Thursday 10 June 2010

உலகக் கோப்பை கால்பந்து-ஒரு சிறப்பு பார்வை...




19 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை கால்பந்து விளையாட்டு பிரிட்டனில் மட்டுமே ந்டைபெற்று வந்தது;1872ல் தான் இரு நாடுகளுக்கிடையே முதல் சர்வதேச போட்டி ந்டைபெற்றது; பிரிட்டனும் ஸ்காட்லாந்தும் மோதின.
1904ல் FIFA ( FEDERATION OF INTERNATIONAL FOOT BALL ASSOCIATION )உருவானது;1908ல் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்ஸில் கால்பந்து போட்டிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன.
1930ல் முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்றது. 
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942,1946ஆம் ஆண்டுகளில் ந்டைபெறவில்லை.
1978 வரை நடந்த போட்டிகளில் 16 அணிகள் கலந்து கொண்டன; 1982ல் இது 24 அணிகளாகவும், 1998ல் 32 அணிகளாகவும் உயர்ந்தது.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
ஒரு உலகக் கோப்பை போட்டி முடிந்த அடுத்த வருடமே அடுத்த போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் துவங்கி விடுகின்றன. கடந்த 2006ஆம் ஆண்டு போட்டியில் 198 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தகுதி பெற்றன; 2010ஆம் ஆண்டு போட்டிக்கு 204 நாடுகள் கலந்து கொண்டு அதிலிருந்து 32 நாடுகள் தேர்வாகின.
1938 முதல் போட்டியை நடத்து நாடு தகுதிச் சுற்றில் கலந்து கொள்ளாமலேயே நேரடியாக போட்டியில் கலந்து கொள்ளும் என்ற மரபு கொண்டுவரப்பட்டது; அதே போல, கடந்த உலகக் கோப்பை சாம்பியன் அடுத்த உலகக் கோப்பைக்கு தானாகவே தேர்வாகி விடும் என்ற மரபு 2006 முதல் அறிமுகமானது.
முதல் உலகக் கோப்பை போட்டி தென் அமெரிக்காவிலுள்ள உருகுவே நாட்டில் நடைபெற்றது; அதற்கு பிறகு நடைபெற்ற போட்டிகள் அனைத்தும் தொடர்ந்து ஐரோப்பாவிலேயே நடைபெற்றதால், அதை எதிர்த்து உருகுவேயும் அர்ஜென்டினாவும் ஒரு உலகக் கோப்பை போட்டியை புறக்கணித்தன. இதையடுத்து 1958 முதல் ஒரு முறை அமெரிக்க நாடுகளிலும் அடுத்த முறை ஐரோப்பிய நாடுகளிலும் உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மரபை கொண்டு வந்தது FIFA
2002ல் விதிவிலக்காக உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் வாய்ப்பு ஆசிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது; தென்கொரியா ஜப்பான் இரண்டும் சேர்ந்து போட்டியை நடத்தின. அதே போல் இந்த முறை ஆப்ரிக்க கண்டத்தைச் சார்ந்த தென் ஆப்ரிக்கா போட்டியை நடத்துகிறது.அடுத்த போட்டி (2014) பிரேசிலில் நடக்க இருக்கிறது.
இது வரை நடைபெற்ற 18 உலகக் கோப்பை போட்டிகளில், பிரேசில் அதிகபட்சமாக 5 முறை கோப்பையை வென்றிருக்கிறது; இத்தாலி 4 முறையும் ஜெர்மனி 3 முறையும் அர்ஜென்டினா உருகுவே நாடுகள் தலா 2 முறையும் பிரிட்டன் ஃபிரான்ஸ் நாடுகள் தலா ஒரு முறையும் கோப்பையை வென்றிருக்கின்றன.
இந்தியா இது வரை ஒரு முறை கூட உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதி பெற்றதில்லை ; வரும் காலங்களிலாவது கால்பந்து போட்டிகளிலும் இந்தியா சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் தகுதியைப் பெறும் என்று நம்புவோம்.
உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை 
தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை
 ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

http://www.marca.com/deporte/futbol/mundial/sudafrica-2010/calendario-english.html

தொகுப்பு : மு.அஜ்மல்கான்.

No comments:

Post a Comment