Monday 20 December 2010

தொழில் தொடங்க முனைவோருக்கு உதவ அரசு மானியம் வழங்குகின்றன?.


வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து திரும்பும் பலரும் தொழில் தொடங்க விரும்புவது இயற்கைதான். ஆனால் அதனை தொடங்குவதற்கு முன்பு தொழில் குறித்து நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இன்றைய வளர்ந்த உலகில் இதனை அறிந்து கொள்ள பல வசதிகள் உள்ளன. அவற்றை முறையாக பயன் படுத்திக் கொள்வதில் தான் நம் திறமை உள்ளது. விடாமுயற்சியுடன் செயல்பட் டால் வெற்றி எனும் கனியை பறிப்பது ஒன்றும் கஷ்டமல்ல. தொழில் முனை வோருக்கு உதவ அரசாங்கமும் வங்கிகளும் தயார் நிலையில் தான் உள்ளன. அவற்றை நாம் அணுகவேண்டிய முறைதான் முக்கியம். அரசின் மாவட்ட தொழில் மையங்கள், தொழில் முனைவோருக்கு உதவ எப்போதும் தயாராகவே உள்ளன. என்ன தொழில் தொடங்க வேண்டுமென் றவுடனே சரியான திட்டமிடுதல் வேண்டும். அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிபோட்டுக் கொண்டு தொழில்முனைவோருக்கு மானியம் வழங்குகின்றன.
சிப்காட் எனப்படும் சிறு தொழில் மையம் மூலம் இதுவரை 12 மாவட் டங்களில் 19 தொழில்மையங்கள் நிறுவப்பட்டு 1803தொழில் நிறுவனங் களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவை எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.
மானியம் வழங்கப்படும் தொழில்கள், மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு மருந்துப் பொருட்கள் உற்பத்தி சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி ஏற்றுமதி ஆபரணங்கள் மாசுகட்டுப்பாடு உபகரணங்கள் விளையாட்டுப் பொருட் கள் சிக்கன கட்டுமானப் பொருட்கள் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவை.
அரசு வழங்கும் சலுகைகள்:
15 சதவிகிதம் மானியமாக வழங்கப் படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவிகிதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தி தொடங்கி முதல் ஆறு ஆண்டு களில் செலுத்தப்படும் மதிப்புக் கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானிய மாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
உற்பத்தி தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து அய்ந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்சம் 25 வேலையாட் களை கூடுதலாக அய்ந்து சதவிகிதம் அதிகபட்சமாக ரூபாய் அய்ந்து லட்சம் வரை வேலைவாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
அரசு வங்கிகளும் தாராளமாக கடனுதவி செய்கின்றன. தொழில் தொடங்க விரும்புவோர் தங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்கும் திட்டம் குறித்து தெரிவிப் பதோடு, தாங்கள் செய்யப்போகும் தொழில், மொத்த முதலீடு, பங்குதாரர் விவரம், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம், வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தும் முறை, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங் களை மனுவாக கொடுக்க வேண்டும். முறையான ஆய்வுக்குப் பின்னர் வழங்கப் படும் கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால், கூடுதலாக கடன் பெற லாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட் களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம்.
முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலகமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேயைன அனுமதி கிடைக் கும். செயல் துறைத் தலைவர் (வழிகாட் டுதல்  குழு) தமிழ்நாடு தொழில் வழிகாட் டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு.
எந்தெந்த தொழில்களுக்கு மானியங்கள் வழங்கப்படுகின்றன தெரியுமா?
1. மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
2. தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
3. கன உதிரிபாகங்கள் தயாரிப்பு
4. மருந்துப் பொருட்கள் உற்பத்தி
5. சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
6. ஏற்றுமதி ஆபரணங்கள்
7. மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
8. விளையாட்டுப் பொருட்கள்
9. சிக்கன கட்டுமானப் பொருட்கள்
10. ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

சரி, அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது. உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்தபட்சம் 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971ம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.  

பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க ....
சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?
ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு.  வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!
ஓருங்கினைப்பு:
      முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:
செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),
தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,
19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,
சென்னை-600001
தொலைபேசி: 044-28553118, 285553866
  ஃபேக்ஸ்: 28588364 



No comments:

Post a Comment