Sunday 26 August 2012

மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் அவலம்!! ஒரு சிறப்பு விழிப்புணர்வு பார்வை ...

 நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும்  மனித கழிவுகளை, மனிதர்களே அகற்றும் அவலம் முற்றுப் பெறவில்லை. இது, இந்திய ஜனநாயகத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கொடுமை. கடந்த 1993ம் ஆண்டு, மனித கழிவுகளை மனிதர்கள் அப்புறப்படுத்த, மத்திய அரசு தடை விதித்தது. இதுபற்றிய விழிப்புணர்வை, போர்கால அடிப்படையில், விளிம்பு நிலை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என, அறிவுறுத்தியது. ஆனால், அதுபற்றிய எந்த விழிப்புணர்வும், இன்று வரை ஏற்படுத்தப் படவில்லை.


 நாகரீக உலகை குற்ற உணர்வுகளால் வெட்கி தலைகுனிய வைக்கும் சம்பவங்கள் இவை!சந்திரனுக்கு செயற்கைகோள் அனுப்புகிறோம். இன்னொரு கிரகத்திற்கு விண்வெளி ஆய்வு செய்ய ஏவுகணைகளை அனுப்புகிறோம் அடேங்கப்பா...என்று இன்னும் எவ்வளவோ வியக்கவைக்கும் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் வாழ்கிறோம்..!ஆனால்இன்னும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய - கொடூர விஷவாயு சாக்கடைக்குள்- மனிதனை இறக்குகிறோம்.அதில் அவன் மரணித்து சடலமாவதை மரத்துப்போன இதயத்துடன் கடந்து போகிறோம்!
தேசத் தந்தை மகாத்மாகாந்தி அன்றே இதை தேசத்தின் அவமானம்’ என்று சொல்லி குமுறினார். ஆனால் சுதந்திரம் என்பது இந்தியா என்ற நிலப்பரப்புக்குத்தான் கிடைத்தது போலும்! அது 65 ஆண்டுகளாகியும் இந்தியாவில் இந்தப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சுமார் எட்டு லட்சம் தலித்துகளுக்கு கிடைத்தபாடில்லை. கடையர்களிலும் கடைக்கோடி மனிதர்களாய் கருதப்படும் - கர்மயோகிகளுக்கு நிகராக கருதப்படவேண்டிய- இம் மனிதர்கள் தமிழகத்தில் சக்கிலியர்களாகவும்ஆந்திராவில் ஆதி திராவிடர் எனும் அருந்ததியினராகவும்கேரளாவில் தோட்டி என்றும்கர்நாடகாவில் மதியா என்றும் வட இந்தியாவில் சாவாய் கர்மாச்சாரிஸ் என்றும் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்.


ஆங்கிலேய அடிவருடிகளகவே இருக்கும் திராவிட சித்தாந்திகள்: திராவிட சித்தாந்திகள், விற்பன்னர்கள், முனைவர்கள், பிரகஸ்பதிகள், குருக்கள் முதலியவர்கள் சமநீதி என்றெல்லாம் மேடைகளில் வாய்கிழிய பேசி 60 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வந்துள்ளனர். 1960களில் அம்பேத்கார் என்றல் யார் என்று கூட தெரியாத இந்த கூட்டங்கள், பிறகு அம்பேத்கர் பெயரை வைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்ய ஆரம்பித்தன. ஆனால், கொள்கை அளவில் கூட அம்பேதகரைப் பின்பற்றாத இக்கூட்டங்கள், சட்டரீதியில் கூட மனித மலத்தை அள்ளும் கொடிய நிலையை மாற்ற முன்வரவில்லை. ஆங்கிலேய அடிவருடிகள் என்று முன்பு, இந்த திராவிடக் கூட்டாத்தாரை சொல்லியதுண்டு. ஆனால், அது உண்மைதான் என்று சுதந்திரம் பெற்ற பின்னரும், திராவிட சித்தாந்திகள் கடைபிடித்து வருகின்றனர்.


திராவிடத்தலைவரின் அணுகுமுறை: ஆகஸ்ட் 2008ல், திருமதி சௌத்ரி என்ற தேசிய சபாயி கர்மச்சாரிகளுக்கான கமிஷனின் தலைவர் (Ms. Chowdhary, Chairperson of National Commission for Safai Karamcharis) சென்னைக்கு வந்திருந்தபோது, தமிழ்நாடு, இன்னும் இந்த அவலநிலையை அழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே என்று வருத்தப்பட்டார்[1]. அப்பொழுது கருணாநிதிக்கு போபம் வந்து, வழக்கம் போல அம்மையால் விவரங்களை அறியாமல் பேசிவிட்டார் என்று, புள்ளிவிவரங்களைக் கொடுத்து மறைக்கப் பார்த்தார்[2]. அதுவும் எடுபடாமல் போகவே, அருந்ததியருக்கு ஒதுக்கீடு என்று ஆரம்பித்தார். ஆனால், அதிலும் பங்கை வெட்டி குஸ்லீம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏமாற்றினர். இதன் மூலம், மலம் அள்ளும் பிரச்சினை மறைக்கப்பட்டு விட்டது[3].

1] Santosh Chowdhary, Tamil Nadu employing huge number of scavengers”, in “The Hindu” dated 23-08-2008, see at:http://www.hindu.com/2008/08/23/stories/2008082360661000.htm

[2] துப்புரவு பணியாளர் கமிஷன் குற்றச்சாட்டு :உண்மையில்லை என முதல்வர் மறுப்பு, ஆகஸ்ட் 24,2008,00:00 IST
http://www.dinamalar.com/Arasiyalnewsdetail.asp?News_id=3257&cls=row3&nc at=TN

[3] VEDAPRAKASH, Why “Dravidanadu” promotes manual scavenging?
http://vedaprakash.indiainteracts.in/2008/08/23/why-%E2%80%9Cdravidanadu%E2%80%9D-promotes-manual-scavenging/  முழுவிவரங்களுக்கு, என்னுடைய கீழ்காணும் கட்டுரையை வாசிக்கவும்


சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு (2008-2011): மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்தை நீக்க போதிய நடவடிக்கைகளை எடுக்காமல் மத்திய அரசு அலட்சியம் செய்து வருவதாக கூ‌றி கண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள சென்னை உயர் நீதிமன்றம், இதனை தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை ஆகஸ்‌ட்டி‌ல் கொண்டுவராவிட்டால் பிரதமர் அலுவலக அதிகாரியை ‌நீதிம‌ன்ற‌த்தில் ஆஜராக உத்தரவிடுவோம் என்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.


விருகம்பாக்கம் நாராயணன்தொடுத்த வழக்கு (2008): சாக்கடை அள்ளும் பணிகளுக்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற‌ம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை சரிவர அமல்படுத்தவில்லை என்று கூறி மத்திய, மாநில அரசுகள் மீது விருகம்பாக்கத்தைச் சேர்ந்த நாராயணன் எ‌ன்பவ‌ர் ‌‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கு தொடர்‌ந்தா‌ர். சாக்கடை கால்வாய், கழிவுநீர்த் தொட்டி ஆகியவற்றில் இந்தப் பணிக்காக மனிதர்கள் இறங்கும்போது விஷ வாயு தாக்கி பலர் உயிரிழப்பதால் எந்திரங்கள் மூலம் பராமரிப்புப் பணிகளை நடத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். கிடப்பில் போடப்பட்டதுப் போல இருந்த வழக்கை, இப்பொழுது தூசி தட்டி எழுப்பியது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அதாவது, நீதிமன்றங்கள் சில வழக்குகளில் தினம்-தினம், ஏதோ அவைதான் முக்கியம் போல எடுத்துக் கொள்கின்றன, இல்லையென்றால், இப்படி வருடக்கணக்காக அமைதியாக இருக்கின்றன.


விஷ வாயு தாக்கி இறந்த துப்புரவு பணியாளர்கள் குறித்து, எந்த புள்ளி விவரமும் இல்லை. பணியின் போது இறக்கும் பணியாளரின் வாரிசுதாரர் வேலை பெறுவது, தென் மாநிலங்களில் அதிகளவில் நடக்கின்றன. இதிலிருந்து, அதிக துப்புரவு பணியாளர் இறப்பது உறுதிபடுத்தப் படுகிறது.துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சிறப்பு சலுகைகள் அனைத்தும், அரசாணைகளில் மட்டுமே உள்ளது; நடைமுறைக்கு வருவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்ந்த ‌‌நீதிமன்றஅவமதிப்புவழக்கு (2010):  இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரிக்கின்றனர். இந்த அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட்டில் தமிழக அரசு அதிகாரிகள் சிலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். மனித துப்புரவு பணியாளர்கள் நியமனம் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுமான தடுப்புச் சட்டத்தில் (மத்திய அரசுச் சட்டம்) சில திருத்தங்களை கொண்டு வந்தால்தான், மனிதர்களை அதில் பயன்படுத்தாமல் இருக்க தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்படியென்றால், திராவிட அறிவு ஜீவிகள் அத்தகைய திருத்தங்களைக் கொண்டுவராமல் என்று செய்து கொண்டிருந்தன? பாராட்டு விழாக்கள் நடத்திக் கொண்டு, சல்லாபம் செய்து கொண்டிருந்தனரா?

மத்திய அரசின் பதில்: இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழ‌க்க‌றிஞ‌ர், அந்த சட்டத்தில், 2 மாநில அரசுகள் பரிந்துரைக்கும் பட்சத்தில்தான் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரமுடியும் என்று சுட்டிக்காட்டினார். அப்படியென்றல், ஏன் திராவிட அரசு, அம்பேத்கரைப் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்யும் திராவிரட இனமான போராளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்? “மத்தியிலும்-மாநிலத்திலும் நமதாட்சி” என்று மார்தட்டி பேசிக் கொண்டிருந்தனரே, அப்பேச்சு அதற்கு?  இந்த நிலையில் ‌நீ‌திம‌ன்ற அவமதிப்பு வழக்கில் மற்றொரு மனுவை நாராயணன் தாக்கல் செய்தார். அந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு எந்த முக்கியத்துவத்தையும் காட்டவில்லை. இதற்கு ஏதுவாக சட்டத்திருத்தம் கொண்டுவராதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது.


தாமதிக்கும் அரசுகள்,  அரசு-அதிகாரிகள், மற்றவர்கள்: எனவே மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயலாளர் இந்த வழக்கு விசாரணைக்காக ஜூன் 23ஆ‌ம் தேதி, 2011 ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் நேரில் ஆஜராகி, எப்போது அந்த திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும்? என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகத்தின் செயல‌ர் ஆஜராகவில்லை. விசாரணை தேதியில் ஏற்பட்ட குழப்பத்தால் செயலாளரை ஆஜர்படுத்த முடியவில்லை என்று கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எம்.ரவீந்திரன் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தர‌வி‌ல், இந்த வழக்கு 29ஆம் தேதிதான் விசாரணைக்கு வருவதாக நினைத்ததாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார். எனவே வழக்கு தொடர்பான ஆயத்தங்களை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


பிரதமர் அமைதியாக இருக்கிறாராம்! ஆனாலும் இணை செயலாளர் நேரில் ஆஜரானார். செயலாளர் தரப்பில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சாக்கடை பராமரிப்பு பணிகளுக்கும், மனித கழிவுகளை அகற்றுவதற்கும் மனிதர்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்காக தகுந்த சட்டத் திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்து பிரதமருக்கு தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் கடிதம் எழுதிய பிறகு, இந்த விவகாரத்தில் பிரதமர் தனிக்கவனம் செலுத்துவதாக கூறப்பட்டுள்ளது. பாவம் இப்பொழுதுள்ள பிரதமர் அவர் என்ன செய்வார்? அவர் ஒன்றும் செய்யமாட்டார், அதாவது சோனியாவைக் கேட்காமல் அல்லது சோனியா ஆணையிடாமல் ஒன்றும் செய்ய மாட்டார் என்று தெரியும். பிறகு ஆச்சரியப் படவோ, கோபப்படவோபிதில் ஒன்றும் இல்லை.


ஆகஸட் 22ம்தேதிக்குதள்ளிவைத்து ஆணையிட்ட உரயர்நீதி மன்றம்: இந்த மனு கண்டனத்துக்குரியதுதேவையானசட்டத்திருத்தங்களை செய்வதற்காக 6 மாதங்களாக விசாரணைநடத்தப்பட்டு வரும் சூழ்நிலையில் இதுவரை எந்த ஒருநடவடிக்கையும் எடுக்காதது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறத.இந்த வழக்கை ஆகஸட் 22ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.அதற்குள் தகுந்த சட்டத்திருத்தம் செய்யப்படாவிட்டால்பிரதமர்அலுவலகம்உள்துறை அமைச்சகம் அல்லது சட்டத்துறைஅமைச்சகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளை ‌நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவதற்கு நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்இந்தவிவகாரத்தில் மத்திய அரசுடன்மாநில தலைமைச் செயலர்தொடர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும். ‌நீதிமன்ற உத்தரவைசெயல்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றியவிளக்கங்கள் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும்”, எ‌ன்று ‌நீ‌திப‌திக‌ள் உத்தர‌வி‌ட்டு‌ள்ளன‌ர்.



இக்கொடுமையை தடுக்காத திராவிடம் எதற்கு? விஞ்ஞானம்-தொழிற்நுட்பம் அதிகரித்துள்ளது, அதன் மூலம் எதை-எதையோ சாதிக்க முடிகிறது என்றும் ஒரு பக்கம் கூறிவருகிறார்கள். ஆனால், அவையும் இக்கொடுமையைத் தீர்க்க முடியவில்லை போலும். பிறகு, எதற்கு, எல்லா மட-இந்தியர்களும், குறிப்பாக திராவிடம் பேசும் தமிழர்கள் செல்போனை வைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு பேள வேண்டும், மற்றவர் இன்னும் அள்ள வேண்டும்? செல்போனை வைத்திருக்கும் தமிழனுக்கு இதுகூட புரியவில்லையா? கலர் டிவி பார்க்கும் திராவிடனுக்கு தெளிவாக விவரம் அறியப்படவில்லையா? பிறகு எதற்கு இத்தனை கலைஞர்கள், பேராசிரியர்கள், கவிக்கோக்கள், கவிபேரரசுகள், முதலிய வெட்டி-பட்டாளங்கள்? “ஏன் வேண்டும் இந்த இன்ப திராவிடம்?” என்று பேசினர் அன்று, “இக்கொடுமையை தடுக்காத திராவிடம் எதற்கு?” என்று இன்று கேட்கின்றனர் மக்கள்.


 என் கருத்து : தேவையில்லாத துறைகளுக்கெல்லாம் அபரிமிதமான மனித சக்தியை, பயன்படுத்த வாய்ப்புள்ள துறைகளுக்கெல்லாம் நவீன கருவிகளை அறிமுகப்படுத்தி ஏராளமான வேலைவாய்ப்புகளை முடமாக்குகின்ற நமது மத்தியமாநில அரசாங்கங்கள்மனித உழைப்பை பயன்படுத்தகூடாத இந்த துறைக்கு மட்டும் நவீன கருவிகளை தருவிப்பதில் அதீத காலதாமதத்தையும்,தயக்கத்தையும் காட்டி வருவது மன்னிக்க முடியாதது மட்டுமல்லமனிதகுல நாகரிகத்திற்கே இழுக்கானதும் கூட!

இன்னும் எத்தனை இன்னுயிர்களை இழக்கப்போகிறோம்!

கூடாது!  இனியும் கூடாது! மனசாட்சியுள்ள சமூகம் இதை மன்னிக்காது! ஜீவகாருண்யத்தை தூக்கி பிடிக்கும்ஆன்மீகம் செழித்தோங்கிய தேசத்திலே இங்கே மனிதனை சாக்கடைக்குள் இறக்கி சாவதற்கு  துணைபோக மாட்டோம்! இவற்றை வெறும் பார்வையாளனாக இருந்து பார்த்து கொண்டிருப்பதும் பாவமன்றோ!


ஆக்கம்  மற்றும் தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment