Friday 17 August 2012

கோலாகலமாக நடந்த ஈரோடு மாவட்டம் அந்தியூர் குதிரை சந்தை--ஒரு பார்வை ...

ந்தியூர், குருநாத ஸ்வாமி கோவில் விழாவை முன்னிட்டு, பிரசித்திபெற்ற குதிரை, மாட்டுச்

 சந்தை இன்று துவங்குகிறது. ஈரோடு மாவட்டம், அந்தியூர், புதுப்பாளையம் குருநாத ஸ்வாமி கோவில் ஆடித் திருவிழா, பூச்சாட்டுதலுடன் ஜூலை 18ம் தேதி துவங்கியது. 25ம் தேதி கொடியேற்றம், ஆகஸ்ட், 1ம் தேதி முதல் வன பூஜை நடந்தது. இன்று ஆகஸ்ட், 8ம் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது. இன்று காலை காமாட்சியம்மன் பல்லக்கிலும், பெருமாள் மற்றும் குருநாத ஸ்வாமி, "மகாமேரு எனப்படும், 60 அடி உயர தேர்களிலும், புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து புறப்படுவர். இங்கிருந்து, நான்கு கி.மீ., தொலைவில் உள்ள வனத்துக்கு சென்று, அங்கு பக்தர்களுக்கு காட்சியளிப்பர். இன்று ஆகஸ்ட், 8ம் தேதி (ஆடி 24) முதல் நான்கு நாட்களுக்கு இவ்விழா கோலாகலமாக நடக்கும்இவ்வின் சிறப்பம்சமாக, பிரசித்தி பெற்ற குதிரை, மாட்டுச்சந்தை இன்று துவங்கி.கோலாகலமாக நடக்கும். இந்த  சந்தைக்காக   வெளியூர், வெளிமாநில பக்தர்களும், கால்நடைகளை விற்கவும், வாங்கவும் வந்த விவசாயிகள், வியாபாரிகள் அந்தியூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். வீட்டு உபயோகப் பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள், பொழுது போக்கு அம்சங்கள், பழக்கடைகள், தின்பண்டக் கடைகள் ஆகியவை, அந்தியூரில் இருந்து புதுப்பாளையம் வரை ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளன. சந்தைக்கும் கால்நடைகள் நேற்று வரத்துவங்கின. பல்வேறு இனக் குதிரைகள், காளைகள், பசு மாடுகள், எருமைகள், வித்தியாசமான தோற்றமுடைய ஆடுகள், கோழி இனங்கள், கிளி, பூனை, நாய் போன்றவை சந்தையில் விற்பனைக்கு குவியும். இதுதவிர, கால்நடைகளுக்கான சலங்கை, சாட்டை, கழுத்து மணி, தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு, குதிரைகளுக்கான சேணம், கயிறு போன்றவை விற்கும் கடைகளும் அதிகம் இருக்கும். இவற்றை வாங்கவும், காணவும் அடுத்த நான்கு நாட்களுக்கு ஏராளமானோர் அந்தியூரில் குவிவர்.

குருநாதசுவாமி கோயில் இந்த இடம் அந்தியூரில் இருந்து 10கிலோ மீட்டர் தொலைவில் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த இடத்திற்கு பெயர் வனம். இக்கோயிலைச்சுற்றி உள்ள வனத்தில் மக்கள் பொங்கல் வைத்து கிடா வெட்டி திருவிழாவை கொண்டாடுவார்கள். திருவிழா சமயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இக்கோவிலுக்குச் சென்றால் திரும்பிய பக்கம் எல்லாம் ஆடு, கோழி என விருந்து களை கட்டும். திருவிழா சமயம் மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகலும் விருந்து நடைபெறும்

குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தைகளில் இந்த வருடம் முடிந்தவரை படங்கள் அனைத்தையும்  தந்துள்ளேன்.

குதிரை சந்தை....

அந்தியூரில் குதிரை சந்தை திப்புசுல்தான் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. திப்புசுல்தான்னின் படைத்தளங்களில் முக்கியமான தளம் அந்தியூர் இங்கு முன் இருந்த கோட்டையில் தான் குதிரைகளுக்கு பயிற்சி அளித்துள்ளார் இவரின் குதிரைகளை விற்கவும் அந்த காலத்தில் கள்ளிக்கோட்டையில் இருந்து வரும் அரபுகுதிரைகளை வாங்கவும் அதிகம் குதிரை உள்ள இடமான அந்தியூரை தேர்வு செய்து சந்தையை உருவாக்கி உள்ளனர். குதிரைக்கான லாடம், சாரம் வண்டி மற்றும் அணிகலன்கள் எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்குமாறு இச்சந்தை உருவாக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் சந்தை தனியாக இருப்பதை விட திருவிழாவின் போது சந்தை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று குருநாத சுவாமி திருவிழாவின் போது இச்சந்தை வருடா வருடம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை காண தமிழகம் எங்கும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிகின்றனர். குதிரைச்சந்தையுடன் மாட்டுச்சந்தையும் நடைபெறுகிறது, தமிழகத்தில் பிரபலமான காங்கேயம் காளைகள் இச்சந்தையில் அதிகம் விற்பனை ஆகிறது.

இப்போதைய சந்தையில் மக்கள் அதிகம் கூடுவதால் வீட்டு உபயோகப்பொருட்கள், சோளக்கருது, பேரிக்கா, மைசூர் பருப்பி, அல்வா ம்ற்றும் புதிதாக வந்துள்ள விவசாயப்பொருட்கள், பொழுது போக்கிற்காக பல வகையான இராட்டினங்கள் என்று களை கட்டியது அந்தியூர் சந்தை...
 குதிரைகள் விற்பனைக்காக போடப்பட்ட ஸ்டால் இதே போல் 5 வரிசையில் குதிரைகள் விற்பனைக்கா கொண்டுவரப்பட்டு இருந்தது..
ஸ்டாலில் இடம் இல்லாத குதிரைகள் வெளியில் நிறுத்தப்பட்டு இருந்தது...
குதிரைக்கான கடிவாளங்கள், சாட்டைகளும், மாடுகளுக்கான சாட்டைகளும்

3 சுழி கொண்ட 1 மற்றும் 2 இலட்சம் விலையுள்ள குதிரைகள்
 4 சுழி கொண்ட 4 இலட்சம் விலையுள்ள குதிரைகள்
4 சுழி மற்றும் ஓட்டத்துக்கு பலக்கப்படுத்தப்பட்ட குதிரைகள் 4 இலட்சம் முதல்


2 முதல் 5 இலட்சம் வரை தரத்திற்கு தகுந்த குதிரைகள்


சாரட் வண்டிகளுக்கு பழக்கப்படுத்தப்பட்ட வண்டிகள்


குதிரை சந்தை மற்றும் மாட்டுச்சந்தையை  வீடியோவில்  காண கீழே  உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்..
http://ipl.dinakaran.com/Video_Index.asp?idv=2734&cat=49

தொகுப்பு :மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment