Monday 21 May 2012

நாம் ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது கடைபிடிக்க‍ வேண்டிய சில விதிமுறைகள்


நாம் படிக்கும் இடத்திலோ, வேலை பார்க்கும் இடத்திலோ நமது

கட்டுரைகள் மற்றும் ஆராய்ச் சி குறிப்புகளை மற்றவர்களுக் கு  ப்ரசெண்டேஷன் (விளக்க உரை) செய்யும் போது சில விதி முறைகளை கடைபிடித் தால் மிகவும் நன்றாக இருக் கும். அதாவது நமது ப்ரசெண் டேஷன் மற்றவர்களுக்கு சலி ப்பை உண்டாக்காத வாறு இரு க்க வேண்டும். நாம் சொல்ல வந்த விஷயமும் பார்வையாளருக்கு தெளிவாக புரிய வேண்டு ம்.
1. வாழ்த்துகளோடு ஆரம்பியுங்கள்.
வாழ்த்துக்கள் ரொம்ப முக்கியம். அந்த நிகழ்ச்சியை பற்றியோ, வந் திருக்கும் விருந்தினர்களை பற்றியோ வாழ்த்துக்கள் இருக்கலாம்.
2. உங்களை மற்றும் குழு உறுப்பினர் களை முதலில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.
நாம் யார் என முதலில் தெரிவிக்க வேண்டும். நமது குழு உறுப்பி னர்கள் மற்றும் அவர்களது தகுதி பற்றிய சிறு குறிப்பை பகிரலாம். இதனால் நமது குழு பற்றி அனைவரும் அறிய ஒரு வாய்ப்பாக அமையும்.
3. முகவுரை, பொருளுரை, முடிவுரை ஆகிய மூன்றும் இருக்க வே ண்டும்.
இது மிகவும் முக்கியம். இதன்படி நமது உரை அமைந்தால் நமது பிரசன் டேஷன் இனிய பகிர்வாக இருக்கும்.
4. கொடுக்கப்பட்ட நேரத்தில் உரையை முடித்தல் வேண்டும்.
நேரம் ரொம்ப முக்கியம். பார்வையாளருக்கு சலிப்பை ஏற்ப்படுத்தாதவாறு இருக்க வேண்டும். தேவையான செய்திகளை மட்டும் பகிர்ந்து மற்றவர்களின் நேரத்தை யும் வீணாக்க கூடாது.
5. படங்கள், செய்தி விளக்கங்கள், வரைபடங்கள் போன்றவை ஆர்வத் தைத் தூண்டும்.
நமது கட்டுரை சம்பந்தமாக உள்ள விஷயங்கள் பார்வையாளர் களை கவர இந்த வழிமுறைகளை கையா ளலாம். இதனால் நமது விளக்கங்களும் எளிமையாக இருக்கும்.
6. சீரான வேகத்தில் உரை அமைய வேண்டும்.
ஓரிடத்தில வேகமாகவும், அப்புறம் வேகம் குறைந்தும் நமது பேச்சு இருக்க கூடாது. மேலும் நமது ஒலி அளவும் சீராக இருக்க வேண்டும்.

7. நீங்கள் பேசியது புரிந்ததா என்று பார்வையாளர்களிடம் கேட்டுப் புரிந்து கொள்ளலாம். தவறில்லை.
கண்டிப்பா இது முக்கியம். நாம பேசிகிட்டே போனாலும் மத்த வங் களுக்கு புரியுதாங்கிறத்தை நாம தெரிஞ்சு வைக்க வேண் டும். மற்றவர்களுக்கு புரியவில் லை எனில் நமது பேச்சு விதத்தை மாற்ற நாம் தெரிந்து வைத் திருக்க வேண்டும்.
8. கேள்விகளுக்கு சுருக்கமாக பதிளிக்க வேண்டும்.
நமது உரையை பற்றி மற்றவர்கள் கேள்விகள் கேட்க வாய்ப்பு அளிக்க லாம். கேள்விகள் சுருக்கமாகவும், நமது பதில்கள் சுருக்கமாகவும் இரு க்க வேண்டும். 
9. வாழ்த்தி விடை பெறலாம்.
என்னதான் நாம் சிறப்பாக உரை நிக ழ்த்தினாலும் இறுதியில் சொதப்பி விடுதல் கூடாது. ஏதேனும் தத்துவ வாக்கியங்கள் சொல்லி அனைவரையும் வாழ்த்தி நமது உரை அமைய வேண்டும்.

No comments:

Post a Comment