Monday 30 April 2012

தமிழ்நாடு மின்சார புதிய மின் கட்டணம் - ஒரு சிறப்பு பார்வை...


தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது 

         .தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மின் கட்டணம், ஞாயிற்றுக்கிழமை (ஆக. 1) தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த மின் கட்டண உயர்வால் 1.53 கோடி மின் நுகர்வோருக்கு கட்டண உயர்வு இல்லை;  600 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்குத்தான் ரூ.1 கூடுதல் கட்டணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய மின் கட்டணம் எப்படி கணக்கிடப்படும் என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான மின் நுகர்வோர் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. 

ல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் EB பில் அதிகரிக்க பட்டுள்ளது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டது பற்றி சட்ட மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்ட போது முதலமைச்சர் இப்படி சொன்னார் " TNERC என்கிற அமைப்பு தான் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. தமிழக அரசு அல்ல. எனவே நாங்கள் ஏதும் செய்ய முடியாது"  என அறிவிக்கிறார். 
சரி புது Tariff என்ன என்று பார்ப்போம் 

இது தமிழக அரசு முதலில் அறிவித்த மின் கட்டண Tariff:

பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1 .10

பிரிவு :2 : up to 200 - 0 to 200 Rs.1.8

பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.3 and 201 to 500 Rs.3 .50

பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75


இது பின்னர் குறைத்து அறிவிக்கப்பட்ட Tariff

பிரிவு :1 : up to 100 - 0 to 100 Rs.1

பிரிவு :2 : up to 200 - 0 to 200 Rs.1.5

பிரிவு :3 : up to 500 - 0 to 200 Rs.Rs.2 and 201 to 500 Rs.3

பிரிவு :4 : Above 500 - 0 to 200 Rs.3 and 201 to 500 Rs.4 and 501 and above Rs.5.75


இந்த புது Tariff-ன் படி...
உங்கள் வீட்டில் 100  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 100 என வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.65 )
200  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 300 வரும்.(இதற்கு முன் கட்டிய   பில் ரூ.220 )
300  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 700 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.440 )
400  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 1000 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.660 )
500  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 1300 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.880 )

இனி தான் இருக்கு நிஜ ஷாக்... 
நாம் EB  பில் கட்டுவது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை. எனவே நம்மில் பலர் வீட்டுக்கு ஒவ்வொரு இரு மாதமும் யூனிட்டுகள் ஐந்நூறுக்கு மேல் தான் வரும். இந்த Category-க்கு விலை உயர்வில் எவ்வித சலுகையும் செய்யப்பட வில்லை ! மின் கட்டணம் குறைக்கப்படவில்லை. 
இவர்களின் பில்லை பாருங்கள் :
600  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 2375 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1100 )
700  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 2950 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1500 )
800  யூனிட்டுகள் பயன்படுத்தினால் உங்கள் பில் ரூபாய் 3525 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.1900 )
900  யூனிட்டுகள் எனில் உங்கள் பில் ரூபாய் 4100 வரும். (இதற்கு முன் கட்டிய   பில் ரூ.2300 )
இன்னொரு முக்கிய விஷயம். ஏப்ரல் முதல் தான் இந்த மின் உயர்வு அமலில் வந்துள்ளது. உங்களுக்கு மார்ச், ஏப்ரல் இரு மாதங்களுக்கான பில்லை பார்த்தால் முழு பாதிப்பும் தெரியாது. காரணம் மார்ச் மாதம் பழைய ரேட்டும், ஏப்ரல் புது ரேட்டிலும் இருக்கும். அடுத்த சைக்கிள் வரும்போது தான் அதன் முழு effect தெரியும் ! 

புதிய மின் கட்டணத்தை எப்படி தெரிந்து கொள்வது?

            இப்போது 60 நாள்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக மின் நுகர்வோர் ஒருவரின் வீட்டில் இரண்டாவது மாதத்தில் 20-ம் தேதி மின் நுகர்வு கணக்கு (மீட்டர் ரீடிங்) எடுக்கப்படுகிறது.  உதாரணத்துக்கு மொத்தம் 60 நாள்களுக்கு சேர்த்து 600 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இந்த 600 யூனிட்டை, 60 நாள்கள் என கணக்கிட்டு வகுத்து கொள்ள வேண்டும். அதில் ஒரு நாளுக்கு சராசரியாக 10 யூனிட்டுகள் மின்சாரத்தை நுகர்வோர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவரும். 

              இதில் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு முந்தைய தேதி வரை உதாரணமாக 40 நாள்கள் வரை  நுகர்வோர் பயன்படுத்திய மின்சாரத்தை 40 நாள்களாக கணக்கிட்டுக் கொண்டு, 10 யூனிட்டுகளுடன் பெருக்கிக் கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் 400 யூனிட்டுகளை கொண்டு, முதல் 40 நாள்களுக்கு பழைய கட்டணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.  மீதமுள்ள 20 நாள்களுக்கு அதாவது 200 யூனிட்டுகளை புதிய கட்டணம் அமலாகும்  தேதியில் இருந்து கணக்கிட்டு ரூ. 1 கூடுதல் கட்டணத்துடன் சேர்த்து புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனக்கு தெரிந்து நண்பர்கள் பலரின் வீட்டில் (குறைந்தது பத்துக்கு இருவர்!) ஈ. பி மீட்டர் வேலை செய்வதில்லை. அவர்கள் மினிமம் பில் தான் எப்போதும் கட்டுகிறார்கள். இவர்கள் இதனால் ஏ. சி போன்றவற்றை நிறுத்தாமல் ஓட்டுகிறார்கள். இரு மாதத்துக்கு ஒரு முறை கரண்ட் பில் எழுத வருபவர் இந்த மீட்டர்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. 
போலவே ஆட்சி எதுவாயினும் ஒவ்வொரு அரசியல் மீட்டிங், கோயில் விழா இவற்றுக்கு தெரு முழுதும் வண்ண விளக்குகள் போட்டு அமர்க்கள படுத்துகின்றனர். அனைத்தும் திருட்டு கரண்ட் !

இப்படி ஓடாத ஈ. பி மீட்டரை சரி செய்து, மின் திருட்டையும் சரி செய்தாலே அரசுக்கு ஏராளமாய் வருமானம் வரும். ஆனால் அரசு இவ்விஷயத்தில் திருடர்களை விட்டு விட்டு, ஒழுங்காய் பில் கட்டுவோரை தான் தண்டிக்கும் !

மொத்தத்தில் உங்கள் வீட்டு பில் 500 யூனிட்டுக்கு மேல் போகாத படி பார்த்து கொள்ளுங்கள். எப்படி என கேட்காதீர்கள். சிரமம் தான் ! இல்லை எனில் உங்கள் பட்ஜெட்டில் சில ஆயிரங்களை எக்ஸ்ட்ராவாக மின் கட்டணத்துக்கு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள் !

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment