Sunday 21 August 2011

தந்தை பெரியாரின் கட்டளைகள்....


1. .தொண்டர்களுக்குத் தனிப்பட்ட யாரிடமோ அல்லது தனிப்பட்ட எந்த வகுப்பிடமோ சிறிதும் கோபம், வெறுப்பு, துவேஷம் கூடாது.

2. கடின வார்த்தை, கேவல வார்த்தை, மன வருத்தம் அல்லது ஆத்திரமூட்டும் வார்த்தை கண்டிப்பாய்   பிரயோகிக்கக் கூடாது.

3. போலீஸ்காரரிடம் நமக்குச் சிறிதும் வெறுப்பு, கோபம், விரோத உணர்ச்சி இருக்கக் கூடாது.

4. போலீஸ்காரர் முன் வந்ததும் அவரைப் பார்த்து புன்சிரிப்பு காட்ட வேண்டும்.

5. கூப்பிட்டால், கைது செய்ததாய்ச் சொன்னால் உடனே கீழ்ப்படிய வேண்டும்.

6. போலீஸ்காரர் அடித்தால் மகிழ்ச்சியோடு, சிரித்த முகத்துடன் அடி வாங்க வேண்டும்.  நன்றாய் அடிப்பதற்கு வசதி கொடுக்க வேண்டும்.

7. போலீஸ்காரர் பக்கத்தில் வந்தவுடன் நீங்கள் மெய்மறந்து பக்தியில் இருப்பது போல், ஒரு மகத்தான     காரியத்தை நாம் சாதிப்பதற்கு இந்த அற்ப அதாவது நம் சரீரத்துக்கு மாத்திரம் சிறிது தொந்தரவு, வலி    கொடுக்கக்கூடிய காரியத்தை ஏற்கும் வாய்ப்பு [பாக்கியம்] நமக்குக் கிடைத்திருக்கிறது என்று வரவேற்கும்   தன்மையில் இருக்க வேண்டும்.

8. போலீஸ்காரர் அடிக்கும் போது தடுக்கும் உண்ர்ச்சியோ, தடியை மறிக்கும் உணர்ச்சியோ கண்டிப்பாக இருக்கக்கூடாது.

9. அப்படிப்பட்ட தொண்டர், சர்வாதிகாரியாக இருந்தாலும் அவர்கள் அருள் கூர்ந்து கிட்டவே வரக்கூடாது.

10. ஒலி ஒலிப்பதில் அசிங்கமான வார்த்தைகள், தனிப்பட்ட மனிதர்களைக் குறிக்கும் வார்த்தைகள்    கண்டிப்பாய் உச்சரிக்கக் கூடாது.

11. எந்தக் காரியத்தின் மூலமும் தொண்டர்கள், நடத்துபவர்கள், தலைவர்கள் பலாத்கார உணர்ச்சி, பலாத்கார பயன் உள்ள எண்ணங்கள், செய்கைகள் கொள்ளக்கூடாது.

12. போலீஸார் சுடுவார்களானால் பொது ஜனங்கள் ஒடலாம், ஆனால் தொண்டர்கள் மார்பைக் காட்டியே ஆக வேண்டும்.

13. இந்தி எதிர்ப்பு இயக்கம், காரியாலயம், நிர்வாகம், நிர்வாகஸ்தர்கள் ஆகியவர்களுக்குத் தொண்டர்கள் அடிமை போல் க்ட்டுப்பட்டாக வேண்டும்.

14. பெண்கள் இடமும், மற்றும் இயக்கத்தில் உள்ளவர்களிடமும், வெளியே உள்ளவர்களிடமும் அன்பாய், மிகமிக யோக்கியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

   இப்படிப் பட்ட பல காரியங்களில் மிகுதியும் கண்டிப்பாய் கட்டுப்பட்டு நடக்க வேண்டியது அவசியமாகும்
                                                                                                        —–தந்தை பெரியார்

No comments:

Post a Comment