Friday 13 April 2012

இஸ்லாமிய பெண்களுக்கு இத்தா ஏன்?-- ஒரு இஸ்லாமிய பார்வை ...

அஸ்ஸலாமு அலைக்கும்.
பாண்டிச்சேரியில் எனது மச்சான் (சிறிய அக்கா கணவர்)  09/04/12 அன்று  காலை மவுத்தாகி விட்டார்கள் என்பதை வருத்ததுடன் தெருவித்துகொள்கிறேன். 
(இன்னாலில்லாஹி வ இன்னா இலை ஹி ராஜி ஊன்)

அன்னாரது மவுபிரத்துக்காக நமது நண்பர்கள் அனைவரும் எல்லாம் வல்ல
அல்லாஹ்விடம் துஆ செய்ய வேண்டுகிறேன்.

அவருக்கு கப்ரிலும், மறுமையிலும் அல்லாஹ் நல்ல வாழ்க்கையை தருவானாக..... 

இத்தா குறித்து தெளிவு அனைவருக்கும் – குறிப்பாகப் பெண்களுக்கு இருப்பது அவசியமாகும். இந்த வகையில் “இத்தா” குறித்துச் சுருக்கமான சில விளக்கங்களை  எனது சிறிய அக்கா விர்கஹா சேகரித்த தொகுப்பை இந்தக் கட்டுரை மூலம்   உங்களிடம் பகிர்ந்துகொள்ள  விரும்புகிறேன்...  
சில முஸ்­லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர். நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம்.

“இத்தா” – பொருள்: 
கணவனை இழந்த பெண்களும், கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும்.
கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது.
“இத்தா” என்றால் காத்திருத்தல் என்ற பொருளைத் தருமே அல்லாமல் வயிற்றில் பிள்ளை இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக என்ற பொருளைத்தராது. ஒரு பெண்ணுக்கு மாதாமாதம் வரும் மாதவிடாய முழுமையாக வெளிப்பட்டாலே வயிற்றில் பிள்ளை இல்லை என்பது ஊர்ஜிதமாகி விடும். அன்றும் இதுதான் நிலை. அதற்காக 3 மாதமோ, 4 மாதம் 10 நாட்களோ காத்திருக்கத் தேவை இல்லை. மேலும் அடிமைப் பெண்ணுக்கு 1 மாதம் இத்தா, பஸ்கு – குலாவுக்கு 1 மாதம் இத்தா, தலாக்குக்கு 3 மாதம் இத்தா, இறப்புக்கு 4 மாதம் 10 நாட்கள் இத்தா என்ற பாகுபாடும் தேவையில்லை!

ங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். அல்குர்ஆன் (2 : 234)

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. அல்குர்ஆன் (2 : 228)

கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்குர்ஆன் (65 : 4)
ஒரு பெண் துக்கம் கடைபிடிப்பதுடன் அலங்கரித்துக்கொள்ள, நறுமணம் பூசிக்கொள்ள, மறுமணம் முடித்துக் கொள்ள தடைவிதிக்கப்பட்ட காலகட்டமே “இத்தா”வின முக்கிய பகுதியாகும். இது எமது சொந்த கருத்து அல்ல. இதோ புகாரீயிலுள்ள ஹதீஸ்.

“..அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியுள்ள ஒரு பெண் தனது கணவன் இறந்தாலே தவிர  வேறு யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது. கணவன் இறந்தால் மட்டுமே நான்கு மாதமும் பத்து நாட்களும் துக்கம் கடைபிடிக்க வேண்டும்…” புகாரீ(ர.அ.) 1280.
மேலும் பார்க்க 1281, 1282, 4531, 5334, 5335, 5336, 5338, 5339, 5340, 5341, 5342, 5343)

த்தாவின் போது அலங்கரித்தல் கூடாது

இத்தா இருக்கும் பெண்கள் நறுமணம் பூசுதல் கண்களுக்கு சுர்மா இடுதல் கலர் ஆடைகளை அணியுதல் மருதாணி பூசுதல் போன்ற அலங்காரங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து உடலையும் கூந்தலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. கூடுதலான அலங்காரங்களையும் ஒப்பனைப் பொருட்களையும் அதாவது மேக்கப் பொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.)

பி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் (அதாவது சுர்மா) இடுவதும் கூடாது. அறிவிப்பவர் : உம்மு சலமா (ர­லி) நூல் : நஸயீ (3479)

இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?

இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள். இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது.

என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (‘இத்தா’வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், ”ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்” என்றார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி­) நூல் : முஸ்லி­ம் (2972).
மேலும் விபரம் அறிய ....

No comments:

Post a Comment