Wednesday 18 April 2012

பன்றிக் காய்ச்சல் (Swine Flu)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு .


.


மிழகத்தில் பன்றிக் காய்ச்சல் தீவிரமடைந்து வருவதை அடுத்து, பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த ஜனவரியில் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்த பன்றிக் காய்ச்சல், கடந்த வாரம் தீவிரமடைந்தது. ஒரு வாரத்தில், சென்னை, திருப்பூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில், ஒரு சிறுமி உட்பட 23 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தில் 11 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கந்தசாமி, 75, பன்றிக் காய்ச்சல் பாதிப்பால், கடந்த 1ம் தேதி மருத்துவமனையில் இறந்தார். இதையடுத்து, காய்ச்சல் குறித்த பீதி மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. பன்றிக் காய்ச்சல் வைரஸ் தாக்குதலை உணர, குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லாததால், சளி, இருமல் இருந்தாலே, பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என அச்சப்படும் மனநிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

காலத்திற்குக் காலம் உலகளவில் பாரிய அழிவுகளையும், அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஏதாவது விடயங்கள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன. இத்தகைய அழிவுகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் சில சந்தர்ப்பங்களில் இயற்கை அனர்த்தங்கள் அல்லது தொற்று நோய் பரவல்கள் காரணிகளாக இருக்கலாம்.



நோய்த் தொற்று என்ற அடிப்படையில் 21ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலே உலகை அச்சுறுத்தும் ஒரு நோயாக பன்றிக் காய்ச்சல் என்றழைக்கப்படும் ஏ/ எச்1என்1 இன்புளுயன்சா / ஸ்வைன் ஃப்ளு (swine flu / swine influenza) வேகமாக பரவி வருகின்றது.


இந்தியாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி ஜூலை 3, 2009 இல் உயிரிழந்தார். ஜூன் 11, 2009 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது. 




பன்றி காய்ச்சல் என்றால் என்ன?


ஸ்வைன் இன்புளுயன்சா ஸ்வைன் ஃப்ளு / பன்றிக் காய்ச்சல் (swine flu / swine influenza) பன்றிகளுக்கு / கோழிகளுக்கு (பொதுவாக) வரும் ஒரு வித சுவாச நோய் ஆகும். இது டைப்-A இன்புளுயன்சா என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.




மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர். கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது. குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர்.

இப்போது பரவி வரும் பன்றிக் காய்ச்சல் கண்டேஜியஸ்-சான நோயா? இந்நோய் எப்படி பரவுகிறது? 

ஆம். இந்நோய் வந்தால் நோயுற்றவரை தனிமைப் படுத்துவது அவசியமாகிறது. உலகம் முழுதும் இந்நோய் பரவும் வாய்ப்புள்ளதாக (WHO) அறிவித்துள்ளது. இந்நோய் கிருமியால் பாதிக்கப் பட்ட ஒருவர், நோய் தன்னை தாக்கியுள்ள அறிகுறிகள் தோன்றுவதற்கு ஒரு நாள் முன்னரே, மற்றொருவரையும் infect செய்து விடுகிறார். முக்கியமாக, இருமல், தும்மல், தொடுதல் போன்றவற்றால் மட்டுமே நோய் தொற்று ஏற்படுகிறது. இந்நோய், ஏற்கனவே பன்றி காய்ச்சல் வந்த ஒருவரை தொடுதல் அல்லது அவர் சமீபம் இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது.

நோயுற்ற ஒருவர் தும்மும் போது காற்றின் மூலம் நோய்க் கிருமிகள் பரவுவதால், மேஜை, கீபோர்ட், மௌஸ், டெலிபோன் கருவிகள், கதவு கைபிடிகள், லிப்ட் பொத்தான்கள், ரூபாய் நோட்டுக்கள், காயின்கள், பழம்-கறிகாய்கள் போன்றவற்றாலும் பரவலாம். ஆகையால் எப்போதுமே, இவற்றை எல்லாம் கையாண்டவுடன் கை கழுவுதல் நோய் வருவதை ஓரளவுக்கு தடுக்கும். 

ன்னை நோய் தாக்கியிருந்தால் அல்லது சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
உடனடியாக உங்கள் மருத்துவரைப் பாருங்கள். நோயிருக்குமோ என்ற சந்தேகம் தோன்றிய மூன்று நாட்களுக்கும் இரத்தப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். முதல் நான்கைந்து நாட்களுக்குள் respiratory specimen (சளி) பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஃப்ளு தடுப்பூசிகளை சரியான இடைவெளிகளில், உங்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளவும் (தற்போது ஏற்பட்டுள்ள pandemic flu-வுக்கு தடுப்பூசி ஏதும் இல்லை என்றாலும் கூட, இவை ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துக்கொள்ள உதவலாம்). வெந்நீர் மற்றும் சோப்பு உபயோகித்து அடிக்கடி கை கழுவி கொள்ளவும். தும்மும் போதும், இருமும் போதும் கைகளினால் வாயை மூடிக் கொள்ளவும். உடனே கையை அலம்பிகொள்ளவும். நோய் தாக்கப்பட்டவர்களுக்கு சமீபத்தில் (அருகாமையில்) இருப்பதை முடிந்தவரை தவிர்க்கவும். உங்களை நோய் தாக்கி இருந்தால், வீட்டிலேயே இருக்கவும். இதனால் மற்றவர்களுக்குநோய் பரவுவதை தவிர்க்கலாம். மாஸ்க் அணிந்து பயணிக்கவும். மருத்துவர் பரிந்துரைத்தவாறே மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்ளவும். இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பன்றிக் காய்ச்சலுக்கு பரிசோதனைகள் செய்ய அனுமதி இருப்பதால், தகுந்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஒதுக்கி கொள்ளவும்.


நோய் தாக்கி இருப்பதற்கான அறிகுறிகள்...


 தொடர்ந்த தலை வலி

குளிருதல், நடுங்குதல்

இருமல் / சளி / மூக்கில் நீர்வடிதல் /தொண்டையில் வலி / தும்மல்

பசியின்மை / சாப்பாடு மீது வெறுப்பு

தலை சுற்றல் / மயக்கம்

பசியின்மை

உடல் வலி / வயிற்றுப் பகுதி மற்றும் இதயப் பகுதிகளில் வலி

இடைவிடாத காய்ச்சல்

வயிற்று போக்கு

வாந்தி எடுத்தல்

மிக மோசமான நிலையில், நிமோனியா ஏற்படலாம்

உயிரிழப்பும் ஏற்படலாம்



குழந்தைகளுக்கு இந்நோய் வந்திருந்தால், எப்படி கண்டு பிடிப்பது?


1,தொடர்ந்த ஜுரம், சளி மற்றும் மூச்சுத் திணறல்
மூச்சு விட சிரமப் படுவார்கள்.



2,உடல் தோல் ஒரு வித நீல நிறமாக இருக்கும். (இதை நகக்கணுவை கவனிப்பதன் மூலம் எளிதில் கண்டுபிடிக்கலாம்தண்ணீர் அதிகம் குடிக்காமல் இருப்பார்கள்.


3,அசாதாரணமாக தூங்குதல், எழுந்திருக்காமல் இருத்தல், அல்லது சகஜமாக இல்லாமல் சோர்ந்து இருத்தல் தூக்கி கொண்டாலும் அழுது கொண்டே இருத்தல், அமைதியின்றி இருத்தல்.

4,தோலில் சொறி (rash) போன்று தடித்து காணப்படும்



இந்நோய்க்கு மருந்துகள் ஏதும் உள்ளனவா?

 "oselitamivir (Tamiflu (r))" அல்லது "zanamivir (Reienza (r)) இந்நோய் சிகிச்சைக்கு உதவுகிறது. antiviral medicines அல்லது oral pills கூட சில நேரம் நோய்கிருமிகள் மேலும் அதிகரிப்பதை தடுப்பதாக நம்புகிறார்கள். நோய் தாக்கிய இரண்டு நாட்களுக்குள் மருத்துவரின் ஆலோசனைப்படி antiviral medicine/pill எடுத்துக்கொண்டால் ஓரளவுக்கு குணம் கிடைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த விதமான சுய-மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம். இந்த நோய்க்கு இன்னும் தனிப்பட்ட தடுப்பு மருந்து ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை. சாதாரண காய்ச்சலுக்கு அளிக்கப்படும் மருந்தை தான் தற்போது தருகின்றனர்.

ஒவ்வொரு முறையும் தொற்றுநோய் பரவும் போது இரண்டரை லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை சாகிறார்கள். 1918ம் ஆண்டு ஸ்பேனிஷ் ப்ளூ நோய் தான் அதிகம் பேரை கொன்றுள்ளது. இந்த நோய் தாக்கி அப்போது ஐந்து கோடிபேர் வரை பலியாகியுள்ளனர். எனவே தான் தொற்று நோய் என்றதும் உலக நாடுகள் பதறுகின்றன. மெக்சிகோவில் இந்த நோய் அதிகம் பரவியுள்ளதால் பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. சகஜ வாழ்க்கை அங்கு முடங்கியுள்ளது. வெப்ப நாடுகளில் இந்த நோய் பரவுவதற்கு வாய்ப்பில்லை, என ஒரு பக்கம் கூறினாலும், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

 நெரிசலான பகுதிகளை கொண்ட இந்தியாவில் இந்த நோய் நுழைந்தால் குறைந்தபட்சம் 30 லட்சம் பேராவது பாதிக்கப்படுவர், என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக 30 லட்சம் பேருக்கு தேவையான "டேமிப்ளு'' என்ற பெயருடைய மருந்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக எந்த வகையான "ப்ளு'' காய்ச்சலுக்கும் இந்த மருந்து தான் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. சிப்லா, ரன்பாக்சி உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த மருந்துகளை சப்ளை செய்ய ஒப்பு கொண்டுள்ளன.




 காய்ச்சல், தலைவலி இருந்தால் வழக்கமாக பாராசிட்டாமல் மாத்திரை ஒன்றை சாப்பிட்டு படுத்துவிடுவார்கள்.ஆனால் இப்போது அப்படி அதில் குணமாகாமல் காய்ச்சல் இருந்துகொண்டே இருந்தால் கண்டிப்பாக டாக்டரை பார்க்க வேண்டும்.காரணம் பன்றிக்காய்ச்சல்.



டாக்டர் உங்களுக்கு பன்றி காய்ச்சலாக இருக்குமோ என்றுசந்தேகப்பட்டால் அது பன்றிகளுக்குத்தானே வரும் என்று கடிக்காமல் உடனே சளி மாதிரி எடுத்து ஆர்.டி.-பிசிஆர் என்ற பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பன்றிக் காய்ச்சல் நோய் உள்ளதா இல்லையா என்பதை அறிந்து அதற்கேற்ப மருந்துகள் உட் கொள்ள முடியும்.
பன்றி காய்ச்சல் முற்றிய நிலை உயிரை இழக்கும் படி செய்து விடும்.எனவே சளியை ஆய்வு செய்வது முக்கியம்.



கிண்டியில் உள்ள கிங் நிறுவனம் மற்றும் சென்னை, மதுரை, கோவை, சேலம், நெல்லை மருத்துக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இதுதவிர தமிழ்நாடு முழுவதும் 12 தனியார் ஆய்வுக் கூடங்களில் இந்த பரிசோதனையை செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் சென்னையில் மட்டும் 7 ஆய்வுக்கூடங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்ய பணம் இல்லாதவர்கள் அரசு பொது மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். அரசு அங்கீகாரம் அளிக்காத தனியார் ஆய்வுக் கூடங்களுக்கு பொதுமக்கள் சென்று பரிசோதனை செய்யக் கூடாது.என்று அரசு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஆய்வுக்கூடங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தாலலென்ன செய்ய இயலுமதி கொடுத்து உடனே சிகிச்சை பெற் வேண்டும்.அதிகக் கட்டணம் பெறும் தனியார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்ஆனால் என்றைக்கு தனியாருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.





சென்னை,கோவை,திருச்சி,திருப்பூர் போன்ற இடங்களில் பரவலாக இக்காய்ச்சல் காணப்படுகிறது.


இதுவரை இந்நோய்க்காக 55 ஆயிரம் தடுப்பூசி மருந்துகளை மத்திய சுகாதார த்துறை தமிழ் நாடுக்கு வழங்கியுள்ளது இன்னும் லட்சக்கணக்கில் கேட்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்ற மூன்று ஆண்டுகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் .
ஆண்டு - பாதிக்கப்பட்டவர்கள் - இறந்தவர்கள்
 2009                                  3,407                       10                                         
 2010                                  1,405                      24
 2011                                    34                          4
2012 (ஏப்ரல் 17 வரை)       2 9                           2

நோய் வராமல் தடுப்பது எப்படி?
  • தும்மல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை துணிகளால் மூடும் சுகாதார பழக்கவழக்கங்களை பொதுமக்கள் கடைப்பிடிக்க
  • வேண்டும்.
  • அடிக்கடி கைகளை சுத்தமாகக் கழுவ வேண்டும்.
  • திக்கப்பட்ட நபர்களை நோயின் தாக்கம் குறையும் வரை மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். இதனால், மற்றவர்களுக்கு இந்நோய் பரவுவது தடுக்கப்படும்,
  • நீரழிவு நோயாளிகள்,வயதானவர்கள்,சிறு குழந்தைகளை இந்நோய்கிருமி[H1N1]எளிதாக தாக்கிவிடும் அவர்கள் டாமி புளு மருந்துகளை உட்கொள்வது நல்லது.

இந்தியாவில் எங்கெங்கு இதற்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப் படுகின்றன? 

CHENNAIKing Institute of Preventive Medicine (24/7 Service) Guindy, Chennai – 32 (044) 22501520, 22501521 & 22501522 Communicable Diseases Hospital Thondiarpet, Chennai (044) 25912686/87/ 88, 9444459543 Government General Hospital Opp.. Central Railway Station, Chennai – 03 (044) 25305000, 25305723, 25305721, 25330300  

PUNE: Naidu Hospital Nr Le'Meridian, Raja Bahadur Mill, GPO, Pune – 01 (020) 26058243 National Institute of Virology 20A Ambedkar Road , Pune – 11 (020) 26006290
  

KOLKATA: ID Hospital 57,Beliaghata, Beliaghata Road , Kolkata - 10‎ (033) 23701252
  

COIMBATORE: Government General Hospital Near Railway Station, Trichy Road , Coimbatore – 18 (0422) 2301393, 2301394, 2301395, 2301396
  

HYDERABAD: Govt. General and Chest Diseases Hospital , Erragadda, Hyderabad (040) 23814939  

MUMBAI: Kasturba Gandhi Hospital Arthur Road, N M Joshi Marg, Jacob Circle , Mumbai - 11 (022) 23083901, 23092458, 23004512 Sir J J Hospital J J Marg, Byculla, Mumbai - 08 (022) 23735555, 23739031, 23760943, 23768400 / 23731144 / 5555 / 23701393 / 1366 Haffkine Institute Acharya Donde Marg, Parel, Mumbai – 12 (022) 24160947, 24160961, 24160962
  

KERALA: Government Medical College Gandhi Nagar P O, Kottayam - 08 (0481) 2597311,2597312 Government Medical College Vandanam P O, Allapuzha - 05 (0477) 2282015 Taluk Hospital Railway Station Road , Alwaye, Ernakulam (0484) 2624040 Sathyajit - 09847840051 Taluk Hospital Perumbavoor PO , Ernakulam 542 (0484) 2523138 Vipin - 09447305200  

GURGAON & DELHI: All India Institute of Medical Sciences (AIIMS) Ansari Nagar, Aurobindo Marg Ring Road , New Delhi – 29 (011) 26594404, 26861698 Prof. R C Deka - 9868397464 National Institute for Communicable Diseases 22, Sham Nath Marg, New Delhi – 54 (011) 23971272/060/ 344/524/449/ 326 Dr. Ram Manohar Lohia Hospital Kharak Singh Marg, New Delhi – 01 (011) 23741640, 23741649, 23741639 Dr. N K Chaturvedi – 9811101704 Vallabhai Patel Chest Institute University Enclave, New Delhi- 07 (011) 27667102, 27667441, 27667667, 27666182  

BANGALORE: Victoria Hospital K R Market, Kalasipalayam, Bangalore – 02 (080) 26703294 Dr. Gangadhar - 94480-49863 SDS Tuberculosis & Rajiv Gandhi Institute of Chest Diseases Hosur Road , Hombegowda Nagar, Bangalore – 29 (080) 26631923 Dr. Shivaraj - 99801-48780 


நோய் உங்களையோ, உங்களுக்கு தெரிந்தவரையோ தாக்கி இருப்பதாக அறிய வந்தால், இருபத்து நாலு மணிநேர தொலைபேசி சேவை மையத்தை 1075 என்ற எண்ணிலும் 011-23921401 அல்லது EMR Control Room 011-23061469 தொடர்பு கொண்டால், நோய் பரவாமல் இருப்பதற்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.

  • மேலும் இந்நோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவும், மக்களுக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும் மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறை ஒத்துழைப்போடு, www.swineflutninfo.in என்ற இணையதள‌த்தை உருவா‌க்‌கியு‌ள்ளது. 

    இதில், பன்றி காய்ச்சல் குறித்த விவரங்களை தமிழ், ஆங்கிலத்தில் அறியலாம் எ‌ன்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் அறிய 
http://www.cdc.gov/flu/about/season/
http://www.medicinenet.com/swine_flu/article.htm
http://www.cdc.gov/h1n1flu/qa.htm
http://www.nlm.nih.gov/medlineplus/h1n1fluswineflu.html
http://www.webmd.com/cold-and-flu/flu-guide/swine-flu-faq-1
http://www.huffingtonpost.com/news/swine-flu/
http://www.who.int/csr/disease/swineflu/en/
http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_20090425/en/index.html
http://www.hpa.org.uk/swineflu


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment