Sunday 22 June 2008

ஒன்றரை லட்சம் தமிழர்கள் வாழும்ரீயூனியன்தீவு !!

தமிழ் நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம்தமிழ் நாட்டில் பலர் கேள்விப்படாத இடம்ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும்உலகப்பகுதி ஒன்று.

சுமார் ஒன்றரை லட்சம் 
தமிழர்கள் வாழும்ரீயூனியன்!

சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்தரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே - இந்து மகா கடலில்,மொரீசியஸ் அருகே உள்ள, உலகவரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும்ஒரு மிகச்சிறிய தீவு.பிரான்ஸ்நாட்டிலிருந்து மிகத்தொலைவில்இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின்நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதி.உலகில் தமிழர் மகிழ்ச்சியாக வாழும்இடங்களில் ஒன்று – இந்த ரீயூனியன்தீவு…!!!

சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ளமொத்தமாக 2500 சதுரகிலோமீட்டர் பரப்பளவே உள்ள இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில்தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழஐந்தில் ஒரு பங்கு சுமார் ஒன்றரை லட்சம்….!!!

இன்றைக்கு 170-180 ஆண்டுகளுக்கு முன்னால்பிழைப்பு தேடி தமிழ்நாட்டை விட்டு வெளியே சென்றதமிழர்களின் சந்ததியினர் இவர்கள்.உலகில்தமிழகத்திற்கு வெளியே சென்றதமிழர்களில் மிகவும் மதிப்புடனும்,மகிழ்ச்சியாகவும், சம உரிமை பெற்றும்வாழ்கின்றவர்களில்இவர்களே முதன்மையானவர்கள்…!!!

பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாகஇருந்தபோது 1827 ஆம்ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக,பாண்டிச்சேரி,காரைக்கால்,ராமநாதபுரம், புதுக்கோட்டை,தஞ்சாவூர்,போன்றபகுதிகளைச் சேர்ந்ததமிழர்கள் அப்போதைய நாட்களில்ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்தரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள்.இரண்டும் பிரெஞ்சுப்பிரதேசங்களாகஇருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்றபிரச்சினைகளே இல்லை…..!!

சிலர் இலங்கையில் (ஜாப்னா) இருந்தும்குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில்பலர் அவர்களின் சந்ததியினர்.

ஆரம்பத்தில்ஒப்பந்தக்கூலியாக அழைத்துச்செல்லப்பட்டாலும்,பிற்காலத்தில்பிரெஞ்சு அரசு இவர்கள்அத்தனை பேருக்கும்பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்கபிரெஞ்சு குடிமக்களாகஏற்றுக்கொண்டது.இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியானபிரெஞ்சு குடிமக்களாகவாழ்கிறார்கள்.பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன்கூறிக்கொள்கிறார்கள்….!

ஆப்பிரிக்க,பிரெஞ்சு கலாச்சாரங்களுடன்ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும்இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல்தொடர்கிறார்கள்.தைப்பூசம்,பங்குனி உத்திரம், காவடியாட்டம்,கரகாட்டம், காளியம்மன், முருகன், சிவன்எல்லாம் இவர்களை இன்னமும் தமிழுடன்இணைத்து வைத்திருக்கின்றன (ர்)…! அத்தனையையும்இப்போதும் விடாமல்கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளியில் ஆப்பிரிக்க,பிரெஞ்சு கலாச்சாரம் இருந்தாலும்,வீட்டுக்குள் இன்னமும் தமிழ் வாழ்கிறது.தமிழ் நாட்டிலிருந்து கலாச்சாரதொடர்பை அவர்கள்எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களுக்கு தாய்த் தமிழகத்திடம் உள்ளஒரே வேண்டுகோள் - அவர்களுக்கு தமிழும்,இசையும், நடனமும், இலக்கியமும் கற்றுத்தரதாய்த்தமிழகம் உதவ வேண்டும்என்பது தான் !!அற்புதமான இயற்கை வளம் நிரம்பிய ரீயூனியனின் .

இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக்குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள்இந்த தீவின் சிறப்பம்சம்-ஒன்று சுமார்2600 மீட்டர் உயரமுள்ளது.மற்றொன்று 3200 மீட்டர்உயரமுள்ளது. இந்த எரிமலைகளின் சரிவுகளில்அடர்ந்த காடுகள் உள்ளன.

ரீ யூனியனின்மற்றொரு குறிப்பிடத்தக்கவிஷயம்அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும்8ந்தேதிக்கு இடைப்பட்ட 24 மணிநேரங்களில்,இங்கு 1,870 மில்லிமீட்டர் (சுமார் 73.6இஞ்ச் ) மழை பெய்தது ஒரு உலகரிக்கார்டு -இதுவரை முறியடிக்கப்படவில்லை,

தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment