Wednesday 1 August 2012

பர்மா முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஏன் ? ஒரு ஆய்வு......


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.

முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

நமது சகோதரர்களான ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியான்மரில் அர்கான் மாநிலத்தில் இன அழித்தொழிப்பிற்கு பலியாகி வருகின்றார்கள். முஸ்லிம்களை படுகொலைச் செய்யும் பெளத்த பயங்கரவாதிகளுக்கு அரசாங்கத்தின் உதவியும், ஒத்துழைப்பும் கிடைத்துவருகிறது.


ராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் மியான்மரில் உள்ள ராக்கினே மாகாணத்தில் கடந்த வாரம் துவங்கிய வகுப்புவாத கலவரம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஓயவில்லை.

இம்மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான சித்வேயிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும், புத்தர்களுக்கும் இடையே மோதல் தொடருவதாக செய்திகள் கூறுகின்றன. இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கலவரத்தை ஒடுக்க அதிபர் தைன் ஸென் ராணுவத்தை நிறுத்தியுள்ளார். இதனிடையே அதிகமான இறந்த உடல்களை ராணுவம் கண்டுபிடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராகினே மாகாணத்தில் பெரும்பான்மையரான பெளத்தர்களுக்கும், சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே பல வருடங்களாக நீடித்து வந்த பகைமை கடுமையான கலவரமாக கடந்த வெள்ளிக்கிழமை மாறியது. ஜூன் 4-ஆம் தேதி புத்தமதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். இதற்கு காரணம் முஸ்லிம்கள் என குற்றம் சாட்டப்பட்டு கலவரம் துவங்கியது.

புத்த பெண்மணியின் கொலைத் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட போதிலும் எதிர்பாராத விதமாக கலவரம் தீவிரமடைந்தது. ஜூன் 3 இல் சுமார் 300 பௌத்த மக்களால் சுற்றி வளைக்கப்பட்ட 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

கலவரத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மியான்மர் அரசு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. இப்பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்களையும் ராணுவம் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேசத்தில் கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன.


மியான்மரில் முஸ்லிம்களின் உண்மையான பிரச்சனை ஏழ்மையோ, பட்டினியோ அல்ல. மாறாக அவர்கள் ஏக இறைவனான அல்லாஹ்வை வணங்குகிறார்கள் என்பதுதான் இந்த படுகொலைகளின் பின்னணியில் அமைந்துள்ளது. அவர்களுக்கு உதவுவது உலகில் உள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதான கடமையாகும்.


மியான்மரில் முஸ்லிம்கள் கொடூரமாக இனப்படுகொலைச் செய்யப்பட்டு வரும் வேளையில் உலக ஊடகங்கள் அங்கிருந்து வரும் செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்காதது மிகக்கொடுமையாகும்.

உலகியல் ரீதியாகவும், சிந்தனை ரீதியாகவும் அவர்களுக்கு நாம் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய கடமைப்பட்டுள்ளோம். உலக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்கள் வாழும் நாடுகளின் அரசுகளிடம் பர்மா முஸ்லிம் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தவும், பர்மா முஸ்லிம்களுக்கு உதவவும் தொடர்ந்து போராடவேண்டும். ஆக்கப்பூர்வமான உதவிகளை அம்மக்களுக்கு அளிக்க முன்வரவேண்டும். தான தர்மங்கள், பிரார்த்தனை, பர்மா முஸ்லிம்களின் துயரத்தை நமது துயரமாக கருதுதல் போன்ற வழிகளிலும் முஸ்லிம்கள் தங்களது கடமையை நிறைவேற்றவேண்டும்.

முஸ்லிம் நாடுகளில் வாழும் மக்கள் அந்நாடுகளின் அரசுகளிடம் தீவிரமாக வலியுறுத்துதல் அவசியம். சோசியல் மீடியாக்கள் ஒரு சில இதழ்கள் மூலமாக மட்டுமே பர்மா முஸ்லிம்களை குறித்த செய்திகள் பரவுகின்றன. ஜும்ஆ மேடைகளிலும், சாதாரண முஸ்லிம்களிடமும் இச்செய்திகள் கொண்டுச் செல்லப்பட வேண்டும்.



கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

உலக முஸ்லிம் நாடுகளின் கண்பார்வையில் இந்த கூட்டுப் படுகொலைகள் நிகழ என்ன காரணம்? பெளத்தர்கள் ஏன் இவ்வளவு துணிச்சலாக முஸ்லிம்களை கொலைச் செய்கிறார்கள்? காரணம் வேறொன்றுமில்லை. முஸ்லிம்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவும் தகுதியுடைய முஸ்லிம் ஆட்சியாளர் உலகில் இல்லை என்பதுதான்.

முஸ்லிம் உலகில் தற்பொழுது நடந்துவரும் மாற்றங்கள் அதற்கு வழிவகுக்கட்டும்.

‘முஸ்லிம்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்காக யார் கவலைப்படவில்லையோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்’ (திர்மிதி) என்ற நபி(ஸல்) அவர்களின் பொன்மொழியை உணர்ந்து நாம் செயல்படுவோம்! இச்செய்தியை அனைத்து மக்களிடமும் பரவச் செய்யுங்கள்!

தொகுப்பு: மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment