி.

ஒரு நாளுக்கு, 1 கிலோவாட் சூரிய ஒளி மின் கட்டமைப்பில், 5 யூனிட் வரை உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையை, புதிய திட்டம் அளிக்கிறது.அதன்படி, 1 யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் வீதம், ஒரு நாளுக்கு, 10 ரூபாய் ஊக்கத் தொகை கிடைக்கும். தொடர்ச்சியாக, 300 நாட்கள் உற்பத்தி செய்தால், ஆண்டுக்கு, 3,000 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக கிடைக்கும்.

மாநில அரசு, இதற்கான மூலதன செலவிற்கு, எவ்வித மானிய தொகையையும் அறிவிக்க வில்லை; அதிக முதலீட்டிற்கு, இந்த ஊக்கத் தொகை மிகவும் சொற்பமே. அதனால், இது எப்படி முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும், என்பது சந்தேகமாக உள்ளது. சூரிய ஒளி மின் கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான முதலீட்டு தொகை சுமையைக் குறைக்க, வங்கி அல்லது "சிட்கோ' மூலம் கடன் பெறும் வசதியை ஏற்படுத்தி, 5 சதவீத விற்பனை வரியை தளர்த்தி இருக்கலாம்.

புதிய கொள்கை நீண்ட கால திட்டம். நாள்தோறும் மின் தடையால், அவதிப்படும் பாமர மக்களுக்கு, இத்திட்டம் ஒரு அவசர தீர்வாகாது. தற்போது நிலவும், 14 மணி நேர மின் தடை மற்றும் 3,500 மெகாவாட் பற்றாக்குறைக்கு, இப்புதிய கொள்கை எப்படி அவசர தீர்வாகும் என்பது சந்தேகமாக உள்ளது. ரகுநாதன், சோல்கர் சோலார் தொழில் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர்.

எனது கருத்து :
அருமையான கருத்தாய்வு. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதை பற்றி என்னுடைய சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன்.இதற்கு முதலில் Case Study செய்ய வேண்டும், பயனாளிகள் தரம் வாரியாக, வீடுகள், வர்த்தக மையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என்று. குடியிருப்பு பகுதிகளில் சோலர் தகடுகள் பதித்து மின்சாரம் உற்பத்தி செய்ய முதலீடு, கால அவகசாம், உற்பத்தித்திறன், Sustainability - தொடர் உற்பத்திக்கு உத்திரவாதம், என்று அணைத்து அமசங்களையும் ஆராய்ந்து செயல் திட்டம் வகுத்து, உடனடியாக அறிவிக்கவேண்டும். இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமானால், ஒரு சென்னை/மதுரை  குடியிருப்புவாசி எவ்வாறு சோலர் மின்சாதனத்தை தன வீட்டில் பொருத்தி பயன் பெறமுடியும், வருமானம் ஈட்ட முடியும் என்பதை Visual முறையில் விளக்கவேண்டும்.. தமிழகம் முழுவதுமே அதிகமாக சூரிய ஒழி உள்ள பிரதேசங்கள், மற்றும் காலை எட்டு மணி முதல் மாலை ஆறுமணி வரை உச்சி வெயில் அனேக தமிழகத்தில் உண்டு. உண்மையில், இந்த திட்டத்தை சரியாக செயல் படுத்தினால் தமிழ்கள் மின்சார தன்னிறைவு பெரும்... போட்டோ வால்டாயிக் பானல்கள் சராசரி இருபத்தி ஐந்து வருடம் உழைக்கும் திறன் வாய்ந்தது. இந்த திட்டத்தினால் அதிகமான லாபங்கள் உண்டு.. ஒன்று, உங்கள் முழு மின்சார செலவும் மிச்சம். மீதம் உள்ள மின்சாரத்தை விக்கலாம்.. எல்லா வீடுகளும் மின்சாரம் தயாரித்தாலும், மீதமஅடையும் மின்சாரத்தை வியாபரச்தலங்களுக்கு விக்கலாம். உற்பத்தி அதிகமாகும்..."

முடிவுரை :மூன்று மாதத்தில் மின்தடையை நீக்கி விடுவதாக கூறிவிட்டு,கடைசியில் சூரிய மின் திட்டம் என்று கூறி, நீங்களே செலவழித்து உங்கள் மின்தடையை சரி செய்து கொள்ளுங்கள் என்று மக்கள் தலையில் கட்டிவிட்டு மக்களை ஏமாளிகளாக ஆக்கி உள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்ச் 2014 குள் அமைப்பவர்களுக்கு மட்டும் மானியம் கிடைக்குமாம் ( அதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்க வேண்டுமோ ) ஏனெனில் 2014 மார்ச்சுக்கு பின்பு பாராளு மன்ற தேர்தல் வருவதாலும் ,அதற்குள் மக்களை தூண்டி விட்டு மழை நீர் தொட்டிகள் போல் ஓரளவு அவர்களாக சரி செய்து கொள்ளட்டும் நமக்கு 40 உம் கிடைக்கும் என்பது இவர்களின் திட்டம். சரி இந்த திட்டத்திற்கு குறைந்த பட்ச ( 200w panel ) தொகையாக மானியம் கழித்தது போக ரூ 24,000 ஆகும் என்று சொல்லபடுகின்றதே கீழ் தட்டு மக்களும் ,சாமானிய,நடுத்தர மக்கள் இவ்வளவு தொகை செலவு செய்ய முடியுமா என்பதை இந்த ஆட்சியாளர்கள் எண்ண வேண்டாமா ? மழை நீர் தொட்டிகள் போல் வீணான திட்டம் போன்றே தெரிகின்றது. மேலும்  இது அமல் படுத்தப்படும்போது ஆட்சி முடிந்து விடும்... அப்புறம் அடுத்த ஆட்சியை குறை கூறி காலத்தை ஒட்டி விடலாம்.. ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.. இது எப்படி இருக்குன்னா "வரும்.. ஆனா வராது... 

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment