Wednesday 27 August 2008

திருமணம் என்ற சடங்கு உலகின் பழமை வாய்ந்தது !!


Image result for திருமண வாழ்க்கைசமுதாய அமைப்பு உருவான பின் நாகரீகம் வளரத் தொடங்கியது. ஆதிகாலத்தில் இருந்த மக்கள், உறவு முறைகளை அறியத் தொடங்கினார்கள்.

`ஒருவனுக்கு ஒருத்தி' என்ற மனோநிலை மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கியது. குடும்பத்தை விரிவாக்கத் தொடங்கிய மனிதர்கள், தங்களுக்கு தாங்களே விதிகளை வகுத்துக் கொண்டு பாலுறவுப் புணர்ச்சியிலும் அதனைக் கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

குறிப்பிட்ட வயதில் பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்வதற்காக திருமணம் என்ற சடங்கு ஏற்படுத்தப்பட்டது.

முன்பெல்லாம் தங்கள் ஊரிலேயே சுற்றியிருக்கும் உறவினர்களை நேரில் அழைத்து ஒரு குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்தி வைத்தனர் பெரியவர்கள்.

பின்னாளில் உறவினர்கள் வேறுவேறு ஊர்களில் இருப்பதால் அவர்களை அழைப்பதற்காக உருவான அழைப்பிதழ்கள் இன்றைய காலகட்டத்தில் அவசியமாகி விட்டது. திருமணம் என்றாலே அழைப்பிதழ் கட்டாயம் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறவினர்களுக்கும் அனுப்பப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.

பாலுறவுப் புணர்ச்சியை முறையாகக் கையாள்வதற்காகவே நாகரீக சமுதாயம் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது வரம்பையும் நிர்ணயித்து தற்போது அது நடைமுறையில் இருந்து வருகிறது.

விவரம் தெரியாத வயதில், குழந்தைப் பருவ திருமணங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது ஒரு சில மாநிலங்களில், ஏதாவது ஒன்றிரண்டு குழந்தை திருமண சம்பவங்கள் பற்றி அறிகிறோம். காலப்போக்கில் அதுவும் கட்டுப்படுத்தப்பட்டு விடும்

திருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப் பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தெளிவாக இ ருப்பதுபோல ஆளாளுக்கு கண்டி ஷன் போட்டு விடுகிறார்கள். ஆ னால் விட்டுக்கொடுத்து வாழ்வ தில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவரு க்காவது புரிந்தால்தான் வாழ்க் கை நிலைத்திருக்கும். மண வாழ் வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.

தன்னிடம் மனைவி, அடங்கி, பயந்து நடக்கவேண்டும் என்று நினைக்கும் கணவனும்; கணவன் தன்னை மட்டுமே கவனிக்கவேண்டும், தனக்காக மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் மனைவியும்; நிம்மதியான, சிறப்பான, முழுமையான குடும்ப வாழ்க்கை வாழ இயலாது ! முழுமையான குடும்ப வாழ்க்கைக்கு!!!
கணவனின் சிறந்த தோழியாக மனைவியும் , மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும் போது, அவர்களே சிறந்த தம்பதி ஆகின்றனர்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment