Monday 13 February 2012

Google தேடியந்திரதினால் மனித மூளை பாதிக்கப்படுகிறது--அதிர்ச்சி தகவல்

கணினி உபயோகிப்பாளர்கள் பலர் Google-ஐ தான் உபயோகம் செய்கின்றனர். Google நம் அறிவை வளர்க்க உதவுகிறது என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் Google தேடியந்திரதினால் மனித மூளையில் ஞாபக சக்தியும், யோசிக்கும் திறனும் வெகுவாக பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சியான தகவல் Columbia University, Wisconsin-Madison University, Harvard University உள்ள உளவியல் பேராசிரியர்கள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.இணையத்தில் ஏதோ ஒரு தகவலை Google-ல் பார்த்து படித்து தகவலை அறிந்து கொள்கிறார்கள். அதே தகவல் மீண்டும் தேவைப்பட்டாலும் திரும்பவும் Google சென்று தான் தேடுகிறார்களே தவிர மாறாக முன்பு பார்த்ததை ஞாபகம் வைத்து கொள்வதோ, அது என்ன தகவல் என யோசித்துப் பார்ப்பதோ இல்லை. Google-ல் கொடுத்தால் நொடிப்பொழுதில் தகவலை அறிந்து கொள்ளலாம் அதற்கு ஏன் யோசித்து நேரத்தை வீனடிக்கணும் என்ற மன நிலையினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
அது மட்டுமில்லாமல் மக்கள் ஒரு தகவல் சரியாக தெரிந்திருப்பினும் அதை மற்றவர்களிடத்தில் தைரியமாக கூறாமல் எதற்கும் Google-ல் தேடி சரியா என பார்த்து கொள்ளலாம் என்று தான் பலபேரின் மனநிலை உள்ளதாம். இதனால் அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

 
Google மட்டுமல்ல மனித வாழ்க்கையில் இயந்திரங்களின் பங்கு அதிகமாகி விட்டதால் மக்களின் மூளை சோம்பேறியாக மாறிவருகிறது. அதற்கு சிறிய உதாரணம் சிறிய கணக்குகளுக்கும் கணினியையும், கால்குலேட்டரையும் தேடும் இன்றைய தலைமுறை சற்றே பின்னோக்கி நம் முந்தைய தலைமுறையை பாருங்கள் மனதிற்குள்ளேயே கணக்கு போட்டு ஒரே வினாடியில் பதிலை சொல்வார்கள். இது போல நிறைய உதாரணங்கள் இருக்கு.

ஆகவே இனிமேல் நாம் மூளையை பயன்படுத்தி சிறிய கணக்குகளையும் மற்றும் எளிதான தகவல்களையும் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் நாம் மூளை பதிக்கப்படாது.

No comments:

Post a Comment